என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kurukkuthurai murugan temple"
+2
- 30-ந் தேதி காலையில் உருகுசட்டமும், சண்முகார்ச்சனையும் நடக்கிறது.
- திரிபுராந்தீஸ்வரர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரம் அருகில் பூஜைகள் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாலாலயம்
காலை 6 மணிக்கு கொடி யேற்றம் நடைபெற்றது. கும்பாபிஷேக பணிக்காக கோபுரம், பாலாலயம் செய்ய ப்பட்டிருப்பதால் இன்றைய விழா உள்திரு விழாவாக நடைபெற்றது. தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
வருகிற 30-ந் தேதி காலையில் உருகுசட்டமும், சண்முகார்ச்சனையும் நடக்கிறது. அடுத்த மாதம் 4-ந் தேதி காலை தீர்த்தவாரி நடைபெற உள்ளது. பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் சுவாமி வீதி உலா, தேரோட்டம் நடைபெறாது. அனைத்து நிகழ்ச்சிகளும் உள்விழா வாகவே நடைபெறுகிறது.
திரிபுராந்தீஸ்வரர் கோவில்
பாளை கோமதி அம்மாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது. இந்த கோவிலில் சித்திரை பிரமோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி -அம்மாள் விஸ்வரூபம் காலை சந்தி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து கொடிப்பட்டம் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, தொடர்ந்து திரிபுராந்தீஸ்வரர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரம் அருகில் சுவாமி அம்மாள் எழுந்தருள பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றப்பட்டு கொடிமரத்திற்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பிறகு கொடி மரத்திற்கும், சுவாமி-அம்பாளுக்கும், தீபா ராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று முதல் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை பிரமோற்சவத்தில் 7-ம் நாள் 63 நாயன்மார் வீதி உலாவும், 9-ம் நாள் தேரோட்டமும் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்த ர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் நேற்று 2-வது நாளாக கரைபுரண்டு ஓடியது. குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்த படி தண்ணீர் செல்கிறது.
இதனால் அங்குள்ள உற்சவர் சிலை மெயின் ரோட்டில் உள்ள மேலகோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடக்கின்றன. வருகிற 22-ந் தேதி காலை உருகு சட்ட சேவையும், மாலையில் சிகப்பு சாத்தி தங்க சப்பரத்தில் சுவாமி, அம்மன் நெல்லை மாநகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 23-ந் தேதி காலை சுவாமி வெள்ளை சாத்தியும், பச்சை சாத்தியும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேர்வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 26-ந் தேதி தீர்த்தவாரி, அன்று இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா வருதல் நடக்கிறது. 27-ந் தேதி காலை 9 மணிக்கு சுவாமி தெப்ப மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்