search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தையல் தொழிலாளி படுகாயம்
    X

    பரமத்தி வேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தையல் தொழிலாளி படுகாயம்

    • மார்க்கேயன் கோட்டை பகுதியை சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 40). இவர் தையல் தொழில் செய்து வருகிறார்.
    • பாபு, நடந்து சென்று கொண்டிருந்த வெங்கடேஷ் மீது மோதியதில் வெங்கடேஷ் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார்.

    பரமத்தி வேலூர்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே மார்க்கேயன் கோட்டை பகுதியை சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 40). இவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவர் தற்பொழுது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் பகுதி யில் தங்கி தையல் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலை யில் இரவு வெங்கடேஷ் மணியனூர் பிரிவில் உள்ள டீக்கடைக்குச் சென்று அங்கு டீ குடித்துவிட்டு தான் தங்கி உள்ள அறைக்கு செல்வ தற்காக பரமத்தி வேலூர்-திருச்செங்கோடு சாலை, மணியனூர் செய்யாம்பா ளையம் பிரிவு சாலை அருகே ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அச்சாலையில் மோட்டார் சைக்கிள்ளில் அதிவேகமாக வந்த திருச்செங்கோடு பன்னீர் குத்தி பாளையம் பகுதியை சேர்ந்த தங்கமணி என்ப வரது மகன் பாபு, நடந்து சென்று கொண்டிருந்த வெங்கடேஷ் மீது மோதியதில் வெங்கடேஷ் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். இதில் வெங்கடேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்செங்கோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நல்லூர் போலீஸ் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×