search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமதியின்றி மதுவிற்ற"

    • விற்பனைக்காக வைத்திருந்த 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என கோபி, பெருந்துறை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விஜயமங்கலம்- ஊத்துக்குளி ரோடு டாஸ்மாக் கடை, மூல வாய்க்கால் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை சேர்ந்த சிவந்தி கண்ணன் மகன் ராஜமாணிக்கம் (வயது 44),

    சிவகங்கை மாவட்டம் மருதவாயில் பகுதியைச் சேர்ந்த காசி மகன் கோபால் (44) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 20 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாள வாடி சுற்றுவட்டார பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தாளவாடி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டி ருந்த தாளவாடி திகினாரை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மஞ்சையா மகன் மணி என்ற ஐயப்பன் (வயது 30), தாளவாடி பனகள்ளி பகுதியை சேர்ந்த மாதேவா மகன் பசுவராஜ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் பெருந்துறை பகுதியில் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் துரைசாமி மகன் ஜெய்சங்கர் (39) என்பவர் மீது பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விற்பனைக்காக வைத்திருந்த 29 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அரச்சலூர், தாளவாடி, கடம்பூர், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த அவல்பூந்துறை கே.கே.வலசு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சுப்பிரமணி (வயது 72),

    தாளவாடி தலமலை பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன், கடம்பூர் சுஜில்கரை சிவா என்ற கோழிக் கடை சிவா, கடம்பூர் பகுதியை சேர்ந்த வீரப்பா மகன் குருசாமி,

    சத்தியமங்கலம் கொட்டு வீரப்பம்பாளையம் சேகர் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 29 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைபோல் செம்பட்டி பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்திற்காக அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் மோகன், சுந்தர் மகன் பூபதி ஆகியோர் மீது கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பெருந்துறை, சென்னிமலை, பர்கூர், வெள்ளி திருப்பூர், கடத்தூர், சத்தியமங்கலம், பங்களாபுதூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த வீரபத்திரன் மகன் சுரேஷ்கு மார் (வயது 41),

    கருங்கல்பாளையம் மரப்பாளையம் சாலையை சேர்ந்த சம்பத் மகன் சக்திவேல் (44), சென்னிமலை ஆறுமுகம் மகன் நாகராஜ் (59), பர்கூர் ராஜா (33),

    அந்தியூர் மாணிக்கம் மகன் பிரபு (41), மங்களாபுரம் சுந்தரம் மகன் சதீஷ் என்ற சுரேஷ் (40), சத்தியமங்கலம் சொர்ணம் மகன் பாலு (55), பாரதி நகர் மினியல் (60), டி.என்.பா ளையம் செல்வன் மனைவி ஈஸ்வரி (45) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • 25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஈரோடு டவுண், கோபி போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் குற்ற சம்பவ ங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அம்மாபேட்டை, பெருந்துறை சுற்றுவ ட்டாரப் பகுதிகளில் அனு மதியின்றி மது விற்று கொண்டிருந்த பெரியசேமூர் கன்னிமார் நகரை சேர்ந்த மது மகன் சந்திரசேகர் (வயது 44), சிவகங்கை மாவ ட்டம் காளையார் கோவி லை சேர்ந்த எடிவக்கண்ணு மகன் முத்துவேல்,

    அந்தியூர் கொமரயனூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (40), மதுரை மாவட்டம் உசிலம்ப ட்டியை சேர்ந்த ராசு மகன் பூம்பாண்டி (42) சத்தி பு.புளியம்பட்டியை சேர்ந்த நடராஜன் மகன் உதயகுமார் (34) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மது பாட்டி ல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோதனையில் அனுமதியின்றி மது விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • 96 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சத்தி-மைசூர் ரோடு காரப்பள்ளம் சோதனை சாவடியில் ஆசனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கர்நாடகாவில் இருந்து தமிழகம் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டி ருந்தது. பஸ்சில் இருந்த பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தி கொண்டிருந்தபோது ஒரு வாலிபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவரது பையை சோதனை செய்ததில் கர்நாடகா அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு வாங்கி வந்து சட்ட விரோதமாக விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் அந்த வாலிபர் கோவை சேனைக்கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த தமிழரசன் (30) என தெரிய வந்தது. இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். அவரிடமிருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேப்போல் நேற்று ஒரே நாளில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அனுமதியின்றி மது விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 96 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×