search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar number"

    • ரூ.2000/- நிதியானது ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • அஞ்சல் அலுவலகத்திலும், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்.

    விழுப்புரம்:

    பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2000/- நிதியானது ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது மத்திய அரசு 14-வது தவணைத் தொகை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி ஜூலை மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணை தொகைகளும் பயனாளிகளின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலகத்திலும், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் ஆதார் எண்ணை பதிவு செய்து மற்றும் ஆதார் கார்டில் முகவரி மாற்றம், செல்போன் எண் இணைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் செய்து தர உள்ளனர். எனவே விவசாயிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆதார் எண்ணை பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் விவசாய நிதி உதவித்தொகை விவ சாயிகளுக்கு வங்கிக்க ணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
    • மத்திய அரசு வரும் ஜூலை மாதத்தில் 14-வது தவணை நிதியை விவசாயிகள் பெறுவதற்கு ஒரு அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்கு னர் ராதாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் விவசாய நிதி உதவித்தொகை விவ சாயிகளுக்கு வங்கிக்க ணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு வரும் ஜூலை மாதத்தில் 14-வது தவணை நிதியை விவசாயிகள் பெறுவதற்கு ஒரு அறிவிப்பை வெளி யிட்டுள்ளது.

    அதன்படி, இதுவரை தங்களுடைய சரியான ஆதார் எண்ணை இணைக்காத, ஆதார் விடுபட்டுப்போன பிரதம மந்திரி கிசான் திட்ட விவசாயிகள் வருகிற 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவ லகத்தில் தபால்துறை அலுவலர்களால் நடத்தப்ப டும் சிறப்பு முகாமிற்கு விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை, ஆதார் அட்டை யுடன் இணைக்கப்பட்ட செல்போன், முகவரி மாற்றம் இருப்பின் அதற்கான சான்று ஆகிய வற்றுடன் நேரில் வந்து விவசாயிகள் தங்களது விபரங்களை சரி பார்த்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
    • 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர்.

    தாராபுரம் :

    வாக்காளர் பட்டியலை முறைப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் முதல் வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு தொடங்கியது.

    'Voter Help Line' செயலி, nvsp.in என்கிற தேர்தல் கமிஷன் இணையதளம் வாயிலாக ஆதார் எண் இணைக்க வழிவகை செய்யப்பட்டது. வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்றபோது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விவரங்களை பெற்றனர். ஆதார் இணைப்புக்கு இந்திய தேர்தல் கமிஷன் அளித்த கால அவகாசம் கடந்த மார்ச் 31ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர் உள்ளனர். இவர்களில் இதுவரை 55.84 சதவீதம் பேர் அதாவது 12 லட்சத்து 90 ஆயிரத்து 837 பேர் மட்டுமே ஆதார் எண் இணைத்துள்ளனர்.வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் 36.13 சதவீதத்துடன் திருப்பூர் வடக்கு தொகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர் 3.84 லட்சம் பேரில் 1.38 லட்சம் பேர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர். பல்லடம் தொகுதியில் 52.13 சதவீதம் பேர், திருப்பூர் தெற்கில் 53.80 சதவீதம் பேர் ஆதார் இணைத்துள்ளனர். ஆதார் இணைப்பு விகிதத்தில் மடத்துக்குளம், உடுமலை தொகுதிகள் முந்துகின்றன.

    2.29 லட்சம் வாக்காளரில் 1.58 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இதனால் 69.04 சதவீதத்துடன் ஆதார் இணைப்பில் மடத்துக்குளம் முன்னிலை வகிக்கிறது. உடுமலையில் 63.21 சதவீதம், தாராபுரத்தில் 62.68,அவிநாசியில் 61.47, காங்கயத்தில் 60.76 சதவீத வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.போலிகளை களைந்து செம்மையான வாக்காளர் பட்டியல் உருவாக வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு மிகவும் அவசியமாகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் மொத்த வாக்காளரில் 44 சதவீதம் அதாவது 10.20 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண் இணைக்கவி ல்லை. தேர்தல் கமிஷன், ஆதார் இணைப்புக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி 100 சதவீத ஆதார் இணைப்பை எட்ட செய்யவேண்டும் என்பது பெரும்பாலான அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிசிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆதார் எண் விவரங்கள் படிவம்-6பி-ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனர்.

    இந்த வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் போதிய முன்னேற்றம் காணப்படாததால், பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை படிவம் 6-பி இணைத்துக் கொள்ளலாம். மேலும், ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள், அவர்கள் படிவம்-6பி-ல் குறிப்பிடப்பட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை அளித்து அட்டையுடன் இணைக்கலாம். எனவே, இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு எண்களுடன் ஆதார் இணைக்கும் பணி 100 சதவீதம் முடிவடைந்தது.
    • 7 கோட்டங்களை சேர்ந்த பணியாளர்கள் வாயிலாக ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வந்தது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண் இணைக்கும் பணி 100 சதவீதம் முடிவடைந்தது.

