search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் எண் இணைப்பு"

    • வாடகைக்கு குடியிருப்போர் ஒரு சிலர்தான் ஆதார் எண்களை கொடுத்தனர்.
    • வாடகைதாரர்கள் ஆதார் எண்களை இணைப்பதால் வீட்டின் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை விளக்க வேண்டும் என்று வீட்டின் உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 2.68 கோடி மின் நுகர்வோரையும் ஆதாருடன் இணைக்கும் திட்டம் கடந்த 3 மாதமாக நடந்து முடிந்துள்ளது.

    மின் இணைப்புடன் ஆதார் எண்கள் இணைக்க அரசு 3 முறை கால அவகாசம் கொடுத்து கடந்த மாதம் 25-ந் தேதியுடன் அவகாசம் முடிந்தது. சுமார் 50 ஆயிரம் பேர் தவிர, 99 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்.

    வீட்டின் உரிமையாளர்களே பெரும்பாலும் தங்களது வாடகை வீடுகளுக்கும் ஆதார் எண்களை கொடுத்து இணைத்தனர். ஒருவருக்கு சொந்தமாக 5 வீடுகள் இருந்தால் அனைத்திற்கும் வீட்டின் உரிமையாளர் ஒருவரின் ஆதார் எண்களை பெரும்பாலும் இணைத்தனர். வாடகைக்கு குடியிருப்போர் ஒரு சிலர்தான் ஆதார் எண்களை கொடுத்தனர்.

    இந்த நிலையில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களின் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று தற்போது புதிய சர்ச்சையை கிளப்பு உள்ளனர். வாடகை வீடுகளுக்கும் வீட்டின் உரிமையாளர் கொடுத்த ஆதார் எண்களை ஏற்காமல் தற்போது வாடகை தாரர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

    மின்வாரிய அதிகாரிகளுக்கு இந்த பணியை செய்து முடிக்க வேண்டும் என கூறப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் மீண்டும் மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாக ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வீட்டின் உரிமையாளரா, வாடகைதாரரா என கேள்வி கேட்டு வாடகை தாரராக இருந்தால் அந்த வீட்டின் மின் இணைப்புடன் அவரின் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

    அவசர அவசரமாக ஆதார் எண்களை இணைக்க முயன்றபோது இதனை தனித்தனியாக மேற்கொண்டு இருக்கலாம்.

    வீட்டின் உரிமையாளர் குடியிருக்கும் வீட்டிற்கு அவரது ஆதார் எண்ணை மட்டும் இணைத்து இருக்கலாம். ஆனால் அப்போது வீட்டின் உரிமையாளரே அனைத்து வாடகை வீட்டிற்கும் தனது ஆதார் எண்ணை கொடுக்கலாம் எனக் கூறி இணைத்தனர்.

    இப்போது மீண்டும் வாடகைதாரர்களின் ஆதார் எண்களை கேட்டு வருகிறார்கள். இது வீட்டின் உரிமையாளர்களுக்கும் வாடகைக்கு குடியிருப்போருக்கும் பல சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறது என்று ஆதங்கப்படுகிறார்கள்.

    ஆதார் எண்கள் எந்த நோக்கத்திற்காக இணைக்கப்படுகிறது என்பதை மின்வாரியம் இது வரையில் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில் தற்போது வாடகைதாரர்கள் ஆதாரை இணைக்கும் பணி வீதி வீதியாக நடந்து வருகிறது. வாடகைதாரர்கள் ஒரு வீட்டில் எத்தனை ஆண்டுகள் குடியிருப்பார்கள். எத்தனை மாதங்கள் குடியிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இடம் மாறி சென்று கொண்டே இருந்தால் இந்த புள்ளி விவரம் முழுமை அடைய வாய்ப்பு இல்லை.

    எனவே, மின்வாரியம் இதுபற்றி தெளிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். வாடகைதாரர்கள் ஆதார் எண்களை இணைப்பதால் வீட்டின் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பதை விளக்க வேண்டும் என்று வீட்டின் உரிமையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    • மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
    • மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நவம்பரில் தொடங்கியது.

