search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chithirai festival"

    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. 7-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது.
    • விழாவின் நிறைவு நாளான 8-ந்தேதி நம் பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தக்காலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதன் பின்னர் மதியம் 12.30 மணியளவில் கடக லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் நட்டனர்.

    அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின.

    தெடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொடிமர மண்டபம் வருகிறார். காலை 5.30 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

    காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கொடிமர மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பேரி தாடனம் நடைபெறுகிறது.

    மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார்.

    அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாக சாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாளை மறுநாள் (29-ந்தேதி) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

    தொடர்ந்து மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும், 30-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் 1-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும். மாலை கருடவாகனத்திலும், 2-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 3-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

    4-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 5-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்ககுதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது. 7-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 8-ந்தேதி நம் பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    • சித்ரா பவுர்ணமி முடிந்து 23-ந்தேதி மாலை முதல் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வர வசதியாகவும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • பொதுமக்கள், பக்தர்கள் சிறப்பு சேவைகளை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலையில் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள சித்ரா பவுர்ணமி திருவிழாவினை முன்னிட்டு நெல்லை, வள்ளியூர், திசையன்விளை, பாபநாசம், தென்காசி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரில் காண்பதற்காக செல்வார்கள்.

    இதனால் தேவைக்கேற்ப சிறப்பு சேவையாக கூடுதல் பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நெல்லை மற்றும் தூத்துக்குடி மண்டலம் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த இடங்களில் இருந்து 22-ந்தேதி காலை முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கவும், அதேபோல் சித்ரா பவுர்ணமி முடிந்து 23-ந்தேதி மாலை முதல் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வர வசதியாகவும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    எனவே பொதுமக்கள், பக்தர்கள் இந்த சிறப்பு சேவைகளை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • திறக்கப்படும் தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் ஆரம்பத்தில் கூடுதலாக திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணை உள்ளது. இந்த அணை தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது.

    அதன் பிறகு மழை படிப்படியாக குறைந்ததாலும் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இந்நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நடைபெறும். இதற்காக வைகை அணையில் போதுமான நீர் இருப்பு இருந்தால் தண்ணீர் திறப்பது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுகிறது.

    இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக உள்ளது. இதனால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 19-ந்தேதி மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீர் வேகமாக ஆற்றில் செல்லும் வகையில் இரவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

    19-ந்தேதி மாலை 6 மணி முதல் 23-ந்தேதி காலை 6 மணி வரை மொத்தமாக 26 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர். திறக்கப்படும் தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் ஆரம்பத்தில் கூடுதலாக திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 23-ந்தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.
    • சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    மதுரை:

    சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா ஒவ்வொரு வருடமும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். சித்திரை திருவிழாவால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

    தமிழகத்தில் நடக்கும் திருவிழாக்களில் முதன்மையான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு காலை 9.55 மணி முதல் 10.19 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேசுவரர் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெறும்.

    அன்று மாலை கற்பக விருட்சக வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும் 4 மாசி வீதிகளில் உலா வருகின்றனர்.

    2-ம் நாள் (13-ந்தேதி) திருவிழாவில் காலையில் சுவாமி-அம்பாள் தங்க சப்பரத்திலும், இரவு பூதம்-அன்னம் வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    3-ம் நாள் (14-ந்தேதி) காலையில் 4 சப்பர வாகனங்களிலும், இரவு கைலாசபர்வதம்-காமதேனு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கின்றனர்.

    4-ம் நாள் திருவிழாவான 15-ந் தேதியன்று காலை 9 மணிக்கு தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி சின்னக்கடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்கள். பின்னர் மாலை 6 மணிக்கு அங்கிருந்து சுவாமி-அம்பாள் கோவிலுக்கு திரும்புகிறார்கள்.

    5-ம் நாள் 16-ந் தேதி காலையில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயணச்சாவடி, நவநீத கிருஷ்ணசுவாமி தேவஸ்தான மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்கள். இரவு 7 மணிக்கு அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி கோவிலுக்கு சுவாமி-அம்பாள் திரும்புகிறார்கள்.

    6-ம் நாள் (17-ந் தேதி) திருவிழாவில் காலையில் தங்க சப்பரத்திலும், இரவு தங்க ரிஷபம்-வெள்ளி ரிஷபம் வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 7-ம் நாளான 18-ந் தேதி காலை தங்கசப்பரத்திலும், இரவு நந்திகேசுவரர்-யாளி வாகனத்திலும் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    விழாவில் 8-ம்நாளான 19-ந் தேதியன்று காலையில் தங்கப்பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. அன்று இரவு 7.35 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெறும். கோவில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கீரிடம் சாற்றி, செங்கோல் வழங்கி மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடக்கும். அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் (கைபாரம்) வீதி உலா நடக்கும்.

