search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yoga practice"

    • முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இடுப்பு வலி ஆகும்.
    • இடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி.

    யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்வது இடுப்பு வலி குறைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    உலகில் பலதரப்பட்ட வயதுடைவர்களுக்கு உலக அளவில் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இடுப்பு வலி ஆகும். வேலைப்பளு காரணமாக உடல் சார்ந்த குறைபாடுகளில் மக்களுக்கு ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு பிரச்சினை இடுப்பு வலி. இடுப்பு வலி ஏற்படுவதால் மக்களின் அன்றாட பணிகள், உடற்பயிற்சி, மற்றும் தூக்கம் ஆகியவற்றில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்நிலையில் தற்போது, அமெரிக்காவின் மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் யோகாவை பற்றிய ஒரு புதிய ஆய்வு மேற்கொண்டனர். அதில் இடுப்பு வலி குறைய யோகா பயிற்சி சிறந்த வழி என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

    அதாவது பண்டைய இந்திய உடல் மற்றும் ஆன்மீக பயிற்சியான யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்வது இடுப்பு வலி குறைய மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

     யோகா பயிற்சி மேற்கொள்வதால் வலி நிவாரணம் அளிக்கும் என்றும், உடலின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும் என்றும் நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வு முன்னணி எழுத்தாளரான, எல். சூசன் விலாண்ட் கூறியுள்ளார்.

    நாள்பட்ட அல்லாத குறிப்பிட்ட இடுப்பு வலியால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு, யோகா சிகிச்சை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே எல். சூசன் விலாண்ட் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் இடுப்பு வலி குறைய யோகா பற்றி தனித்தனியாக 12 ஆய்வுகளை மதிப்பீடு செய்து பார்த்தோம் என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர்.

     உடற்பயிற்சி முறை செய்பவர்களுடன் யோகா பயிற்சி மேற்கொள்பவரை ஒப்பிட்டுப் பார்த்தோம். அப்படி ஒப்பிட்டு பார்க்கையில் யோகா பயன்படுத்திய நோயாளர்களுக்கு மூன்று முதல் ஆறு மாதங்களில் இடுப்பு வலியில் மிதமான மேம்பாடுகள் காணப்பட்டுள்ளது.

    அதேபோல் வலியும் சற்று குறைந்து காணப்படுகிறது என்று உறுதியாக ஆதாரங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

    • சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசாருக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
    • யோகா மாஸ்டர் சூலூர் ஆனந்த் பல்வேறு ஆசன பயிற்சிகளை செய்து காட்டினார்.

    சூலூர்,

    கோவையில் போலீசாருக்கு கடும் பணிச்சுமை உள்ளது. இதனால் அவர்களுக்கு சோர்வு, மனஅழுத்தம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே கோவை மாவட்டத்தில் போலீசாருக்கு வாரம் ஒரு நாளில் யோகா பயிற்சி வழங்குவது என்று போலீஸ் எஸ்.பி. பத்ரி நாராயணன் முடிவு செய்தார்.

    இதன் ஒரு பகுதியாக சூலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசாருக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். அப்போது யோகா மாஸ்டர் சூலூர் ஆனந்த் பல்வேறு ஆசன பயிற்சிகளை செய்து காட்டினார். இதனை போலீசார் ஆர்வத்துடன் கற்று தேர்ந்தனர்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

    இந்த நிலையில் எங்களுக்கு இந்த யோகா பயிற்சி மனதுடன் உடலையும் வலுப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது என்று தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் போலீசார் மத்தியில் யோகா பயிற்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் யோகா பயிற்சி அளிப்பது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • ஆரம்ப சுகாதார மையத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும் இலவசமாக யோகா தியான பயிற்சி நடைபெறுகிறது.
    • யோகா பயிற்சிகளை ஆசிரியர்கள் அருள்நிதி வெங்கடேஷ், அருள்நிதி ராமலெட்சுமி ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

    ஏர்வாடி:

    தினமும் யோகா பயிற்சியின் மூலம் நல்ல ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கில் திருக்குறுங்குடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை தோறும் இலவசமாக யோகா தியான பயிற்சி நடைபெறுகிறது. அரசு சுகாதார மையத்தில் நடக்கும் பயிற்சியில் பொதுமக்களும், புறநோயாளிகம் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வகையான பயிற்சியில் அருட்காப்பு சங்கல்பம், நாடிசுத்தி பிராணாயாமம், சுவாச பயிற்சிகள், கால்வலி நிவாரண பயிற்சிகள், இடுப்பு பயிற்சிகள், ரெண்டொழுக்கப் பண்பாடு, உலகை வாழ்த்துதல் மற்றும் பல்வகையாக பயிற்சியினால் ஆரோக்கியமான உடலையும், நீண்ட ஆயுளையும் பெற முடியும் என பயிற்சி வல்லுனர்கள் தெரிவித்தனர். யோகா பயிற்சியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த கர்ப்பணி பெண்கள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என பவ்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். ஆயூஷ் சித்த மருத்துவ உடல்நல மையத்தின் சார்பில் நடைபெற்று வரும் யோகா பயிற்சிகளை ஆசிரியர்கள் அருள்நிதி வெங்கடேஷ், அருள்நிதி ராமலெட்சுமி ஆகியோர் நடத்தி வருகின்றனர். பயிற்சியின் மூலமாக இறையாற்றலும், புத்துணர்வும் கிடைக்க பெறுவதாக அதில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.

