search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parivendhar"

    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.
    • பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந்தர் தேனூர், அடைக்கம்பட்டியில் வாக்கு சேகரித்தார்.

    திருச்சி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பெரம்பலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந்தர் தேனூர் கிராமத்தில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த தேர்தலில் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்தீர்கள். நான் பாராளுமன்றத்தில் பேசியது மற்றும் பிரதமரை சந்தித்தது தொடர்பாக ஒரு புத்தகம் உங்களுக்கு வழங்கியுள்ளேன். மத்திய அரசு எவ்வளவு பணம் கொடுத்தது, எதற்காக கொடுத்தது என்பதையும் இதில் விளக்கியுள்ளேன்.

    இதுபோன்ற புத்தகம் போடுவதற்கு துணிச்சல் வேண்டும். நான் ஏழைகளுக்காக உதவ வந்த எம்.பி. எனக்கு வழங்கப்பட்ட 17 கோடி ரூபாய் பணத்தில் 42 வகுப்பறைகள், நியாயவிலைக் கடைகள், சமூக நலக் கூடங்கள் மற்றும் கழிவறைகள் கட்டிக்கொடுத்துள்ளேன்.

    கடந்த முறை உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி 118 கோடி ரூபாய் செலவில் 1,200 ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளேன். இது இம்முறையும் தொடரும்.

    இந்த முறை 1,500 ஏழைக் குடும்பங்களை தேர்ந்தெடுத்து உயர் மருத்துவம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கிறேன்.

    வரும் தேர்தலில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஊழலற்ற ஆட்சி நடந்து வருகிறது. ரெயில் பாதை அமைக்கும் முயற்சியில் பாதியளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இருக்கும் திராவிட கட்சிகள் அனைத்தும் ஊழல் கட்சிகள்தான். அவர்கள் லஞ்சம் வாங்காமல் எந்த ஒரு காரியத்தையும் செய்வதில்லை.

    நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கப்படும் எனக்கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு அதை செய்யவில்லை. நீட் என சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி உள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு கழித்து கொடுக்கின்றனர் என தெரிவித்தார்.

    இதேபோல், அடைக்கம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாரிவேந்தர் பேசியதாவது:

    ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு வீட்டு வரி, மின்சார வரி, நில வரி, பால் விலை ஆகியவற்றை உயர்த்தி விட்டது. இதனால் விலைவாசியும் உயர்ந்து விட்டது. எனவே நல்லவர்கள் யார் என தேர்வு செய்து வாக்களிக்க வேண்டுகிறேன்.

    தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் அமைச்சர்கள் என உலகமெல்லாம் பேசுகிறது. தி.மு.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் காலம் முழுவதும் கஷ்டத்தில் இருக்க வேண்டியதுதான். 1,000 ரூபாய் உரிமைத்தொகையை பாதி பெண்களுக்கு வழங்கவில்லை.

    நீட் தேர்வு குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது என்பதால் தி.மு.க.வால் ஒன்றும் செய்யமுடியாது.

    இங்கு நான்கு வழிச்சாலை அமைக்கச் சொல்லி கேட்டு வருகிறீர்கள். ஆட்சிக்கு வந்ததும் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கிறேன்.

    நேரு மகனுக்கு வாக்களித்து மற்றொரு ராமஜெயத்தை உருவாக்கி விடாதீர்கள். நாடெல்லாம் எனது, மக்கள் எல்லாம் எனது அடிமைகள் என சென்னையில் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். சூரியன் எப்படி பகலில் சுட்டெரிக்கிறதோ, ரத்தத்தை உறிஞ்சுகிறதோ, அதுபோல் சூரியனுக்கு வாக்களித்தால் உங்கள் ரத்தம் உறிஞ்சப்படும்.

