என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி அருகே இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை
- தேனி அருகே நோய்கொடுமை மற்றும் குடிப்பழக்கத்தால் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனி செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் மனைவி விவிதா(21). கடந்த 2 வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தாய் வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்து வந்து ள்ளார்.
தொடர்ந்து நோய்கொடு மையால் அவதிப்பட்டதால் மனஉளைச்சலில் இருந்த விவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம்(76), இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த தனது உறவினரை பார்க்க தெப்பம்பட்டி பகுதிக்கு வந்துள்ளார். அங்குள்ள மலைப்பகுதியில் விஷம் குடித்து இறந்துகிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராஜதானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்