search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "circulation"

    • தசை வலியில் இருந்து மீள வைக்கும்.
    • விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு பிறகு ஐஸ் குளியல் எடுப்பது வழக்கம்.

    ரத்த ஓட்ட சுழற்சி

    குளிர் ஆரம்பத்தில் ரத்த நாளங்களை சுருக்கும் என்றாலும், ஒருகட்டத்திற்கு பிறகு உடல் முழுவதும் ரத்த ஓட்ட சுழற்சியை அதிகரிப்பதற்கு உதவும். ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி அதன் சுழற்சியை ஊக்குவிக்கும். தசைகள் மற்றும் திசுக்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் விநியோகத்திற்கு உதவும்.

    தசை வலி

    ஐஸ் குளியலை மேற்கொள்வதற்கு முதன்மை காரணங்களில் ஒன்று, தசை வலியைக் குறைப்பதுதான். கடுமையான உடல் செயல்பாடுகளுக்கு பிறகு ஏற்படும் தசை வலியில் இருந்து மீள வைக்கும். குளிர்ந்த வெப்பநிலை ரத்த நாளங்களை கட்டுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. வீக்கம் மற்றும் தசை வலியை குறைக்கவும் உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் பலரும் பயிற்சிக்கு பிறகு ஐஸ் குளியல் எடுப்பது வழக்கம்.

    மழையில் நனைவது பலருக்கும் பிடிக்கும். மழை நீரில் நடனமாடியபடி குளியல் போடுவதற்கும் விரும்புவார்கள். குளிர் தன்மை கொண்ட அந்த நீரில் குளிப்பது எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு ஜலதோஷம், சளி, இருமல் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். ஆனால் குளிர்ந்த நீரில் மேற்கொள்ளப்படும் ஐஸ் குளியல் மருத்துவ சிகிச்சைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

    கிரையோதெரபி என்று அழைக்கப்படும் இந்த ஐஸ் குளியல் விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு பரீட்சயமானது. இந்த ஐஸ் குளியல் நன்மைகளையும், தீமைகளையும் கொண்டது. அதனை சரியான முறையில் பின்பற்றுவது பலன் அளிக்கும்.

    வளர்சிதை மாற்றம்

    ஐஸ் குளியல் தசை வலியையும், வீக்கத்தையும் குறைப்பதன் மூலம் விரைவாக உடலை இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பதாகவும், உடல் நலனை மேம்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.

    அந்த நீரில் கலந்திருக்கும் குளிரின் தன்மை வீக்கத்தை குறைப்பதோடு தசைகளில் இருந்து வளர்சிதை மாற்றக் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கும் உதவுகிறது.

    சோர்வு

    உடற்பயிற்சியால் ஏற்படும் சோர்வை குறைப்பதில் ஐஸ் குளியலுக்கு முக்கிய பங்குண்டு. நரம்புத்தசை செயல்பாட்டை மேம்படுத்தவும் வழிவகுக்கும். அடுத் தடுத்து பயிற்சிகளை மேற்கொள்ளும்போது சிறப்பாக செயல்படுவதற்கு உதவும்.

    வலி நிவாரணம்

    குளிர் தன்மைக்கும், வலி நிவாரணத்துக்கும் இடையே நீண்ட கால தொடர்பு இருக்கிறது. ஐஸ் குளியல் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள நரம்புகளை மரத்துப் போகச் செய்து, வலி மற்றும் அசவுகரியத்தில் இருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கும்.

    கடுமையான காயங்கள், வீக்கம் போன்ற நாள்பட்ட நிலைமைகளை கையாளும் நபர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

    மனநிலை மேம்பாடு

    உடலின் இயற்கையான உணர்வுகளை வெளிப் படுத்தும் ஹார்மோன்களான எண்டோர்பின்களின் வெளியீட்டிற்கும், குளிர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஐஸ் குளியல் மன நிலையை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் முக்கிய பங்களிப்பை வழங்குவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    குளிர்ந்த நீர் மூலம் கிடைக்கப்பெறும் உற்சாகமூட்டும் உணர்வு இயற்கையான மன அழுத்த நிவாரணியாக செயல்படக்கூடியது.

