search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.
    X
    நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.

    நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் ஆவணி திருவிழா தொடங்கியது

    நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் ஆவணித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை சந்திப்பு குறுக்குத்துறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணித் திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் நேற்று 2-வது நாளாக கரைபுரண்டு ஓடியது. குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்த படி தண்ணீர் செல்கிறது.

    இதனால் அங்குள்ள உற்சவர் சிலை மெயின் ரோட்டில் உள்ள மேலகோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடக்கின்றன. வருகிற 22-ந் தேதி காலை உருகு சட்ட சேவையும், மாலையில் சிகப்பு சாத்தி தங்க சப்பரத்தில் சுவாமி, அம்மன் நெல்லை மாநகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 23-ந் தேதி காலை சுவாமி வெள்ளை சாத்தியும், பச்சை சாத்தியும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேர்வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 26-ந் தேதி தீர்த்தவாரி, அன்று இரவில் வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா வருதல் நடக்கிறது. 27-ந் தேதி காலை 9 மணிக்கு சுவாமி தெப்ப மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 
    Next Story
    ×