கேரளாவில் வெள்ள மீட்பு பணியில் ஈஷா யோகா மைய குழுவினர்

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ஈஷா யோகா மைய குழுவினர் கேரள சென்றுள்ளனர். #keralafloods
கேரளாவில் வெள்ள மீட்பு பணியில் ஈஷா யோகா மைய குழுவினர்
Published on

கோவை:

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோவையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர்.

இவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளான ஆலுவா, பத்தனம்திட்டா, வைக்கம், துரவூர், செர்தலா, பரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஈஷா தன்னார்வலர்கள் உணவு, உடை, மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி உள்ளனர். அந்த பொருட்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கோவையில் செயல்பட்டு வந்த 3 ஈஷா நடமாடும் மருத்துவ வாகனங்கள் தற்போது கேரளாவில் உள்ளன. அந்த வாகனத்துடன் ஈஷா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவை அளித்துள்ளனர்.

தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தன்னார்வலர்களாக ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தில் இணைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கோவை ஈஷா யோகா மையத்தில் இருந்து இன்று புறப்பட்டு கேரளாவுக்கு சென்றனர். அவர்கள் ஏற்கனவே உள்ள குழுவினருடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுப்பட உள்ளனர். #keralafloods

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com