search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Isha Yoga Center"

    • 35 பெருநகரங்களில் மகாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு.
    • சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும்.

    சென்னை:

    திரையரங்க வரலாற்றில் முதல்முறையாக ஈஷா மகா சிவராத்திரி விழா பி.வி.ஆர். ஐநாக்ஸ் திரையரங்குகளில் வருகிற 8-ந் தேதி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    புதுச்சேரி, டெல்லி, மும்பை, புனே, பாட்னா, அகமதாபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கான்பூர், நொய்டா, லக்னோ, அலகாபாத், டேராடூன் உள்பட 35 பெருநகரங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பி.வி.ஆர். ஐநாக்ஸ் திரையரங்குகளில் மகாசிவ ராத்திரி விழா நேரலை ஒளிபரப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    8-ந்தேதி மாலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்ட காட்சி நேரம் வரை இவ் விழா ஒளிபரப்பு செய்யப் படும். இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும்.

    கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு முன்னி லையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

    சங்கர் மகாதேவன், குரு தாஸ் மான், தமிழ் நாட்டுப்புற பாடகர் மகாலிங்கம், மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த ராப்பர்ஸ் இசை குழுவினர் மற்றும் ஆப்பி ரிக்கா, லெபனான், பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த இசை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இரவு முழுவதும் களைகட்ட உள்ளது.

    இது தொடர்பாக பி.வி.ஆர். ஐநாக்ஸ் நிறுவனத் தின் துணை தலைமை செயல் அதிகாரி கவுதம் தத்தா கூறுகையில், ``மகா சிவராத்திரி விழா என்பது பாரத பாரம்பரியத்தில் ஈடு இணையற்ற ஆன்மீக முக்கி யத்துவம் வாய்ந்த விழாவாகும்.

    இத்தகைய சிறப்பு மிக்க இவ்விழாவை ஈஷா வுடன் இணைந்து முதல் முறையாக வெள்ளித் திரையில் ஒளிபரப்பு செய்யும் வாய்ப்பை ஒரு பாக்கியமாக கருதுகிறோம். பக்தர்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் பி.வி.ஆர். ஐநாக்ஸ் திரையரங்குகளில் இவ்விழாவில் பங்கேற்று பயன்பெறலாம்" என தெரி வித்துள்ளார்.

    இவ்விழாவில் பங்கேற்ப தற்கான டிக்கெட்டுகளை pvr-mahashivaratri.co என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    ஈஷா மகாசிவராத்திரி விழா தமிழ்நாட்டில் கோவை தவிர்த்து 36 இடங்களில் நேரலை ஒளிபரப்புடன் கூடிய நிகழ்ச்சியாக கொண்டாடப்பட உள்ளது.

    கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு கோ பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
    கோவை:

    தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகள் கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் விழா 112 அடி ஆதியோகி முன்பு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, ஈஷா மாட்டுமனையில் வளர்க்கப்படும் காங்கேயம், உம்பாளச்சேரி, ஆலம்பாடி, வெச்சூர், கிர், சாஹிவால், ஓங்கோல் உள்ளிட்ட 16 வகையான நாட்டு மாடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சுற்று வட்டார கிராம மக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஈஷா தன்னார்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து மண் பானை களில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். தாராபுரத்தைச் சேர்ந்த கலைஞர்களின் பறையாட்டம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு விழாவுக்கு வருகை தந்து நாட்டு மாடுகளுக்கு வெல்லம், கரும்பு, தானியங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர், கோ பூஜை நடைபெற்றது.

    பொங்கல் விழா குறித்து சத்குரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மகர சங்ராந்தி என்பது மிகவும் முக்கியமான ஒரு நாள். இந்த நாளில் சூரியனுக்கும் பூமிக்குமான தொடர்பில் ஒரு மாற்றம் நடக்கிறது. நம் உயிருக்கு மூலமான சக்தி என்றால் அது சூரிய சக்தி தான். பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் சூரிய சக்தியால் தான் இயங்குகின்றன.

    மகர சங்கராந்தி நாளில் இருந்து வெயில் சற்று அதிகரிக்க துவங்கும். அந்த வெயிலால் மக்கள் கொஞ்சம் கஷ்டப்படுகிறார்கள். இந்த கஷ்டம் வெயிலால் வரவில்லை. வெயிலால் உயிர் நடக்கிறது. வெயிலால் மரம், செடி, கொடிகள் எல்லாம் வளர்கிறது.

    நிழல் இல்லாததால் தான் மக்கள் கஷ்டப்படுகின்றனர். அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும்.

    பொங்கல் நாளில் ஈஷாவில் 16 வகையான நாட்டு மாடுகளை கண்காட்சிக்கு வைத்துள்ளோம். அதற்கு காரணம், நம் நாட்டில் இத்தனை வகையான நாட்டு மாடுகள் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதற்குதான். நாம் டிராக்டர் போன்ற கருவிகளை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம். டிராக்டரை கொண்டு உழவ வைத்து கொள்ளலாம்.

