search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் காயமடைந்த டெய்லர் உயிரிழப்பு
    X

    கோப்புபடம்.

    விபத்தில் காயமடைந்த டெய்லர் உயிரிழப்பு

    • வீட்டிலிருந்து பனியன் நிறுவனத்திற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
    • ரோட்டோரம் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பேபி(வயது 40). இவருக்கு ராணி என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி இரவு வீட்டிலிருந்து பனியன் நிறுவனத்திற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கணபதிபாளையம் - திருப்பூர் ரோட்டில் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிள் சென்னிமலைபாளையம் என்ற இடம் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×