search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Group 2 exam"

    • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்.
    • பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தொகுதி 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம் செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

    ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

    பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடை முறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதற்கான முடிவை டி.என்.பிஎஸ்.சி வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
    • நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 12 முதல் நேர்காணல் நடத்தப்பட்டது.

    ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதற்கான முடிவை டி.என்.பிஎஸ்.சி வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நேர்முகத்தேர்வு இல்லாத பணியிடங்களுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை

    அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகின. குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகியது.

    நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 12 முதல் நேர்காணல் நடத்தப்பட்டது.

    நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கான முடிவுகள் தேர்வாணைய வலைதளத்தில் இருவழித் தொடர்பு முறையில் (Interactive Mode) வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேர்காணல் பதவிகளுக்கு மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. நேர்காணல் அல்லாத பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகவில்லை, இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • குரூப் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
    • குரூப் 2 தேர்வு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவிப்பு.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவு வரும் ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது.

    5446 பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடந்த மெயின் தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவிப்பு

    குரூப் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், குரூப் 2 தேர்வு தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்த வேண்டிய சூழல், மிச்சாங் புயலால் விடைத்தாள் திருத்தும் பணியில் தாமதம் எனவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

     

    • அரசுப் பணிகளுக்காக பல நாட்கள் தயாராகிய போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • போட்டித் தேர்வு என்பது கண்துடைப்பு அல்ல, இளைஞர்களின் எதிர்காலம்.

    பாஜக மாநில தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு அரசுத் துறைகளில், குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த பிப்.25 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 முதன்மைத் தேர்வில், பலமுறைகேடுகள் நடந்துள்ளதாகத் தேர்வு எழுதிய போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அன்று காலை நடைபெற்ற தமிழ் தகுதித்தாள் தேர்வு மையங்களுக்கு, கண்காணிப்பாளர்கள் மற்றும் விடைத்தாள்கள் வர தாமதமாகி உள்ளது. பல மையங்களில் விடைத்தாள்கள் வரிசை எண் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. தேர்வு ஏற்கனவே தாமதமாக ஆரம்பித்ததால், போட்டியாளர்கள், தங்கள் பதிவெண்களைக் கவனிக்க நேரமில்லாமல், விடைத்தாளில் விடைகளைப் பதிவு செய்திருக்கின்றனர். பின்னர் மீண்டும் விடைத்தாள்களை வரிசை எண் படி மாற்றி வழங்கியிருக்கின்றனர். இந்த குளறுபடிகளிடையே, போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட விடைத்தாள்களில் ஏற்கனவே வினாக்களுக்கான பதில்கள் நிரப்பப்பட்டு இருந்ததாகவும், அவற்றை திருத்த கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கவில்லை எனவும், போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், மீண்டும் தேர்வு தாமதமாகியிருக்கிறது. இதனால், மாலை நடந்த தேர்வும் தாமதமாகத் தொடங்கியிருக்கிறது. தேர்வாணையம் செய்த தவறுகளுக்கு, அரசுப் பணிகளுக்காக பல நாட்கள் தயாராகிய போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம், இத்தனை அலட்சியப் போக்குடன் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதைவிட அதிர்ச்சியளிப்பது, தேர்தல் ஆணையத்தின் விளக்கம். 'முற்பகல் தேர்வானது கட்டாயத் தமிழ் தகுதி தேர்வாகும். ஆகையால், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது. இந்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது' என்றொரு விளக்கத்தைத் தேர்வாணையம் அளித்திருக்கிறது. பல லட்சம் மாணவர்களின் கனவான ஒரு முக்கியமான தேர்வுக்கு, தேர்வாணையம் தரும் மரியாதை இதுதான். 'கட்டாயத் தமிழ்த் தேர்வு' என்பது வெறும் ஒரு சடங்குதான். அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்று சொல்லியிருக்கிறது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். திமுக அரசு தரப்பில் இருந்து, இதற்கு யாரும் இதுவரை விளக்கம் தரவில்லை. அரசுப் பணித் தேர்வுகளுக்காகத் தீவிரமாக படித்துப் பயிற்சி எடுத்த இளைஞர்களை, இதைவிட யாரும் அசிங்கப்படுத்திவிட முடியாது. தமிழ்நாட்டு இளைஞர்கள், தங்களின் அத்தனை நாள் உழைப்பை வீணடித்துவிட்ட கோபத்தில் இருக்கிறார்கள். இத்தனை முறைகேடுகளுடன் நடந்த தேர்வு முடிவுகள், நியாயமாக இருக்கப் போவதில்லை என்று வருத்தப்படுகிறார்கள்.

