search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூந்தட்டு"

    • பக்தர்கள் கையில் பூந்தட்டுகளை ஏந்தியவாறு சென்றனர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் உள்ள நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நாகை நாலுகால் மண்டபத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கையில் பூந்தட்டுகளை ஏந்தியவாறு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெறுகிறது.

    ×