    • மனநல ஆலோசர்களை பணியமர்த்த வேண்டும்
    • குழந்தைகளின் மனநிலை மாற வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திலிருந்து கடந்த மாதத்தில் 4 சிறுவர்கள் இல்லத்தை விட்டு வெளியேறி சென்றனர். பின்னர் அவர்களை போலீசார் மீட்டு மீண்டும் இல்லத்தில் ஒப்படைத்தனர்.

    இதை தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர்.ஆர்.ஜி.ஆனந்த் , ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் நேற்று அரசினர் குழந்தைகள் இல்லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர்.ஆர்.ஜி.ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அந்த வகையில் ராணிப்பேட்டையில் கடந்த மாதம் 4 சிறுவர்கள் சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச்சென்றதை தொடர்ந்து உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மீண்டும் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் மன அழுத்தம் முக்கிய காரணமாக உள்ளது.

    குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் பயிற்றுநர்கள் மையத்தில் 3 நபர்கள் உள்ளனர். குழந்தைகள் இல்லத்தில் கூடுதல் மனநல ஆலோசர்களை பணியமர்த்த வேண்டும், குழந்தைகளின் மனநலத்தை சீரமைக்க யோகா பயிற்சிகள், விளையாட்டு பயிற்சிகள், திறனை வெளிக்கொண்டுவரும் பயிற்சிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துக்காட்டாக குழந்தைகள் யாரும் தப்பி போகாமல் மையங்களிலே சிறந்த முறையில் வளர நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

    குழந்தைகள் இல்லம், கூர்நோக்கு இல்லங்கள். நல்வழிப்படுத்தும் இல்லங்களாக மாற்றிட குழந்தைகளின் மனநிலை மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா, குழந்தைகள் நல குழும தலைவர் வேதநாயகம் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பெயரில் நடவடிக்கை
    • மன அழுத்தம் குறைக்கும் என அறிவுரை

    அரக்கோணம்:

    அரக்கோணம் பகுதிக்கு உட்பட்ட போலீசார் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான யோகா பயிற்சி அரக்கோணம் தூய அந்தரய ஆலய வளாகத்தில் ஏ.எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ் தலைமையில் நடைபெற்றது.

    தன்னார்வ தொண்டு நிறுவன சார்பாக நடைபெற்ற யோகா பயிற்சியில் இதயம் மூளை சிந்தனை போன்ற செயல்பாட்டிற்கான விளக்கங்களையும் அதன் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகளையும் பயிற்சி வாயிலாக கற்றுத் தரப்பட்டது.

    போலீசாருக்கு பணி நிமித்தமாக ஏற்படும் தூக்கமின்மை போன்ற நேரங்களில் மேற்கொள்ளப்படும் யோகா அதன் மூலம் பயன்கள் விளக்கி பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி மூலம் மன அழுத்தம் குறைந்து உடல் வலிமை பெறும் என்றும் தொடர்ந்து இந்த பயிற்சி வாயிலாக உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள இந்த யோகா பெரும் உதவி ஆக இருக்கும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    • மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், சிறு சிறு குழப் பயிற்சியும், வீர தீர தற்காப்புக்கலைப் பயிற்சியும், வாழ்விக்கும் யோகப்பயிற்சியும் நடந்தது.
    • தடகள போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற வயோலா அணியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் மிதுன் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப்பள்ளியில் 13- வது தொடக்கநிலை வகுப்பிற்கான விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளித் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், தொடக்கநிலை முதல்வர் ஏஞ்சலின் வில்லியம்ஸ், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி கலந்து கொண்டு விளையாட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், சிறு சிறு குழப் பயிற்சியும், வீர தீர தற்காப்புக்கலைப் பயிற்சியும், வாழ்விக்கும் யோகப்பயிற்சியும் நால்வண்ண மாணவர்களின் வண்ணமயமான அணிவகுப்பு மரியாதையினையும் சிறப்பு விருந்தினர் ஏற்றுக்கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

    தடகளப் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற வயோலா அணியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் மிதுன் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். டியூலிப் அணியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் சக்திபாலா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களை அனைவரும் பாராட்டினர்.

