search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"

    • டாஸ்மாக் கடை பக்கமாக நடந்த சென்று கொண்டிருந்தார்.
    • கூச்சலிடவே அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    மத்திகிரி,

    ஓசூர் சித்தனப்பள்ளியை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (43). வெல்டிங் காண்டிராக்டர். இவர் மத்திகிரி பழைய ஆனேக்கல் சாலை டாஸ்மாக் கடை பக்கமாக நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் இவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டனர்.

    இவர் கூச்சலிடவே அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து முகமது அலி ஜின்னா மத்திகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அதில் பணம் கேட்டு மிரட்டியது மாரசந்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் (28), பழைய மத்திகிரி சேகர் (34) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். 

    • விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாள வாடி சுற்றுவட்டார பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தாளவாடி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டி ருந்த தாளவாடி திகினாரை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மஞ்சையா மகன் மணி என்ற ஐயப்பன் (வயது 30), தாளவாடி பனகள்ளி பகுதியை சேர்ந்த மாதேவா மகன் பசுவராஜ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் பெருந்துறை பகுதியில் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் துரைசாமி மகன் ஜெய்சங்கர் (39) என்பவர் மீது பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இதயத்தில் ஆபரேசன் செய்துள்ளார்.
    • ஆனால் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.

    கம்பம்:

    கம்பத்தை சேர்ந்தவர் சர்தார் (வயது63). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதயத்தில் ஆபரேசன் செய்துள்ளார். ஆனால் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். இந்த நிலையில் குள்ளப்புரத்துக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்ற அவர் மாயமானர்.

    அவரது உறவினர்கள் தேடி பார்த்தபோது கம்பம் இ.பி. ஆபீஸ் சாலையில் உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து கம்பம் தெற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர் அருகே குள்ளப்பகவுண் டன்பட்டியை சேர்ந்த முத்துமணி (55). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் மன வெறுத்த முத்துமணி விஷ மாத்திைர தின்று மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமணி உயிரிழந்தார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
    • போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி சூரம்பட்டி போலீசார் ஜெகநாதபுரம் காலனி ஆர்ச் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    அதில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பள்ளியூத்து, சபரி கார்டன் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (21), ஈரோடு அருகே உள்ள பச்சப்பாளி, ஓம்காளியம்மன் கோவில் முதல் வீதியை சேர்ந்த மோகன்ராஜ் (21) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்களிடம் போலீசார் சோதனையிட்டதில் வெற்றிவேலிடம் 350 கிராம் கஞ்சா மற்றும் எடை போடும் மெஷின் ஒன்றும், மோகன்ராஜிடம் 400 கிராம் கஞ்சா மற்றும் எடைபோடும் மெஷின் ஒன்றும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்பிலான 750 கிராம் கஞ்சா, எடை மெஷி ன்கள் மற்றும் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • திருச்சுழி பஜாரில் 22 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனிப்படை போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோத புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்து வருவதாக திருச்சுழி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் திருச்சுழி பஜாரில் அதிகளவில் புகை யிலை பொருட்கள் விற்பனை செய்யப்படு வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் உத்தரவின் பேரில் திருச்சுழி இன்ஸ் பெக்டர் மணிகண்டன் தலைமையிலான தனிப் படை போலீசார் பஜார் பகுதியில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக சாக்குப்பையுடன் 2 பேர் சுற்றிக்கொண்டி ருந்தனர். போலீசார் அவர்களை நெருங்கிய போது தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட போலீ சார் அவர்களை வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தபோது ஏராளமான புகையிலை பொருட்கள் இருந்தன.

    விசாரணையில் அவர்கள் திருச்சுழி முத்து ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராம் (52), கேத்தநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (38) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 22 கிலோ அளவுக்கு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வந்த போதிலும் அவற்றின் விற்பனை ஜோராக நடந்து கொண்டு தான் இருக்கிறது என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் கண் காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை தனிப்படை போலீசார் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர்.

    • ஞான சேகரன் என்பவரை பங்களாபுதூர் போலீசார் கைது செய்தனர்.
    • 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என நம்பியூர், பங்களாபுதூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சின்ன கோச ணம் 3 ரோடு பகுதியில் ' போதை பொருள்களை விற்பனை செய்த நம்பியூர் சின்ன கோசனம் சாலை தோட்டத்தை சேர்ந்த அமராவதி மகன் தர்மலி ங்கம் (வயது 37) என்பவரை நம்பியூர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த ஹான்ஸ், பான் மசாலா, கூலிப் உள்ளி ட்ட போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் டி.என்.பாளையம் பகுதியில் அனும தியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட டி.என்.பாளையம் 4-வது வார்டு குமரன் கோவில் தெருவை சேர்ந்த தேவசகாயம் மகன் ஞான சேகரன் என்பவரை பங்க ளாபுதூர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரக்கு வாகனத்தை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.
    • மது பாட்டில்களை கடத்தியதும் தெரிய வந்தது.

