search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guru Pooja"

    • முத்துகிருஷ்ண சுவாமியின் குருபூஜை, தேரோட்டத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தேரோட்டத்தின் போது பரதநாட்டியம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் சூட்டுப்பொத்தை அடிவாரத்தில் முத்து கிருஷ்ண சுவாமி கோவில் கொண்டுள்ளார். முத்துகிருஷ்ண சுவாமியின் குருபூஜை மற்றும் தேரோட்டத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதேபோல் இந்த ஆண்டு விழா நேற்று காலை 6.30 மணிக்கு வனவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் மஹாமேரு மண்டபத்தில் உள்ள ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜை நடைபெற்றது.

    சிறப்பு பூஜை

    இதில் பூஜித குரு மாதாஜி வித்தம்மா, ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் மற்றும் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டா டப்படுகிறது.

    ஒவ்வொரு நாளும் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி சித்திரகூடத்தில் எஸ்.எஸ்.என்.ரமேஷ், சவுமியா பிரஷாந்த் குழுவினரின் வீணாகானம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வருகிற நாட்களில் இரவு லலிதகலா மந்திர் கலைஞர்களின் பரதநாட்டியம், இசை சொற்பொழிவு, பக்தி இசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தின் போது பரதநாட்டியம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தேரோட்டம் நிறைவு பெற்றதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. 23-ந் தேதி காலை 10.15 மணிக்கு மஹாமேரு தியான மண்டபத்தில் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறுகிறது.

    கார்த்திகை தீபம்

    26-ந் தேதி சூட்டுபொத்தையில் கார்த்திகை தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், 27-ந் தேதி காலை 5 மணிக்கு கிரிவல வழிபாடும் நடைபெறுகிறது. பின்னர் குருஜெயந்தி ஆராதனாவும் ,அபிஷேக திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • குருபூஜையைதொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது.
    • ஜீவசாமாதி குரு சுப்பிரமணிய சுவாமிக்கு 21 வகையான மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், பூர்ண கும்ப அபிஷேகம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் குரு பூஜை விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 7 மணிக்கு மேல் கணபதி பூஜை, சங்கல்பம், கும்ப பூஜை, கணபதி ஹோமம், குரு மூலமந்திர ஹோமம், பூர்ணகுதி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஜீவசாமாதி குரு சுப்பிரமணிய சுவாமிக்கு 21 வகையான மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், பூர்ண கும்ப அபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை சங்கரன் ஓதுவார் தலைமையில்,லட்சுமணன் சுவாமி, ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், ஆறுமுகம் ஆகியோர் பூஜைகளை செய்தனர். இதில் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, மாரியப்பன், கணபதி, அம்பலவாணன், கனகராஜ், லட்சுமணன், ராஜகாந்தன் மற்றும் விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, கொடி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டது.

    • குருபூஜை விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது.
    • பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது.

    பாம்பன் சுவாமிகளின் 94-வது குருபூஜை விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது. இதையடுத்து திருவான்மி யூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை ஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பாம்பன் சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், 108 சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    காலை 10.30 மணிக்கு பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் பாராயனம், மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் 6 மணிவரை விசேஷ பூஜை மற்றும் மேளக் கச்சேரி நடைபெற்றது.

    இதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு பாம்பன் சுவாமிகள் மற்றும் 6666 பாடல்கள் அடங்கிய புத்தகம் மேளம், நாதஸ்வர இசையுடன் கோவில் வளாகத்தில் உட்புறப்பாடு நடைபெற்றது. பின்னர் இரவு 11 மணி முதல் அதிகாலை வரை 6 கால பூஜை சண்முக சகச்சிரநாம அர்ச்சனையுடன் ஓதுதல் நடக்கிறது.

    நாளை (9-ந் தேதி) காலை சிறப்பு சோடச உபசார மற்றும் குமாரஸ்தல பூஜையும், மகேஸ்வர பூஜையும் நடைபெற உள்ளது.

    பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு ஆகும்.

    முருகனின் வழிபாடாக இவர் மொத்தம் 6666 பாடல்கள் இயற்றினார். இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. சிறுவயதில் இவருக்கு கந்தர் சஷ்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் உபய அருணகிரிநாதர் என்ற பெயரும் பெற்றார். பாம்பன் சுவாமிகள் 1929-ம் ஆண்டு மே 30-ந்தேதி முக்தி அடைந்தார்.

    மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அவரது அருளை பெற்று வருகிறார்கள்.

