search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold jewellery"

    • வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    • இதையடுத்து நாளை கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அப்போது அவரது வீட்டில் இருந்து 11,344 புடவைகள், 750 காலணிகள், 91 கை கடிகாரம், 28 கிலோ மதிப்பிலான 468 வகையான தங்கம், வைர நகைகள் மற்றும் 700 கிலோ வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த வழக்கு கர்நாடக வுக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அங்குள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது. சசிகலா உள்பட மற்ற 3 பேரும் சிறை தண்டனையை அனுபவித்தனர்.

    இந்த சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ஏலம் மூலம் விற்று அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும்படி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த பொருட்களை நாளை, நாளை மறுநாள் (7-ந் தேதி)தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன்படி நாளை (புதன்கிழமை) ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் கர்நாடக அரசு ஒப்படைக்க உள்ளது. இதற்காக மாநில அரசு தன்வசம் உள்ள பொருட்களை ஒப்படைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த பொருட்களை பெற்றுக்கொள்ள தமிழக, உள்துறை அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உயர் அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு பெங்களூரு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பின்னர் நகைகள் மற்றும் உடமைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். 6 பெரிய டிரங்கு பெட்டிகளில் அந்த பொருட்கள் கண்டெய்னர் லாரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் இவை அனைத்தையும் பதிவு செய்ய வீடியோகிராபரும் அழைத்துச் செல்லப்படுகிறார்.

    இதையடுத்து நாளை கோர்ட்டு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • கோவை சர்க்கார் சாமகுளம் அடுத்த லட்சுமி ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வரும் மகனுடன் தற்போது ஒன்றாக குடியிருந்து வருகிறார்கள்.
    • பஸ் சேலம் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது இவர்களது பையில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 61).

    இவரும், இவரது மனைவியும் கோவை சர்க்கார் சாமகுளம் அடுத்த லட்சுமி ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வரும் மகனுடன் தற்போது ஒன்றாக குடியிருந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தனபால், தனது மனைவியுடன் சேலம் குகை கருங்கல்பட்டியில் வசிக்கும் தனது மகளை பார்க்க வந்தனர். மகளை பார்த்துவிட்டு தனபாலும் அவரது மனைவியும் கோவை செல்வதற்காக சேலம் பழைய பஸ் நிலையத்திலிருந்து அரசு டவுன் பஸ்சில் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

    பஸ் சேலம் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது இவர்களது பையில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

    இது குறித்து செவ்வாய்ப் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ்சில் வரும் போது தனபாலின் அருகில் இருந்த தம்பதிகள் பையை நகர்த்தி வைப்பது போல் பாசாங்கு செய்து நகையை திருடியிருப்பது தெரியவந்தது.

    அதை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பஸ்சில் நூதன முறையில் நகைகளை கொள்ளை அடித்து சென்ற தம்பதிகளை தேடி வருகிறார்கள்.

    • அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வேகமாக ஓடி உள்ளார்.
    • வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகைகளை பார்த்தபோது 3 பவுன் தங்கச் செயின், 2 பவுன் தங்க கைச்செயின் என மொத்தம் 5 பவுனை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் எம். ராசாம்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் பாவாயி (57).இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந் தேதி அன்று இரவு 9 மணி அளவில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வேகமாக ஓடி உள்ளார்.

    அதை பார்த்த பாவாயி திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பி ஓடி மறைந்து விட்டார். பாவாயி வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகைகளை பார்த்தபோது 3 பவுன் தங்கச் செயின், 2 பவுன் தங்க கைச்செயின் என மொத்தம் 5 பவுனை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து பாவாயி மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம் ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் சதீஷ்குமார் (31) என்பவரை கைது செய்து ஏற்கனவே சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் தீவிர விசாரணை நடத்தியதில் மற்றொரு குற்றவாளியான நாமக்கல் வீசாணம் வீனஸ் காலனியைச் சேர்ந்த சக்திவேல் மகன் மணிபாரதி (24) என்பவரை நேற்று கைது செய்து அவரிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • ஹால்மார்க் எண் பொறிக்கப்படாத தங்க நகைகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது.
    • நாடு முழுவதும் 940 ஹால்மார்க் முத்திரை அளிக்கும் மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

