search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alwarthirunagari"

    • தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
    • ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவைகுண்டம்:

    ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் 150 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வருகிறது.

    தற்போது இந்த தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாகப் பிரித்திட திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்டத்தை இரண்டாகப் பிரிக்க கூடாது. மீண்டும் பழைய முறைப்படி இந்த அலுவலகம் ஸ்ரீவைகுண்டத்தில் செயல்படுவதற்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஸ்ரீவைகுண்டத்தில் மேல ரதவீதி, கீழ ரதவீதி, பேருந்து நிலையம் மற்றும் பஸ் சுற்றியுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதேபோல் ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்திலேயே இயங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தில் வக்கீல் கருப்பசாமி, வியாபாரி சங்கத் தலைவர் காளியப்பன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் கந்த சிவசுப்பு, தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, தாமிரபரணி பாசன திட்ட குழு முன்னாள் தலைவர் உதயசூரியன், பாசன விவசாய சங்க தலைவர்கள் சீனிப்பாண்டியன், வைகுண்ட பாண்டியன், தியாகசெல்வன், பரமசிவன், துரையப்பா, பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் விவசாய சங்க தலைவர் அலங்காரம், பொருநை நதிநீர் மேலாண்மை சங்க பொதுச் செயலாளர் முருகன் மற்றும் விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

    ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • முகாமில் சிறந்த கிடேரி கன்றுகளுக்கும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
    • கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு அரசு சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் குருகாட்டூர் ஊராட்சி கிராம சேவை மையத்தில் குருகாட்டூர் பஞ்சாயத்து துணைத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் கலந்து கொண்டு முகாமில் சிறந்த கிடேரி கன்றுகளுக்கும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கினார். முகாமில் தூத்துக்குடி மண்டல கால்நடை இணை இயக்குனர் சஞ்சீவி ராயன், திருச்செந்தூர் கால்நடை உதவி இயக்குனர் மருத்துவர் செல்வகுமார், ஆத்தூர் கால்நடை உதவி மருத்துவர் செந்தில் கண்ணன், தென்திருப்பேரை கால்நடை உதவி மருத்துவர் வினோதினி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் இலவச மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கப்பட்டது. கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை டி.வி.எஸ். சேவை அறக்கட்டளை சார்பில் பொன்னுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு நடத்தினர்.

    • சித்திரை பிரமோத்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 1-ந் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரமோத்சவ திருவிழா ஆண்டு தோறும் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு சித்திரை பிரமோத்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந்தேதி எம்பெருமானார் எதிர் சேவை நிகழ்ச்சியும், நேற்று கருடோத்ஸவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கருட சேவை நிகழ்ச்சியில் உற்சவர் பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். வருகிற 1-ந் தேதி (திங்கள்கிழமை) தேர்த்திருவிழாவும், 2-ந்தேதி (செவ்வாய்கிழமை) தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் பேரருளாளர் ராமானுஜ ஜீயர், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜீத், தக்கார் கோவல மணிகண்டன் உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • குடும்ப சூழ்நிலை காரணமாக லோகநாதனின் மூத்த மகள் தாமரைகனி கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
    • ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் மற்றும் போலீசார் நாசரேத் மகளிர் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து மாணவியை பள்ளியில் சேர்த்தனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தி லுள்ள பள்ளிகளில் கல்வி பயிற்று படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ- மாணவிகளை கண்டு அறியப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பாலாஜி சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதன் பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமையில், ஆழ்வார் திருநகரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொ ண்டதில் ஆழ்வார் திருநகரி அண்ணா நகரிலுள்ள கூலி தொழிலாளி லோகநாதன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன. மூத்த மகள் 9-வது வகுப்பும், இரண்டாவது மகள் 8-வது வகுப்பும் நாசரேத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். மனைவி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக மூத்த மகள் தாமரைகனி கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். உறவினர்கள் மாணவியிடம் பள்ளிக்கு ஏன் செல்லவில்லை என்று கேட்டதற்கு சரியான பதிலும் சொல்லவில்லை எனவும், மாணவியின் தகப்பனார் லோகநாதன் மதுவுக்கு அடிமையான நிலையில் மகள்களை சரிவர கவனிக்கவில்லை எனவும் உறவினர்கள் வீட்டில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

    இதன் பெயரில் ஸ்ரீவை குண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மாயவன் மற்றும் போலீசார் மாணவியின் உறவினர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று அறிவுரை வழங்கியதில் மேற்கொண்டு படிக்க ஒத்துகொண்ட நிலையில் படிப்பதற்கு தேவையான உபகரணங்கள் காவல்துறையினர் சார்பில் வாங்கி கொடுத்து பள்ளிக்கு அவரது காரில் நாசரேத் மகளிர் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து பள்ளியில் சேர்த்தனர். மேலும் மாணவி சம்பந்தப்பட்ட தகவலுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என கூறி வந்தனர். மேலும் மாணவியின் தகப்பனார் லோகநாதன் குடிப்பழக்க த்தில் இருந்து விடுபட்டு மகள்களை சரியாக கவனிக்கவும் அறிவுரைகள் கூறினார்கள்.

