search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pain relief"

    • முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இடுப்பு வலி ஆகும்.
    • இடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி.

    யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்வது இடுப்பு வலி குறைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    உலகில் பலதரப்பட்ட வயதுடைவர்களுக்கு உலக அளவில் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இடுப்பு வலி ஆகும். வேலைப்பளு காரணமாக உடல் சார்ந்த குறைபாடுகளில் மக்களுக்கு ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு பிரச்சினை இடுப்பு வலி. இடுப்பு வலி ஏற்படுவதால் மக்களின் அன்றாட பணிகள், உடற்பயிற்சி, மற்றும் தூக்கம் ஆகியவற்றில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில் தற்போது, அமெரிக்காவின் மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் யோகாவை பற்றிய ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் இடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

    அதாவது பண்டைய இந்திய உடல் மற்றும் ஆன்மீக பயிற்சியான யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்வது இடுப்பு வலி குறைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

     யோகா பயிற்சி மேற்கொள்வதால் வலி நிவாரணம் அளிக்கும் என்றும், உடலின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும் என்றும் நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வு முன்னணி எழுத்தாளரான, எல். சூசன் விலாண்ட் கூறியுள்ளார்.

    நாள்பட்ட அல்லாத குறிப்பிட்ட இடுப்பு வலியால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு, யோகா சிகிச்சை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே எல். சூசன் விலாண்ட் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் இடுப்பு வலி குறைய யோகா பற்றி தனித்தனியாக 12 ஆய்வுகளை மதிப்பீடு செய்து பார்த்தோம் என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.

     உடற்பயிற்சி முறை செய்பவர்களுடன் யோகா பயிற்சி மேற்கொள்பவரை ஒப்பிட்டுப் பார்த்தோம். அப்படி ஒப்பிட்டு பார்க்கையில் யோகா பயன்படுத்திய நோயாளர்களுக்கு மூன்று முதல் ஆறு மாதங்களில் இடுப்பு வலியில் மிதமான மேம்பாடுகள் காணப்பட்டுள்ளது.

    அதேபோல் வலியும் சற்று குறைந்து காணப்படுகிறது என்று உறுதியாக ஆதாரங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    • தசை வலியில் இருந்து மீள வைக்கும்.
    • விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு பிறகு ஐஸ் குளியல் எடுப்பது வழக்கம்.

    ரத்த ஓட்ட சுழற்சி

    குளிர் ஆரம்பத்தில் ரத்த நாளங்களை சுருக்கும் என்றாலும், ஒருகட்டத்திற்கு பிறகு உடல் முழுவதும் ரத்த ஓட்ட சுழற்சியை அதிகரிப்பதற்கு உதவும். ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி அதன் சுழற்சியை ஊக்குவிக்கும். தசைகள் மற்றும் திசுக்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் விநியோகத்திற்கு உதவும்.

    தசை வலி

    ஐஸ் குளியலை மேற்கொள்வதற்கு முதன்மை காரணங்களில் ஒன்று, தசை வலியைக் குறைப்பதுதான். கடுமையான உடல் செயல்பாடுகளுக்கு பிறகு ஏற்படும் தசை வலியில் இருந்து மீள வைக்கும். குளிர்ந்த வெப்பநிலை ரத்த நாளங்களை கட்டுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. வீக்கம் மற்றும் தசை வலியை குறைக்கவும் உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் பலரும் பயிற்சிக்கு பிறகு ஐஸ் குளியல் எடுப்பது வழக்கம்.

    மழையில் நனைவது பலருக்கும் பிடிக்கும். மழை நீரில் நடனமாடியபடி குளியல் போடுவதற்கும் விரும்புவார்கள். குளிர் தன்மை கொண்ட அந்த நீரில் குளிப்பது எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு ஜலதோஷம், சளி, இருமல் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். ஆனால் குளிர்ந்த நீரில் மேற்கொள்ளப்படும் ஐஸ் குளியல் மருத்துவ சிகிச்சைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

    கிரையோதெரபி என்று அழைக்கப்படும் இந்த ஐஸ் குளியல் விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு பரீட்சயமானது. இந்த ஐஸ் குளியல் நன்மைகளையும், தீமைகளையும் கொண்டது. அதனை சரியான முறையில் பின்பற்றுவது பலன் அளிக்கும்.

    வளர்சிதை மாற்றம்

    ஐஸ் குளியல் தசை வலியையும், வீக்கத்தையும் குறைப்பதன் மூலம் விரைவாக உடலை இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பதாகவும், உடல் நலனை மேம்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.

    அந்த நீரில் கலந்திருக்கும் குளிரின் தன்மை வீக்கத்தை குறைப்பதோடு தசைகளில் இருந்து வளர்சிதை மாற்றக் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கும் உதவுகிறது.

