என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smugglers arrested"

    • அந்தியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் சோதனை நடத்தினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து அந்தியூர் அடுத்த கெட்டி சமுத்திரம் ஏரி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்களை போலீசார் நிறுத்தி மோட்டார் சைக்கிளில் சோதனை நடத்தினர். அப்போது அதில் கர்நாடக மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கொட்டக்காடு பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா, பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையத்தை சேர்ந்த கார்த்தி, பிரபு, பள்ளிபாளையம் அடுத்த தெற்குப்பள்ளம் பகுதியை சேர்ந்த சந்துரு என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 44 கர்நாடக பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.
    • அதில் போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே ஆசனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் போதைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    பின்னர் விசாரணையில் அதில் இருந்த 2 பேர் கோவை மாவட்டம் மேட்டு ப்பாளையம் பழத்தோட்டம் காந்தி தெருவை சேர்ந்த சங்கரன் மகன் சஜீஸ் (வயது 32), கோவை மாவட்டம் சிறுமுகை பள்ளிவாசல் தெரு வேலாயுதம் மகன் பிரகாசம் (38) என்பதும், அவர்கள் விற்பனைக்காக போதைப்பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் அவர்கள் இருவரை கைது செய்தனர்.

    மேலும் கடத்தி வரப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட 566 கிலோ எடை மதிப்புள்ள போதைப்பொ ருட்கள் மற்றும் கார் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்தப் போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.4 லட்சத்து 51 ஆயிரத்து 680 ஆகும். மேலும் ஆசனூர் போலீ சார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×