    • எறிபத்த நாயனார் கையில் எப்பொழுதும் ஒரு கோடாலியோடு இருப்பார்.
    • அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப்புள்ளி.

    63 நாயன்மார்களில் வன்தொண்டர்கள் உண்டு. அப்படிப்பட்ட தொண்டகளில் ஒருவர்தான் எறிபத்த நாயனார். கையில் எப்பொழுதும் அவர் ஒரு கோடாலியோடு இருப்பார்.

    ஒரு முறை அரசனின் பட்டத்து யானை, சிவகாமியாண்டார் என்ற வயதான சிவனடியார் எடுத்து வந்த பூஜை பொருட்களை தட்டி விட, அவர் அழுது கொண்டே நின்றார். அரசன் யானை என்பதால், யானையையோ யானைப் பாகனையோ தண்டிக்கவும் முடியவில்லை. தன் நிலையை நினைத்து வருந்தினார்.

    இதனைக் கேள்விப்பட்ட அடுத்த நிமிடம், கோபத்தோடு விரைந்து வந்த எறிபத்தர், அரசனுடைய பட்டத்து யானை என்றும் பார்க்காது யானையையும், யானைப்பாகனையும் தன் கையில் இருந்த மழுவால் (கோடரியால்) தண்டித்தார்.

    இந்தச் செய்தியை ஓடிச் சென்று பலரும் அரசிடம் தெரிவித்தனர். சிவனடியார் ஒருவர் இக்கொடுஞ்செயலைச் செய்தார் என்று சொல்ல, அப்படி சிவனடியார் ஆத்திரத் தோடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்தார். முழுக்கதையையும் அறிந்த புகழ்ச் சோழன், எறிபத்த நாயனார் செயல் சரிதான் என்றும், இதற்குத் தானும் பொறுப்பு என்றும் தன்னையே வாளால் தண்டித்துக் கொள்ள முனைய, எறிபத்த நாயனார், அந்த வாளை வாங்கி தன்னை மாய்த்துக் கொள்ள முயன்றார்.

    இவை அத்தனையும் உணர்ச்சி வசத்தால் செய்யப்பட்ட செயல்கள் என்றாலும், இதனுடைய உயிர் துடிப்பாக இருப்பது சிவநிந்தையைப் பொறுக்க முடியாமையும், சிவனுடைய பூஜை அவமதிப்பை தாங்க முடியாமையும், சிவ நெறியிலும் சிவபூஜையி லும் உள்ள மிக அழுத்தமான நம்பிக்கையும் ஆகும். அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப்புள்ளி.

    இச்செயல்களை திருவிளையாடலாக நடத்திய சிவபெருமான், இடப வாகனத்தில் உமையம்மையாரோடு தோன்றி, இவர்களை எல்லாம் மறுபடியும் உயிர்ப்பித்து அருளினார்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருமூலரை தரிசித்தனர்
    • கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூரில் திருமூல நாயனார் கோவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான திருமூலர் அவதரித்த சாத்தனூரில் திருமூலரை மூலவராக கொண்ட கோவில் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த கோவிலில் நேற்று அசுபதி நட்சத்திரத்தையொட்டி திருமூலருக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருமூலரை தரிசித்தனர். இதில், கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சந்திரசேகரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர் அதிபத்தநாயனார்.
    • அதிபத்தர் என்று தூய தமிழால் அழைக்கப்பட்டார்.

    இன்று (வெள்ளிக்கிழமை) அதிபத்த நாயனார் குருபூஜை. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்தநாயனார் நாகையில் வாழ்ந்தவர். பக்தியிலும் அதிதீவிர பக்தி உடையவர். ஆதலால் அதி பக்தராய் விளங்கிய நாயனார், அதிபத்தர் என்று தூய தமிழால் அழைக்கப்பட்டார். இவர் மீனவ குலத்திற்கு விளக்காக அவதரித்தவர்.

    சிவபெருமானிடம் இருந்த அதீதமான பக்தியினால், தமது வலையில் விழும் மீன்களுள் ஒன்றை மீண்டும் கடலிலேயே சிவார்ப்பணமாக விடும் வழக்கத்தை ஒவ்வொருநாளும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் அவ்வலையில் ஒரே ஒரு மீன் மட்டும் அகப்பட்டது. அதுவும் தங்கமாக ஜொலிக்கும் விலை மதிப்பற்ற ஒன்று. அப்படி இருந்தும் அதனை ஒரு பொருட்டாகத் தனக்கென்று எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டார்.