    ஆனால், மண்ணை வளப்படுத்த முடியாது. கடந்த 40, 50 வருடங்களில் ஏராளமான வெளிநாட்டு மாடுகளை நம் நாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இதனால், நம் நாட்டு மாடுகளுக்கு தற்போது போதிய மதிப்பில்லாமல் செய்துள்ளோம். வணிக நோக்கத்திற்காக செய்யப்பட்ட இந்த செயல் நமக்கு எதிர்மறையாக மாறி உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

    நம் நாட்டில் 12 ஆயிரம் வருடங்களாக விவசாயம் செய்து வருவதாக சொல்கிறார்கள். ஆனால், அடுத்த 30 வருடங்களில் நம் நாட்டில் தோராயமாக 25 சதவீதம் நிலங்களில் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு இருக்காது என சொல்கிறார்கள்.

    விவசாயம் செய்வதற்கு மண் வளமாக இருக்க வேண்டும். மண் வளமாக இருக்க வேண்டுமானால், நாட்டு மாடுகளும் மரங்களும் மிகவும் அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம் நாட்டு மாடுகளை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டாயம் தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு சத்குரு கூறினார்.
    கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ஈஷா யோகா மைய குழுவினர் கேரள சென்றுள்ளனர். #keralafloods
    கோவை:

    கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோவையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளான ஆலுவா, பத்தனம்திட்டா, வைக்கம், துரவூர், செர்தலா, பரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஈஷா தன்னார்வலர்கள் உணவு, உடை, மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி உள்ளனர். அந்த பொருட்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், கோவையில் செயல்பட்டு வந்த 3 ஈஷா நடமாடும் மருத்துவ வாகனங்கள் தற்போது கேரளாவில் உள்ளன. அந்த வாகனத்துடன் ஈஷா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவை அளித்துள்ளனர்.

    தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தன்னார்வலர்களாக ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தில் இணைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து இன்று புறப்பட்டு கேரளாவுக்கு சென்றனர். அவர்கள் ஏற்கனவே உள்ள குழுவினருடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுப்பட உள்ளனர். #keralafloods
    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.
    கோவை:

    சமூக வலை தளங்களில் வி.ஐ.பி.க்களின் உடல் பிட்னஸ் வீடியோக்கள் தான் தற்போது ஹாட்டாபிக்காக உள்ளது.

    மத்திய மந்திரி ராஜ்வர்தன் ரதோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டதோடு, கிரிக்கெட் வீரர்கள் கோலி, தோனி ஆகியோர் தங்களது பிட்னசை காட்ட வேண்டும் என சவால் விடுத்தார். இதை ஏற்று கோலி தனது பிட்னஸ் வீடியோவை வெளியிட்டதோடு, பிரதமர் மோடிக்கு சவால் விடுத்தார்.

    இதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி தனது உடல் பிட்னஸ் வீடியோவை வெளியிட்டார். மேலும், கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி தனது உடல் பிட்னசை காட்ட வேண்டும் என பிரதமர் மோடி சவால் விடுத்தார். மோடியின் பிட்னஸ் வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

    அதில், தமிழ்நாடு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பிட்னஸ் சவாலில் பங்கேற்க வேண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.


    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் உடல் ஆரோக்கியம் என்பது உடல் பலமாக இருக்க வேண்டும். அறிவு கூர்மையாக இருக்க வேண்டும். இதயம் மிருதுவாக இருக்க வேண்டும்.

    நான் முன்பு தினசரி விளையாட்டுகள் விளையாடுவது உண்டு. தற்போது நிறைய வேலைகள் இருப்பதால் நேரம் கிடைக்காமல் விளையாட முடியவில்லை. கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் அடி வரை உயரத்தில் உள்ள மலைகளுக்கு வருடத்தில் 2 முறை செல்வது உண்டு. அதுதான் எனக்கு உடல் பரிசோதனை.

    நான் மருத்துவ பரிசோதனை செய்வதில்லை. சர்வதேச யோகா தினமான இன்று இந்திய ராணுவ வீரர்களுக்கு அங்கமருதனா யோகா பயிற்சி கொடுத்துள்ளோம். இந்திய இளைஞர்கள் அனைவரும் அங்கமருதனா யோகா பயிற்சி பெற்று தங்கள் உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    சத்குருவின் இந்த சவால் சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #JaggiVasudev #EdappadiPalanisamy #OPanneerSelvam #MKStalin
    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மையம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 16 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. #IshaYogaCenter #IshaFreeYoga #YogaForPrisoners
    சென்னை:

    ஜூன் 21-ம்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நாசபை கடந்த 2015-ம் ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, ஈஷா யோகா மையம் சர்வதேச யோகா தினத்தை கடந்த 3 ஆண்டுகளாக வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், 4-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் ஈஷா யோகா மையம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 16 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்கப்பட உள்ளது. கோவை, சென்னை, கடலூர், வேலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள சிறைச்சாலைகளில் யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

    ஈஷா யோகா மையத்தால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் கைதிகளுக்கு ‘உபயோகா’ எனப்படும் சக்திவாய்ந்த யோகாவை கற்றுக்கொடுக்க உள்ளனர்.

    இந்த யோகாவை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். மூட்டுகள் மற்றும் தசைகள் வலுப்பெறும். குறிப்பாக, சிறை கைதிகள் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த யோகா பயிற்சி மூலம் ஆயிரக்கணக்கான கைதிகள் பயன்பெற உள்ளதாக ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. #IshaYogaCenter #IshaFreeYoga #YogaForPrisoners
    ×