search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "technical training"

    • தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெயந்தன், காய்கறி மற்றும் வாழை சாகுபடி குறித்து தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார்.
    • உதவி வேளாண்மை அலுவலர் நூர்தீன் பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை திட்டம் குறித்து விவசாயி களுக்கு கூறினார்.

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வட்டாரம், வேளாண்மைத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களான தெற்கு காரசேரி, கீழப்புத்தனேரி ஆகிய கிராமங்களில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழுவிற்கான முன்பருவத்திற்கான தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.

    இப்பயிற்சிக்கு கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கி யப்பன் தலைமை தாங்கி தரமான விதைகளை தேர்ந்தெடுத்தல், விதை நேர்த்தி செய்யும் முறைகள் குறித்து தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார்.

    கருங்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெயந்தன், காய்கறி மற்றும் வாழை சாகுபடி குறித்து தொழில்நுட்ப உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக கீழப்புத்த னேரி பஞ்சாயத்து தலைவர் ஜெயபாரதி, தெற்கு காரசேரி பஞ்சாயத்து தலைவர் பேபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தோட்டக்கலைத் துறையில் கலைஞர் திட்ட செயல்பாடுகள் குறித்து துணை தோட்டக்கலை அலுவலர் கமலேஷ் விளக்கமளித்தார். வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் மணிகண்டன் உலகநாதன் தேசிய வேளாண்சந்தை திட்டம் மற்றும் நெல்சாகுபடியில் மதிப்பு கூட்டுதல் குறித்து தொழில்நுட்ப உரை ஆற்றினார்.உதவி வேளாண்மை அலுவலர் நூர்தீன் பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை திட்டம் குறித்து விவசாயி களுக்கு கூறினார்.

    பயிற்சிக்கான ஏற்பாடு களை உதவி வேளாண்மை அலுவலர் ரகுநாத், உதவி வேளாண்மை தோட்டக்கலை அலுவ லர்கள் சிவபெருமாள், கோபாலகிருஷ்ணன், அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் முத்துசங்கரி, மகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • நெல் விதைகள், உயிர் உரங்கள் உள்ளிட்டவற்றின் மானிய விவரம் குறித்து கூறப்பட்டது.
    • நெல் பயிரில் விதை நேர்த்தி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கபட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் கிராம அளவில் வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கு பயிற்சி மூலங்குடி கிராமத்தில் நடைபெற்றது.

    பயிற்சிக்கு மூலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வேல் தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை அலுவலர் செல்வி அனுஷா முன்னிலை வகித்தார்.

    நிகழச்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் ராஜா கலந்து கொண்டு, நெல் பயிரில் விதை நேர்த்தி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    தொடர்ந்து பேசிய விதைச்சான்று அலுவலர் சதீஷ் விதை பண்ணை அமைக்கும் வழிமுறைகள், தரமான விதை உற்பத்தி பற்றி விளக்கினார்.

    நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மணிகண்டன், விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவைகள் உள்ளிட்டவற்றின் மானிய விவரம் குறித்து விளக்கம் அளித்தார்.

    முடிவில் விவசாயி குமரேசன் நன்றி கூறினார் தெரிவித்தார்.

    • வேளாண் அலுவலர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
    • முடிவில் மதுரை விற்பனைக் குழு மேலாளர் கோகிலா நன்றி கூறினார்.

    மதுரை

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை விற்பனை குழுவின் சார்பில் இ-நாம் திட்ட வலைதளத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் மற்றும் பண்ணை வர்த்தகம் மேற்கொள்வது குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை விரிவாக்க அலுவலர்க ளுக்கான தொழில்நுட்ப பயிற்சி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி வரவேற்றார்.

    கூட்டத்தில் இ-நாம் திட்டம் குறித்தும் இத் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது குறித்தும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அடையும் பலன்கள் குறித்தும் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டது.

    இ-நாம் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகளை அதிகரித்திட வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மற்றும் விற்பனைத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்து அலுவலர்களுக்கு கலெக்டர் சங்கீதா ஆலோசனை வழங்கினார்.

    இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் மதுரை விற்பனைக் குழு மேலாளர் கோகிலா நன்றி கூறினார்.

    • கரும்பு விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பற்றிய பயிற்சி பட்லூர் பொன்னி சர்க்கரை ஆலையின் கரும்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
    • வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் வரவேற்புரை வழங்கி கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், வேளாண் துறையின் மானியத் திட்டங்கள் பற்றியும் கூறினார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வட்டாரம் பட்லூர் கிராம கரும்பு விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பற்றிய பயிற்சி பட்லூர் பொன்னி சர்க்கரை ஆலையின் கரும்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் வரவேற்புரை வழங்கி கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், வேளாண் துறையின் மானியத் திட்டங்கள் பற்றியும் கூறினார். பொன்னி சர்க்கரை ஆலையின் கரும்பு மேலாளர் கோபிநாத் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், கட்டைப்பயிர் பராமரிப்பு, நாற்றங்காலில் தரமான நாற்று உற்பத்தி, சொட்டு நீரில் கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், இயந்திர அறுவடை செய்வதற்குரிய தொழில்நுட்பங்கள், கரும்பு எண்ணிக்கை பராமரித்தல் பற்றி கூறினார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் கிருஷ்ணசாமி உழவன் செயலி பற்றி பற்றியும், ஆத்மா திட்டம் பற்றியும் கூறினார். பட்லூர் கோட்ட கரும்பு மேலாளர் அருள் முருகன் கரும்பில் பூச்சி நோய் கட்டுப்பாடு பற்றி கூறினார். இப்ப பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல், கரும்பு அபிவிருத்தி அலுவலர் அர்ஜுனன், மற்றும் பட்லூர் கரும்பு அலுவலர்கள் உட்பட 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கரூர் வள்ளுவர் அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு குறித்து தொழில் நுட்ப பயிற்சி நடை பெற்றது.
    • ஆடை வடிவமைப்புத்துறை பேராசிரியர் மரியா பெலிக்ஸ் மாணவர்களுக்கு நவநாகரீக தொழில் நுட்பம் குறித்தபயிற்சி அளித்தார்.

    கரூர் :

    கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் ஆடை வடிவமைப்புத்துறை சார்பில் நவநாகரீக தொழில் நுட்பம் குறித்த நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வள்ளுவர் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் வின்சென்ட் வரவேற்றார். ஆடை வடிவமைப்புத்துறை பேராசிரியர் மரியா பெலிக்ஸ் மாணவர்களுக்கு நவநாகரீக தொழில் நுட்பம் குறித்தபயிற்சி அளித்தார். இதில் ஆடை வடிவமைப்புத்துறை மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பின்னல் ஆடை மற்றும் நவநாகரீக ஆடைகளான டி&சர்ட், ஜீன்ஸ், சர்ட், லெகங்கா, சாய்வார், கிட்ஸ் வியர் மற்றும் ஹோம் டெக்ஸ்டைல்ஸ், நேப்கின், டவல், ஆப்ரூன், குர்தின் போன்றவற்றின் வரைபட விளக்கங்களும் மற்றும் போர்ட்பேர்லியோ உருவாக்கும் பயிற்சியையும் பயிற்றுவித்தார்.

    முடிவில் கல்லூரி ஆடை வடிவமைப்புத்துறை தலைவர் நதியா நன்றி கூறினார்.

    • அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி மாவட்ட அளவில் நடைபெற்றது.
    • சொட்டு நீர் பாசனத்தில் டிஸ்க், வடிகட்டி, மெயின், சப் மெயின் பைப்புகள், பக்கவாட்டு குழாய்கள், சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் அமில சிகிச்சை பற்றியும் நீர் வழி உரபாசனம் குறித்தும் விளக்கம் அளித்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ராமநாய்க்கன்பாளையம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி மாவட்ட அளவில் நடைபெற்றது.

