search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Demonetisation"

    • இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
    • 2 ஆயிரம் ரூபாய் தாளை இனி எப்போ பார்க்க போறேனோ?

    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    இந்நிலையில் நடமாடும் நகைக்கடை என அழைக்கப்படும் மதுரை வரிச்சியூர் செல்வம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அதில், ரூ.2 ஆயிரம் தாளா போகுது. ஒருவாட்டி முகர்ந்துகிறேன். இந்த 2 ஆயிரம் ரூபாய் தாளை இனி எப்போ பார்க்க போறேனோ? தலைவா திரும்பவும் 2 ஆயிரம் ரூபாய் தாளை போட்டிங்கனா சொல்லிட்டு செய்யுங்க. இருக்கிற 2 ஆயிரம் ரூபாய் தாள் பூரா இப்படி வெட்டியா போகுது.

    ஓகே மகிழ்ச்சி, விடை கொடுக்கிறேன் உனக்கு. போயிட்டு வா ஆத்தா... எங்களை காக்கும் தெய்வம் நீ.. எங்களை விட்டு போற... என கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் 12 பொதுத்துறை வங்கிகள், 30 தனியார் வங்கிகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன.
    • 8 ஆயிரம் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை:

    2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

    2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் மே 23-ந்தேதி அனைத்து வங்கிகளிலும் அதை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக செப்டம்பர் 30-ந்தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கை இன்று தொடங்கியது. இதற்காக அனைத்து வங்கிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவு வந்தால் அவற்றை மாற்றி கொடுப்பதற்கு ஏற்ப பணத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது.

    அதன்பேரில் அனைத்து வங்கிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமையே தேவையான அளவுக்கு 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டன. சென்னை ரிசர்வ் வங்கி கிளையிலும் அதிகளவு பணம் இருப்பு வைக்கப்பட்டது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு வங்கிகளில் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறி இருந்தது. அதை ஏற்று பெரும்பாலான வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற தனி இட வசதி உருவாக்கப்பட்டு இருந்தது. சில வங்கிகளில் மக்கள் கூட்டமாக வரலாம் என்று கருதி தனி வரிசை அமைத்து கொடுத்து இருந்தனர்.

    முதியோர்கள் வங்கிக்கு வரும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதுபோல மாற்றுத்திறனாளிகளுக்கும் தனி இடவசதி செய்து கொடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

    அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வருகை தந்தபோது அவர்களுக்கு முதலில் பணத்தை மாற்றி கொடுத்து அனுப்பினார்கள்.

    தற்போது கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களை வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருக்க செய்யக்கூடாது என்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வங்கிக்கு வருபவர்களின் தாகத்தை தீர்ப்பதற்கு தண்ணீர் வசதியும் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட போது வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பணத்தை மாற்ற போட்டி போட்டனர். இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிட்டது.

    ஆனால் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. செல்லாது என்று அது அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக வங்கிகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்தது.

    சென்னையில் கொத்தவால் சாவடி உள்பட சில இடங்களில் மட்டுமே குறிப்பிட்ட சில வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அதிகம் பேர் திரண்டிருந்தனர். மற்ற வங்கிகளில் ஓரிருவர் மட்டுமே வந்து சென்றதை காண முடிந்தது.

    பல வங்கிகளில் இன்று காலை நிலவரப்படி எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்பதால் மக்கள் மத்தியில் எந்த அவசரமும் காணப்படவில்லை என்பதை பார்க்க முடிந்தது.

    2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. விண்ணப்பம் ஏதும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மிக எளிதாக 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றி சென்றனர். மொத்தமாக அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகளுடன் வந்தவர்களிடம் மட்டுமே அடையாள அட்டை கேட்கப்பட்டது.

