என் மலர்
நீங்கள் தேடியது "Counterfeit money"
- பல்வேறு வகையான மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் சிக்கின.
- 2020-ம் ஆண்டு ரூ.92 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கின.
புதுடெல்லி :
கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, கள்ள நோட்டுகள், கருப்பு பணம், பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதே இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதன் பிறகும் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தேசிய குற்ற கட்டுப்பாட்டு பிரிவு கூறியிருப்பதாவது:-
கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் மொத்தம் ரூ.245 கோடியே 33 லட்சம் முகமதிப்பு கொண்ட கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன.
அதிகபட்சமாக, 2020-ம் ஆண்டு ரூ.92 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கின. 2017-ம் ஆண்டு ரூ.55 கோடி மதிப்புள்ள நோட்டுகளும், 2021-ம் ஆண்டு ரூ.20 கோடியே 39 லட்சம் மதிப்பு நோட்டுகளும், 2016-ம் ஆண்டு ரூ.15 கோடியே 92 லட்சம் மதிப்பு நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதுபோல், ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கைப்படி, 2021-2022 நிதிஆண்டில், வங்கிகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை இருமடங்காக, அதாவது 79 ஆயிரத்து 669 ஆக உயர்ந்துள்ளது.
2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 604 ஆகும். இது, முந்தைய நிதிஆண்டை விட 54 சதவீதம் அதிகம். அனைத்து மதிப்புள்ள கள்ள நோட்டுகள் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதிஆண்டில் 2 லட்சத்து 8 ஆயிரமாக இருந்தது.
2019-2020 நிதிஆண்டில், 2 லட்சத்து 96 ஆயிரத்து 695 கள்ள நோட்டுகள் பிடிபட்டன.
ரூ.10, ரூ.20, ரூ.200, ரூ.500, ரூ.2,000 என பல்வேறு வகையான மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் சிக்கின.
- கள்ளநோட்டுகள், ஸ்கேன் எந்திரம், கணினியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- 3 சிறுவர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
நாகப்பட்டினம் :
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலத்தில் 3 பேர் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விடுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 14 மற்றும் 15, 16 வயதுடைய 3 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 200 ரூபாய் ,100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளை கத்தரிப்புலத்தில் உள்ள உறவினர் ஒருவருக்கு சொந்தமான ஸ்டுடியோவில் ஸ்கேன் செய்து , அந்த கள்ளநோட்டுகளை கணினி மூலம் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
இதையடுத்து கள்ளநோட்டுகளையும், ஸ்கேன் எந்திரம் , கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்து அவர்களை வேதாரண்யம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், காரியப்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு வந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள் மற்றும் ஸ்கேன் எந்திரம், கணினி ஆகியவற்றை பார்வையிட்டார்.
ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட 3 சிறுவர்கள் கைது செய்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கள்ள நோட்டு புழக்கம் குறித்து திங்களூர் காவல் நிலையத்திற்கு விற்பனையாளர்கள் தகவல் கொடுத்தனர்.
- முதியவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திங்களூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான கிராம மக்கள் பொருட்களை வாங்கி செல்வார்கள்.
இந்த கூட்டத்தை பயன்படுத்தி மர்ம கும்பல் கடைகளில் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து 100, 200, 500 ஆகிய போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி வந்துள்ளனர். இதையடுத்து கள்ள நோட்டு புழக்கம் குறித்து திங்களூர் காவல் நிலையத்திற்கு விற்பனையாளர்கள் தகவல் கொடுத்தனர்.
இதன் பின்னர் கள்ள நோட்டு புழக்கம் தடுப்பு குறித்து சந்தையில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி சந்தைக்கு வந்த முதியவர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து பழங்களை வாங்கியுள்ளார். இதையடுத்து பணத்தை வாங்கிய விற்பனையாளர் நோட்டை பார்த்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதன் பின்னர் முதியவரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சத்தியமங்கலம் இக்கரைபள்ளியை சேர்ந்த ஜெயபால் (வயது 70) என்பதும், இவரது மகன் ஜெயராஜ் (40) என்பவர் வீட்டில் யூடியூப் பார்த்து கலர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளார்.
இதையடுத்து அந்த பணத்தை ஜெயபால், அவரது மனைவி சரசு, மகன் ஜெயராஜ் மற்றும் உடன் வேலை செய்யும் மேரி மெட்டில்டா (38) ஆகியோர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயன்படுத்தினால் மாட்டி கொள்ள மாட்டோம் என்ற எண்ணத்தில் கடந்த 6 மாதமாக சத்தியமங்கலம், கோபி, கொளப்பளூர், திங்களூர், பெருந்துறை போன்ற கிராமபுற சந்தைகளில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
இதையடுத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் மீதும் திங்களூர் போலீசார் 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் கள்ள நோட்டு தயாரிக்க பயன்படுத்திய கலர் ஜெராக்ஸ் எந்திரம் 100, 200, 500 ஆகிய போலி நோட்டுகள் கொண்ட ரூ.2.85 லட்சம் கள்ள நோட்டுகளையும், சந்தைக்கு செல்வதற்கு பயன்படுத்தி வந்த கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆண்கள் இருவரை பெருந்துறை சிறையிலும், பெண்கள் இருவரை கோவை சிறையிலும் அடைத்தனர். கள்ள நோட்டு தயாரித்து சொகுசு வாழ்க்கை வாழ நினைத்த கும்பல் போலீசாரிடம் சிக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குமரி மாவட்டத்திற்கு கொண்டு செல்லும்போதுதான் இந்த கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே கடந்த மாதம் 6-ந் தேதி மூன்றடைப்பு போலீசார் வாகன சோதனையில் ஒரு காரில் ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரில் வந்த விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்த சீமைசாமி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த விஷ்ணு சங்கர், தங்கராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் கள்ள நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து விசாரித்த போது பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை அந்த கும்பல் விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது. இதில் நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பலரும் ஏமாந்துள்ளது தெரியவந்தது. இதனிடையே இந்த கள்ளநோட்டு கடத்தலில் மூளையாக செயல்பட்ட விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பல்லப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (38) என்பவர் கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்து வந்ததும், தற்போது கள்ள நோட்டு சிக்கிய சம்பவத்திற்கும் அவர் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் ராஜேந்திரனிடம் நடத்திய விசாரணையில், அவரது கூட்டாளிகளான விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை நேற்று போலீசார் மடக்கி கண்டுபிடித்தனர். அவர்களை நேற்று இரவு வரையிலும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர்.
