அனுமதியின்றி மதுவிற்ற பெண் உள்பட 9 பேர் மீது வழக்கு

46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுமதியின்றி மதுவிற்ற பெண் உள்பட 9 பேர் மீது வழக்கு
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பெருந்துறை, சென்னிமலை, பர்கூர், வெள்ளி திருப்பூர், கடத்தூர், சத்தியமங்கலம், பங்களாபுதூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த வீரபத்திரன் மகன் சுரேஷ்கு மார் (வயது 41),

கருங்கல்பாளையம் மரப்பாளையம் சாலையை சேர்ந்த சம்பத் மகன் சக்திவேல் (44), சென்னிமலை ஆறுமுகம் மகன் நாகராஜ் (59), பர்கூர் ராஜா (33),

அந்தியூர் மாணிக்கம் மகன் பிரபு (41), மங்களாபுரம் சுந்தரம் மகன் சதீஷ் என்ற சுரேஷ் (40), சத்தியமங்கலம் சொர்ணம் மகன் பாலு (55), பாரதி நகர் மினியல் (60), டி.என்.பா ளையம் செல்வன் மனைவி ஈஸ்வரி (45) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 46 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com