    20-ந் தேதி காலை மரவர்ண சப்பரத்திலும் வீதி உலா நடக்கிறது. அன்று மாலை மீனாட்சி அம்மன் இந்திர விமானத்தில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வந்து அஷ்டதிக்கு பாலகர்களை போரிட்டு வெற்றி கொள்ளும் வகையில் திக்கு விஜயம் நடக்கிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மறுநாள் (21-ந்தேதி) விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி-அம்பாள் யானை, ஆனந்த ராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.

    22-ந்தேதி காலை திருத்தோரோட்டம் நடக்கிறது. 23-ந்தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    • சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நாளை காலை கோவிலுக்கு சுவாமி அம்பாள் எழுந்தருளல் நடைபெறுகிறது.

    கடையம்:

    கடையம் நித்யகல்யாணி அம்பாள் உடனுறை வில்வ வனநாதர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் கடந்த 26-ந்தேதி காலையில் ஏக சிம்மாசன, அபிஷேகம், பூத சிம்ம வாகனத்தில் எழுந்தருளல் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து 27-ந்தேதி காலை ஏக சிம்மாசனம், பின்னர் அபிஷேகம் திருத்தேர்கால் நாட்டுதல் நடந்தது. 5-ந் திருநாள் இரவு இந்திர வாகனங்களில் எழுந்த ருளல், சுவாமி- அம்பாள் ஊடல் தீபாராதனை நடைபெ ற்றது. 6-ந் திருநாளான வெள்ளிக்கிழமை காலை அபிஷேகம், தீபாராதனை நடை பெற்றது. இரவில் யானை அன்ன வாகனங்களில் எழுந்தருளல் நடைபெற்றது. 7-ந்திருநாளான ஞாயிற்று க்கிழமை காலையில் அபிஷேகம், தீபாராதனை சிறப்பு பூஜை, மாலையில் நடராஜர் அபிஷேகம், நடராஜர் இவப்பு சாத்தி நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து 8-ந் திருநாளான நேற்று மாலை நடராஜர் பச்சை சாத்தி , பூங்கோவில் கங்காளநாதர் எழுந்தருளல் நடைபெற்றது. விழாவில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அபிஷேகம், தீபாராதனை, சுவாமி ரதத்திற்கு எழுந்தருளல் நடைபெற்றது.

    பின்னர் சுவாமி-அம்பாள் தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இதையடுத்து மாலையில் தேர் வலம் வருதல் நடைபெறுகிறது.

    இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    10-ந் திருவிழாவான நாளை காலை 11 மணிக்கு கோவிலுக்கு சுவாமி அம்பாள் எழுந்தருளல் நடைபெறுகிறது. இதையடுத்து கொடி இறக்குதல், தீர்த்தவாரி அபிஷேகம் நடைபெறுகிறது. விழாவில் ஒவ்வொரு நாள் மாலையில் திருமுறை இன்னிசை நடை பெறுகிறது. திருவிழாவானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்களால் நடத்தப்பட்டது.

    • சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரோட்டம் நாளை காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும் வழக்கம்.

    வீதி உலா

    இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடந்து வருகிறது.

    அதன்படி சித்திரை திருவிழா 7-ம் நாளான நேற்று இரவு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருத்ரன் அம்சத்தில் சிகப்பு சாத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு பிரம்மா அம்சத்தில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் வெள்ளை சாத்தி அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

    தொடர்ந்து 8-ம் நாளான இன்று காலை சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் விஷ்ணு அம்சத்தில் பச்சை சாத்தி பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.

    தொடர்ந்து வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் சுவாமி, அம்பாள் தந்த பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் விநாயகர், சுவாமி, அம்பாள் 3 தேர்கள் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் கையில் பூந்தட்டுகளை ஏந்தியவாறு சென்றனர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் உள்ள நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நாகை நாலுகால் மண்டபத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கையில் பூந்தட்டுகளை ஏந்தியவாறு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெறுகிறது.

    • சித்திரை பிரமோத்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 1-ந் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரமோத்சவ திருவிழா ஆண்டு தோறும் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு சித்திரை பிரமோத்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந்தேதி எம்பெருமானார் எதிர் சேவை நிகழ்ச்சியும், நேற்று கருடோத்ஸவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கருட சேவை நிகழ்ச்சியில் உற்சவர் பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். வருகிற 1-ந் தேதி (திங்கள்கிழமை) தேர்த்திருவிழாவும், 2-ந்தேதி (செவ்வாய்கிழமை) தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் பேரருளாளர் ராமானுஜ ஜீயர், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜீத், தக்கார் கோவல மணிகண்டன் உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • தேரோட்டத்தின் போது தேர் வரும் ரதவீதிகளில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றியும், தேர் செல்லும் பாதையை செப்பனிட்டு தருமாறும் மேயரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.
    • தேரோட்ட பாதையினை செப்பனிட தேவையான நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாகம்பிரி யாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    மேயர் ஆய்வு