    திருப்பூர் :

    வீடு, விசைத்தறி, குடிசை, கைத்தறி, விவசாயம்ஆகிய 5 வகை மின் இணைப்புகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் 25 லட்சத்து 88 ஆயிரத்து 195 மானிய வகை மின் இணைப்புகள் உள்ளன.மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நவம்பரில் தொடங்கியது. 2முறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் நாளை 15ந்தேதியுடன் அவகாசம் முடிவடைகிறது. இன்னும் இரு நாட்களே மீதியுள்ள நிலையில் இதுவரை இணைக்காதவர்கள் ஆன்லைன் வாயிலாகவோ, மின் வாரிய அலுவலகங்களிலோ உடனடியாக இணைக்க, மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • புத்தக கண்காட்சியிலும்கூட வாக்காளர் - ஆதார் இணைப்பு விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
    • வாக்காளர் ஒவ்வொருவரும் ஆதார் இணைப்பில் ஆர்வம்காட்டவேண்டும்.

    திருப்பூர் :

    வாக்காளர் பட்டியலை ஒழுங்குபடுத்தும் வகையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 23 லட்சத்து 25 ஆயிரத்து 30 வாக்காளர் உள்ளனர்.ஆதார் இணைப்பில் திருப்பூர் மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் உள்ளது. மொத்த வாக்காளர்களில் இதுவரை 52.30 சதவீதம் பேர், அதாவது 12 லட்சத்து 16 ஆயிரம் வாக்காளர்களே, ஆதார் எண் இணைத்துள்ளனர்.வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் மாவட்டத்தில் கிராம பகுதிகள் முன்னிலையிலும் நகர பகுதிகள் பின்தங்கிய நிலையிலும் உள்ளன.

    66.14 சதவீதத்துடன் ஆதார் இணைப்பில், மடத்துக்குளம் தொகுதி முதலிடம் வகிக்கிறது. 60.08 சதவீதத்துடன் உடுமலை இரண்டாமிடத்தில் உள்ளது. 59.38 சதவீதத்துடன் அவிநாசி, 59.13 சதவீதத்துடன் தாராபுரம், 58.15 சதவீதத்துடன் காங்கயம் தொகுதிகள் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.நகர பகுதிகளான திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதிகள், வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் உள்ளன.

    திருப்பூர் வடக்கு தொகுதியில் மொத்த வாக்காளர் 3 லட்சத்து 83 ஆயிரத்து 938 பேரில் 1.32 லட்சம் பேர் (34.47 சதவீதம்) மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர். தெற்கு தொகுதியில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 800 வாக்காளர்களில் 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் (46.83 சதவீதம்),பல்லடத்தில் மொத்த வாக்காளர் 3 லட்சத்து 89 ஆயிரம் பேரில் 1.81 லட்சம் பேர் (46.77 சதவீதம்) மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர்.

    இது குறித்து தேர்தல் பிரிவினர் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பில் கிராம பகுதிகளே முன்னிலையில் உள்ளன. திருப்பூர் வடக்கு, பல்லடம், திருப்பூர் தெற்கு ஆகிய நகர பகுதி வாக்காளர் மத்தியில் ஆதார் இணைப்பு ஆர்வம் குறைவாகவே உள்ளது.

    இந்த மூன்று தொகுதிகளிலும் இடம்பெயரும் நிலையிலான தொழிலாளர் அதிகம் வசிப்பதே இதற்கு முக்கிய காரணம். வாக்காளர் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புத்தக கண்காட்சியிலும்கூட வாக்காளர் - ஆதார் இணைப்பு விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

    Voter Helpline செயலி, voterportal.eci.gov.in என் கிற இணையதளம் வாயிலாக, மிக சுலபமாக வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கலாம். வாக்காளர் ஒவ்வொருவரும் ஆதார் இணைப்பில் ஆர்வம்காட்டவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடுமாவட்டம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 743 பேர் மின் இணைப்பில் ஆதார்எண்ணை இணைத்து உள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 28 ஆயிரத்து 774 மின்இணைப்புகள் உள்ளன. இவர்கள் மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்கும்வகையில் மாவட்டம் முழுவதும் 113 இடங்களில் மின்சாரவாரியம் சார்பில்சிறப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

    இது தவிர பல்வேறு இடங்களில் மின்வாரி ஊழியர்கள்வீடு, வீடாக சென்றும் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இ-சேவை மையங்களிலும் இந்த பணி நடந்து வருகிறது.

    ஈரோடுமாவட்டம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 743 பேர் மின் இணைப்பில் ஆதார்எண்ணை இணைத்து உள்ளனர்.