    புதுடெல்லி:

    தங்க நகைகள் மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை உறுதி செய்ய, ஹால்மார்க் முத்திரை அளிக்கும் முறை பயன்படுத்தப்படுகிறது. ஹால்மார்க் முத்திரை பெற, தனித்துவமிக்க ஆறு இலக்க எண் ஒன்று ஒவ்வொரு நகை மீதும் பொறிக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த நகையை உருவாக்கிய நிறுவனம் மற்றும் ஹார்ல்மார்க் முத்திரை அளித்த மையம் எது என்பதை எளிதாக கண்டறிய முடியும்.

    நாடு முழுவதும் 940 ஹால்மார்க் முத்திரை அளிக்கும் மையங்கள் உருவாக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன. சிறு, குறு நகை நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதற்கு ஆகும் கட்டணத்தில் 80 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் 90 சதவீதம் சலுகை அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.

    இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் ஹால்மார்க் நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், மார்ச் 31-க்குப் பின் ஹால்மார்க் அடையாளம் இல்லாத நகையை விற்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்படுவதன் மூலம் தங்க நகை வாங்குபவர்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்பட்டு, நாடு முழுவதும் தங்க நகைகளின் தரத்தை ஒரே அளவில் இருக்கச் செய்யமுடியும்.

    • சேலத்தில் டெய்லர் வீட்டில் நூதன முறையில் தங்க நகைகள் கொள்ளை போனது.
    • வீட்டைப் பூட்டிக்கொண்டு சாவியை வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறை பகுதியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் ராஜா வீதி பகுதியை சேர்ந்தவர் குமார் இவரது மனைவி எஸ்தர் (வயது 40).

    இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 10 மணி அளவில் வீட்டைப் பூட்டிக்கொண்டு சாவியை வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறை பகுதியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கச் செயின், கம்மல்கள், மோதிரம், தங்க காசு, ஆகிய 19 கிராம் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து எஸ்தர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் பாதுகாப்பாக உள்ளது என்று தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.
    திருவனந்தபுரம்:

    சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பணம், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். காணிக்கையாக செலுத்தப்படும் பணம் அவ்வப்போது கணக்கிடப்பட்டு வங்கியில் செலுத்தப்படும். தங்கம், வெள்ளி பொருட்கள் பத்தனம்திட்டை மாவட்டம், ஆரன்முளாவில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    திருவிதாங்கூர் தேவசம்போர்டின் 3 கணக்கு தணிக்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த நகைகள் ஆண்டுக்கு ஒரு முறை தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அறையில் பாதுகாக்கப்பட்டு வந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மாயமானதாக தேவஸ்தானத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அந்த அறையில் சோதனை நடத்தினர்.

    அப்போது தங்கம் வெள்ளி உள்பட விலை உயர்ந்த பொருட்களின் கணக்கு விவரங்கள் பல ஆண்டுகளாக முறையாக தணிக்கை செய்யப்படாதது தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை கேரள ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கேரள ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் நேற்று கணக்கு தணிக்கை அதிகாரிகள் மீண்டும் அந்த அறையில் சோதனை நடத்தி தங்கம், வெள்ளி உள்பட பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்து தேவஸ்தானத்திற்கு அறிக்கையாக தாக்கல் செய்தனர்.