    நாயனாரது பக்தியை மெச்சிய பெருமான் ரிஷப வாகனத்தில் அம்பிகையுடன் தோன்றி அவருக்கு அருளினார் என்பது பெரியபுராணம் காட்டும் வரலாறு.

    நாயனார் அருள் பெற்ற ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று நாகை காயாரோகணேஸ்வர சுவாமி ஆலயத்தில் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இதனைக் காண அடியார்கள் வருகிறார்கள். பகலில் நடைபெறும் உற்சவம் இது.

    • 32-ம் ஆண்டு குருபூஜை விழா, மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் 60-ம் ஆண்டு கல்கி ஜெயந்தி விழா நடைபெற்றது.
    • ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்ரீலட்சுமி நாராயண பீடம் ஸ்ரீமகாலட்சுமி கோவிலில் மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் அருளாசியுடன் 32-ம் ஆண்டு குருபூஜை விழா, மகான் ஸ்ரீமகாலட்சுமி சுவாமிகளின் 60-ம் ஆண்டு கல்கி ஜெயந்தி விழா நடைபெற்றது. இதைெயாட்டி விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், அஷ்டதி ஹோமம், பஞ்சப்ரமே ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீ ஸூக்தம், புருஷஸூக்தம், மகாலட்சுமி, மிருத்யுஞ்ஜெய ஹோமம், ஸர்வ காயத்ரி ஹோமம் நடைபெற்றது. மேலும் மகா பூர்ணாஹூதி , சுவாமிஜி தம்பதியர்களுக்கு கலசாபிஷேகம், ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

    விழாவில் அகில தாந்திரி பிரச்சார சபா மாநில தலைவர் உடுப்பறை அம்மன் கோவில் சிவசக்தி சுவாமிகள், அகில தாந்திரி பிரசார சபா மாநில செயலாளர் பூசாரிப்பட்டி மகாமேரு பீடம் சண்முகசுந்தர சுவாமிகள், கோவை கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், பொள்ளாச்சி தங்கம் தா. சுவாமிகள் , கோவை கருமாரியம்மன் பீடம் செந்தில் சுவாமி, ஸ்ரீ சுந்தர்சனம் மடம் மயிலம்பட்டி ஸ்ரீமத் பராங்குச பரகால ஸ்ரீரங்க லம்பி ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் , டாக்டர் எல் .கே. ஜெயசூர்யா நாராயணன் சுவாமிகள்,அகில தாந்திரி பிரச்சார சபா மாநில தலைவர் பஞ்ச சக்தி தேவாலயம் கிருஷ்ணமூர்த்தி ,

    சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , முன்னாள் அமைச்சர் தாமோதரன்,திரைப்பட இயக்குனர் பாரதி மோகன் , புளியம்பட்டி பாலுசாமி சாஸ்திரிகள்,சேலம் சுரேஷ் பாபு, நிலக்கிழார் பிரபு, பொள்ளாச்சி ராமசாமி ,பெப்சி பெட் விஜயகுமார்,தென் மாவட்ட கவுண்டர் சங்க மாநில தலைவர் முத்துப்பாண்டி , கர்நாடக மாநிலம் நரசிம்ம கவுடா சீரா தாலுகா ஜெகநாதன், திருப்பூர் மாநகராட்சி 59-வது வார்டு கவுன்சிலர் கோமதி வி. எஸ். ராதாகிருஷ்ணன், தி.மு.க. இல. கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆண்டுதோறும் சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெறும்.
    • சிறப்பு ஹோமம், சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், முதலையுண்ட பாலகனை மீட்டெடுத்த அற்புதம் நடந்த கோவில் என்ற பல சிறப்பு பெற்றதாக விளங்குகிறது கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் சைவ சமய நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் குருபூஜை விழா நடந்தது. முன்னதாக சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இதையடுத்துசாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    • பரதேசி ஆறுமுகம் சுவாமிகள் குருபூஜை விழா நடந்தது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால் காவடி, சந்தன காவடி, புஷ்ப காவடி எடுத்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கோட்டுப்பாக்கம் கிராமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பரதேசி ஆறுமுகம் சுவாமிகள் குருபூஜை விழா நேற்று நடந்தது.

    காலையில் பரதேசி ஆறுமுக சுவாமிகள் ஜீவசமாதியில் குருபூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு உலக நன்மைக்காகவும் பருவ மழை பெய்ய வேண்டியும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    பின்னர் பரதேசி ஆறுமுக சுவாமி ஜீவசமாதிக்கு முன்பு பொங்கல் செய்து வைத்து படைக்கப்பட்டது.