    இந்த பணிகளை மின்வாரிய அதிகாரிகளும் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து சிறப்பு மையங்கள் மற்றும்இ-ேசவை மையங்களில் மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க கூட்டம் அலைமோதி வருகிறது.

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 19 லட்சத்து 45 ஆயிரத்து 856 வாக்காளர்கள் உள்ளனர்.
    • முகாமில் மொத்தம் 57,637 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர், பெருந்துறை ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 19 லட்சத்து 45 ஆயிரத்து 856 வாக்காளர்கள் உள்ளனர். வரும் ஜனவரி 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதனையடுத்து புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் போன்ற பணிகள் ஆன்லைனிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தேர்தல் பிரிவு அலுவலக–ங்களில் நடந்து வருகிறது.

    இது தவிர கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளிலும், இதுபோல் 26 மற்றும் 27-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மாவட்டத்தில் உள்ள 2,222 வாக்குச்சாவடி மையங்க ளில் வாக்காளர் சேர்தல், நீக்கல் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 43,958 விண்ணப்பங்கள் நேரில் பெறப்பட்டதாகவும், ஆன்லைன் மூலம் 13,679 விண்ணப்பங்கள் என மொத்தம் 57,637 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

    இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் கள விசாரணை செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இதையடுத்து வரும் ஜனவரி மாதம் 5-ந் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் 19 லட்சத்து 45 ஆயிரத்து 856 வாக்காளர்களில் இதுவரை 11 லட்சத்து 72 ஆயிரத்து 779 வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து ள்ளனர் என்றனர்.

    • வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து, பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கினர்.
    • வடக்கு தாசில்தார் கனகராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உடனிருந்தனர்.

    திருப்பூர்:

    தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி நடந்துவருகிறது. கடந்த 9-ந் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 11 லட்சத்து 42 ஆயிரத்து 432 ஆண் ,11 லட்சத்து 76 ஆயிரத்து 453 பெண்,324 திருநங்கை என மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 பேர் வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.வரும் டிசம்பர் 8-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் நடக்கிறது. பணிக்கு செல்வோர் வசதிக்காக 4 வார விடுமுறை நாட்கள் சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம் நடைபெற்றது.

    திருப்பூர் மாவட்டத்தில் 1,061 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.அதனால் முதல் நாள் முகாம் களைகட்டவில்லை. முதல் முகாம் நாளில் மொத்தம் 5,198 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2,819 பேர் முகாம் வாயிலாகவும், 2,379 பேர், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

    மொத்த விண்ணப்பத்தில் 52.15 சதவீதம் அதாவது, 2,711 பேர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6 வழங்கியுள்ளனர். இவர்களில் 1,944 பேர் முகாமிலும்,767 பேர் ஆன்லைனிலும் பெயர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர்.வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து, பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கினர்.

    திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மணி பப்ளிக் பள்ளி ஓட்டுச்சாவடி மையம், வடக்கு தொகுதியில் நெசவாளர் காலனி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கேத்தம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, குமரானந்தபுரம் மாநகராட்சி பள்ளிகளில் நடந்த முகாமை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.உதவி கலெக்டர் (பயிற்சி) பல்லவி வர்மா, வடக்கு தாசில்தார் கனகராஜ், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உடனிருந்தனர்.

    பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 6,719 பேர்,முகவரி மாற்றம் உட்பட பல்வேறு திருத்தங்களுக்காக 2,415 பேர், பெயர் நீக்கத்துக்கு 908 பேர் என ஞாயிற்றுக்கிழமை முகாமில் மொத்தம் 10,042 பேர் நேரடியாக விண்ணப்பித்தனர்.

    தொடர்ந்து வரும் 26, 27-ந் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர் பங்கேற்பர். குறிப்பாக பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இளம் வாக்காளர் ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.அதனால் அனைத்து மையங்களிலும் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6 தட்டுப்பாடு இன்றி வைத்திருக்கவேண்டும் என்பது அனைத்து கட்சியினரின் கோரிக்கையாக உள்ளது.

