search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kasi viswanathar temple"

    • விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் டவுன் 2-வது அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    தற்போது இந்த கோவில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் கோவில் சுவரில் ஒரு அரசியல் கட்சியின் போஸ்டர் மற்றும் சினிமா போஸ்டர் அத்துமீறி ஒட்டப்பட்டது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுக்கொள்ளவில்லை.

    இந்த நிலையில் திருத்தொண்டர்கள் சபை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் திறந்த வெளிகள் அழகு சீர்குலைப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தபட்டவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி.
    • கோவிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி.

    மூலவர்: காசி விஸ்வநாதர்

    அம்மன்/தாயார்: விசாலாட்சி

    தீர்த்தம்: கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாவி என்ற சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.

    பழமை: 2000-3000 வருடங்களுக்கு முன்

    புராண பெயர்: வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம்.

    திருவிழா: தை அமாவாசை, ஆடி அமாவாசை, தீபாவளி (அன்னக்கொடி உற்ஸவம்), ஹோலிப் பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி.

    தல சிறப்பு: இந்தியாவில் 12ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது, அம்மனின் சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா பீடமாகும். இங்குள்ள மூலவர் மரகதத்தால் ஆனவர் என்பது தனி சிறப்பு.

    ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமானால் உருவாக்கப்பட்ட நகரம் காசி. இத்தலம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இவ்வூருக்கு வாரணாசி, மகாமயானம், அபிக்தம், ஆனந்த பவனம் ஆகிய பெயர்களும் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த நகரம். வாரணா, ஹசி என்ற நதிகளுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளதால் வாரணாசி என்ற பெயர் வந்தது. இவ்வூரை பனாரஸ் என்றும் சொல்வார்கள். கல்வியை வழங்கும் கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும். காசி என்றால் ஒளிநகரம் என்பது பொருள். காசியில் இறந்து போவது சொர்க்கத்தைத் தரும் என்று சொல்வார்கள். இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.

    இந்த கோவிலை முதன்முதலில் கட்டியது யார் எனக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். முகலாய சக்ரவர்த்தி அக்பர் தனது வருவாய்துறை அமைச்சர் தோடர்மால் மூலமாக கட்டினார். தோடர்மால் தனது குருவான நாராயண் பட் உதவியுடன் ஷகி கஜானா நிதியிலிருந்து இந்தப் பணியைச் செய்துள்ளார். ஆனால் காசி விஸ்வநாதர் கோவிலின் பழங்கால வரலாற்றிலும் கல்வெட்டுகளிலும் இதுபற்றிய தகவல்கள் ஏதுமில்லை. கி.பி 1034ம் ஆண்டு முதல் காசி விஸ்வநாதர் கோவில் பலமுறை முகலாய பேரரசர்களால் இடித்து தள்ளப்பட்டுள்ளது. இதை இந்துக்கள் திரும்பத் திரும்ப கட்டி வந்துள்ளனர். 1669-ல் அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோவிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோவில் அருகில் ஒரு மசூதியையும் கட்டினார். இப்போதும் இந்த மசூதி இருக்கிறது. சிருங்கர் மண்டப சுவரை ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை கண்கூடாகப் பார்க்கலாம். இதிலிருந்து காசி கோவில் ஒரு புண்ணி சத்திரம் மட்டுமல்ல ஒற்றுமையின் சின்னம் என்பதும் நமக்கு புரிகிறது.

    இங்கு அன்ன பூரணி, சத்திய நாராயணர், டுண்டி ராஜவிநாயகர், சாட்சி விநாயகர், இராமர், அனுமன், சனிபகவான், துர்காதேவி, கவுடி மாதா, பைரவர், மகாகாளர், மகா காளி, பாண்டுரங்கன், நீலகண்டர், தண்டபாணீச்வரர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். விசுவநாதர் கோவில் கர்ப்பகிருகம் வடநாட்டுப்பாணியில் கோபுரம் உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது. மூலவர் விசுவநாத லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டிபோட்டுக் குனிந்து விசுவநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.

    கோவிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இதுதான் ஆதி நந்தி. ஆதி விசுவநாதர் கோவிலிருந்த இடத்தில் மசூதி உள்ளது. அந்த நந்தியின் அருகேதான் ஞானவாவி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோவில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தூர் ராணி அகல்யாபாய் இக்கோயிலைக் கட்டினார். இந்த கோவில் மிகவும் சிறிய கோவில் தான். குறுகலான பாதையில் சென்று கோவிலை அடைய வேண்டும். பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம். அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்னபூரணி கோவிலும், விசாலாட்சி கோவிலும் தனியே சிறிது தொலைவில் உள்ளன. விசாலாட்சி கோவில் நமது தென்னாட்டுப் பாணியில் உள்ளது. இங்கே நவக்கிரகங்களும் உள்ளன. அன்னபூரணி அம்பாள் கோவிலில் தீபாவளி அன்று அன்னக்கொடி உற்சவம் நடக்கும். அப்போது, அம்பாள் லட்டுத்தேரில் பவனி வருவாள்.

    பிரார்த்தனை:

    வியாச காசியில், வியாசர் வழிபட்ட சிவலிங்கத்தை வழிப்பட்டால் தான், காசிக்கு வந்த முழுப் பலனையும் அடையலாம். காசிக் காவலர் பைரவர் கோயிலில், காசிக் கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டிக் கொண்டால், நம்மைத் தீய சக்திகள் அண்டாது. கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது. விசுவநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. ஞான வாவியைத் தரிசித்தால் அறிவு புனிதம் அடைகிறது - என்று முனிவர்கள் பலர் கூறியுள்ளனர்.