    அட்மா திட்ட தலைவர் டாக்டர் செழியன் தலைமை வகித்தார்.வேளாண்மை உதவி இயக்குனர் ஜானகி (பொறுப்பு) முன்னிலை வகித்தார். மேலும் வேளாண்மை அலுவலர் கவுதமன் வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் செயல்படும் திட்டங்கள் மானியங்கள் குறித்து விளக்கமளித்தார்.

    சொட்டு நீர் பாசன நிறுவனத்தை சேர்ந்த சுந்தரேசன் சொட்டு நீர் பாசனத்தில் டிஸ்க், . வடிகட்டி, மெயின், சப் மெயின் பைப்புகள், பக்கவாட்டு குழாய்கள், சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் அமில சிகிச்சை பற்றியும் நீர் வழி உரபாசனம் குறித்தும் விளக்கம் அளித்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுமித்ரா, உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வி, திலகவதி மற்றும் பாலு, செல்வம், முன்னோடி விவசாயி ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியின் முடிவில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, உணவு வழங்கப்பட்டது.

    • தொழிற்நுட்ப பயிற்சியினை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • பூச்சியியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமார், பாதுகாப்பான முறையில் பூச்சி மற்றும் நோய்களுக்கான மருந்துகள் தெளிப்தற்கான தொழிற்நுட்பங்களை எடுத்துரைத்தார்.

    சாத்தான்குளம்:

    ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கும், பயிர் மருந்து தெளிப்பவர்களுக்கும் பாதுகாப்பான முறையில் பூச்சி மற்றும் நோய்களுக்கான மருந்துகளை தெளிப்பதற்கான தொழிற்நுட்ப மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி உடையார்குளம் கிராமத்தில் வைத்து திங்கட்கிழமை நடைபெற்றது.

    பயிற்சியினை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.உடையார்குளம் கிராமத் தலைவர் தேவராஜ் முன்னிலை வகித்தார்.

    வாகைகுளம் வேளாண் அறிவியல் மையம் பூச்சியியல் துறை தொழில்நுட்ப வல்லுநர் முத்துக்குமார், பாதுகாப்பான முறையில் பூச்சி மற்றும் நோய்களுக்கான மருந்துகள் தெளிப்தற்கான தொழிற்நுட்பங்களை எடுத்துரைத்தார். உழவியல்துறை வல்லுநர் முருகன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினார். இப்பயிற்சியில் தென்னங்கன்றுகள் நடவு முறை குறித்து செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜேசுதாசன், உதவி தொழில் நுட்ப மேலாளர் நளினி, சூசைமாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் தலா 40 விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.
    • காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் விற்பனை விபரங்கள் மற்றும் காளான் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் போன்ற விபரங்களை தெளிவாக கூறப்பட்டது.

    கொடுமுடி:

    கொடுமுடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருகிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் கொளத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரும்மாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் தலா 40 விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா தலைமையில் நடைபெற்றது. சிவகிரி கோவில்பாளையத்தில் செயல்பட்டு வரும் காளான் பண்ணையின் உரிமையாளர் இளங்கோ காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் விற்பனை விபரங்கள் மற்றும் காளான் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் போன்ற விபரங்களை தெளிவாக கூறினார்.

    விதை சான்று மற்றும் அங்கக சான்று துறையின் மூலம் விதை சான்று அலுவலர் ஹேமாவதி கலந்துக்கொண்டு அங்கக வேளாண்மை மற்றும் அங்கக சான்றுகள்வழங்கும் முறைகள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

    வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் அரவிந்த் கலந்து கொண்டு உழவர் சந்தை செயல்படும் முறைகள் உழவர் சந்தை அட்டைகள் பெறப்படும் முறைகள் மற்றும் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் தொழில்கள் பற்றிய விபரங்களை தெளிவாக எடுத்துரைத்தார்.

    உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜ் கலந்து கொண்டு துறையின் மானிய திட்டங்களை பற்றி விளக்கினர். தொழில்நுட்ப மேலாளர் கிருத்திகா கலந்து கொண்டு பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ×