search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bureau"

    • அறைக்குள் இருந்த பீரோ கதவுகள் திறக்கப்பட்டு இருந்தது.
    • 52 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ஜலில்(வயது 50).

    இவர், வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மனைவி சைதா பானு(48) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில அவர் கணவருடன் வசித்து வருகிறார்.

    இளைய மகள் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த இளைய மகளை சைதாபானு நேற்று அதிகாலை 3 மணிக்கு ரெயிலில் அழைத்துச்சென்று திருச்சியில் உள்ள கல்லூரியில் விட்டு விட்டு மாலை வீடு திரும்பினார்.வீட்டிற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பது கண்டு சைதா பானு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்குள்ள அறைக்குள் இருந்த பீரோ கதவுகள் திறக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த 52 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து சைதா பானு அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா, துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் மற்றும் தனிப்படை போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    • பெரியநாயகி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது41)கூலி தொழிலாளி.
    • இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே பெரியநாயகி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது41)கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவா மாநிலத்துக்கு வேலைக்காக சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வீடு பூட்டிக் கிடந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மணி மாறனுக்கும், ஆரோவில் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
    • ரூ,50 ஆயிரம் மதிப்பிள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் இரும்பை கிராமம் உள்ளது. இங்குள்ள மாகாளேஸ்வரர் கோவில் வீதியில் வசிப்பவர் மணிமாறன் (வயது 40). தனது குடும்பத்துடன் பங்களாதேஷில் தங்கி வேலை செய்கிறார். இதனால் இங்குள்ள வீட்டை பூட்டிவிட்டு அக்கம் பக்கத்தினரை பார்த்துக் கொள்ள சொல்லி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் மணிமாறனின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மணி மாறனுக்கும், ஆரோவில் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான போலீசார், வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர். இதில் வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த வெள்ளி பொரு ட்கள், பட்டுப்புடவைகள் திருடப்பட்டிருந்தது.

    மேலும், சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள், அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ரூ,50 ஆயிரம் மதிப்பிள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். வானூர், ஆரோவில் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கி றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • செல்வி நடுக்குப்பத்தில் உள்ள முந்திரி கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
    • இதுகுறித்து பண்ருட்டி போலீசார்வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    பண்ருட்டி முத்து நாராயணபுரம் பாலூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர்அய்யனார். இவரதுமனைவி செல்வி வயது (32). அய்யனார் கடந்த 3வருடத்திற்குமுன்பு இறந்துவிட்டார். செல்வி நடுக்குப்பத்தில் உள்ள முந்திரி கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்களும், ஒருமகளும் உள்ளனர். இவரது மகன்கள் இருவரும் கடலூர் செம்மண்டலம் அரசு ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார்கள். இவரது மகள் செல்வகுமாரி பட்டாம்பாக்கம் போர்டிங் பள்ளியில்அங்கேயே தங்கி பிளஸ்-2படித்து வருகிறார். செல்வி கடந்த 5-ந் தேதி காலை 10 மணியளவில் தனது வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு நடுக்குப்பத்தில் உள்ள தனது அக்காள் சிவசக்தி வீட்டில் மகன்களுடன்தங்கி விட்டார்.

    கடந்த 9 -ந் தேதி காலை 6மணியளவில் வீட்டிற்கு சென்று பார்த்த போது இவரது வீட்டின் பின் பக்கமுள்ள கீற்றினை பிரித்து யாரோ வீட்டினுள் நுழைந்து வீட்டில் இருந்த இரும்பு பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் செயின், ½ பவுன் சுத்து மாட்டல் -1 ஜோடி, 2 ஜோடி கொலுசுகள் ஆகியவைகளை திருடி சென்றதுதெரிய வந்தது. அக்கம் பக்கம் விசாரித்தும் எந்த தகவலும்தெரியா ததால்பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் திருட்டுபோன நகைகளை கண்டுபிடித்து தருமாறு செல்விபுகார் கொடுத்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார்வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினர்.

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ,சப் இன்ஸ்பெக்டர் கள் தங்கவேலு,பிரசன்னா, ேபாலீஸ்காரர்கள் அன்ப ரசு, ஷரிகரன்ஆகியோர் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவி ட்டனர். போலீசாரின் தீவிரவிசாரணையில் அதே ஊரை சேர்ந்த முத்தாலு(35) நகையை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தப்பியோட முயன்ற அவனை கைது செய்து அவனிடமிருந்துசெல்வி வீட்டில் திருடிய நகைகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சிமெண்ட் ஓடு போட்டவீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
    • 9½ பவுன் நகை மற்றும் ரூ. 95ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே உள்ள வாழப்பட்டு கிரா மத்தைச் சேர்ந்தவர் ராற் குமார் (வயது49). இவர் விழுப்புரத்தில் துணிக்க டையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 30 -ந் தேதி மாலை 5 மணிக்கு தனது சிமெண்ட் ஓடு போட்டவீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று பிற்பகல் 2 மணி அளவில் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 9½ பவுன் நகை மற்றும் ரூ. 95ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. இது பற்றி கெடார் போலீ சில் புகார் செய்ததின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் விவே கானந்தன் வழக்கு பதிந்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.

