search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bore well"

    • ஆழ் துளை கிணறு தண்ணீர் மூலம் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளது.
    • விவசாயிகள் தங்கள் வயல்களில் நடவு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி பகுதியில் ஆழ் துளை கிணறு தண்ணீர் மூலம் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளது.

    திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் ஆழ் துளை கிணறு வசதியுள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் சம்பா நடவு செய்ய தொடங்கி உள்ளனர்.நடப்பு ஆண்டு கால்வாய் பாசன வசதி பெறும் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ள முன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை.

    மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு மற்றும் வரத்து வெகுவாக குறைந்தது.இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக மூடப்பட்டது.

    மேட்டூர் அணையில் இருந்து குடி தண்ணீருக்கு மட்டும் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.காவிரி பாசனபகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் கேள்விக்குறியாகி விட்ட நிலையில், திருக்காட்டுபள்ளி பகுதியில் ஆழ் துளை கிணறு வசதியுள்ள விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு நாற்றங்கால் பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.

    இதிலும் முன்னதாக நாற்றுவிட்டு விவசாயிகள் தங்கள் வயல்களில் நடவு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    வடகிழக்கு பருவமழை நல்ல நிலையில் பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் சரிவு காணாமல் சரியாக சாகுபடி மேற்கொள்ள முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    • ஆழ்துளை கிணறு விபத்து தடுப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • பல வேளைகளில் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள பராமரிப்பு இல்லா மல் கைவிடப்பட்ட நிலை யில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குவாரிக்குழி கள் போன்றவை மனிதர்க ளுக்கு குறிப்பாக குழந்தை களுக்கு பெரிய அச்சுறுத்த லாக உள்ளன. இதனால் பல வேளைகளில் உயிரிழப்பு களும் நிகழ்கின்றன. இதைத் தவிர கால்நடைகள் உள்ளிட்ட பிற உயிர்க ளுக்கும் இவ்வகையான கிணறுகள் அச்சுறுத்தலாக உள்ளன.

    ஆழ்துளை கிணறு விபத்துக்களை தடுப்ப தற்கான பாதுகாப்பு வழி காட்டு நெறி முறைகளை 2010-ம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் வகுத்தளித்தி ருக்கிறது. அந்த வழிகாட்டி நெறி முறைகள் அனைத்தை யும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்டங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள பசுமை நிதி மாவட்டக் கனிம நிதி ஆகிய நிதி ஆதாரங்களைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

    திறந்த வெளிகிணறுகள், ஆழ்துளை கிணறுகள், சாலையோர கட்டுமான பள்ளங்கள், சாலையோர கால்வாய்கள், கைவிடப் பட்ட குவாரி கிடங்குகள் ஆகியவற்றில் விபத்து ஏற்படாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக தலைமை செயலரும் ஆலோசனை வழங்கி உள்ளார்.

    அந்த ஆலோசனையின் படி அனைத்து கிராமங்க ளிலும் உள்ள திறந்த வெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், சாலையோரங்க ளில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள், ஆழமான கால்வாய்கள் ஆகியவை குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அவற்றில் அந்தந்த துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விபத்து தடுப்பு நடவடிக்கை கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் வசதி பெற்றிட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • பணியினை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி குட்பட்ட மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் வடக்கு பனவடலிசத்திரம் கிராமத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் வசதி பெற்றிட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணியினை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், வடக்குபனவடலி ஊராட்சி மன்ற தலைவர் முத்து லட்சுமி, அவைத்தலைவர் பரமையா, மாவட்ட பிரதி நிதி சண்முகப்பாண்டியன், செந்தூர்பாண்டியன், கிளை செயலாளர்கள் முத்துராம லிங்கம், நவமணி, முருகன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி காசிப்பாண்டியன், வக்கீல் சதீஷ்குமார் இளைஞர் அணி மனோஜ், ஜெயக்குமார், திலீப், மகேந்திரன், வர்த்தக அணி கார்த்திக், திலீப்குமார், விளையாட்டு அணி கவாஸ்கர், வண்ணம் பொட்டல் பால்ராஜ், ஒப்பந்த தாரர் தாமஸ் பாண்டியன், கலை இலக்கிய அணி வெள்ளத்துரை, தொண்டரணி பழனிவேல் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் கோவிலுக்கு எண்ணற்ற வருவாய் கிடைத்தது.
    • தமிழக அரசும் அறநிலையத்துறையும் சிந்திக்க வேண்டும்.

