search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது-புகையிலை விற்ற 2 பேர் கைது
    X

    மது-புகையிலை விற்ற 2 பேர் கைது

    • ஞான சேகரன் என்பவரை பங்களாபுதூர் போலீசார் கைது செய்தனர்.
    • 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என நம்பியூர், பங்களாபுதூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சின்ன கோச ணம் 3 ரோடு பகுதியில் ' போதை பொருள்களை விற்பனை செய்த நம்பியூர் சின்ன கோசனம் சாலை தோட்டத்தை சேர்ந்த அமராவதி மகன் தர்மலி ங்கம் (வயது 37) என்பவரை நம்பியூர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த ஹான்ஸ், பான் மசாலா, கூலிப் உள்ளி ட்ட போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதை போல் டி.என்.பாளையம் பகுதியில் அனும தியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட டி.என்.பாளையம் 4-வது வார்டு குமரன் கோவில் தெருவை சேர்ந்த தேவசகாயம் மகன் ஞான சேகரன் என்பவரை பங்க ளாபுதூர் போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×