    11 லட்சம் மின் இணைப்பு

    தமிழகத்தில் அதிகமான மின் நுகர்வோர்களை கொண்ட நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மொத்த வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளின் எண்ணிக்கை 11 லட்சத்து 59 ஆயிரத்து 722 ஆகும்.

    கடந்த நவம்பர் மாதம் முதல் நெல்லை கிராமப்புற கோட்டம், நகர்ப்புற கோட்டம், தென்காசி கோட்டம், சங்கரன்கோவில் கோட்டம், கடையநல்லூர் கோட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம், வள்ளியூர் கோட்டம் ஆகிய 7 கோட்டங்களை சேர்ந்த அனைத்து நிலை பணியாளர்கள் வாயிலாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வந்தது.

    புதுப்பிக்கும் பணி

    இந்த பணி தொடங்கிய நாள் முதல் தற்போது வரை முழு ஒத்துழைப்பு வழங்கி பொதுமக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு மின்வாரியம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைந்த பிறகு மின் நுகர்வோர் புதிதாக வீடு மாறினாலும், சொந்தமாக வீடு வாங்கினாலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை புதுப்பித்துக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    • ஆதாரை இணைக்க கடந்த டிசம்பர் மாதம் வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.
    • 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

    15-ந் தேதி வரை நீட்டிப்பு

    இதற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆதாரை இணைக்க கடந்த டிசம்பர் மாதம் வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் ஜனவரி 31-ந் தேதி வரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேற்ப ட்டோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத் துள்ளனர். இன்னும் குறைந்த அளவிலான பொது மக்களே ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது.

    இதனை தொடர்ந்து வருகிற 15-ந் தேதி வரை இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் மீதி உள்ளவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.

    100 சதவீதம் நிறைவு

    நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் ஆதார் இணைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி கூறியபோது, நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 114 மின் நுகர்வோர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று 31-ந் தேதி வரை தங்கள் ஆதார் எண்களை 100 சதவீதம் இணைத்துள்ளனர்.

    இதற்காக பணியாற்றிய ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

    • 100 சதவிகித பணியை முழுமையாக செய்து முடித்த உலகம்பட்டி கிராம உதவியாளர் பஞ்சு அனைவரின் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளார்.
    • தேசிய வாக்காளர் தினத்தில் புதிதாக இணைக்கப்பட வேண்டிய வாக்காளர்களை ஒருங்கிணைத்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் விதமாக கல்லூரி மாணவிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி புனித செயின்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். இதில் மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் மார்க்ரெட் பாஸ்டின் முன்னிலை வகித்தார். தேசிய வாக்காளர் தினத்தில் புதிதாக இணைக்கப்பட வேண்டிய வாக்காளர்களை ஒருங்கிணைத்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் விதமாக கல்லூரி மாணவிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

    கூட்டத்தின்போது வட்டார அளவில் நடத்தப்பட்ட தேசிய வாக்காளர் தினம் சம்பந்தமான பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, பாடல் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களில் 100 சதவிகித பணியை முழுமையாக செய்து முடித்த உலகம்பட்டி கிராம உதவியாளர் பஞ்சு, தனக்கு ஒதுக்கப்பட்ட பாகம் எண்.28-ல் உள்ள வாக்காளர்கள் அனைவரின் ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளார். அவருக்கு பாராட்டு சான்றிதழை வட்டாட்சியர் சாந்தி வழங்கினார். அவருடன் இணைந்து சிறப்பாக பணிபுரிந்த இதர அலுவலர்கள் 15 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது

    இதில் மண்டல துணைதாசில்தார் சிவராமன், தேர்தல் பணி தாசில்தார் சந்திரபோஸ், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர், மற்றும் கல்லுாரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
    • இன்று காலை வரை சிறப்பு முகாம்கள் மற்றும் இணையதளம் மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை 9 லட்சத்து 40 ஆயிரத்து 944 பேர் இணைத்துள்ளனர்

    நெல்லை:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

    சிறப்பு முகாம்கள்

    கூட்ட நெரிசலை தவிர்க்கவும், எளிதாக ஆதார் எண்ணை இணைப்பதற்காகவும் பல்வேறு இடங்களில் மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைத்து வருகிறார்கள்.

    நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் வருகிற 31-ந் தேதி வரை நடத்தபட உள்ளது.

