என் மலர்

    நீங்கள் தேடியது "Tailor"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 6 மாதத்திற்கு முன்பு கார்த்திக் மது அருந்தி விட்டு போதையில் கண்ணாடியை உடைத்தார்.
    • மனம் உடைந்து காணப்பட்ட கார்த்திக் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 44). இவர் டெய்லர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி இந்திராகாந்தி(42). இவர் களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கார்த்திக்கிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து ள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு கார்த்திக் மது அருந்தி விட்டு போதையில் கண்ணாடியை உடைத்தார். இதில் அரவது கையில் நரம்பு அறுபட்டு படுகாயம் அடைந்தார். இதனால் அவரது கை செயல் இழந்தது. இதையடுத்து அவரால் பணிக்கு செல்ல முடியவில்லை. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட கார்த்திக், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மூலக்க ரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மார்க்கேயன் கோட்டை பகுதியை சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 40). இவர் தையல் தொழில் செய்து வருகிறார்.
    • பாபு, நடந்து சென்று கொண்டிருந்த வெங்கடேஷ் மீது மோதியதில் வெங்கடேஷ் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார்.

    பரமத்தி வேலூர்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே மார்க்கேயன் கோட்டை பகுதியை சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 40). இவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவர் தற்பொழுது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் பகுதி யில் தங்கி தையல் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலை யில் இரவு வெங்கடேஷ் மணியனூர் பிரிவில் உள்ள டீக்கடைக்குச் சென்று அங்கு டீ குடித்துவிட்டு தான் தங்கி உள்ள அறைக்கு செல்வ தற்காக பரமத்தி வேலூர்-திருச்செங்கோடு சாலை, மணியனூர் செய்யாம்பா ளையம் பிரிவு சாலை அருகே ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அச்சாலையில் மோட்டார் சைக்கிள்ளில் அதிவேகமாக வந்த திருச்செங்கோடு பன்னீர் குத்தி பாளையம் பகுதியை சேர்ந்த தங்கமணி என்ப வரது மகன் பாபு, நடந்து சென்று கொண்டிருந்த வெங்கடேஷ் மீது மோதியதில் வெங்கடேஷ் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். இதில் வெங்கடேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்செங்கோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நல்லூர் போலீஸ் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பனியன் நிறுவனத்தில் கடந்த 1 வருடமாக சமையல்காரராக வேலை பார்த்து வந்தார்.
    • திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சக்தி நகரில் வசிப்பவர் குமரேசன்(வயது 42) . இவர் மனைவி சத்யா மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார். அருகே உள்ள பனியன் கம்பெனியில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சகோதரர் ரமேஷ் குமார் என்பவர் இவரை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது குமரேசன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குமரேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து ரமேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் குமரேசன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் உஜகார் சிங்(37). இவர் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையத்தில் தனியார் பனியன் நிறுவனத்தில் கடந்த 1 வருடமாக சமையல்காரராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று வந்தார். ஊருக்குச் சென்று வந்ததிலிருந்து சோகமாகவே காணப்பட்ட அவர், நேற்று காலை வேலைக்கு வரவில்லை. இதையடுத்து உடன் பணிபுரியும் தொழிலாளர் ஒருவர்,அங்குள்ள பனியன் நிறுவன விடுதியில் அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, உஜகார் சிங் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கீழே கிடந்துள்ளார். இதையடுத்து அவரை திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உஜகார் சிங் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி திவ்யா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருச்சி மாவட்டம் கல்லக்குடி பகுதியைச் சேர்ந்த சங்கிலி என்பவரது மகன் மகாலிங்கம்(42). இவர் பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் உள்ள தனியார் கார் ஒர்க் ஷாப்பில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை ஒர்க் ஷாப்பில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் வெளியே சென்ற ஒர்க் ஷாப் உரிமையாளர் குணசேகரன் திரும்பி வந்தபோது, மகாலிங்கம் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டிலிருந்து பனியன் நிறுவனத்திற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
    • ரோட்டோரம் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பேபி(வயது 40). இவருக்கு ராணி என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி இரவு வீட்டிலிருந்து பனியன் நிறுவனத்திற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கணபதிபாளையம் - திருப்பூர் ரோட்டில் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிள் சென்னிமலைபாளையம் என்ற இடம் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அக்கம் - பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் ஓட்டல் கடை மாஸ்டரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
    • பல்லடம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி பொன் நகர் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் கணேசன்(வயது 53) இவர் அதே பகுதியில் உள்ள ஓட்டல் கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இவரது அறை நீண்ட நேரம் திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த இவரது மனைவி புனிதா சென்று பார்த்த போது, வீட்டின் மேற்கூரை விட்டத்தில், தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம் - பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து புனிதா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(37). இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், 14 வயதில் மகள், 11 வயதில் மகன் ஆகியோர் உள்ளனர். இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக, இவர் நோய்வாய்ப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் வீட்டில் தனியே இருந்த அவர் வீட்டின் மேற்கூரை விட்டத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்று இருந்த அவரது மனைவி வீடு திரும்பிய நிலையில், கணவர் தூக்கு போட்டு தொங்குவதைக் கண்டு அலறி துடித்ததுடன், அக்கம் - பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றார் .அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ஒடிசா மாநிலம், கிரஷ்கா பகுதியைச் சேர்ந்த அக்சைய்நாயக் (35) என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த ரூநிலடா நாயக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தனது மனைவி ரூநில்டா நாயக்கை பிரிந்து அக்சை நாயக் மட்டும் வெள்ளகோவில் அருகே உள்ள நடுப்பாளையம் என்ற இடத்தில் இருக்கும் நூல் மில்லில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் ஒடிசா சென்று தனது மனைவி மற்றும் 4 வயது மகளையும் அழைத்துக் கொண்டு வந்து மில் வளாகத்தில் குடியிருந்து வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் அக்சைய் நாயக் மற்றும் மனைவி மகள் ஆகியோர் மில் வளாகத்தில் உள்ள கேண்டினில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ரூநில்டா முன்னரே சாப்பிட்டுவிட்டு தான் தங்கியிருக்கும் அறைக்கு தனது மகளை அழைத்துக் கொண்டு வேகமாக சென்று தனது மகளை அறைக்கு வெளியே நிற்க சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார்.இதையறிந்த 4 வயது மகள் சத்தம் போட்டு உள்ளார். சத்தத்தை கேட்ட அக்சைய் குமார் மற்றும் உடன் பணியாற்றுவோர் கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ரூநில்டா மின்விசிறியின் கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போது பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இது சம்பந்தமாக காங்கேயம் போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.டெய்லர் உள்பட 3பேர் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலத்தில் டெய்லர் வீட்டில் நூதன முறையில் தங்க நகைகள் கொள்ளை போனது.
    • வீட்டைப் பூட்டிக்கொண்டு சாவியை வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறை பகுதியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் ராஜா வீதி பகுதியை சேர்ந்தவர் குமார் இவரது மனைவி எஸ்தர் (வயது 40).

    இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 10 மணி அளவில் வீட்டைப் பூட்டிக்கொண்டு சாவியை வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறை பகுதியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கச் செயின், கம்மல்கள், மோதிரம், தங்க காசு, ஆகிய 19 கிராம் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து எஸ்தர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநிலம் தழுவிய அளவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • உதய்பூர் படுகொலை சம்பவத்திற்கு அசோக் கெலாட், ராகுல்காந்தி கண்டனம்.

    உதய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்தவர் கண்கையா லால். நேற்று இவரது கடைக்கு வந்த இரண்டு பேர் அவரிடம் ஆடை தைக்க வேண்டும் என்று பேசியபடி வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச்சென்று, தலையை துண்டித்தனர்.

    சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கண்கையா லால் கருத்து தெரிவித்ததால் படுகொலை செய்ததாகவும் அவர்கள் தெரிவிருந்தனர்.

    இது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டதால் உதய்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் 24 மணி நேரத்திற்கு அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டது.

    இந்நிலையில் ராஜ்சமந்த் மாவட்டம் பீம் பகுதியில் இருந்து இரண்டு குற்றவாளிகள் கவுஸ் முகமது மற்றும் ரியாஸ் அகமது பிடிபட்டதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கொடூர கொலையால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


    உதய்பூர் தையல்காரர் கொலையில் வெளிநாட்டு சதி இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்துவதற்காக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் உதய்பூர் விரைந்தனர். 

    உதய்பூர் படுகொலை சம்பவத்தை கண்டிப்பதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கெலாட் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சமாதான கொள்கையின் விளைவுதான் இந்த கொடூர நிகழ்வுக்கு காரணம் என்று, ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா குற்றம் சாட்டி உள்ளார். 


    உதய்பூர் படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இநத கொடூரமான கொலையால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், மதத்தின் பெயரால் நடக்கும் மிருகத்தனத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

    கொடூரமான பயங்கரவாதத்தை பரப்புபவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெறுப்புணர்வை முறியடிக்க வேண்டும் என்றும் தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பட்டப்பகலில் தையல் தொழிலாளி தலையை துண்டித்த சம்பவம் ராஜஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.
    • அடுத்த 24 மணி நேரத்திற்கு அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கண்ணையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் இன்று அத்துமீறி புகுந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கண்ணையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து தலையை துண்டித்தனர். இதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    விசாரணையில், சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் கண்ணையா லால் படுகொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது.

    இந்தக் கொடூர சம்பவம் ராஜஸ்தானில் காட்டுத்தீயாக பரவியதால் அங்கு கடையடைப்பு , வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற, வன்முறை சம்பவங்கல் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    ×