    ஈரோடு, நவ. 21-

    ஈரோடு மாவட்டம் ஆசனூர் அடுத்த கேரமாளம் சோதனைச் சாவடி அருகே இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.

    அதில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையில் காரில் இருந்த வர்கள் கேரள மாநிலம் பாலக்காடு மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் சரவணன் (வயது 32),

    அதே மாநிலம் அட்டப்பாடி பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் வேலுச்சாமி (43) என்பதும், இவர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை கடத்தியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, அவர்கள் வைத்திருந்த 300 மது பாட்டில்கள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஆசனூர் போலீ சார் சரவணன், வேலுச்சாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினையில் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டி பெருமாள் கோவில் தெற்குதெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்(48). ஆக்டிங் டிரைவராக வேலைபார்த்து வந்தார். கடந்த வருடம் கணையம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    மேலும் அவரது அம்மா கடந்த மாதம் இறந்துவிட்டார். இதனால் மிகுந்த சோகத்தில் இருந்த மோகன்ராஜ் பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி வடக்குஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி(41). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இதனால் மனமுடைந்த பால்பாண்டி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே 920 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கடத்துவது அடிக்கடி நடந்து வரு கிறது. குறிப்பாக மாவட்ட எல்லை அருகில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் முழுமையான பலன் இல்லை.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரம் பகுதியில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி னர். அப்போது அங்குள்ள தனியார் நிலத்தில் 23 மூடைகளில் 920 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத் திருப்பது தெரியவந்தது.

    அதனை பறிமுதல் செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து (33), லோடுமேன் கல்யாணசுந்தரம் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ரேசன் அரிசியை ஆலைகளில் பாலீசு செய்து வெளிமார்க்கெட்டுகளில் அதிக விலையில் விற்க பதுக்கி வைத்திருந்தார்களா? அல்லது கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்
    • 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என பவானிசாகர், அம்மாபேட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது குறிச்சி டாஸ்மாக் கடை, பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த பவானி கேசரிமங்கலம் ஆண்டிகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த சென்னியப்பன் மகன் கிட்டுசாமி (வயது 55),

    சத்தியமங்கலம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் தமிழ்ச்செல்வன் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்குவாரி தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது.
    • வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சுக்குநூறாக ெநாறுங்கியது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமா கவுண்டம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கல்குவாரி தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது. இதில் குடியிருப்பு பகுதியில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. மேலும் அருகில் உள்ள வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சுக்குநூறாக ெநாறுங்கியது. தொடர்ந்து அங்கிருந்த வாகனங்களும் சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கல்குவாரியில் வேலை பார்க்கும் ஆந்திராவை சேர்ந்த லட்சுமி என்பவர் சமையல் செய்யும்போது சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென தீப்பிடித்து வெடித்ததாக கூறப்பட்டது. இதில் லட்சுமி மற்றும் பக்கத்து குடியிருப்பில் இருந்த மேலும் 2 பேர் உள்ளிட்ட 3 பேருக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கல்குவாரி உரிமம் காலாவதியான நிலையில் அங்கு வேலை செய்ய அனுமதித்ததாக அதன் உரிமையாளர்கள் விஜயலட்சுமி, சண்முகசுந்தரம், ஜெயபால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர்களான கார்த்தி (வயது 32), சக்திவேல் முருகன் (வயது 43) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.
    • அதில் போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே ஆசனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    பின்னர் விசாரணையில் அதில் இருந்த 2 பேர் கோவை மாவட்டம் மேட்டு ப்பாளையம் பழத்தோட்டம் காந்தி தெருவை சேர்ந்த சங்கரன் மகன் சஜீஸ் (வயது 32), கோவை மாவட்டம் சிறுமுகை பள்ளிவாசல் தெரு வேலாயுதம் மகன் பிரகாசம் (38) என்பதும், அவர்கள் விற்பனைக்காக போதைப்பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் அவர்கள் இருவரை கைது செய்தனர்.

    மேலும் கடத்தி வரப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட 566 கிலோ எடை மதிப்புள்ள போதைப்பொ ருட்கள் மற்றும் கார் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்தப் போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.4 லட்சத்து 51 ஆயிரத்து 680 ஆகும். மேலும் ஆசனூர் போலீ சார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×