    அது மட்டுமல்லாது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள், 2023 பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று உறுதியளித்த திமுக அரசு, இன்னும் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அரசுப் பணித் தேர்வுகளுக்காக அயராது உழைத்து, தயாராகும் இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. ஒட்டு மொத்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஈரோடு இடைத்தேர்தல் பணியில் ஈடுபடுத்தி, அரசு இயந்திரத்தை முடக்கிய திமுக, உடனடியாக பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் நம்பிக்கையிழந்துவிட்ட இளைஞர் சமுதாயத்தின் நம்பிக்கையை மீட்க, உடனடியாக, அவர்கள் கோரிக்கையான, மறுதேர்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். போட்டித் தேர்வு என்பது கண்துடைப்பு அல்ல, இளைஞர்களின் எதிர்காலம் என்பதை உணர்ந்து, இனியாவது, இது போன்ற முறைகேடுகளையும் குளறுபடிகளையும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்".

    • பலவேசமாரி அரசு வேலையில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வருகிறார்.
    • தேர்வு எழுதுவதற்காக பலவேசமாரியை அவரது தந்தை அழைத்து வந்துள்ளார்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை யாதவர் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இதில் கடைசி மகள் பலவேசமாரி(வயது 25) பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு அரசு வேலையில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வருகிறார்.

    நேற்று குரூப்-2 முதன்மை தேர்வு நடைபெற்றதால் அதனை எழுதுவதற்காக பாளையில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதுவதற்காக பலவேசமாரியை அவரது தந்தை சண்முகசுந்தரம் அழைத்து வந்துள்ளார்.

    தேர்வு மையத்திற்கு அவரை அனுப்பிவிட்டு பெருமாள்புரம் என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள தனது மற்றொரு மகளை பார்ப்பதற்காக சென்ற சண்முகசுந்தரம் மீண்டும் மாலையில் திரும்பி வந்துள்ளார். அப்போது பலவேசமாரியை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பாளை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பலவேசமாரியை தேடி வருகின்றனர்.

    • இந்த ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ ஆகியவற்றின் முதன்மை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
    • மாநகர பகுதியில் தேர்வு நடைபெறும் ஒரு சில மையங்களில் தேர்வர் களுக்கான பதிவெண்ணும், வினாத்தாளில் குறிப்பிடப்பட்ட எண்ணும் ஒத்துப் போகாததாக கூறி சிறிது நேரம் தேர்வு தாமதமானது.

    நெல்லை:

    இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், துணை பதிவாளர், நகராட்சி ஆணையர், துணை வணிக வரி அதிகாரி உள்ளிட்ட ஒருங்கிணைந்த பணி களுக்கான தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

    30 தேர்வு மையங்கள்

    இந்த ஆண்டுக்கான குரூப்-2, 2ஏ ஆகியவற்றின் முதன்மை தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடை பெறுகிறது. இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் நடைபெறும் இந்த தேர்வுக் காக நெல்லை மாவட்டத்தில் 24 அமைவிடங்களில் 30 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 5,070 பேர் விண்ணப்பித்திருந்த னர். முதன்மை தேர்வை யொட்டி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தமிழ் மொழி தகுதி தாளும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பொது தாளும் நடைபெறுகிறது.

    இதில் மாநகர பகுதியில் தேர்வு நடைபெறும் ஒரு சில மையங்களில் தேர்வர் களுக்கான பதிவெண்ணும், வினாத்தாளில் குறிப்பிடப் பட்ட எண்ணும் ஒத்துப் போகாததாக கூறி சிறிது நேரம் தேர்வு தாமதமானது.

    குளறுபடி

    பாளையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் பதிவெண் குளறுபடி காரணமாக தேர்வு எழுதுவதில் குழப்பம் ஏற்பட்டு தேர்வர்கள் அறையை விட்டு வெளியே வந்தனர்.