    திருப்பூர் :

    கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களுக்கு ஏறத்தாழ 4 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளன. கோவில்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்தவும், செலவினங்களை ஈடு செய்யும் வகையிலும் இது போன்ற நிலங்கள் பயன்பட்டன. கொடை வள்ளல்கள், பக்தர்கள் கோவில் பெயருக்கு தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் கோவிலுக்கு எண்ணற்ற வருவாய் கிடைத்தது.

    இவற்றில் பெரும்பாலான நிலங்கள் பயன்பாடின்றி விடப்பட்டுள்ளன. இவ்வாறான நிலங்களில் ஆழ்துளை கிணறு மூலம் நீர் பாசன வசதி ஏற்படுத்தி இவற்றை குத்தகைக்கு விடுவதன் மூலம் அறநிலையத்துறையின் வருவாய் பெருகும். மேலும் பாசன வசதி கிடைப்பதால் விவசாயிகளும் ஆர்வத்துடன் விவசாயம் மேற்கொண்டு வேளாண் உற்பத்தியை பெருக்குவார்கள். அரசுக்கு கூடுதல் வருவாய், வேலை உற்பத்தி அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பெருகுதல் என்பது உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். எனவே இது குறித்து தமிழக அரசும் அறநிலையத்துறையும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ஒன்றியம் கொடுமாம்பள்ளி ஊராட்சியில் கடும் குடிநீர் பஞ்சம் உள்ளதாகவும் அங்கு ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    அவர்களது கோரிக்கையை ஏற்று ஒன்றிய கவுன்சிலர் டாக்டர் திருப்பதி பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி கொடுமாம் பள்ளி ஜவ்வாது மலை செல்லும் சாலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுதா திருநாவுக்கரசு தலைமை வகித்தார், அனைவரையும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நந்தகுமார் வரவேற்றார் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் விஜயா அருணாச்சலம், ஒன்றிய கவுன்சிலர் டாக்டர் திருப்பதி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி வில்வம் உட்பட ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • 14 லட்சம் மதிப்பிலான புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செ ல்வம் பரிந்துரைத்தார்.
    • ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை நேற்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    கடலூர்:

    வடலூர் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தடையில்லா குடிநீர் வினியோகம் செய்வதற்கு பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு ஆபத்தாரணபுரம் கிழக்குத் தெருவில் என்.எல்.சி., சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செ ல்வம் பரிந்துரைத்தார்.

    அத ன்பேரில் பேரில் மாவட்டக் கல்விக் குழுத் தலைவரும் குறிஞ்சி ப்பாடி ஒன்றிய செயலா ளருமான சிவக்குமார் ஆகியோர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை நேற்று தொடங்கி வைத்து, பொதும க்களுக்கு இனி ப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சி யில் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்ச்செ ல்வன், 3வது வார்டு நகர மன்ற உறுப்பினர் இளவரசன், கிளைக் கழக செயலாளர் ஆனந்த ராஜன் மற்றும் நகரமன்ற உறுப்பி னர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • மனுவின்மீது விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாரவளர்ச்சி அலுவலர் கந்தசாமி தெரிவித்தார்.
    • உடுமலைஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.விடம் மனுகொடுக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலைஒன்றியம் செல்லப்பம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளைக்கிணறை சேதப்படுத்தி ஆழ்துளைகுழாய்களை உடைத்தெறிந்துள்ள சமூகவிரோத கும்பல்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நீர்வளமிக்க ஆழ்துளைக்கிணற்றை பயன்படுத்தி மக்களுக்கு தண்ணீர்விநியோகம் செய்திடவேண்டும் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் உடுமலைஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.விடம் மனுகொடுக்கப்பட்டது. இதில் சிபிஐ. எம்., செல்லப்பம்பாளையம் கிளைச்செயலாளர் பிரபுராம், உடுமலைஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ்,டிஓய்எப்ஐ. செயலாளர் தமிழ்த்தென்றல், மாதர்சங்க செயலாளர் சித்ரா, விவசாயிகள் சங்கதலைவர்கள் ராஜகோபால், பரமசிவம் ஆகியோர் பங்கேற்றனர். மனுவின்மீது விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாரவளர்ச்சி அலுவலர் கந்தசாமி தெரிவித்தார்.