    பத்மகுமார்

    அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து, நேற்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆரன்முளையில் பாதுகாக்கப்பட்டு வரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சொந்தமான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பாதுகாப்பாகவே உள்ளது. இதில் இருந்து ஒரு கிராம் தங்கம் கூட மாயமாகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இன்றைய நாளில் இளம் பெண்களின் கரங்களில் தவழ்வன பெரிய தங்க வளையல்கள் தான். தற்போது பெண்களை கவரும் விதத்தில் ஒற்றை பெரிய வளையல்கள் உலா வருகின்றன.
    இன்றைய நாளில் இளம் பெண்களின் கரங்களில் தவழ்வன பெரிய தங்க வளையல்கள் தான். அதிக விருப்பமும், ஆர்வமும் நிறைந்த நகையாய் தற்போது பெண்களை கவரும் விதத்தில் ஒற்றை பெரிய வளையல்கள் உலா வருகின்றன. பாரம்பரிய திருமண நகைகளின் வகையில் இந்த பெரிய வளையல்கள் பழங்கால வடிவமைப்பு மற்றும் தற்கால வடிவமைப்பு என்றவாறு கூடுதல் மெருகுடன் வடிவமைக்கப்படுகின்றன.

    இந்த பெரிய வளையல்கள் அனைவரின் கவனத்தை தன் வண்ணம் ஈர்க்கும் வகையில் இருப்பதுடன், அணிபவரின் கையின் கவுரவத்தையும், அழகையும் மேம்படுத்தும் வகையில் உள்ளது. அனைத்து வயதுள்ள பெண்களும் இதனை விரும்பி அணியலாம். குறிப்பாக இளம்வயதினர் மற்றும் மத்திய வயதுள்ள பெண்களே விரும்பி வாங்கி அணிகின்றனர்.

    ஆசிய நாடுகள் பலவற்றிலும் புதிய நவநாகரீக அணிகலனான இந்த பெரிய ஒற்றை தங்க வளையல்கள் அதிகமாக பிரபலமாகி வருகின்றது. இந்த பெரிய வளையல்கள் அனைத்தும் பெரும்பாலும் அணிபவரின் கையில் நுழைந்து சென்று விடாது. காரணம் கையில் கச்சிதமாக அமர்வதற்கு ஏற்ப பிரித்து மாட்டி கொள்ளும் கொக்கியுடன் இவ்வளையல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் வளையல்கள் எவ்வளவு பெரியதாகவும், மெல்லிய மற்றும் தகடு அமைப்பில் இருப்பினும் அணியும் போது வளைவோ, சேதமோ ஏற்படாது. அதிக வேலைப்பாடு மற்றும் எனாமல், கற்கள் பதித்த வளையல்கள் என்பதால் விழாகளுக்கு அணிந்து சென்று உடனே கழற்றி பாதுகாத்திடுவது நலம்.

    தங்கமணி குஞ்சரங்கள் தொங்கும் பிலிகிரி வளையல் :

    அற்புதமான தங்க நகை வேலைப்பாடு நிறைந்த இந்த வளையல் பெண்களின் கரங்களில் ஓர் நடன சாம்ராஜ்யத்தையே நிகழ்த்திடும். ஆம் அந்த அளவிற்கு வளையலின் இரு ஓரப்பகுதிகளிலும் தங்க மணி குஞ்சரங்கள் தொங்குகின்றன. அதில் பட்டையிலான வளைபின்னல் வேலைப்பாட்டின் இடையஇடையே மூன்று தங்க மணிகள் ஊஞ்சலாடுகின்றன. பட்டையான அமைப்பில் வளைவுகளாய் தங்க முத்துக்கள் மேலெழும்பியவாறு இடையில் சல்லடை அமைப்பும் தனித்துவத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.



    எனாமல் பட்டாம்பூச்சி பறக்கும் வலை பின்னல் வளையல் :

    பெரிய அகலமான வளைபின்னல் அதிக செதுக்கல்களுடன் இருக்க அதன் மேல் அழகிய வண்ண பட்டாம்பூச்சிகள் மற்றும் பூக்கள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரு பிரிவுகளாக பிரித்து அணியும் வகை என்பதால் இருபக்கமும் இதே வடிவமைப்பு பிரம்மாண்ட வளையல் அமைப்பை தருகிறது. நேர்த்தியான வளைவுகளுடன் பிலிகிரி வேலைபாட்டுடன் இவ்வளையல் உள்ளது.