    மற்றபடி ஏ.டி.எம். மூலம் 2000 ரூபாய் நோட்டுகளை பல இடங்களில் டெபாசிட் செய்தனர். சில வங்கிகளில் எழுதி கொடுத்தும் டெபாசிட் செய்தனர். ஒருவர் 10 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்ற நிலை இருந்ததால் அதற்கேற்ப வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    நகர் பகுதிகளில் அதிக வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சற்று கூட்டம் வரலாம் என்று எதிர்பாார்க்கப்பட்டது. இதனால் வங்கிகளில் டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் பணத்தை மாற்றிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    சில வங்கிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

    தமிழகத்தில் 12 பொதுத்துறை வங்கிகள், 30 தனியார் வங்கிகள் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் கிளைகள் உள்ளன. இந்த 8 ஆயிரம் கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    2000 ரூபாய் நோட்டுகள் மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதால் கடைகளில் இந்த நோட்டுகளை வாங்க வியாபாரிகள் மறுக்கிறார்கள். அரசு சார் நிறுவனங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கிறார்கள்.

    பெட்ரோல் நிலையங்கள், பஸ்கள் மற்றும் மால்களிலும் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுக்க இயலவில்லை. இதனால் வங்கிகளில் மட்டுமே இனி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • பெட்ரோல் பங்குகளில் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்குவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது.
    • சில்லரை தட்டுப்பாடு ஏற்படுவதால் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்கவே யோசனை மேலோங்குகிறது.

    செப்டம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி அதிரடியாக வெளியிட்டது. அதன்படி ரூ.2,000 நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும், அதனை வைத்திருப்போர் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் மக்கள் பதற்றத்தின் காரணமாக தற்போதே ரூ.2 ஆயிரம் நோட்டை கண்ணில்படும் இடங்களுக்கெல்லாம் சென்று மாற்ற தொடங்கி வருகிறார்கள். இதில் முன்னணியில் இருப்பது பெட்ரோல் பங்குகள் தான். ஆனால் இப்போது பெட்ரோல் பங்குகளிலும் ரூ.2 ஆயிரம் நோட்டை கண்டால் கோபப்பட தொடங்கிவிட்டார்கள். ஏன்? என்று கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு, விளக்கம் சொல்லியும் தவிக்கிறார்கள்.

    இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி கூறியதாவது:-

    பெட்ரோல் பங்குகளில் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்குவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் ரூ.100-க்கு பெட்ரோல் போட்டுவிட்டு, ரூ.2 ஆயிரம் நோட்டை நீட்டுகிறார். அவருக்கு பாக்கி ரூ.1,900 தர வேண்டியதுள்ளது. இப்படி ஒரு நாளில் 50 பேர் வந்தால் சில்லரைக்கு நாங்கள் எங்கே போவது?

    சில்லரை தட்டுப்பாடு ஏற்படுவதால் ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்கவே யோசனை மேலோங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் - பெட்ரோல் பங்க் ஊழியர்களிடையே வாக்குவாதமே ஏற்படுகிறது. வாடிக்கையாளர்களை தவிப்புக்குள்ளாக்குவது எங்கள் நோக்கம் அல்ல.

    இப்போதைய சூழலில் இந்த நடைமுறை சிக்கல்களை போக்க வங்கிகளுக்கு நாங்கள் பணத்தை டெபாசிட் செய்ய போகும்போது, நாங்கள் கேட்கும் தொகைக்கு ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 என்று அவர்கள் சில்லரையாகவும் தர வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இதை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது.
    • இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.

    சென்னை:

    இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று இரவு அதிரடியாக அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிவரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதேசமயம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.

    அவ்வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    500 சந்தேகங்கள்

    1000 மர்மங்கள்

    2000 பிழைகள்!

    கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது.
    • முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவையில் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளி மற்றும் கல்லூரி தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு பகுதிதான். வாழ்க்கை இன்னும் நிறைய இருக்கிறது. தேர்வு எழுதாதவர் பல பேர் வாழ்க்கையில் முன்னுக்கு வந்துள்ளனர். மாணவர்கள் எந்த ஒரு தவறான முடிவு எடுக்க வேண்டாம்.

    தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வைக்க வேண்டும், தன்னம்பிக்கை வைக்க மாரல் கிளாசஸ் நடத்த வேண்டும், தற்காப்பு கலைக்கான வகுப்புகள் வைக்க வேண்டும். இது குறித்து முதலமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    கவர்னருக்கு அதிகாரம் என்பதில் புதுவையில் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் எந்த வகையிலாவது கருத்து வேறுபாடு வருமா? என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காத்துக்கொண்டிருக்கிறார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வராது. டெல்லி நிலை வேறு, புதுவை நிலை வேறு, மற்ற யூனியன் பிரதேசங்களுக்கான நிலை வேறு.

    மக்கள் சார்ந்த விஷயங்கள் புதுவையில் சிறப்பாக நடைபெறுவதுதான் நாராயணசாமிக்கு கவலையாக இருக்கிறது என தெரிவித்தார்.

    அப்போது அவரிடம், மத்திய அரசின் ரூ.2 ஆயிரம் நோட்டு தடை குறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த தடை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட். ரூ.2 ஆயிரம் நோட்டு தடை பற்றி இன்னும் அறியவில்லை. விபரங்களை அறிந்து பதிலளிக்கிறேன் என்றார்.

    கவர்னர் தமிழிசை டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.
    • ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.

    இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது. விரைவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. மேலும், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து பொது மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை தொடர்ந்து, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது. இந்த நிலையில், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.


    - மே 23 ஆம் தேதி முதல் பொது மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும்.

    - பொது மக்கள் ஒரே சமயத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.

    - ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை பொது மக்களிடம் வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    - செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் தொடர்ந்து சட்டப்பூர்வ பயன்பாட்டுக்கு உகந்ததாகவே இருக்கும். 

    • ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
    • செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.

    இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவில் இனி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. வங்கி சேவையை பயன்படுத்தும் பொது மக்களிடம்ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

    மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.

    • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட இழப்பு ரூ.2.25 லட்சம் கோடி.
    • பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று 6 ஆண்டுகள் கழித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

    சென்னை :

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று 6 ஆண்டுகள் கழித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதில், நீதிபதி பி.வி.நாகரத்தினம்மா, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது செல்லாது என்ற மாறுபட்ட தீர்ப்பை மிகத் தெளிவாக வழங்கியிருக்கிறார். தீர்ப்பு வழங்கிய மற்ற 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பு திட்டத்திற்கான அரசின் நோக்கம் எதுவாக இருந்தாலும், மக்கள் படும் அவதி வேதனையாக உள்ளது. அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.

    பணமதிப்பிழப்பை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தபோது சட்டப்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எதையும் பின்பற்றப்படவில்லை. 2015-16-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.01 சதவீதத்தில் இருந்து 2017-18-ல் 6.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட இழப்பு ரூ.2.25 லட்சம் கோடி.

    எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத பேரழிவு நடவடிக்கை என்ற குற்றச்சாட்டில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி தப்ப முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வருமானவரி வசூலை அதிகரித்தது.
    • பொருளாதாரத்தை சுத்தப்படுத்தியது.

    புதுடெல்லி :

    பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பண மதிப்பிழப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது. தேச நலனுக்காக எடுத்த அம்முடிவு செல்லும் என்று கூறியுள்ளது.

    ராகுல்காந்தி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்தார். வெளிநாடுகளில் கூட குறை கூறினார். அவர் இப்போதாவது வருத்தம் தெரிவிப்பாரா?

    ப.சிதம்பரம் போன்றவர்கள், பெரும்பான்மை தீர்ப்பை கண்டுகொள்ளாமல், ஒரே ஒரு நீதிபதி அதிருப்தி தெரிவித்ததை முன்னிலைப்படுத்துகிறார்கள். அந்த நீதிபதி கூட 'இது நல்ல நோக்கம் கொண்ட நடவடிக்கை' என்றுதான் கூறி இருக்கிறார்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு நிதியுதவியை நிறுத்தியதன் மூலம் பயங்கரவாதத்துக்கு சம்மட்டி அடியாக அமைந்தது. வருமானவரி வசூலை அதிகரித்தது. பொருளாதாரத்தை சுத்தப்படுத்தியது. மின்னணு பண பரிமாற்றத்தில் இந்தியாவை முன்னணி நாடாக்கியது.