    ஏற்கனவே கருங்குளம் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் ஆழ்வார் திருநகரி டீக்கடையில் வேலை பார்த்து வந்ததும் அவரை மீண்டும் பள்ளியில் சேர்க்க டி.எஸ்.பி. மாயவன் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. காவல்துறையின் நடவடிக் கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவில் இறுதி நாளான நாளை (13-ந்தேதி) காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளுகிறார்.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் 10-ந்தேதி இரவில் சுவாமி பொலிந்து நின்ற பிரான் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.

    நேற்று இரவில் சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரி யார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்தார். இன்று மதியம் தீர்த்தவாரி நடைபெருகிறது.

    விழாவில் இறுதி நாளான நாளை (13-ந்தேதி) காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளுகிறார். அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வார் திருநகரிதிரும்புகிறார்.

    விழாவில் எம்பெரு மானார் ஜீயர், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் அஜித், காரியமாறன் கலை காப்பகத்தினர் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • தென்திருப்பேரை யிலுள்ள ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • கூட்டத்தில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை யிலுள்ள ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி, உறுப்பினர்கள் தானி ராஜ்குமார், மல்லிகா, மாரிமுத்து, தாமஸ், நசரேன், பூல், சஜீதா, காந்திமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஈசான உச்சினி மாகாளியம்மன் கோவில் 3-வது வருசாபிஷேக விழா நடைபெற்றது.
    • வருசாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி குண்டு தெருவில் உள்ள ஈசான உச்சினி மாகாளியம்மன் கோவில் 3-வது வருசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கணேசன் குருக்கள் தலைமையில் வேத ஆகம முறைப்படி கணபதி பூஜை, பஞ்சகவ்ய பூஜை, சுதர்சன பூஜை, மகாலட்சுமி பூஜை, கும்ப பூஜை, நவக்கிரக பூஜை, யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு மற்றும் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அம்மனுக்கு அபிஷேக பூஜை சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


    • சமத்துவபுரத்தில் குடியிருப்போர் நலச்சங்கம் ஏற்பாட்டின் படி அனைவராலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • சமத்துவபுரத்தில் பொங்கலிட்ட சுமார் 100 பெண்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன

    தென்திருப்பேரை:

    ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் ஆதிநாதபுரம் கிராம ஊராட்சியில் தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    சமத்துவ புரத்தில் குடியிருப்போர் நலச்சங்கம் ஏற்பாட்டின் படி அனைவராலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சமத்துவ புரத்தில் பொங்க லிட்ட சுமார் 100 பெண்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சமத்துவ தின உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    நிகழ்ச்சியில் மேலிட பார்வையாளராக மாநில மகளிர் மேம்பாட்டு திட்ட இணை இயக்குனர் ஜெயசுதா, மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன், உதவி திட்ட அலுவலர் லீமாரோஸ், ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன், பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் சிவசங்கரன் ஆதிநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாலை, சீனிவாசா சேவைகள் அறக்கட்டளை மேலாளர் முருகன் மற்றும் ஆதிநாதபுரம் ஊராட்சி செயலர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியம் சார்பில் பொங்கல் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அலுவலக பணியாளர்கள் பொங்கலிட்டு கொண்டாடினார்கள். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவ ராஜன், பாலசுப்பிரமணியன் ஒன்றிய பொறியாளர் வெள்ளப்பாண்டியன் மானேஜர் ஜவஹர், மகராஜன் மற்றும் அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுவாமி பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ தேவி பூதேவி நீளாதேவி ஆதி நாயகி குருகூர் நாயகி சமேதராக சீனக் குறட்டில் எழுந்தருளினார்.
    • அண்ணாவியார் பாலாஜி கைசிக ஏகாதசி புராணம் ஆன நம்பாடுவான் கதையை படித்தார்

    தென்திருப்பேரை:

    நவதருப்பதிகளில் ஒன்பதாம் திருப்பதி ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஆகும். இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கருடசேவை நடந்தது.

    ஏகாதசியை முன்னிட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், திருவாராதனம், பின்னர் சுவாமி பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீ தேவி பூதேவி நீளாதேவி ஆதி நாயகி குருகூர் நாயகி சமேதராக சீனக் குறட்டில் எழுந்தருளினார்.

