search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி தேரோட்டம்
    X

    ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த காட்சி.

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி தேரோட்டம்

    • ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா வைகாசி நடைபெற்றது.
    • நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் சுவாமி நம்மாழ்வார் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது. 5-ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் மதுரகவி ஆழ்வார் தங்க பல்லக்கிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தனர்.

    9-ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு நம்மாழ்வார் திருத்தேரில் எழுத்தருளினார். 8.30 மணியளவில் பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்ற கர கோஷத்துடன் நான்கு ரத வீதிகளில் தேரைவடம் பிடித்து இழுத்து வந்தனர். காலை 11 மணி அளவில் தேர் நிலை வந்தடைந்தது. நாளை (12-ந்தேதி) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், அலுவலக இளநிலை பணியாளர் பெருமாள் ஆகியோர் செய்து இருந்தனர்.

    நிகழ்ச்சியில் எம்பெருமானார் பேரருளாளர் ராமானுஜ ஜீயர் உள்பட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார் திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    Next Story
    ×