    முறையற்ற பொருளாதாரத்தின் பங்கை 52 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முறையற்ற பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதே சமயத்தில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து விட்டதாக சொல்வது தவறு. முடிவு எடுக்கும் பணியை மட்டுமே சுப்ரீம் கோர்ட்டு தனது விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

    ஆனால், பண மதிப்பிழப்பின் விளைவுகள் குறித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை. பண மதிப்பிழப்பின் நோக்கங்கள் என்று கூறப்பட்ட எதுவுமே நிறைவேறவில்லை. உதாரணமாக, கருப்பு பண ஒழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு, கள்ளநோட்டு ஒழிப்பு என எதுவுமே நிறைவேறவில்லை.

    அதற்கு மாறாக, லட்சக்கணக்கான சிறு, குறு நிறுவனங்களை அழித்தது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும், அமைப்புசாரா தொழில்களையும் அழித்தது. அதன் விளைவுகளை இன்றும் பாா்த்துக்கொண்டிருக்கிறோம்.

    இதற்கு யாராவது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால், இந்த 'துக்ளக்' முடிவை எடுத்த பிரதமர் மோடிதான்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:-

    இந்த தீர்ப்பு, மத்திய அரசின் மணிக்கட்டில் விழுந்த அடி. பண மதிப்பிழப்பு முடிவை பெரும்பான்மை நீதிபதிகள் உறுதி செய்யவும் இல்லை. பண மதிப்பிழப்பின் நோக்கங்கள் நிறைவேறி விட்டதாகவும் கூறவில்லை.

    அந்த முடிவின் சட்டவிரோதத்தையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் பிரபலமான அதிருப்தி தீர்ப்புகளில் இது முக்கிய இடத்தை பிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, பவன் கேரா ஆகியோரும் இந்த தீர்ப்பை விமர்சித்துள்ளனர்.

    • பல்வேறு வகையான மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் சிக்கின.
    • 2020-ம் ஆண்டு ரூ.92 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கின.

    புதுடெல்லி :

    கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, கள்ள நோட்டுகள், கருப்பு பணம், பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதே இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால், அதன் பிறகும் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து தேசிய குற்ற கட்டுப்பாட்டு பிரிவு கூறியிருப்பதாவது:-

    கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் மொத்தம் ரூ.245 கோடியே 33 லட்சம் முகமதிப்பு கொண்ட கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன.

    அதிகபட்சமாக, 2020-ம் ஆண்டு ரூ.92 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கின. 2017-ம் ஆண்டு ரூ.55 கோடி மதிப்புள்ள நோட்டுகளும், 2021-ம் ஆண்டு ரூ.20 கோடியே 39 லட்சம் மதிப்பு நோட்டுகளும், 2016-ம் ஆண்டு ரூ.15 கோடியே 92 லட்சம் மதிப்பு நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதுபோல், ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கைப்படி, 2021-2022 நிதிஆண்டில், வங்கிகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை இருமடங்காக, அதாவது 79 ஆயிரத்து 669 ஆக உயர்ந்துள்ளது.

    2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 604 ஆகும். இது, முந்தைய நிதிஆண்டை விட 54 சதவீதம் அதிகம். அனைத்து மதிப்புள்ள கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதிஆண்டில் 2 லட்சத்து 8 ஆயிரமாக இருந்தது.

    2019-2020 நிதிஆண்டில், 2 லட்சத்து 96 ஆயிரத்து 695 கள்ள நோட்டுகள் பிடிபட்டன.

    ரூ.10, ரூ.20, ரூ.200, ரூ.500, ரூ.2,000 என பல்வேறு வகையான மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் சிக்கின.

    • புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.
    • புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    புதுடெல்லி :

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயன் சர்மா உள்ளிட்ட 57 பேர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இந்த ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 22-ந்தேதி ஒத்திவைத்தது.

    இந்த நிலையில் பரபரப்பான இந்த வழக்கில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோர் (திங்கட்கிழமை) இன்று தீர்ப்பு கூறுகிறார்கள்.

    • பண மதிப்பிழப்பு அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    • பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பை ஜனவரி 2-ந்தேதி அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பை ஜனவரி 2-ந்தேதி அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×