    81 சதவீதம் பேர்

    பொங்கல் பண்டி கையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக கடந்த 3 நாட்க ளாக சிறப்பு முகாம்கள் நடத்தப் படவில்லை. இந்நிலையில் இன்று மீண்டும் சிறப்பு முகாம் தொடங்கியது.

    இதில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்தனர்.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 57 ஆயிரத்து 465 மின் நுகர்வோர்கள் உள்ளனர். இன்று காலைவரை சிறப்பு முகாம்கள் மற்றும் இணையதளம் மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை 9 லட்சத்து 40 ஆயிரத்து 944 பேர் இணைத்துள்ளனர். இது 81.21 சதவீதமாகும். 

    • பிரதமரின் வேளாண் திட்டத்தில் 13-வது தவணை பெறுவதற்கு செல்போன், ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் இன்றும், நாைளயும் நடக்கிறது.
    • இது தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நேரடியாக சந்தித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பி.எம்.கிஷான் திட்டம் எனப்படும் பிரதரின் கவுரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான இடு பொருள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணை களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது 13-வது தவணை விரைவில் விடுவிக்கப்படவுள்ளது. 13-வது தவணை பணம் வரவு வைப்பதற்கு விவசாயிகள் தங்கள் கைபேசி எண்ணை ஆதார் அட்டையுடன் இணைத்து ekyC பதிவேற்றம் செய்தால் மட்டுமே நிதியுதவி கிடைக்கும்.

    முதுகுளத்தூர் வட்டாரத்தில் 2100 விவசாயிகளுக்கு eKYC இதுவரை செய்யப்படாமல் உள்ளது. கிராமங்கள் தோறும் இது தொடர்பான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நேரடியாக சந்தித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ekyC மூலம் கைபேசி எண்ணை இணைக்கும் பணியை பொது இ-சேவை மையங்கள் மற்றும் அஞ்சலகங்களில் மேற்கொள்ளலாம். விவசாயிகளுக்கு 13-வது தவணையை பெற்று வழங்குவதற்காக eKYC செய்து முடிக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஏதுவாக இன்றும், நாைளயும்(19, 20-ந்தேதிகளில்) முதுகுளத்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் eKYC செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    முதுகுளத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் மானியங்களை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
    • 14-ந் தேதியில் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.

    சென்னை :

    வங்கி கணக்கு தொடங்குவதில் இருந்து அரசின் பல்வேறு திட்டங்களுக்கு 'ஆதார்' எண் கட்டாயமாக உள்ளது.

    குறிப்பாக மத்திய அரசின் மானியங்களை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

    மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அரசின் சலுகைகளை பெற ஆதார் கட்டாயம் என்று அறிவித்துள்ளன.

    தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டது.

    இங்கு பொதுமக்கள் சென்று ஆதார் எண்ணை இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் அரசின் அனைத்து நிதி உதவி திட்ட பயன்கள், சலுகைகள், மானியங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தத்தின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆதார் ஒழுங்குமுறை சட்டப்படி, தமிழ்நாடு மின்னாளுமை முகமையுடன் கருவூலக் கணக்குத் துறை இணைந்து செயல்படுகிறது. கருவூலக் கணக்குத் துறை, சம்பளம், ஓய்வூதியம் வழங்கல் மற்றும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தை ஆன்லைன் மூலம் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சம்பளப் பட்டியல் தயாரிப்பு, மாத ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் மத்திய அரசின் சட்டத்தின் கீழ், மானியங்கள் உள்ளிட்ட நிதி சேவைகளைப் பெற்று வரும் பயனாளிகள் இனி தங்களது ஆதார் எண் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கருவூலக் கணக்குத் துறை செயல்படுத்தும் திட்டங்களினால் பயன்பெறக் கூடிய பயனாளிகள் தங்களது ஆதார் விவரங்களை அளிப்பது அவசியமாகிறது.

    இந்த திட்டங்களின் பலனை அடைய விரும்புகிறவர் யாருக்கும் ஆதார் எண் இல்லை என்றால் அவர்கள் இனி ஆதார் எண்ணை பெற விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆதார் எண் அளிக்கப்படுவதற்கு முன்பே திட்டத்தின் பயனைக் கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணுக்காக பதிவு செய்துள்ளதற்கான அடையாள சீட்டுடன், வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு புத்தகம், பான் அட்டை, பாஸ்போர்ட்டு, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு அட்டை, வேளாண்மை கணக்கு அட்டை, ஓட்டுநர் உரிமம், 'கெசட்டட்'அலுவலர் அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று, அரசுத் துறை அளிக்கும் ஏதாவது ஒரு சான்று ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைத்து அளிக்க வேண்டும்.

