என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவை மாவட்டத்தில் 6 லட்சம் வாக்காளர்களின் ஆதார் எண் இணைப்பு
- பொள்ளாச்சியில், 80 ஆயிரம் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
- 20.52 சதவீத வாக்காளர்கள் இணைத்துள்ளனர்.
கோவை, செப்.8-
கோவை மாவட்டத்தில், 30 லட்சத்து, 21 ஆயிரத்து, 446 வாக்காளர்கள் உள்ள னர். இதில், 6 லட்சத்து, 20 ஆயிரத்து, 26 வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இன்னும், 24 லட்சத்து, 1,420 வாக்காளர்கள் இணைக்க வேண்டியுள்ளது. மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் அதிகப ட்சமாக, பொள்ளாச்சியில், 80 ஆயிரம், வால்பாறையில், 75 ஆயிரம் வாக்காளர்கள், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
சிங்காநல்லுார் தொகுதியில் மிகவும் குறைவாக, 47 ஆயிரத்து, 282 வாக்காளர்கள் மட்டும் இணைத்துள்ளனர். மாவட்ட அளவில், 20.52 சதவீத வாக்காளர்கள் இணைத்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறும்போது,
100 சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள் பெயர் நீக்கப்படுவதோடு, ஒருவருக்கே 2 பதிவு இருந்தால் காட்டிக் கொடுத்து விடும்.
இதனால் வாக்காளர்கள் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடலாம். இன்னும் 6 மாதங்கள் அவகாசம் இருப்பதால், அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண்ணும் இணைத்து விடுவோம் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்