    டெம்பிள் வளையல்கள்:

    டெம்பிள் ஜிவல்லரி என்ற இறைஉருவம் பொறித்த மற்றும் கோயில் சின்னங்கள் நகை வடிவமைப்பிலும் பெரிய வளையல்கள் வருகின்றன. கையில் இறுக பிடிக்கும் அமைப்பில் மஹாலட்சுமி, அஷ்டலட்சுமி, பாரம்பரிய பூவேலைப்பாடு, சின்னங்கள் செதுக்கப்பட்ட இவ்வளையல்கள் அணியும் வகையிலும், மாட்டும் வகையிலும் உருவாக்கி தரப்படுகின்றன.

    கல்பதித்த ஒற்றைவளையல்கள் :

    நடுவில் கயிறு போன்ற அமைப்பும், ஓரப்பகுதிகள் இருபுறமும் ஓவல் வடிவில் நடுப்பகுதி மரகத கல்லும் சுற்றி சிறு சிறு மாணிக்க கல்லும் பதியப்பட்ட அமைப்பும், இடைவெளிவிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே சதுர அமைப்பும் அதில் வெள்ளை கல் பதியப்பட்டுள்ளது. இதன் கீழ் ஓரப்பகுதிகள் சிறு சிறு முத்துக்களால் இணைக்கப்பட்டுள்ளது. ஓர் அழகிய முத்து, மாணிக்க, மரகத தோரணம் இருபுறமும் உள்ளவாறு அழகுடன் இவ்வளையல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகிய வெள்ளை கற்கள் மட்டும் பதித்த பட்டை வடிவ பூ வளையல் மற்றும் பிலிகிரி வளையல்கள் அதிஅற்புதமாக உள்ளன. ஒற்றை பெரிய வளையல்கள் பெண்களின் அழகிய கலைசின்னயமாய் வலம் வருகின்றன.
    பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர். பெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
    பெண்களை வர்ணிக்கும்போது வண்ணமயிலோடு ஒப்பிட்டு புகழ்வர். அந்த கையில் அவர்களது ஆடைகள், நகைகள் பெரும்பாலும் பயன்படுத்தும் பல பொருட்கள் அனைத்திலும் மயில்கள் பிரதான வடிவமைப்பு பொருளாக அலங்கரிக்கின்றன. குறிப்பாக பெண்கள் அணியும் தங்க நகைகளில் மயில் டிசைன் நகைகள் என்றவாறு பிரத்யேக அணிவகுப்பு நகைகள் உள்ளன. இவை மயில்களின் அலங்கார அணிவகுப்பு, வண்ண தோகை அலங்காரம், அழகிய வளைவுகள் என்றவாறு கைநுணுக்க வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகின்றன.

    பெண்களின் அழகிய வளைவு நெளிவுக்கு ஏற்ற அலங்கார நகைகள் விதவிதமான மயில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. பழங்கால ஆண்டிக் நகைகள் முதல் நவீன கால் வடிவமைப்பு நகைகள் வரை அனைத்திலும் மயில்களின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது.

    மயில்கள் அணிவகுக்கும் ஆன்டிக் ஆரம் :