அதில் பிடிபட்ட 2 பேரும் சிவகாசியில் உள்ள ஒரு குடோனில் கள்ள நோட்டு அச்சடிக்கும் எந்திரத்தை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் அச்சடித்து கொடுப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 2 பேரையும் அழைத்துக்கொண்டு போலீசார் சிவகாசிக்கு விரைந்துள்ளனர்.
அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய கலர் பேப்பர்கள், அச்சடிப்பு எந்திரங்கள் உள்ளிட்ட வைகளை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து வேறு எங்கும் குடோன்கள் வைத்துள்ளனரா? இதில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் தொடர்புடைய கும்பல் முழுக்க முழுக்க விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தான். இவர்களுடன் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
குமரி மாவட்டத்திற்கு கொண்டு செல்லும்போதுதான் இந்த கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டது. எனவே அங்கு வேண்டுமானால் இந்த கும்பலின் தரகர்கள் செயல்பட வாய்ப்பு இருக்கிறது என்றனர்.
- புதுச்சேரி வங்கிகளில் இருந்து ரூபாய் நோட்டுகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் உள்ள இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஏராளமான தேசிய வங்கிகள் உள்ளன.
இங்கிருந்து 6 மாதங்களுக்கு ஒரு முறை கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் சென்னையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கியின் கிளைக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வங்கிகளில் இருந்து ரூபாய் நோட்டுகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை பரிசோதனை செய்தபோது அதில் 500 ரூபாய் நோட்டு கட்டுகளில் 55 கள்ள நோட்டுகள் என மொத்தம் ரூ.27,500 இருப்பது தெரியவந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் சென்னை கிளை மேலாளர் அபிஷேக் சிங், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது வங்கிக்கு வரும் கள்ள ரூபாய் நோட்டுகளை எளிதாக கண்டறிந்து விடுவார்கள். அப்படி இருந்தும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய பணத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்துக்கோட்டை:
மராட்டிய மாநிலம் புனே நகர போலீசார் ரூ. 2 ஆயிரம், ரூ. 500 கள்ள நோட்டுகளை அச்சடித்த 4 பேரை புனேயில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 91 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் 4-வது தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 44) பிரிண்டர் மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக தெரிவித்தனர்.
அதன் பேரில் வெங்கடேசனை பிடிக்க புனே மாநகர போலீஸ் துணை சூப்பிரண்டு டெங்காலி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் பொன்னேரி வந்தனர்.
ஆனால் கள்ள நோட்டு கும்பல் தெரிவித்த முகவரியில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீசார் புனேயில் பிடிபட்ட கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த ஒருவனின் செல்போன் சிம்கார்டு மூலம் வெங்கடேசனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர்.
அவர் போனை எடுக்க வில்லை. போன் டவரின் சிக்னல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெய்வேலி ஜடியல் சிட்டி பகுதியை காட்டியது. போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் வெங்கடேசன் அங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருவதாக தகவல் கிடைத்தது.
நேற்று அதிகாலையில் போலீசார் அந்த வீட்டிற்கு சென்று கதவை தட்டினர். கதவை திறந்து வெளியே வந்த வெங்கடேசன் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரது வீட்டில் இருந்த கள்ள நோட்டுகள் அடிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ. 2 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 500 நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
வெங்கடேசனின் தந்தை சுப்பிரமணி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் புனேயில் பணிபுரிந்த போது அங்கேயே தங்கி விட்டார். இதனால் அவரின் குடும்பம் புனேக்கு குடிபெயர்ந்தது. 24 வருடங்களுக்கு முன்பு வெங்கடேசன் சிறு சிறு வேலைகள் செய்து வந்தார். இதில் போதிய வருமானம் கிடைக்காததால் அங்குள்ள திருட்டு கும்பலிடம் பழக்கம் ஏற்பட்டது. அதிலிருந்து அவரின் நடவடிக்கைகள் மாறிவிட்டன.
20 வருடங்களுக்கு முன்பு வெங்கடேசன் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் வேலையில் இறங்கினார். அங்குள்ள ஒரு நபர் போலீசிடம் ரகசிய தகவல் கொடுத்ததையடுத்து வெங்கடேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அவரை கொலை செய்தனர்.
இந்த வழக்கில் வெங்கடேசன் 20 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார் என்று புனே நகர போலீஸ் துணை சூப்பிரண்டு டெங்காலி தெரிவித்தார். போலீசார் வெங்கடேசனை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புனேவுக்கு அழைத்து சென்றனர்.






