search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kangayam Municipality"

    • தமிழகத்தில் உள்ள, 138 நகராட்சிகளில் காங்கயம் நகராட்சி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
    • 1,782 வரி விதிப்புதாரர்களிடம் இருந்து ரூ. 87 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    காங்கயம் நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    நகராட்சிக்கு செலுத்த வேண்டிய, 2023-24ம் ஆண்டுக்கான சொத்து வரியினை ஏப்., 30ம் தேதிக்குள் செலுத்தினால், ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்ப ட்டிருந்தது. இதனால், காங்கயத்தில் ஏப்., 30ம் தேதியன்று, சொத்து வரியில், 25 சதவீதத்தை வசூல் செய்து, தமிழகத்தில் உள்ள, 138 நகராட்சிகளில் காங்கயம் நகராட்சி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அவ்வகையில், நகராட்சிக்கு வர வேண்டிய சொத்து வரி, 16,702 வரி விதிப்புதாரர்களிடம் இருந்து, 3 கோடியே, 54 லட்சம் வசூல் செய்யப்பட வேண்டும். இதில், 1,782 வரி விதிப்புதாரர்களிடம் இருந்து ரூ. 87 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த வரி வசூல் தொகையில், 25 சதவீதம்.

    இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

    • சனி - ஞாயிறு விடுமுறை நாட்களில் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வரி வசூல் மையம் செயல்படும்.
    • சொத்து வரித் தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகர பொதுமக்கள் காங்கயம் நகராட்சிக்கு 2023-2024-ம் ஆண்டுக்கான செலுத்த வேண்டிய சொத்து வரியை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தினால் சொத்து வரித் தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் பொதுமக்கள் மேற்கண்ட சொத்து வரியை செலுத்துவதற்கு வசதியாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வரி வசூல் மையம் செயல்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காங்கயம் நகராட்சிப் பகுதி மக்கள் சொத்து வரியை வரும் 30 -ந் தேதிக்குள் செலுத்தி பயனடையவும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 2022-2023 நிதி ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா்க்கட்டணம் மற்றும் கடை வாடகை உடனடியாக செலுத்த வேண்டும்
    • காங்கயம் நகராட்சி ஆணையா் வெளியிட்டுள்ள அறிக்கை.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை உடனடியாக செலுத்துமாறு நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் 2022-2023 நிதி ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா்க்கட்டணம் மற்றும் கடை வாடகை ஆகியவற்றை உடனடியாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×