    • திருச்சியில் இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி நீதிபதிகள், போலீசார், மாணவிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர் தன்னெழுச்சியாக யோகா பயிற்சி பெற்றனர்
    • திருச்சி தேசியக் கல்லூரி முதல்வார் முனைவர் ஆர்.சுந்ததரராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, யோகாசன பயிற்சியினை தொடங்கி வைத்தார்

    திருச்சி:

    சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்து கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொது இடங்கள், தனிப்பட்ட பகுதிகள், வீடுகளில் பல மக்கள் யோகா செய்து வருகின்றனர். பட்டி தொட்டி முதல் பெருநகரங்கள் வரை அனைவரும் இன்று தன்னெழுச்சியாக யோகாசனங்கள் செய்து இந்த நாளை போற்றி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக திருச்சி கல்லுக்குழி ெரயில்வே மைதானத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருச்சி ெரயில்வே கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் தலைமையில் யோகா ஆசிரியர் செல்வம் வழிகாட்டுதலின்படி திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ெரயில்வே தொழிலாளர்கள் பலர் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.

    அதேபோல் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் சர்வதேச யோகாசன தினத்தையொட்டி விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கான யோகாசன நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த யோகாசன நிகழ்வில் பங்கேற்ற சிறுவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்வமுடன் பல்ேவறு யோகாசனங்களை செய்தனர்.

    இதேபோல் சர்வதேச யோகா தினத்தையொட்டி திருச்சி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாலக்கரை பகுதியில் அக்கட்சியினர் யோகாசனத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி உச்சநீதிமன்றம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆலோசனையின் படியும் இன்று காலை 6.30 மணியளவில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிமன்றமும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், இணைந்து 2022 –ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    மனிதகுலத்திற்கான யோகா-2022 என்னும் தலைப்பில் நடைபெற்ற யோகா பயிற்சியினை திருச்சி முதன்மை மாவட்ட நிதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான கே.பாபு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மாவட்ட அனைத்து மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், உரிைமையில், குற்றவியில் நீதிபதிகள் உள்பட அனைவரும் பங்கேற்றனர்.

    மேலும் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களும் கலந்துகொண்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதியுமான (பொ) சோமசுந்தரம் செய்திருந்தார்.

    திருச்சி, தேசியக் கல்லூரியில் 4 (தமிழ்நாடு) பெண்கள் பட்டாலியன் என்.சி.சி. சார்பாக சர்வதேச யோகா தின விழா இன்று காலை 7.00 மணியிலிருந்து 7.30 மணிவரை திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. விழாவை தேசியக் கல்லூரி முதல்வார் முனைவர் ஆர்.சுந்ததரராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, யோகாசன பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சுபேதார் பி.வி.ரெட்டி யோகாசனங்களை விளக்கியதுடன், செய்தும் காண்பித்தார். அதனை என்.சி.சி. மாணவிகள் பார்த்து செய்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சுந்ததரராமனும் யோகாசனங்களை பிறருடன் சேர்ந்து செய்தார். ராணுவ வீரர்களான சுபேதார் மேஜர் லால்சந்த், சுபேதார் மேஜர் ஜி.எம்.சின்ஹா, லெப்டினன்ட் வி.வனிதா கலந்து கொண்டனர். இதில் திரளான என்.சி.சி. மாணவிகள் கலந்து கொண்டு தன்னெழுச்சியுடன் யோகாசனங்களை செய்து அசத்தினர்.

    • பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டுயோகா கொண்டாட்டம் பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் வாலண்டினா

    லெஸ்லி முன்னிலை வகித்தார் தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 16 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. #IshaYogaCenter #IshaFreeYoga #YogaForPrisoners
    சென்னை:

    ஜூன் 21-ம்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நாசபை கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, ஈஷா யோகா மையம் சர்வதேச யோகா தினத்தை கடந்த 3 ஆண்டுகளாக வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், 4-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் ஈஷா யோகா மையம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 16 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. கோவை, சென்னை, கடலூர், வேலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள சிறைச்சாலைகளில் யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

    ஈஷா யோகா மையத்தால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் கைதிகளுக்கு ‘உபயோகா’ எனப்படும் சக்திவாய்ந்த யோகாவை கற்றுக்கொடுக்க உள்ளனர்.

    இந்த யோகாவை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். மூட்டுகள் மற்றும் தசைகள் வலுப்பெறும். குறிப்பாக, சிறை கைதிகள் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த யோகா பயிற்சி மூலம் ஆயிரக்கணக்கான கைதிகள் பயன்பெற உள்ளதாக ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. #IshaYogaCenter #IshaFreeYoga #YogaForPrisoners
    ×