என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
- தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
- இவர்கள் நோய் கொடுமையால் தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது
தேனி:
தேனி அருகே உத்தம பாளையம் உ.அம்மா பட்டியை சேர்ந்தவர் மணி (வயது56). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாகவே குடல் இறக்க நோயால் அவதி ப்பட்டு பல இடங்களில் சிகிச்சை பெற்றார்.
ஆனால் குணமாக வில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மணி விஷம் அருந்தி மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் அவரை மீட்டு உத்தம பாளையம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு மணியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயமங்கலம் அருகே கோவில்புரம் கன்னிமார்பு ரத்தை சேர்ந்தவர் தனசேகரன் (35). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி ப்பட்டு வந்த அவர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் வெறுப்படைந்த தனசேகரன் விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்