    இதனையடுத்து தேரோட்ட விழா அழைப்பி தழை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் மேயர் ஜெகன் பெரிய சாமியை மாநகராட்சி அலுவலகத்தில் சந்தித்து வழங்கினர். அப்போது வருகிற 3-ந்தேதி நடை பெறும் தேரோட்டத்தின் போது தேர் வரும் ரதவீதிகளில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றியும், தேர் செல்லும் பாதையை செப்பனிட்டும் தருமாறு மேயரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

    அப்போது அதனை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, அதற்கான பணிகளை நிறை வேற்றிட அப்பகுதிகளை அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    மேலும் தேரோட்ட பாதையினை செப்பனிட தேவையான நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.

    கலந்து கொண்டவர்கள்

    ஆய்வின் போது தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாமன்ற உறுப்பினர் கனகராஜ், பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர் கதிரேசன், மாவட்ட பிரதி நிதி ராஜ்குமார், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்த னர்.

    • குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவிழாவையொட்டி தினசரி மாலையில் சமய சொற்பொழிவும், சுவாமி எழுந்தருளும் நிகழச்சியும் தொடர்ந்து நடைபெறும்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை கோவில் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்பு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவிழா தொடங்கியதையொட்டி தினசரி மாலையில் சமய சொற்பொழிவும், சுவாமிஎழுந்தருளும் நிகழச்சியும் தொடர்ந்து நடைபெறும்.

    வருகின்ற 10-ம் திருநாளான மே மாதம் 4-ந்தேதி சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் சுற்றுபுற பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • 30-ந் தேதி காலையில் உருகுசட்டமும், சண்முகார்ச்சனையும் நடக்கிறது.
    • திரிபுராந்தீஸ்வரர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரம் அருகில் பூஜைகள் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பாலாலயம்

    காலை 6 மணிக்கு கொடி யேற்றம் நடைபெற்றது. கும்பாபிஷேக பணிக்காக கோபுரம், பாலாலயம் செய்ய ப்பட்டிருப்பதால் இன்றைய விழா உள்திரு விழாவாக நடைபெற்றது. தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    வருகிற 30-ந் தேதி காலையில் உருகுசட்டமும், சண்முகார்ச்சனையும் நடக்கிறது. அடுத்த மாதம் 4-ந் தேதி காலை தீர்த்தவாரி நடைபெற உள்ளது. பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் சுவாமி வீதி உலா, தேரோட்டம் நடைபெறாது. அனைத்து நிகழ்ச்சிகளும் உள்விழா வாகவே நடைபெறுகிறது.

    திரிபுராந்தீஸ்வரர் கோவில்

    பாளை கோமதி அம்மாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது. இந்த கோவிலில் சித்திரை பிரமோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி -அம்மாள் விஸ்வரூபம் காலை சந்தி நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து கொடிப்பட்டம் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, தொடர்ந்து திரிபுராந்தீஸ்வரர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரம் அருகில் சுவாமி அம்மாள் எழுந்தருள பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றப்பட்டு கொடிமரத்திற்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பிறகு கொடி மரத்திற்கும், சுவாமி-அம்பாளுக்கும், தீபா ராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இன்று முதல் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை பிரமோற்சவத்தில் 7-ம் நாள் 63 நாயன்மார் வீதி உலாவும், 9-ம் நாள் தேரோட்டமும் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்த ர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • வள்ளியூர் முருகன் கோவில் சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    • முருக கடவுளின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையுடையது வள்ளியூர் முருகன் கோவில்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் முருகன் கோவில் சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    குகை கோவில்

    முருக கடவுளின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையுடையது வள்ளியூர் முருகன் கோவில். இக்கோவில் குகைகோவிலாக அமைந்து ள்ளது. தென்மாவட்டங்க ளிலுள்ள குகைகோவில்களில் இத்திருத்தலம் சிறப்பு பெற்றதாகும்.

    இக்கோவில் சித்திரைத் திருவிழா நாளை காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகின்ற திருவிழாவில் தினமும் சுவாமி ,அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறுகிறது. தினமும் இரவு சிவதொண்டர் செல்வராஜின் பக்தி சொற்பொழிவு நடைபெறு கிறது. இரவு சுவாமி அம்பாளுடன் பூதம், கிளி, அன்னம், யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளிக்கிறார்.

    தேரோட்டம்

    ஒவ்வொரு நாள் திருவிழாவும் வெவ்வேறு சமுதாயத்தினர் சார்பில் நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாளுடன் எழுந்தருளுகிறார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர்.

    10-ம் திருவிழா இரவு சுவாமி அம்பாளுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளிக்கிறார். திருவிழா ஏற்பாடுகளை முருக பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    ×