    ஐஸ் குளியல் தரும் தீமைகள்

    ஐஸ் குளியல் நன்மை பயக்கும் என்றாலும் அதிகமாகவோ, அடிக்கடியோ குளிர் நீரை உபயோகிப்பது தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான பயன்பாடு உடலின் சீரான செயல்பாட்டில் தலையிடக்கூடும்.

    குளிர்ச்சியை நீண்ட நேரம் தக்கவைப்பது உடலில் அழுத்தத்தை தூண்டும். இதய அமைப்பை பாதிக்கும். குளிர் குளியலால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்க்க அதன் கால அளவையும், வெப்பநிலையையும் கண்காணிப்பது அவசியம். அதிக நேரம் குளிப்பதோ, உடலை உறையவைக்கும் குளிர் வெப்பநிலையை அனுபவிப்பதோ கூடாது.

    ஐஸ் குளியல் அவசியமா என்றால் அதன் தேவை தனிநபர்களிடையே மாறுபடும். வயது, உடற்பயிற்சி நிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டும், மருத்துவ ஆலோசனை பெற்றும் அதனை பின்பற்றுவது நல்லது.

    • 2 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் சுரக்கப்படுகிறது.
    • தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை செயலிழக்க செய்ய உதவுகிறது.

    நாம் உண்ணும் உணவை இரைப்பையில் செரித்து ஆற்றலாக மாற்றுவதற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் உதவுகிறது. நாம் சாப்பிட ஆரம்பித்தவுடன் `ஹைட்ரோகுளோரிக் அமிலம்' எனப்படும் வலுவான அமிலத்தை இரைப்பை உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 2 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் சுரக்கப்படுகிறது.

    இந்த அமிலம், சிக்கலான உணவு மூலக்கூறுகளை சிதைத்து செரிமானத்திற்கு ஏற்றவாறு எளிய மற்றும் சிறிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது. இறுதியில் அவை குடல் சுவர்கள் மற்றும் ரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது. மேலும் உணவின் மூலம் செரிமான அமைப்பில் நுழையக்கூடிய தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை செயலிழக்க செய்ய உதவுகிறது. இதனால் உடலுக்கு பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது.

    வயிற்றில் அமிலத்தின் அளவு சரியாக இருக்க வேண்டும். காரமான அல்லது கொழுப்பு நிறைந்த உணவை மிகுதியாக சாப்பிடும்போது அதிகப்படியான அமிலம் வயிற்றில் இருந்து வெளியேறுகிறது. இவை உணவு குழாய் வரை சென்று, இரைப்பை மற்றும் குடல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

    மேலும் வயிறு சுவர்களில் புண்கள் ஏற்படுவதோடு, நெஞ்செரிச்சலையும் உண்டாக்கும். வயிற்றில் அமில அளவு போதுமானதாக இல்லாவிட்டால், செரிமானம் பலவீனமடையலாம். இதனால் உணவின் ஊட்டச்சத்துக்கள் தேவையான அளவு உடலுக்கு கிடைக்காது. அஜீரணம் மற்றும் பாக்டீரியா பெருக்கம் கூட அமில அளவு போதுமான அளவு இல்லாததினால் உருவாகிறது.

    ஹைட்ரோகுளோரிக் அமிலம், பி.எச் அளவு 1.5- 2.0 கொண்ட மிகவும் வலிமையான அமிலம். ஒரு சிறிய இரும்புத்தகடை கூட 24 மணி நேரத்திற்குள் கரைக்கும் சக்தியை கொண்டுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.

    • செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.
    • ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.

    இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது. விரைவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. மேலும், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து பொது மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை தொடர்ந்து, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது. இந்த நிலையில், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.


    - மே 23 ஆம் தேதி முதல் பொது மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும்.

    - பொது மக்கள் ஒரே சமயத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.

    - ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை பொது மக்களிடம் வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    - செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் தொடர்ந்து சட்டப்பூர்வ பயன்பாட்டுக்கு உகந்ததாகவே இருக்கும். 

    • ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
    • செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.

    இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவில் இனி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. வங்கி சேவையை பயன்படுத்தும் பொது மக்களிடம்ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

    மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.

    ×