    இடது மண்டபத்தில் நம்மாழ்வார் தொடர்ந்து கூரத்தாழ்வார். ராமானுஜர். தேசிகர். மணவாளமாமுனி மற்றும் ஆழ்வாராதிகள். எழுந்தருளினர். மதுரகவி பரம்பரையின் அண்ணாவியார் பாலாஜி சுவாமியை அரிவாணம் கொண்டு அழைத்து வந்தனர்.

    சுவாமி முன்னிலையில் அண்ணாவியார் பாலாஜி கைசிக ஏகாதசி புராணம் ஆன நம்பாடுவான் கதையை படித்தார். பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    நம்மாழ்வார் தனது சன்னதி வந்தவுடன் அண்ணாவியார் சுவாமியை அவரது திரு மாளிகைக்கு பிரம்ம ரதத்தில் கொண்டு விடுவர அருளிப்பாடு சாதிப்பார். உடன் கோவில் ஸ்ரீ பாதம் தாங்கிகள் அவரை அவரது திரு மாளிகையில் கொண்டு விட்டனர். இரவு 7.30 மணிக்கு பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும் நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் மாட வீதி புறப்பாடு நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, முன்னாள் அறங்காவலர் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்செல்வி கலந்து கொண்டு நவீன பசுமை கழிப்பிட கட்டிடத்தை திறந்து வைத்தார்
    • பள்ளி வளாகத்தில் மர கன்றுகளையும் நட்டனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கான நவீன பசுமை கழிப்பிட கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்து மேல்நிலைப்பள்ளி தலைவர் சந்தான கோபாலன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆதிநாதன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் டாக்டர் ராமசாமி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்செல்வி கலந்து கொண்டு நவீன பசுமை கழிப்பிட கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பள்ளி வளாகத்தில் மர கன்றுகளையும் நட்டனர். நிகழ்ச்சியில் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஸ்வரி, பேரூராட்சி துணைத்தலைவர் சுந்தர ராஜன், இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்து மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

    • சென்னையில் 17-வது அகில இந்திய சிட்டோ ரியோ நிப்பான் கராத்தே டூ காய் இந்தியா சேம்பியன் போட்டி சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
    • கராத்தே போட்டியில் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த பள்ளி மாணவ -மாணவிகள் 60 பேர் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    சென்னையில் 17-வது அகில இந்திய சிட்டோ ரியோ நிப்பான் கராத்தே டூ காய் இந்தியா சேம்பியன் போட்டி சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கராத்தே போட்டியில் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த பள்ளி மாணவ -மாணவிகள் 60 பேர் கராத்தே தலைமை பயிற்சியாளர் ஷீகான் சங்கர் மற்றும் மாவட்ட பயிற்சி யாளர்கள் முத்துமாலை, முத்துசுடர், இசக்கியப்பன் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்டனர். அதில் முதல் பரிசு 13 பேரும், 2-வது பரிசு 23 பேரும், 3-வது பரிசு 13 பேரும் மொத்தம் 49 பரிசுகளும், சான்றிதழ்களும் பெற்றனர்.

    போட்டியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளை பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மற்றும் நகர செயலாளர் கோபிநாத் ஆகியோர் பாராட்டி நினைவு பரிசும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுப்பதாக கூறினார்கள்.

    நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் முத்து ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன், போஸ், ரஞ்சித் மோகன், முகமது ரஸ்வி, சலீம் பாதுஷா, மந்திர மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மனு கொடுத்தார்.
    • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கிராமப்புறங்களில் உள்ளது போல நகர்ப்புறங்களிலும் அனைத்து பயிற்சிகளையும் வழங்கிட வேண்டும்'

    தென்திருப்பேரை:

    உடன்குடி மற்றும் சாத்தான்குளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஸ்ரீவைகுண்டம் சுற்றி செல்லாமல் ஆழ்வார்திருநகரி, காடுவெட்டி, குலசேகரநத்தம், ஆயத்துறை வழியாக தூத்துக்குடிக்கு புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்க கனிமொழி எம்.பி. யிடம் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி மனு கொடுத்தார். இந்த புதிய வழித்தடம் நடைமுறைக்கு வந்தால் கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களின் பயண நேரம் கணிசமாக குறைவது மட்டும் இன்றி இந்த சுற்று வட்டார கிராமங்களில் உள்ள மக்களும் பெரிதும் பயன்பெறுவார்கள் என்பதை வலியுறுத்தியதாக கூறினார். மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கிராமப்புறங்களில் உள்ளது போல நகர்ப்புறங்களிலும் அனைத்து பயிற்சிகளையும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவையும் அளித்ததாக கூறினார்.

    ×