    • 15 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கி அமைக்கப்படும் தொகுப்புக்கு, வேளாண்மை துறை விவசாயிகள் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்படுகிறது.
    • பாப்பாங்குளம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

    அவினாசி :

    அவிநாசி வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு கூறியதாவது:-

    அவிநாசி வேளாண்மை துறை சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டத்தின் கீழ் கடந்தாண்டு புதுப்பாளையம், செம்பியநல்லூர், சேவூர், பாப்பாங்குளம், ஆலத்தூர், பழங்கரை, நம்பியாம்பாளையம் என 7 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில், 15 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கி அமைக்கப்படும் தொகுப்புக்கு, வேளாண்மை துறை விவசாயிகள் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்படுகிறது.அதன்படி பாப்பாங்குளம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, புதுப்பாளையம் கிராமத்திலும் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சார்பில் வெள்ளாற்றின் நடுவே ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி சார்பில் வெள்ளாற்றின் நடுவே ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது. இந்த கிணறு கடலூர் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட உள்ளதாக கூறி, அரங்கூர் பொதுமக்கள் நேற்று காலை ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி, அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். 

    இது குறித்து தகவலறிந்து வந்த ராமநத்தம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இந்நிலையில் பொதுமக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாகவும், ஏற்கனவே அதே பகுதியில் இரண்டு ஆழ்துளை கிணறு உள்ளதாகவும், மீண்டும் 3-வது முறையாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
    திருப்பாலைக்குடி கிராமத்தில் உள்ள குடிநீர் பற்றாக்குறையினை சரிசெய்திடும் வகையில் ரூ.23.05 லட்சம் மதிப்பில் 1300 அடியில் ஆழ்குழாய் அமைப்பதற்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களின் குறைகளை கேட்ட கலெக்டர் அதிகாரிகளை அழைத்து மனுவில் குறிப்பிட்ட தேதிக்குள் குறைகளை தீர்க்க உத்தரவிட்டார். பொதுமக்களிடமிருந்து மொத்தம் 267 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகையாக தலா ரூ.17 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.51 ஆயிரத்துக்கான காசோலைகளையும், சமூகநலத்துறையின் சார்பில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகையாக 6 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1,85,157-க்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    ராமேசுவரம் வட்டம், தங்கச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியா என்பவரின் மகன் பூண்டிராஜ் என்ற மீனவர் படகு மோதிய விபத்தில் தனது இடது கை இழந்தமைக்காக அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையினையும், வருவாய்த்துறையின் சார்பில் நலிந்த கலைஞர்களுக்கு மாத உதவித்தொகையாக 9 பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1,08,000க்கான காசோலைகள் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.3,94,157 மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து, கடந்த 5-ந் தேதியன்று திருப்பாலைக்குடிக்கு சென்ற கலெக்டரிடம் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதனை பரிசீலித்த கலெக்டர் திருப்பாலைக்குடி கிராமத்தில் உள்ள குடிநீர் பற்றாக்குறையினை சரிசெய்திடும் வகையில் ரூ.23.05 லட்சம் மதிப்பில் 1300 அடியில் ஆழ்குழாய் அமைப்பதற்கான ஆணையினை வழங்கினார். இந்த பணிக்கு கிராம பொது மக்களும் தாமாகவே முன் வந்து ரூ.7 லட்சத்தினை மக்கள் பங்களிப்பாக செலுத்தினர்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்சி லீமாஅமாலினி, மகளிர் திட்ட இயக்குநர் குருநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    கோட்டைப்பட்டினம் பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என்று கலெக்டர் கணேஷ் உறுதி அளித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கொடிக்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, 283 பயனாளிகளுக்கு ரூ.42 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

    கோட்டைப்பட்டினம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து 2 ஆயிரம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 800 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட உள்ளது. அவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வருவாய்த்துறையின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    கோட்டைப்பட்டினம் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க 1,200 அடி வரை ஆழ்துளை போட வேண்டியது உள்ளது. மாவட்டத்தின் மற்ற இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க சுமார் ரூ.6 லட்சம் செலவு ஆகும். ஆனால் கோட்டைப்பட்டினம் பகுதியில் முறையாக ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 லட்சம் செலவாகிறது. 

    அப்போதுதான் 30 ஆண்டுகளுக்கு குறையாமல் பயன்படுத்தும் வகையில் ஆழ்துளை கிணறு அமையும். கோட்டைப்பட்டின அனைத்து பகுதி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும். இந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அறந்தாங்கியில் இருந்து வரும் பஸ்கள் கோட்டைப்பட்டினம் வரை வந்து செல்ல ஏதுவாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பகுதி பள்ளிகளுக்கு தேவையான கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×