search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெய்லர் உள்பட 3பேர் தற்கொலை
    X

    கோப்புபடம்.

    டெய்லர் உள்பட 3பேர் தற்கொலை

    • அக்கம் - பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் ஓட்டல் கடை மாஸ்டரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
    • பல்லடம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி பொன் நகர் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் கணேசன்(வயது 53) இவர் அதே பகுதியில் உள்ள ஓட்டல் கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இவரது அறை நீண்ட நேரம் திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த இவரது மனைவி புனிதா சென்று பார்த்த போது, வீட்டின் மேற்கூரை விட்டத்தில், தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம் - பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து புனிதா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்(37). இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், 14 வயதில் மகள், 11 வயதில் மகன் ஆகியோர் உள்ளனர். இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக, இவர் நோய்வாய்ப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் வீட்டில் தனியே இருந்த அவர் வீட்டின் மேற்கூரை விட்டத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்று இருந்த அவரது மனைவி வீடு திரும்பிய நிலையில், கணவர் தூக்கு போட்டு தொங்குவதைக் கண்டு அலறி துடித்ததுடன், அக்கம் - பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றார் .அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ஒடிசா மாநிலம், கிரஷ்கா பகுதியைச் சேர்ந்த அக்சைய்நாயக் (35) என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த ரூநிலடா நாயக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு தனது மனைவி ரூநில்டா நாயக்கை பிரிந்து அக்சை நாயக் மட்டும் வெள்ளகோவில் அருகே உள்ள நடுப்பாளையம் என்ற இடத்தில் இருக்கும் நூல் மில்லில் தங்கி வேலை செய்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் ஒடிசா சென்று தனது மனைவி மற்றும் 4 வயது மகளையும் அழைத்துக் கொண்டு வந்து மில் வளாகத்தில் குடியிருந்து வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் அக்சைய் நாயக் மற்றும் மனைவி மகள் ஆகியோர் மில் வளாகத்தில் உள்ள கேண்டினில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ரூநில்டா முன்னரே சாப்பிட்டுவிட்டு தான் தங்கியிருக்கும் அறைக்கு தனது மகளை அழைத்துக் கொண்டு வேகமாக சென்று தனது மகளை அறைக்கு வெளியே நிற்க சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார்.இதையறிந்த 4 வயது மகள் சத்தம் போட்டு உள்ளார். சத்தத்தை கேட்ட அக்சைய் குமார் மற்றும் உடன் பணியாற்றுவோர் கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ரூநில்டா மின்விசிறியின் கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போது பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இது சம்பந்தமாக காங்கேயம் போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.டெய்லர் உள்பட 3பேர் தற்கொலை

    Next Story
    ×