    திட்ட பயனாளியின் ஆதார் அங்கீகாரத்தை பெறுவதற்கான கை விரல் ரேகை பதிவு சரிவர செயல்படாவிட்டால் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முகப்பதிவு போன்ற அடையாளப் பதிவை மேற்கொள்ளலாம். அல்லது, ஆதார் ஓடிபி முறையிலும் முயற்சி மேற்கொள்ளலாம்.

    இவை எதுவுமே செயல்படாத நிலையில், ஆதார் கடிதத்தை கொடுத்து அதிலுள்ள கியுஆர் கோட் மூலம் அடையாளத்தை சரிபார்த்து பயனை அளிக்கலாம். அதன்படி பயனாளிகளுக்கு பயனை வழங்கும் அனைத்து வகையான முறைகளையும் பின்பற்ற கருவூலக் கணக்குத் துறை தயாராக இருக்க வேண்டும்.

    திட்டத்தின் பயனாளி குழந்தைகளாக இருந்தால், அவர்களும் ஆதார் நம்பரை வழங்க வேண்டும். அவர்களிடம் ஆதார் எண் இல்லாவிட்டால், ஆதார் நம்பரை பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான பாதுகாவலர் மூலம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆதார் எண் கிடைக்கும் வரை, ஆதாருக்கு விண்ணப்பித்ததற்கான சான்று அல்லது பிறப்புச்சான்று, பள்ளித் தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பெற்றோர் பெயர்கள் அடங்கிய பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம்.

    இதுதவிர, பயனாளியின் பெற்றோர், பாதுகாவலர்களுடனான உறவு குறித்த சான்றாக, பிறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை, முன்னாள் படைவீரர் என்பதற்கான அட்டைகள், ஓய்வூதிய அட்டை, படைவீரர் கேன்டீன் அட்டை உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம்.

    ஆதார் அங்கீகாரம் பெறுவதில், விரல் ரேகை பதிவில் சிக்கல் ஏற்பட்டால், முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் அங்கீகரிக்கலாம். அல்லது ஓடிபி மூலமாகவும் அங்கீகாரம் அளிக்கலாம். எதுவுமே சாத்தியப்படவில்லை என்றால், ஆதார் கடித கியூஆர் கோட் மூலம் அடையாளத்தை உறுதி செய்யலாம்.

    அடையாளம் காண முடியவில்லை என்ற காரணத்தினால் எந்த ஒரு குழந்தைக்கும் திட்டத்தின் பயன் மறுக்கப்பட்டுவிடக் கூடாது. பயனாளிக்கான தகுதி இல்லாத எவரும் திட்டத்தின் கீழ் பயன் பெறவில்லை என்பதை திட்டத்தை செயல்படுத்தும் துறைகள் உறுதி செய்ய வேண்டும். பயனாளி அளிக்கும் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின் சம்பந்தப்பட்ட திட்டத்தை செயல்படுத்தும் துறை அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். 14-ந் தேதியில் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடுமாவட்டம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 743 பேர் மின் இணைப்பில் ஆதார்எண்ணை இணைத்து உள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 28 ஆயிரத்து 774 மின்இணைப்புகள் உள்ளன. இவர்கள் மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்கும்வகையில் மாவட்டம் முழுவதும் 113 இடங்களில் மின்சாரவாரியம் சார்பில்சிறப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

    இது தவிர பல்வேறு இடங்களில் மின்வாரி ஊழியர்கள்வீடு, வீடாக சென்றும் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இ-சேவை மையங்களிலும் இந்த பணி நடந்து வருகிறது.

    ஈரோடுமாவட்டம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 743 பேர் மின் இணைப்பில் ஆதார்எண்ணை இணைத்து உள்ளனர்.

    இந்த பணிகளை மின்வாரிய அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து சிறப்பு மையங்கள் மற்றும்இ-ேசவை மையங்களில் மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க கூட்டம் அலைமோதி வருகிறது.

    • நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28-ந் தேதி முதல் 103 பிரிவு அலுவலகங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
    • பிரசார வாகனத்தை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி வள்ளியூர் பஸ் நிலையம் அருகில் தொடங்கி வைத்தார்.

    வள்ளியூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 28-ந் தேதி முதல் 103 பிரிவு அலுவலகங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணியனது 31. 12. 2022 வரை தொடர்ந்து நடைபெறும். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வள்ளியூர் கோட்டத்தில் வள்ளியூர் பிரிவு அலுவலகத்தின் சார்பாக பிரசார வாகன பேரணி தொடக்க விழா நடைபெற்றது.

    பிரசார வாகனத்தை நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி வள்ளியூர் பஸ் நிலையம் அருகில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் வள்ளியூர் கோட்டம் வளன்னரசு, வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பிரசார வாகனமானது வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    ×