    சோர்வு

    உடற்பயிற்சியால் ஏற்படும் சோர்வை குறைப்பதில் ஐஸ் குளியலுக்கு முக்கிய பங்குண்டு. நரம்புத்தசை செயல்பாட்டை மேம்படுத்தவும் வழிவகுக்கும். அடுத் தடுத்து பயிற்சிகளை மேற்கொள்ளும்போது சிறப்பாக செயல்படுவதற்கு உதவும்.

    வலி நிவாரணம்

    குளிர் தன்மைக்கும், வலி நிவாரணத்துக்கும் இடையே நீண்ட கால தொடர்பு இருக்கிறது. ஐஸ் குளியல் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள நரம்புகளை மரத்துப் போகச் செய்து, வலி மற்றும் அசவுகரியத்தில் இருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கும்.

    கடுமையான காயங்கள், வீக்கம் போன்ற நாள்பட்ட நிலைமைகளை கையாளும் நபர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

    மனநிலை மேம்பாடு

    உடலின் இயற்கையான உணர்வுகளை வெளிப் படுத்தும் ஹார்மோன்களான எண்டோர்பின்களின் வெளியீட்டிற்கும், குளிர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஐஸ் குளியல் மன நிலையை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் முக்கிய பங்களிப்பை வழங்குவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    குளிர்ந்த நீர் மூலம் கிடைக்கப்பெறும் உற்சாகமூட்டும் உணர்வு இயற்கையான மன அழுத்த நிவாரணியாக செயல்படக்கூடியது.

    ஐஸ் குளியல் தரும் தீமைகள்

    ஐஸ் குளியல் நன்மை பயக்கும் என்றாலும் அதிகமாகவோ, அடிக்கடியோ குளிர் நீரை உபயோகிப்பது தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான பயன்பாடு உடலின் சீரான செயல்பாட்டில் தலையிடக்கூடும்.

    குளிர்ச்சியை நீண்ட நேரம் தக்கவைப்பது உடலில் அழுத்தத்தை தூண்டும். இதய அமைப்பை பாதிக்கும். குளிர் குளியலால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்க்க அதன் கால அளவையும், வெப்பநிலையையும் கண்காணிப்பது அவசியம். அதிக நேரம் குளிப்பதோ, உடலை உறையவைக்கும் குளிர் வெப்பநிலையை அனுபவிப்பதோ கூடாது.

    ஐஸ் குளியல் அவசியமா என்றால் அதன் தேவை தனிநபர்களிடையே மாறுபடும். வயது, உடற்பயிற்சி நிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டும், மருத்துவ ஆலோசனை பெற்றும் அதனை பின்பற்றுவது நல்லது.

    • இயற்கை வைத்தியம் மூலம் எப்படி சுளுக்கை குணப்படுத்தலாம்.
    • கிராம்பு எண்ணெய்யை சுளுக்கில் இருந்து விடுபட பயன்படுத்தலாம்.

    பொதுவாக நம் உடலில் அடிக்கடி சுளுக்கு ஏற்பட்டால் உடனே மெடிக்கலுக்கு சென்று ஏதாவது மாத்திரை அல்லது பேண்டேஜ் வாங்கி ஒட்டிக்கொள்வோம். ஆனால் இயற்கை வைத்தியம் மூலம் எப்படி சுளுக்கை குணப்படுத்தலாம் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

    * கிராம்பு எண்ணெய்யை சுளுக்கில் இருந்து விடுபட பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிதளவு கிராம்பு எண்ணெய்யை தடவி மசாஜ் செய்வது வலியை குறைக்க உதவுகிறது.

    * பொதுவாக கல் உப்பு தசை வலி மற்றும் தசைபிடிப்பை குறைக்க உதவுகிறது. வெதுவெதுபான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளிப்பதன் மூலம் சுளுக்கு வலியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

    * மலிவாய் கிடைக்கும் ஆமணக்கு எண்ணெய் எலும்புகளில் உண்டாகும் வீக்கம், சுளுக்கு மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. இந்த ஆமணக்கு எண்ணெய்யை சுத்தமான துணியில் ஊற்றி சுளுக்கினால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். பின்னர் சூடான நீரில் துணியை நனைத்து சுளுக்கு உள்ள பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் சுளுக்கினால் ஏற்படும் வலி குறையும்.

    * பொதுவாக ஆப்பிள் வினிகரில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன, இவை வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. மேலும், ஆப்பிள் வினிகரில் பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை நீக்கும் பண்புகள் உள்ளன. வெதுவெதுபான தண்ணீரில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை சேர்த்து, பாதிக்கப்பட்ட பகுதியில் அந்ந நீரை பயன்படுத்தி ஒத்தடம் கொடுப்பதன் மூலம் சுளுக்கினால் ஏற்படும் வீக்கம் குறையும்.

    * ஆலிவ் எண்ணெய் கூட வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. சுளுக்கால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆலிவ் எண்ணெய் இட்டு லேசாக மசாஜ் செய்வதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    * கல் உப்பில் அதிக அளவில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால், இது சுளுக்கால் உண்டான வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

    ×