    18 வயது பூர்த்தியான, ஒவ்வொருவரையும் வாக்காளராக மாற்றும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவர்கள் காலேஜ் ரோடு, கொங்கணகிரி பகுதியில், 2 நாட்களாக நடந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம் குறித்து அப்பகுதியினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேராசிரியர்கள் விநாயகமூர்த்தி, அமிர்தராணி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

    அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் தலைமையில், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் வீடு வீடாக சென்று, 100 சதவீத ஓட்டுப் பதிவை உறுதி செய்ய, 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் தங்களது பெயரை இணைக்க வேண்டும். வயது பூர்த்தியான ஒவ்வொருவரையும் வாக்காளராக மாற்றும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதாரையும் இணைக்க வேண்டும். வரும் 26 மற்றும் 27 ம் தேதி ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் நீக்கம் செய்தல், பெயர் சேர்க்க, ஆதார் எண் இணைத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.தொடர்ந்து மாணவர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    • வீடு, வீடாக சென்று மேற்கொள்ளப்பட உள்ளது
    • கலெக்டர் அறிவிப்பு

    வேலூர்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று ஆதார் எண்ணை பெற்று இணைய வழியில் மொபைல் ஆப் மூலம் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 68 ஆயிரத்து 875 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் இதுவரை 6 லட்சத்து 36 ஆயிரத்து 737 வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    இப்பணியை விரைந்து முடிக்கும் பொருட்டு இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பு பணியாக அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதுவரை ஆதார் எண்ணை இணைக்காத பொதுமக்கள் இதனை பயன்படுத்தி இணைத்துக்கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • பொள்ளாச்சியில், 80 ஆயிரம் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
    • 20.52 சதவீத வாக்காளர்கள் இணைத்துள்ளனர்.

    கோவை, செப்.8-

    கோவை மாவட்டத்தில், 30 லட்சத்து, 21 ஆயிரத்து, 446 வாக்காளர்கள் உள்ள னர். இதில், 6 லட்சத்து, 20 ஆயிரத்து, 26 வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    இன்னும், 24 லட்சத்து, 1,420 வாக்காளர்கள் இணைக்க வேண்டியுள்ளது. மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் அதிகப ட்சமாக, பொள்ளாச்சியில், 80 ஆயிரம், வால்பாறையில், 75 ஆயிரம் வாக்காளர்கள், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    சிங்காநல்லுார் தொகுதியில் மிகவும் குறைவாக, 47 ஆயிரத்து, 282 வாக்காளர்கள் மட்டும் இணைத்துள்ளனர். மாவட்ட அளவில், 20.52 சதவீத வாக்காளர்கள் இணைத்துள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறும்போது,

    100 சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள் பெயர் நீக்கப்படுவதோடு, ஒருவருக்கே 2 பதிவு இருந்தால் காட்டிக் கொடுத்து விடும்.

    இதனால் வாக்காளர்கள் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடலாம். இன்னும் 6 மாதங்கள் அவகாசம் இருப்பதால், அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண்ணும் இணைத்து விடுவோம் என்றனர்.

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1- ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 18 வயது நிறைவடையும் வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, வாக்காளர் பட்டியலிடம் பெற்றுள்ள விபரங்களை உறுதி செய்வதற்காகவும் ஒரே வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தடுத்திடவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1- ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணினை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ள இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம்-6டீ-ஐ பூர்த்தி செய்து, தங்களது ஆதார் அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணினை இணைத்துகொள்ளலாம்.

    மேலும் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம். ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்வரும் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை அளிக்கலாம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்ட அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், இந்திய கடவுச்சீட்டு, வங்கி அஞ்சலகங்களின் புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம், தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாளச் சான்று, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவனங்கள் வரையறுக்கபட்ட பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணிக்கான அடையாள அட்டை, பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை, இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள அட்டை ஆகும்.

    மேலும் இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 01 ஆம் தேதியை தகுதியான நாளாக கொண்டு புதிய மற்றும் இளம் வாக்காளர் சேர்க்கையினை நடத்தி வருகிறது. இதனால் ஜனவரி 01-ம் தேதிக்கு பின்னர் 18 வயது நிறைவடைந்த வாக்காளர்கள், அடுத்த ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை காத்து இருந்து தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வந்தனர். இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-1, ஏப்ரல்-1, ஜுலை-1 மற்றும் அக்டோபர்-1 ஆகிய4 தகுதி தேதிகளை அடிப்படையாக கொண்டு வாக்காளர்கள் தங்களது பெயர்களை பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே மேற்படி தகுதி நாட்களில் 18 வயது நிறைவடையும் வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது

    ×