search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.ம.மு.க"

    • சுதந்திர போராட்ட தியாகி அழகு முத்துக்கோனின் 265-வது குருபூஜை விழா நடைபெற்றது
    • கட்சி நிர்வாகிகள் அழகு முத்துக்கோன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி அழகு முத்துக்கோனின் 265-வது குருபூஜை விழா திருப்பூர் பிச்சம்பாளையத்தில் நடைபெற்றது.

    இதில் மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு, கழக அமைப்பு செயலாளரும், முன்னாள்எம்.எல்.ஏ. வுமான ரோகினி மா.ப.கிருஷ்ணகுமார், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளாரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அழகு முத்துக்கோன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெருப்பெரிச்சல் பகுதி பொறுப்பாளர் சுகம் வீர.கந்தசாமி மற்றும் கோகுல மணி செய்து இருந்தார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் கிங், மாவட்ட அவைத்தலைவர் பாலுசாமி, துணை செயலாளர் சூர்யா செந்தில், பொருளாளர் சேகர், மாவட்ட மகளிரணி செயலாளர் கலாவதி, மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை தலைவர் பாலகிருஷ்ணன், காந்திநகர் பகுதி துணைச் செயலாளர் வேலுகோபி, வார்டு கழக செயலாளர்கள் நாகேந்திரகுமார், ஜெயகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூரில் நடந்தது
    • தினகரனுக்கு கே.டி.சி. நகரில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூர் நகர அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஹைதர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் சுமதி, துணைச் செயலாளர்கள் கோமதி, அருணகிரி சாமி, சுப்பிரமணியசுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் வேல்சாமி பாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திர மூர்த்தி என்ற வினோத் சிறப்புரையாற்றினார்.

    வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு நெல்லை வழியாக வருகை தரும் பொதுச்செயலாளர் தினகரனுக்கு கே.டி.சி. நகரில் தென்காசி வடக்கு மாவட்டத்தின் சார்பில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிப்பது,

    வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, பேரூர், ஒன்றிய, கழகத்துக் உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அதிக அளவு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×