search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 state election"

    • காங்கிரஸ் தலைவர் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • பாஜக-விடம் காவல்துறை, பணம் மற்றும் நிர்வாகம் உள்ளது என கமல்நாத் விமர்சனம்.

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் மத்திய பிரதேச மாநில தலைவரும், முன்னாள் முதல்வரும், சிந்த்வாரா தொகுதி வேட்பாளருமான கமல்நாத் கூறுகையில் "ஒட்டுமொத்த மாநில மக்களும் உண்மையின் பக்கம் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பொதுமக்கள், வாக்காளர்களை நான் நம்புகிறேன். நாங்கள் வெற்றி பெறுவோம், நாங்கள் அதிக இடங்களை பிடிப்போம் என சொல்வதற்கு, நான் சிவராஜ் சிங் அல்ல. இடங்களின் எண்ணிக்கையை பொதுமக்கள் முடிவு செய்வார்கள்.

    பாஜக-விடம் காவல்துறை, பணம் மற்றும் நிர்வாகம் உள்ளது. இன்னும் சில மணி நேரங்களுக்கு அது அவர்களிடம் இருக்கும். நேற்று எனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்தன. யாரோ ஒருவர் எனக்கு மது மற்றும் பணம் விநியோகிக்கப்படுவதைக் காட்டும் வீடியோவை அனுப்பி வைத்திருந்தார்" என்றார்.

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், கமல்நாத் முதல்வராக வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதலமைச்சராக பதவி ஏற்றார். உள்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.-க்கள் பிரிந்து சென்றதால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் நேற்று மாலையுடன் தலைவர்கள் பிரசாரம் முடிவடைந்தது.
    • சத்தீஸ்கரில் கடந்த 7ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது.

    அதன்படி, 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரமில் கடந்த 7-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. சத்தீஸ்கர் மாநிலத்துக்கான முதல் கட்ட தேர்தலும் 7-ம் தேதி நடைபெற்றது.

    230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்துக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதையொட்டி மத்திய பிரதேசத்தில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் சார்பில் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

    இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல், சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கிறது.

    மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தேவையான அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    சுருவில் உள்ள தாரா நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதற்காக புறப்பட்டார். அப்போது பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். பதில் அளித்த ராகுல் காந்தி "நாங்கள் ஒற்றுமைய உள்ளோம். ஒற்றுமையாக இருப்போம். ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெறும்" என்றார்.

    ராகுல் காந்தியுடன் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் தோதசரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் செல்கின்றனர்.

    ராகுல் காந்தி ஹனுமான்கார்ஹ், ஸ்ரீகங்காநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பேரணியில் கலந்த கொள்ள இருக்கிறார்.

    ராஜஸ்தானில் பொதுவாக காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் மாறிமாறிதான் ஆட்சியை பிடித்துள்ளன. இந்த முறை தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது.

    • மத்திய பிரதேசத்தில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
    • சத்தீஸ்கரிலும் தலைவர்கள் இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் கடந்த 7-ந் தேதி வாக்குப்பதிவு நடந்து இதேபோல சத்தீஸ்கர் மாநிலத்துக்கான முதல் கட்ட தேர்தலும் 7-ந் தேதி நடைபெற்றது.

    230 தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்துக்கு ஒரே கட்டமாக நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.

    இதையொட்டி மத்திய பிரதேசத்தில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பிரதமர் மோடி நேற்று இறுதிகட்ட பிரசாரம் செய்தார். பெதுல், ஷாஜாபூர் ஆகிய மாவட்டங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி போபால் அருகே உள்ள விதிஷாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் முதல் கட்டமாக 20 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது. 2-வது கட்டமாக 70 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடக்கிறது.

    இதற்கான பிரசாரமும் இன்று மாலையுடன் ஓய்ந்தது. சத்தீஸ்கரிலும் தலைவர்கள் இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    • காங்கிரஸ் கட்சி என்றால் அழிவு, ஊழல், சுரண்டல் என்று அர்த்தம்.
    • காங்கிரஸ் என்றால் கொள்ளை, ஏமாற்றுதல் என்று அர்த்தம்.

    பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, "பா.ஜனதா என்றால் வளர்ச்சி என்று அர்த்தம். காங்கிரஸ் கட்சி என்றால் அழிவு, ஊழல், சுரண்டல் என்று அர்த்தம்.

    பா.ஜனதா என்றால் வளர்ச்சிக்கான அரசு, பெண்களுக்கான அதிகாரம், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பவர் என்று அர்த்தம். காங்கிரஸ் என்றால் கொள்ளை, ஏமாற்றுதல் என்று அர்த்தம்" என்றார்.

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக கடந்த 7-ந்தேதி 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நாளைமறுநாள் (நவம்பர் 17-ந்தேதி) 70 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.