    திருமணி சேறைவுடையார் சிவன் கோவில் சிவயோகி சித்தர் ஐ.ஆர்.பெருமாள் சுவாமி தலைமையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சிவனடியார்கள் குழந்தை வரம் கேட்டு வந்த பெண்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

    இதனை மடியில் பெற்றுக் கொண்ட பெண்கள் கோவில் குளத்தின் படிக்கட்டில் சாதத்தை வைத்து கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு முட்டி போட்டு வாயால் மண் சோறு சாப்பிட்டனர். இதில் சுமார் ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நேர்த்திக்கடனாக பால் காவடி, சந்தன காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்து பக்தர்கள் செலுத்தினர். ஒரு சில பெண்கள் பிறந்த குழந்தைகளை துலாபாரம் மூலமாக வைத்து எடைக்கு எடை காசுகளை காணிக்கையாக வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சீபுரம், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து குழந்தை வரம் கேட்டு பெண்கள் வந்திருந்தனர்.

    பின்னர் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

    இரவு வள்ளி, தெய்வானை, முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து புஷ்ப பல்லக்கில் மாட வீதி உலா வாணவேடிக்கையுடன் நடந்தது. தொடர்ந்து நாடகம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை கோட்டுப்பாக்கம் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • சுதந்திர போராட்ட தியாகி அழகு முத்துக்கோனின் 265-வது குருபூஜை விழா நடைபெற்றது
    • கட்சி நிர்வாகிகள் அழகு முத்துக்கோன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி அழகு முத்துக்கோனின் 265-வது குருபூஜை விழா திருப்பூர் பிச்சம்பாளையத்தில் நடைபெற்றது.

    இதில் மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள்எம்.எல்.ஏ. வுமான ரோகினி மா.ப.கிருஷ்ணகுமார், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளாரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அழகு முத்துக்கோன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெருப்பெரிச்சல் பகுதி பொறுப்பாளர் சுகம் வீர.கந்தசாமி மற்றும் கோகுல மணி செய்து இருந்தார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் கிங், மாவட்ட அவைத்தலைவர் பாலுசாமி, துணை செயலாளர் சூர்யா செந்தில், பொருளாளர் சேகர், மாவட்ட மகளிரணி செயலாளர் கலாவதி, மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை தலைவர் பாலகிருஷ்ணன், காந்திநகர் பகுதி துணைச் செயலாளர் வேலுகோபி, வார்டு கழக செயலாளர்கள் நாகேந்திரகுமார், ஜெயகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீ குரு பாத தரிசன லிங்கத்திற்கு பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள சித்தர் பீடம் ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயத்தில் குரு பூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 5 மணிக்கு மகா கணபதி பூஜை, கும்ப பூஜை, கணபதி ஹோமம், குரு மூல மந்திர ஜெபம், புர்ணாகுதி நடைபெற்றது.

    ஸ்ரீ குரு பாத தரிசன லிங்கத்திற்கு 21 வகையான மாபொடி, மஞ்சள், திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உண்பான் படைத்து சோடனை தீபாராதனையும் உச்சிகால பூஜையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் பூஜைகளை செய்தார்.

    இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், லட்சுமணன், ராஜகந்தன், மந்திரமூர்த்தி, கோபால கிருஷ்ணன் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பத்மாவதி, காந்திமதி, பூமாரி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய விழா குழுவினர் செய்திருந்தனர்.

    சண்முக வேலாயுத சுவாமிகளின் 113-வது குருபூஜை விழாவை முன்னிட்டு நந்திகேஸ்வரர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் இந்திர ஞான தங்கரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
    புதுச்சேரி வெள்ளாழ வீதியில் உள்ள நந்திகேஸ்வரர் கோவிலில் சமாதி கொண்டுள்ள நாடு சண்முக வேலாயுத சுவாமிகளின் 113-வது குருபூஜை விழா 5 நாட்கள் நடைபெற்றது. விழாவின் கடைசி நாளில் குருபூஜை வேள்வி, கலச வழிபாடு, புனிதநீர் வழிபாடு, பேரொளி வழிபாடு, மகேஸ்வர பூஜை, அன்னம் பாலிப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து அன்று மாலை நந்திகேஸ்வரர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திவான் கந்தப்பா குடும்பத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்திர ஞான தங்கரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நந்திகேஸ்வரர், மணக்குள விநாயகருக்கு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய குரு மகா சன்னிதானம் சுவாமிகள் முன்னிலையில் நாடு சண்முக வேலாயுத சுவாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மணக்குள விநாயகர் கோவில் தேவஸ்தான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
    ×