    நேர்த்திக்கடன்:

    பக்தர்கள் இங்குள்ள தீர்த்தக் கரையில் தம் முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

    • கொடி மரத்திற்கு பால், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • மாசி மக பெருவிழா வருகிற 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள மிகப் பழமையான கோவிலான காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மகப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று காலை சுவாமி காசி விஸ்வநாதர் , அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் , தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களின் பக்தி நமசிவாய கோஷத்துடன் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    மாசி மக பெருவிழாவின் முதல்நாள் விழாவான கொடியேற் விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று தொடங்கிய மாசி மக பெருவிழா வருகிற 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். இதில் நாள்தோறும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற உள்ளது. மேலும் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது.

    • மாசி திருவிழா வருகிற மார்ச் 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    • முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 5-ந் தேதி நடைபெறுகிறது.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான காசி விசுவநாதர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித் திருவிழா முக்கிய நிகழ்வாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மாசி திருவிழா நாளை (சனிக் கிழமை) காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருவிழா வருகிற மார்ச் 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற இருப்பதால் தினமும் காலை, இரவு என சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற உள்ளது. மேலும் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 5-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதில் சுவாமி,அம்பாள் ஆகிய இருதேர்கள் வடம் பிடித்து இழுக்கப் படுகின்றன. தினமும் வெவ்வேறு சமுதா யத்தின் சார்பில் மண்டகப்படி திருவிழா கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர்கள் கவிதா,கோமதி கோவில் நிர்வாக அதிகாரி முருகன், ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்வதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
    • சிவராத்திரி விழாவில் தென்காசி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்வதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவிலின் ராஜகோபுரம் மற்றும் முக்கிய பகுதிகள் அனைத்தும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை முதல் தொடங்கிய சிவராத்திரி விழாவில் மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றன.

    சிவராத்திரி விழாவில் தென்காசி சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவிலின் பிரகார பகுதி மற்றும் முகப்பு பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு இன்று வாரணாசி தொகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மோடி வருகிற 30-ந்தேதி மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

    இதையொட்டி அவர் நேற்று குஜராத் சென்று தனது தாயை சந்தித்து ஆசி பெற்றார்.

    பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு வாரணாசி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவும் மோடி முடிவு செய்தார். வாரணாசி தொகுதியில் இருந்து 2014-ல் எம்.பி.யான மோடி மீண்டும் இந்த தடவையும் அங்கு போட்டியிட்டு 2-வது முறையாக எம்.பி.யாகி உள்ளார்.

    முதல் தடவை வாரணாசி தொகுதியில் மோடிக்கு சுமார் 6 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வாரணாசி தொகுதியில் உள்ள அனைத்து தரப்பினரும் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்க மோடி வாரணாசி சென்றார்.


    மோடி வருகையை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று மாலை வாரணாசி சென்று தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தார். மோடி இன்று காலை வாரணாசி வந்ததும் அவரை வரவேற்று காசி விசுவநாதர் ஆலயத்துக்கு அழைத்து சென்றார்.

    காசி விசுவநாதர் ஆலயத்தில் மோடி சிறப்பு வழிபாடுகள் செய்தார். விசுவநாதருக்கு தன் கைப்பட அபிஷேகம் செய்த அவர் தீபாராதனையும் காட்டி வழிபட்டார்.


    இதைத் தொடர்ந்து வாரணாசியின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள தீன் தயாள் உபாத்யாயா மையத்துக்கு செல்லும் மோடி அங்கு பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேச உள்ளார்.

    பின்னர் வாரணாசியில் முக்கிய இடங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
    ஆசாரிபள்ளத்தை அடுத்த மேல சங்கரன்குழி காசி விஸ்வநாதர் சிவன்கோவிலில் வருடாந்திர திருவிழா நாளை(சனிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    ஆசாரிபள்ளத்தை அடுத்த மேல சங்கரன்குழி காசி விஸ்வநாதர் சிவன்கோவிலில் வருடாந்திர திருவிழா நாளை(சனிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

    நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7.45 மணிக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 9 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு ஆன்மிக அறிவுரை, 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    13-ந்தேதி காலை 9 மணிக்கு சிறுவர்-சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள், இரவு 8 மணிக்கு வில்லிசை, 15-ந்தேதி காலை 7 மணிக்கு தை பொங்கல் வழிபாடு, இரவு 8 மணிக்கு வினாடி-வினா, 17-ந் தேதி இரவு 8 மணிக்கு இசை பட்டிமன்றம், 19-ந்தேதி இரவு 8 மணிக்கு நடன நிகழ்ச்சி, 21-ந் தேதி காலை நிறைவு விழா வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    வேடசந்தூர் கடைவீதியில் பழமை வாய்ந்த காசிவிசுவநாதர்-விசாலாட்சி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேக விழா நடந்தது.
    வேடசந்தூர் கடைவீதியில் பழமை வாய்ந்த காசிவிசுவநாதர்-விசாலாட்சி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேக விழா நடந்தது. மேலும் மூலவர் காசிவிசுவநாதருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சன பொடி உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மூலவருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதேபோல் கோவிலில் உள்ள விநாயகர், நவக்கிரகம், கால பைரவர், சுப்பிரமணியர், விசாலாட்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிவக்குமார் சிவாச்சாரியார் தலைமையில் 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மறுவாழ்வு பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
    ×