search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people committed suicide"

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இதயத்தில் ஆபரேசன் செய்துள்ளார்.
    • ஆனால் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார்.

    கம்பம்:

    கம்பத்தை சேர்ந்தவர் சர்தார் (வயது63). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதயத்தில் ஆபரேசன் செய்துள்ளார். ஆனால் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். இந்த நிலையில் குள்ளப்புரத்துக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்ற அவர் மாயமானர்.

    அவரது உறவினர்கள் தேடி பார்த்தபோது கம்பம் இ.பி. ஆபீஸ் சாலையில் உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து கம்பம் தெற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர் அருகே குள்ளப்பகவுண் டன்பட்டியை சேர்ந்த முத்துமணி (55). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதனால் மன வெறுத்த முத்துமணி விஷ மாத்திைர தின்று மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துமணி உயிரிழந்தார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே உள்ள காமராஜர் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் பவளம் நாகராஜ் (வயது 84). இவர் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார். நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோம்பை ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் பாபுத்தாய் (56). இவர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மூட்டு வலி காரணமாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார்.

    இருந்தபோதும் நோய் குணமாகவில்லை. இதனால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கோம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி அருகே நோய்கொடுமை மற்றும் குடிப்பழக்கத்தால் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பழனி செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் மனைவி விவிதா(21). கடந்த 2 வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தாய் வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்து வந்து ள்ளார்.

    தொடர்ந்து நோய்கொடு மையால் அவதிப்பட்டதால் மனஉளைச்சலில் இருந்த விவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம்(76), இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த தனது உறவினரை பார்க்க தெப்பம்பட்டி பகுதிக்கு வந்துள்ளார். அங்குள்ள மலைப்பகுதியில் விஷம் குடித்து இறந்துகிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராஜதானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    • புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    பெரியகுளம் அருகில் உள்ள ஏ.வாடிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் கயல்விழி (வயது23) என்பவ ருக்கும் முத்துப்பாண்டி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது கணவர் சுயஉதவிக்குழுவுக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த கயல்விழி தனக்கு திருமணத்தில் சந்தோசம் இல்லை என்றும், கவலையாக உள்ளது எனவும் கூறி வந்துள்ளார்.

    அதன் பிறகு தனது அறைக்கு சென்ற அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ேதவாரம் அருகில் உள்ள சிந்தலைச்சேரியை சேர்ந்த கார்த்திக் மனைவி ரூபினி (22). கார்த்திக் சொந்தமாக வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று வேளாங்கண்ணிக்கு வாடகைக்கு சென்று விட்டார். அப்போது ரூபினி தனக்கு உடல் நிலை சரியில்லை என தெரிவிக்க கணவருக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்க வில்லை.

    இதனால் மனமுடைந்த ரூபினி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துஅவரது தாய் மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினை மற்றும் மதுப்பழக்கத்தால் பெண் உள்பட 2பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் கூடலூர் 14வது வார்டு ரைஸ்மில் தெருைவ சேர்ந்த முருகன் மனைவி ராஜேஸ்வரி (வயது35). இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஆஸ்துமா நோய் இருந்ததால் அவ்வப்போது கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராயப்பன்பட்டி அருகில் உள்ள காமயகவுண்ட ன்பட்டியை சேர்ந்த ரமேஷ் கண்ணன் மகன் முகிலன் (25). இவரது தாய் இறந்து விட்டதால் தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருகிறார். முகிலன் தனது தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தார். மது பழக்கத்துக்கு அடிமையானதால் அவரை கண்டித்து வந்தார்.

    இந்நிலையில் முகிலன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நோய்கொடுமையால் மனஉளைச்சலில் இருந்த 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    கூடலூர் கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் முத்து (வயது37). இவர் மது பழக்கத்துக்கு அடிமையானதால் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது.

    இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே சில்வார்பட்டியை சேர்ந்தவர் ராாஜேந்திரன் மனைவி மயில் (57). இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வந்தார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • குடிப்பழக்கம் மற்றும் குடும்ப பிரச்சினையால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே ஆண்டிபட்டி பழையகோட்டையை சேர்ந்தவர் பெருமாள் (வயது28). குடி பழக்கத்துக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரது தந்தை அறிவுரை கூறி உள்ளார்.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கீரிதோடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (55). குடும்ப பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் கூடலூர் தம்மணம்பட்டி அருகே உள்ள தோட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார்விசாரித்து வரு கின்றனர்.

    • நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்தவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனர்.
    • ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே போடி ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது60). கடந்த சில நாட்களாக முடக்குவாத நோயினால் பாதிக்கப்படு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் குணமாகாமல் தொடர்ந்து கால்வலி இருந்ததால் மனமுடைந்த அவர் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே சின்னஓவுலாபுரத்தை சேர்ந்தவர் மவுணன் (67). இவர் தோட்ட வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் விஷம் குடித்து மயங்கினார்.

    சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தேனி மாவட்டத்தில் குடும்ப பிரச்சினையில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னமாடசாமி. (வயது 32). இவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த சின்னமாடசாமி விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பம் குரங்கு மாயன் தெருவைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (43). மாற்றுத் திறனாளியான இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த தெய்வேந்திரன் வீட்டில் தூக்கில் தொங்கினார்.

    அவரை மீட்டு பரிசோதனை செய்தபோது உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தேனி அருகே குடும்ப பிரச்சினையில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே தேவாரம் மூணான்டிபட்டியை சேர்ந்தவர் பிரிதரன்(35). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வ.உ.சி மைதானத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். மதுபழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கோவித்துக்கொண்டு பண்ணைபுரத்தில் உள்ள தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் மனஉளைச்சலில் இருந்த பிரிதரன் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வடக்குதெருவை சேர்ந்தவர் ஜோதிபாசு(33). இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு பிரிந்து சென்றார். இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி அருகே மது பழக்கத்தால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் அணைப்பட்டி பாரஸ்ட் பங்களா தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் முருகன் (வயது31). இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டியை சேர்ந்த காளியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆட்டோ பைனான்ஸ் தொழில் பார்த்து வந்த முருகன் குடி பழக்கத்துக்கு அடிமை யானதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் முருகன் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது தாய் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். தேவதானப்பட்டி அருகில் உள்ள செங்குளத்து ப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (57). இவரது மகன் ஆறுமுகத்துக்கு திருமணம் முடிந்த நிலையில் வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்ததால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் மனவேதனையில் இருந்த பெருமாள் தனது வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
    • இவர்கள் நோய் கொடுமையால் தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது

    தேனி:

    தேனி அருகே உத்தம பாளையம் உ.அம்மா பட்டியை சேர்ந்தவர் மணி (வயது56). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே குடல் இறக்க நோயால் அவதி ப்பட்டு பல இடங்களில் சிகிச்சை பெற்றார்.

    ஆனால் குணமாக வில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மணி விஷம் அருந்தி மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் அவரை மீட்டு உத்தம பாளையம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு மணியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயமங்கலம் அருகே கோவில்புரம் கன்னிமார்பு ரத்தை சேர்ந்தவர் தனசேகரன் (35). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி ப்பட்டு வந்த அவர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் வெறுப்படைந்த தனசேகரன் விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    ×