search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
    X

    கோப்பு படம்

    தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

    • தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
    • இவர்கள் நோய் கொடுமையால் தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது

    தேனி:

    தேனி அருகே உத்தம பாளையம் உ.அம்மா பட்டியை சேர்ந்தவர் மணி (வயது56). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே குடல் இறக்க நோயால் அவதி ப்பட்டு பல இடங்களில் சிகிச்சை பெற்றார்.

    ஆனால் குணமாக வில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மணி விஷம் அருந்தி மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் அவரை மீட்டு உத்தம பாளையம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு மணியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயமங்கலம் அருகே கோவில்புரம் கன்னிமார்பு ரத்தை சேர்ந்தவர் தனசேகரன் (35). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி ப்பட்டு வந்த அவர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் வெறுப்படைந்த தனசேகரன் விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×