    ஆன்டிக் நகைகள் பெரிய பிரம்மாண்ட தோற்றத்துடன் காணப்படும் நகை. அதன் வடிவங்கள் சிற்ப வேலைப்பாடு பழமையின் பிரதான சின்னங்களுடன் கூடுதல் உழைப்புடன் காணப்படுபவை. ஆன்டிக் நகைகள், பாதுகாக்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷ நகையாக உள்ளன. மயில்கள் இருபுறமும் வரிசை கிரமமாய் தோகை விரித்தப்படி அணிவகுக்க அதன் இரு பெரிய மயில்கள் தொங்குவது போன்ற பதக்க அமைப்பு, பதக்க ஓரப்பகுதியில் இலை மோடிப் கொண்டவாறும், கீழ் மணி உருளைகள் தொங்குகின்றன. பதக்கத்தின் நடுப்பகுதியில் கற்கள் பதித்த மயில் வண்ணமாய் நடனமிடுகிறது. ஆன்டிக் மயில் ஆரத்தில் எட்டு தங்க மயில் வடிவங்களும், ஒன்பதாவதாக கல் மயில் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மயில்களின் கூடாரமாய் திகழும் இந்த ஆரம் பெண்களின் கழுத்திற்கு மயில் தோரணமாய் அலங்கரிக்கின்றன.



    வண்ணமயமான நாக்ஷி- போல்கி மயில் ஆரங்கள் :

    தங்கத்தில் அழகிய தோகையுடன் கூடிய மயில் உருவத்தின் ஓரப்பகுதி, தலை பகுதி, தோகைப்பகுதியில் அன்-கட் டைமண்ட் மற்றும் வண்ணக் கற்கள் மணிகள் பதித்து மயிலை அழகுற வடிவமைத்து உள்ளன. இந்த மயில்கள் இருபுறமும் வண்ணமா ஜொலிக்க நடுவே பெரிய இருமயில்கள் வளைந்தவாறு தொங்கும் அமைப்பில் கற்கள், மணிகள் தொங்க விடப்பட்டபடி உள்ளன. பெரிய வெள்ளைக்கற்கள் மற்றும் மோல்கி வடிவமைப்பில் பெரிய அகலமான ஆரங்கள் கைநேர்த்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இருமயில் தோகைகளுடன் இணைந்த ஆரமும் அற்புதம்.

    பச்சை வண்ண மயில் காதணிகள் :

    மயில்கள் வெள்ளை மற்றும் பச்சை கற்கள் பதித்தவாறு வளைந்தவாறும் தொங்கும் அமைப்பிலும் உள்ள காதணிகள் அழகோ அழகு. இதில் தோகை பகுதியில் பச்சை நிற கற்கள் பதித்தவாறு கீழ் பகுதியும், கொண்டை மற்றும் முகப்பகுதியில் வேறு வண்ண கற்கள் காதுடன் பொருந்தும் பகுதியாகவும், உடல் பகுதியில் வெள்ளை கற்கள் பதிய விடப்பட்டுள்ளன. தோகைகள் சுருள் அமைப்பு, நீள் அமைப்பு, வளைந்த அமைப்பு பல வகை வடிவத்துடன் மயில்கள் மாறுபட்டவாறு டிசைன் செய்யப்பட்டுள்ளன.



    இரட்டை மயில்கள் நடனமாடும் வளையல்கள் :

    முழுக்க முழுக்க தங்கத்தில் சிற்ப வேலைப்பாடு கொண்ட ஆன்டிக் வளையல்கள் அகலமாய், இடையில் கொடிகள் ஓடுவது போன்று டிசைன் செய்யப்பட்டு உள்ளன. அதுபோல் கம்பி வளையல் அமைப்பின் நடுப்பகுதியில் மட்டும் கல் பதித்த மயில்கள் நடனமாடுவதுபோன்றும், தோகையுடன் ஜொலிப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் முத்தாய்ப்ாய் தங்க உடல் பகுதியில் கொண்டை, கண், தோகை அனைத்தும் மாறுபட்ட வண்ணத்தில் எனாமல் பூசப்பட்ட மயில் வளையல்கள் வர்ணஜாலம் நிகழ்த்துகின்றன. அதுபோக 'பென்டன்ட் எனும் பதக்க அமைப்புகள் தனிப்பட்ட டாலர் அமைப்பாய் மயில் உருவத்துடன் கிடைக்கின்றன.
    ×