    எனவே கல்விக்கு தெய்வமான சரஸ்வதி தேவி அமர்ந்துள்ள தாமரை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் வேப்பந்தட்டை பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் வேப்பந்தட்டை பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    வேப்பந்தட்டை பகுதியில் அதிகமானோர் விவசாய தொழில் செய்து வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன். மேலும் ஏற்கனவே வேப்பந்தட்டை பகுதியில் பல்வேறு ஊர்களில் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியின் சார்பில் மருத்துவ முகாம்கள் இலவசமாக நடத்தப்பட்டு பலர் பயனடைந்துள்ளார்கள். எனவே இது போன்ற நலத்திட்டங்கள் தொடர்ந்து உங்களை வந்து சேர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பாலையூர், தொண்டப்பாடி, நெய்க்குப்பை, வெண்பாவூர், பெரியவடகரை, மாவிலிங்கை, நூத்தப்பூர், வெள்ளுவாடி, காரியானூர், திருவாலந்துறை, இனாம் அகரம், அயன்பேரையூர் ஆகிய ஊர்களில் திறந்தவெளி வாகனத்தில் பாரிவேந்தர் தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது தி.மு.க மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் அன்பழகன், இளைஞரணி மாவட்ட செயலாளர் வினோத் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்பட்டால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் கூறியுள்ளார். #ADMK #Parivendhar
    சென்னை:

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    ஐ.ஜே.கே.யை பொறுத்தவரை எப்போதுமே பா.ஜனதாவுக்கும், மோடிக்கும் விருப்பமான நிலையிலேயே சென்று கொண்டிருக்கிறோம். 2014-ம் ஆண்டு தாமரை சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை நாங்கள் அவர்களோடு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம் என்று பல நேரங்களில் சொல்லி இருக்கிறேன்.

    ஆனால் இன்னும் பா.ஜனதா தலைமையிடம் இருந்து எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை.

    1 மாதத்துக்கு முன்பாக பியூஸ்கோயல் என்னை டெல்லிக்கு அனைத்து பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பேசினார். அப்போது நமது கூட்டணி தொடர்கிறது என்று அவருக்கு சொன்னேன். என்னிடம் எந்த தொகுதி என்றும் கேட்டார். அதை அவருக்கு குறித்தும் கொடுத்திருக்கிறேன். அதன்பிறகு எங்களுக்கு எந்த தகவலும் இல்லை.

    திருச்சியில் நான் கமல்ஹாசனுடன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நான் தங்கியிருந்த ஓட்டலில் அவர் தங்கினார். அப்போது என்னை பார்த்தார். நம் இருவருக்கும் ஒரே கொள்கையாக இருக்கிறது என்பதால் நாம் ஏன் இணைந்து செயல்படக்கூடாது என்று கேட்டார். செயல்படலாமே என்று சொன்னேன். அதைத் தொடர்ந்து மீண்டும் பேசலாம் என்று சொன்னார். பேசினோம். அது அந்த நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் பா.ஜனதா என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை நான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நான் இன்னும் பா.ஜனதா தோழமையில்தான் இருந்து கொண்டிருக்கிறேன். அ.தி.மு.க.விடம் பேசி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று சொன்னால் எனக்கு தயக்கம் இல்லை. அந்த முடிவு பா.ஜனதா மூலமாக வரவேண்டும்.



    3-வது அணி அமைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. பா.ஜனதா எனக்கு சரியான முடிவு சொல்லாவிட்டால் 3-வது அணியில் நான் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Parivendhar
    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படிக்கும், ‘கஜா’ புயல் தாக்கிய தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களின் ரூ.48 கோடி கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பாரிவேந்தர் அறிவித்துள்ளார். #gajacyclone #parivendhar
    சென்னை:

    இந்திய ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ரூ.60 லட்சம் அளவுக்கான நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறார். கடந்த 10 நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களையும் வழங்கி வருகிறார்.

    இந்தநிலையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படிக்கும் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்ட மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தையும் ரத்து செய்வதாகவும், அவர்கள் எந்த கட்டணமும் இன்றி தங்களின் படிப்பை தொடரலாம் எனவும் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

    மேற்கண்ட 4 மாவட்டங்களிலிருந்து 650 மாணவர்கள் படிப்பதாகவும், அவர்களுக்கான நான்காண்டு கல்விக் கட்டணம் சுமார் ரூ.48 கோடி ஆகும். கல்வி கட்டண ரத்து செய்யப்பட்டிருப்பதின் மூலம், அவர்களது பெற்றோரின் சுமை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ‘தானே’ புயலின்போதும் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த 350 மாணவர்களுக்கான ரூ.7.5 கோடி கல்வி கட்டணத்தை பாரிவேந்தர் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாரிவேந்தரின் இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். ‘இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்களின் இந்த அறிவிப்பு மிகுந்த மனிதநேயமிக்கதாகும். அந்த வகையில் உங்களின் இந்த அறிவிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்’, எனவும் பாரிவேந்தரிடம், கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #gajacyclone #parivendhar #gajaeffected
    ×