    அதே நேரத்தில் சிறிது நேரம் தாமதமாக வந்ததாக கூறி நுழைவு வாயிலுக்கு வெளியே சுமார் 10-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து மாநகர தலைமை இடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ½ மணி நேரம் தாமதம்

    சுமார் ½ மணி நேர தாமதத்திற்கு பின்னர் தேர்வர்கள் அந்த மையத் திற்குள் அனுமதிக்கப்பட்டு தேர்வை எழுத தொடங்கி னர். அவர்களுக்கு தாமதத்தை ஈடு செய்யும் வகையில் கூடுதல் நிமிடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பாளையில் உள்ள பள்ளி யில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை ஆய்வு செய்தார்.

    மாவட்டம் முழுவதும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய 31 வீடியோ கிராபர்கள், தேர்வினை கண்காணிக்கும் வகையில் 30 தேர்வு ஆய்வு அலுவ லர்கள் நியமிக்கபட்டு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்

    • தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வானது தொடங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டது.
    • தமிழ்நாட்டில் பல்வேறு தேர்வு மையங்களிலும் வினாத்தாளில் சீரியல் நம்பர் மாறி இருந்ததால் தாமதமாக தேர்வு தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் இன்று குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது. காலையில் தமிழ் மொழி தகுதி தாள் தேர்வும், மதியம் பொதுத்தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 186 மையங்களில் தேர்வு நடந்தது. முதலில் தமிழ் மொழி தகுதி தாள் தேர்வு நடந்தது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை பாரத் அறிவியல் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், சாஸ்திரா பல்கலைக்கழகம், கலைமகள் மேல்நிலைப்பள்ளி, அடைக்கல மாதா கல்லூரி ஆகிய 6 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 2025 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வானது தொடங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டது. அதாவது தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் புக்லெட் சீரியல் நம்பர் மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். இதன் காரணமாக தேர்வு குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உடனடியாக பாரத் கல்லூரிக்கு விரைந்து வந்தார். நிலைமையை கவனித்து சரியான வினாத்தாள் கொடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தார். தேர்வர்களிடம் நிலைமையை எடுத்து கூறி தற்போது வினாத்தாள் சரியான முறையில் கொடுக்கப்பட்டு விட்டது.

    இதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும். இதில் அரைமணி நேரம் ஏற்பட்ட காலதாமதத்தை ஈடுகட்டும் வகையில் தேர்வு முடியும் நேரம் ஆன 12.30 மணிக்கு பதிலாக 1 மணிக்கு தேர்வு முடியும் என்று கூறினார்.

    மேலும் தேர்வு மையத்திற்கு வெளியே கூடியிருந்த தேர்வர்களின் பெற்றோர்களிடமும் நிலைமையை எடுத்துக் கூறினார். இதேபோல் கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவும் தேர்வு மையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மதியம் 1 மணி வரை தமிழ் மொழி தகுதி தேர்வு நடைபெற்றது.

    இதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு தேர்வு மையங்களிலும் வினாத்தாளில் சீரியல் நம்பர் மாறி இருந்ததால் தாமதமாக தேர்வு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • விழுப்புரம் நகரில் 13 மையங்களில் 2450 பேர் குரூப் 2 தேர்வு எழுதினார்கள்.
    • விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் தேர்வெழுதியவர்களுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணில் குளறுபடி ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    பல்வேறு துறைகளில் குரூப் 2 பிரிவுகளில் உள்ள 5446 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகத்தில் 9,94,890 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 55,071 பேர் முதல் நிலை தேர்வில் தகுதி பெற்றனர்.

    அதனை தொடர்ந்து முதன்மைத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் 186 மையங்களில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    இதில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரில் 13 மையங்களில் 2450 பேர் தேர்வு எழுதினார்கள். இன்று காலை தமிழ் தகுதி தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதனை தேர்வாணையத் தலைவர் முனியநாதன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் தேர்வெழுதியவர்களுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டது. இவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என்றும், எங்கெல்லாம் தேர்வுகள் காலதாமதமாக தொடங்கப்பட்டதோ, அங்கெல்லாம் தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்க உத்தரவிட்டுள்ளதாக தேர்வாணையத் தலைவர் முனியநாதன் கூறினார்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குரூப் 2 தேர்வு இன்று காலையில் தொடங்கியது. அப்போது அங்கிருந்த அறை எண் 6-ல் தேர்வெழுதியவர்களுக்கு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டது. இதனால் குழப்பமடைந்த தேர்வர்கள் அதிகாரிகளிடம் இது குறித்து முறையிட்டனர். இதையடுத்து வினாத்தாள் குழப்பத்தை அதிகாரிகள் சரி செய்தனர். இதனால் தேர்வு மையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    • தேர்வர்கள் எண்கள் மாறி இருந்ததால் தேர்வு எழுத வந்திருந்தவர்கள் குழப்பத்திற்குள்ளானார்கள்.
    • குளறுபடியால் சிறிது நேரம் தேர்வு எழுத வந்தவர்கள் தவிக்க நேரிட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் குரூப் 2 பிரதானதேர்வு (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்தத் தேர்வை 55 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

    மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்த ஆண்டு மே 21-ந்தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பிரதான தேர்வு இன்று நடந்தது.

    காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு நடந்தது. கேள்வித்தாள்கள் இருந்த பண்டலை பிரித்து வினியோகம் செய்தபோது சிறிது குழப்பம் ஏற்பட்டது.

    தேர்வர்கள் எண்கள் மாறி இருந்ததால் தேர்வு எழுத வந்திருந்தவர்கள் குழப்பத்திற்குள்ளானார்கள். இந்த குளறுபடியால் சிறிது நேரம் தேர்வு எழுத வந்தவர்கள் தவிக்க நேரிட்டது.

    இதன் காரணமாக சில மையங்களில் சற்று தாமதமாக தொடங்கியது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தேர்வு நடைபெற உள்ளது.

    இந்தத் தேர்வை 55 ஆயிரத்து 71 பேர் எழுதி வருகிறார்கள். அவர்களில், 27 ஆயிரத்து 306 பேர் ஆண்கள். 27 ஆயிரத்து 764 பேர் பெண்கள். ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.

    இந்தத் தேர்வுக்காக, 20 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 280 தேர்வுக் கூடங்களில் தேர்வுகள் நடைபெற்றன.

    சென்னையில் 8 ஆயிரத்து 315 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் மூலமாக அசிஸ்டெண்ட் சிஸ்டம் அனலைசஸ்ட் பதவிக்கான குருப்-2 போட்டித்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
    விழுப்புரம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் மூலமாக அசிஸ்டெண்ட் சிஸ்டம் அனலைசஸ்ட் பதவிக்கான குருப்-2 போட்டித்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. விழுப்புரத்தில் 6 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1,653 பேர் விண்ணப்பித்திருந்தனர். விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி உள்பட 6 மையங்களில் நடந்த தேர்வை 788 பேர் எழுதினர். 865 பேர் எழுத வரவில்லை. விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது விழுப்புரம் தாசில்தார் பிரபு வெங்கடேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. #GroupII #TNPSC
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 5-ந் தேதி குரூப்-2-ல் அடங்கிய உதவி பொது வக்கீல் மற்றும் உதவி தொழில்நுட்பவியலாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    உத்தேச விடைகளில் மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டும் அதனை தேர்வாணையத்துக்கு தெரிவித்து சரியான விடைகளை கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து 16-ந் தேதி மாலை 5.45 மணி வரை இணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம். அதன்பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    குரூப்-2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை பிப்ரவரி மாதத்திற்கு பதிலாக மே மாதத்தில் நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #Group2Exam #AnbumaniRamadoss
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறுவதாக இருந்த குரூப்-2 முதன்மைத் தேர்வுகளை மூன்று மாதங்கள் முன்பாக, வரும் பிப்ரவரி மாத இறுதியில் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத காவிரி டெல்டா மாணவர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களை கடந்த நவம்பர் 16-ந்தேதி தாக்கிய கஜா புயல் அப்பகுதிகளை சிதைத்து விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். அத்துடன் போட்டித்தேர்வுகளுக்கு படிப்பதற்காக மாணவர்கள் வைத்திருந்த புத்தகங்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாசமாகிவிட்டன. அவர்களால் உடனடியாக போட்டித்தேர்வுக்கு தயாராக முடியாது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இதே நிலைமை தான் காணப்படுகிறது.



    குரூப்-2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை பிப்ரவரி மாதத்திற்கு பதிலாக மே மாதத்தில் நடத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே மே மாதத்தில் தேர்வு நடத்த பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Group2Exam #AnbumaniRamadoss 
    ×