    • செல்போன் தயாரிப்பதில் உலகளவில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
    • உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இது என்னுடைய உத்தரவாதம்.

    230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் வருகிற 17-ந்தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய இருக்கும் நிலையில், பிரதமர் மோடி இன்று பெதுல் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது "உலகளவில் செல்போன் தயாரிப்பதில் இந்தியா 2-வது மிகப்பெரிய நாடாகியுள்ளது. உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இது என்னுடைய உத்தரவாதம்.

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுதல் ஆகியவை நிஜமாகும் என காங்கிரஸ் ஒருபோதும் நம்பியது கிடையாது. ஆனால், நாங்கள் அதை செய்துள்ளோம். மத்திய பிரதேச மக்கள் மத்தியில் பா.ஜனதா மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நம்பிக்கையும் பாசமும் ஏற்பட்டுள்ளது" என்றார்.

    • 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் 30-ந்தேதி வாக்குப்பதிவு.
    • சந்திரசேகர ராவ் கட்சி கடந்த மாதம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ், பாரதிய ராஷ்டிரிய சமிதி, பா.ஜனதா கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து பேரணியில் கலந்து கொள்கிறார். அப்போது தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நல்கொண்டா, வாரங்கல், கட்வால், ராஜேந்திர நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பேரணிகளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்கு முன்னதாக சோமாஜிபுடாவில் உள்ள பா.ஜனதாவின் மீடியா மையத்தில் வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

    சந்திரசேகர ராவ் கட்சி கடந்த மாதம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கியது. அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம் பிடித்துள்ளன.

    காங்கிரஸ் ஆறு வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது.

    • ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை அகற்ற பா.ஜனதா தீவிரம்.
    • பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரேநாளில் ராஜஸ்தானில் பிரசாரம்.

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மிசோரமில் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. சத்தீஸ்கரில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 17-ந்தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. ராஜஸ்தானில் வருகிற 25-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலை கணக்கில் வைத்து பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி மற்றும் 18-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் ராஜஸ்தானில் பிரசாரம் செய்ய இருக்கிறார். 15-ந்தேதி பார்மெர் மாவட்டத்தில் உள்ள பெய்டூ என்ற இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 18-ந்தேதி பாரத்புர் மற்றும் நகாயுர் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, 16-ந்தேதி டோங்க் மாவட்டத்தில் உள்ள தியோலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், ராஜ்சாமண்ட் மாவட்டத்தில் உள்ள கும்பல்கார்ஹக், பிம் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

    நவம்பர் 18-ந்தேதி அஜ்மிர் மாவட்டத்தில் நடைபெறும் மூன்று பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். அதன்பின் நடைபெறும் ரோடுஷோவிலும் கலந்து கொள்கிறார்.

    இருவரையும் தவிர்த்து ஜெய்ப்பூரில் நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்சி தொண்டர்களை சந்தித்து பேச இருக்கிறார். அத்துடன் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் இருக்கிறார்.

    • தற்போது ஆட்சியில் இருந்து வெளியேறும் நேரம் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது.
    • காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது. மோடி சமூகத்தினரை கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் ஏற்கனவே கடந்த 7-ந்தேதி முடிவடைந்தது. 70 தொகுதிகளுக்கான 2-வது கட்ட தேர்தல் வருகிற 17-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இதனையொட்டி பிரதமர் மோடி சத்தீஸ்கரில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அவர் இன்று மதியம் முங்கெலி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாகவது:-

    தற்போது ஆட்சியில் இருந்து வெளியேறும் நேரம் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது. டெல்லியில் இருந்து சில பத்திரிகையாளர் நண்பர்கள், அரசியல் ஆய்வாளர்கள் என்னிடம் சத்தீஸ்கர் முதல்வர் பாகேல் அவர் தொகுதியிலேயே தோற்கடிக்கபடுவார் என்று தெரிவித்தனர்.

    காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது. மோடி சமூகத்தினரையும் கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். மோடி பெயர் கொண்ட சமூகத்தினரை கடந்த பல மாதங்களாக அவர்கள் துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, அவர்கள் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டனர்.

    ஓ.பி.சி. சமூகத்தினரை அவர்கள் எந்த அளவிற்கு வெறுக்கிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. காங்கிரஸ் அம்பேத்கரை அவமதிக்கிறது. அம்பேத்கரின் அரசியலுக்கு முடிவு கட்ட சதி செய்தது காங்கிரஸ். வாக்கு வங்கிற்காகவும், சமரசம் செய்து கொள்வதற்காகவும் காங்கிரஸ் எதை வேண்டுமென்றாலும் செய்யும்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • பாராளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கலானது
    • வெற்றி வாய்ப்பை மனதில் வைத்தே வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர்

    இந்தியாவில், இம்மாதம் 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தல்களை அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுவதால் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளர்களையே களத்தில் இறங்கியுள்ளனர்.

    அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகின்றன. இவற்றில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளின் பட்டியல்களில் ஆண்களே பெரும்பான்மை வகிக்கின்றனர்.

    சமீபத்தில் இந்திய பாராளுமன்றத்திற்கான புதிய கட்டிடத்தில் முதல் சிறப்பு கூட்டத் தொடர் நடைபெற்றது. அதில் நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் பெண் வேட்பாளர்களுக்கு கட்டாயம் 33 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால், இரண்டு தேசிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் 12 சதவீதத்திற்கும் குறைவாகவே பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் உள்ள 679 சட்டசபை தொகுதிகளுக்கு, பா.ஜ.க. 643 வேட்பாளர்களையும், காங்கிரஸ் 666 வேட்பாளர்களையும்  களம் இறக்கியுள்ளன.

    போட்டியில் களம் இறங்கி உள்ள இந்த வேட்பாளர்களில் பா.ஜ.க. 80 சார்பில் பெண் வேட்பாளர்களும்,  காங்கிரஸ் கட்சி சார்பில் 74 பெண் வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர்.

    நாரி ஷக்தி வந்தன் அதிநியம் (Nari Shakti Vandan Adhiniyam) எனும் பெயரில் பா.ஜ.க. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை தாக்கல் செய்தது. பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு தங்கள் கட்சிதான் முதலில் பாடுபட்டதாகவும் தங்கள் முயற்சியில் பா.ஜ.க. நற்பெயர் வாங்கி கொள்ள முயல்வதாகவும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து வந்தது.

    ஆனால், இரண்டு கட்சிகளுமே வெற்றி வாய்ப்பை மனதில் வைத்துத்தான் வேட்பாளர் தேர்வை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த விஷயத்தில் இரண்டு கட்சிகளுமே பரஸ்பர விமர்சனத்தையும் தவிர்த்து விட்டதை சுட்டி காட்டும் பெண்ணுரிமை ஆர்வலர்கள், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசியல் கட்சிகள் உண்மையில் ஆர்வம் காட்டவில்லை என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • இதன் காரணமாக உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெறும்.
    • சட்டமன்ற உறுப்பினர்கள், சிந்தியா பா.ஜ.க. கட்சியில் இணைந்தனர்.

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான ஆட்சியை பண பலத்தால் பா.ஜ.க. கலைத்தது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். 2018 சட்டசபை தேர்தலுக்கு பின் ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சியின் முதல்வராக கமல் நாத் தேர்வு செய்யப்பட்டார்.

    பிறகு 2020 மார்ச் மாதம் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவான பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சியை கவிழ்க்க காரணமாக செயல்பட்டனர். இதன் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பதவியேற்றார். பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிந்தியா ஆகியோர் பா.ஜ.க. கட்சியில் இணைந்தனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் ராய்பூரை அடுத்த பார்வானியில் நடைபெற்ற பிராசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, "கடந்த சட்டசபை தேர்தலின் போது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்படி 25 லட்சம் விவசாயிகள் பெற்றிருந்த கடன்களை தள்ளுபடி செய்தோம்."

    "ஆனால் பா.ஜ.க. மற்றும் அதன் தொழிலதிபர்கள் அடங்கிய சகாக்கள் உங்களது அரசாங்கத்தை சட்டசபை உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து திருடி விட்டது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கைகளில் பணம் கிடைத்தால், அவர்கள் அதனை கிராமங்கள் மற்றும் நகரங்களில் செலவிடுவர். இதன் காரணமாக உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெறும். இதே நிலை சத்தீஸ்கரில் வெற்றிகரமாக எட்டப்பட்டது," என்று தெரிவித்தார்.

    • ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
    • பிரதமர் மோடியின் நட்சத்திர பேட்சாளராக ED செயல்பட்டு வருகிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பைகுந்த்பூர் மற்றும் கத்கோரா பகுதிகளில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையை கொண்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவதை தடுப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

    பைகுந்த்பூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கார்கே, பா.ஜ.க., பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை தொகுதியை மாற்ற முயற்சித்து வருகின்றன. அவர்களை தடுத்து நிறுத்த காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர் உள்பட நடைபெற இருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகும்.

    இதைத் தொடர்ந்து கத்கோராவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய கார்கே, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்டவை பிரதமர் மோடியின் நட்சத்திர பேட்சாளர்களாக செயல்பட்டு வருகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த அமைப்புகள் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்துகின்றன.

    கடந்த செவ்வாய் கிழமை மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இம்மாத இறுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    ×