என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி அருகே புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை
- புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
பெரியகுளம் அருகில் உள்ள ஏ.வாடிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் கயல்விழி (வயது23) என்பவ ருக்கும் முத்துப்பாண்டி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது கணவர் சுயஉதவிக்குழுவுக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த கயல்விழி தனக்கு திருமணத்தில் சந்தோசம் இல்லை என்றும், கவலையாக உள்ளது எனவும் கூறி வந்துள்ளார்.
அதன் பிறகு தனது அறைக்கு சென்ற அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ேதவாரம் அருகில் உள்ள சிந்தலைச்சேரியை சேர்ந்த கார்த்திக் மனைவி ரூபினி (22). கார்த்திக் சொந்தமாக வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று வேளாங்கண்ணிக்கு வாடகைக்கு சென்று விட்டார். அப்போது ரூபினி தனக்கு உடல் நிலை சரியில்லை என தெரிவிக்க கணவருக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்க வில்லை.
இதனால் மனமுடைந்த ரூபினி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்துஅவரது தாய் மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்