ரூ.5 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு

திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ரூ.5 லட்சம் செலவில் புதிய ஆழ்துளை கிணறு
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் ஒன்றியம் கொடுமாம்பள்ளி ஊராட்சியில் கடும் குடிநீர் பஞ்சம் உள்ளதாகவும் அங்கு ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

அவர்களது கோரிக்கையை ஏற்று ஒன்றிய கவுன்சிலர் டாக்டர் திருப்பதி பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி கொடுமாம் பள்ளி ஜவ்வாது மலை செல்லும் சாலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுதா திருநாவுக்கரசு தலைமை வகித்தார், அனைவரையும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நந்தகுமார் வரவேற்றார் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் விஜயா அருணாச்சலம், ஒன்றிய கவுன்சிலர் டாக்டர் திருப்பதி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி வில்வம் உட்பட ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com