    • அறையில் உள்ள பீரோவில் வைத்து பூட்டிவிட்டு, சாவியை, வீட்டின் ஒரு பகுதியில் வைத்துள்ளார்.
    • பீரோவை திறந்து பார்த்தபோது, 5 சவரன் நகைகள் காணாது மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள் ளாறை அடுத்த சேத்தூர் கிராமத்தில் உள்ள காமாட்சி நகரை சேர்ந்தவர் அங்காளம்மை (வயது 65). இவர் சில ஆடுகளை மேய்த்து, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று திருத்துறை பூண்டியில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு, தனது 5 சவரன் தங்க நகைகளோடு சென்று விட்டு, மறுநாள் வீட்டுக்கு வந்து, தங்க நகைகளை வழக்கமாக் வைக்கும் வீட்டு அறையில் உள்ள பீரோவில் வைத்து பூட்டிவிட்டு, சாவியை, வீட்டின் ஒரு பகுதியில் வைத்துள்ளார்.

    தொடர்ந்து, மறுநாள் முதல் வழக்கம் போல், வீட்டை பூட்டி, சாவியை, வீட்டின் மின்சார மீட்டர் பாக்ஸ் மீது வைத்து விட்டு ஆடுகளை மேய்க்க சென்று விட்டார். அங்காளம்மை வீட்டு சாவியை மீட்டர் பாக்ஸ் மீது வைப்பது, கிராம மக்கள் சிலருக்கு தெரியும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு வரும் அங்காளம்மை, நகை உள்ள அறை பக்கம் செல்ல வில்லை. நேற்று முன்தினம் அறைக்கு சென்று பார்த்த போதும் பீரோ சாவி, பீரோவில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை திறந்து பார்த்தபோது, 5 சவரன் நகைகள் காணாது மேலும் அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் விசாரித்த போது, யாரும் தெரிய வில்லை என கூறியுள்ளனர். இதை அடுத்த, அங்கா ளம்மை திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டு கதவு மற்றும் பீரோவை திறந்து, நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • 108 ஆம்புலன்சில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார்.
    • வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்தவைகள் திருடப்பட்டிருந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). 108 ஆம்புலன்சில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி பிரபாகரனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், திருமண வேலை சம்பந்தமாக பிரகாஷ் வீட்டை பூட்டு விட்டு வெளியே சென்றார். பின்னர் விட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது விட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் வீட்டிற்குள் சென்று பார்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் திருமணத்திற்காக வைத்திருந்த இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து பிரகாஷ் வேதாரண்யம் ேபாலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும், நாகையில் இருந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலத்தில் டெய்லர் வீட்டில் நூதன முறையில் தங்க நகைகள் கொள்ளை போனது.
    • வீட்டைப் பூட்டிக்கொண்டு சாவியை வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறை பகுதியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் ராஜா வீதி பகுதியை சேர்ந்தவர் குமார் இவரது மனைவி எஸ்தர் (வயது 40).

    இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 10 மணி அளவில் வீட்டைப் பூட்டிக்கொண்டு சாவியை வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறை பகுதியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கச் செயின், கம்மல்கள், மோதிரம், தங்க காசு, ஆகிய 19 கிராம் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து எஸ்தர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கிரகப்பிரவேசத்திற்கு மாவிலை வேண்டும் எனச் சொல்லி பேசிய நிலையில், வீட்டை நோட்டம் விட்டு உள்ளார்கள்.
    • பீரோவில் லாக்கர் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, நகை திருட்டு போனதை அறிந்து மூதாட்டி பதட்டம் அடைந்தார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள வேலங்குடி தென்கரை மாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 55) மற்றும் அவரது மனைவி ராணி, மகன் மணிவாசகம் ஆகியோர் வெளியூர் சென்ற நிலையில் வீட்டில் ராஜேந்திரனின் தாயார் வயதானவர் இருந்துள்ளார். அப்பொழுது ராஜேந்திரனின் மகன் மணி வாசகத்தின் நண்பர்கள் என்று சொல்லி, வீடு கிரகப்பிரவேசத்திற்கு பத்திரிக்கை வைக்க வந்துள்ளதாக கூறி வீட்டுக்குள் சென்று உள்ளனர்.

    மூதாட்டியிடம் கிரகப்பிரவேசத்திற்கு மாவிலை வேண்டும் எனச் சொல்லி பே சிய நிலையில், வீட்டை நோட்டம் விட்டு உள்ளார்கள். அப்பொழுது வீட்டின் அறையில் இருந்த பீரோ திறந்து இருப்பதைக் கண்டனர். பாட்டி மாவிலை பறிக்க கொள்ளைக்கு சென்ற நிலையில், திறந்திருந்த பீரோவில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். கொள்ளையில் இருந்து வந்த பாட்டி பீரோவில் லாக்கர் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, நகை திருட்டு போனதை அறிந்து பதட்டம் அடைந்தார்.

    இதனை எடுத்து திருடு போன தகவல் குறித்து மணிவாசகத்திடம் நடந்த நிகழ்வுகளை கூற, பத்திரிக்கை வைப்பது போல் வந்து நாடகமாடி தனது பாட்டியை ஏமாற்றிமர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகையை திருடிச் சென்றதாக மணிவாசகன் பேரளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காலை திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
    • சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் பொரவச்சேரி வடக்கு தெருவை சேர்ந்த வர் தியாகராஜன். இவர் சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது சொந்த ஊரான பொரவச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று குடும்பத்துடன் சென்னை புறப்பட்டு சென்றார்.இன்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பீரோவில் உள்ள 4 பவுன் மற்றும் ரொக்கம் ரூ.3000 ஆகியவற்ஆறை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து அவர் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    ×