search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    920 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்; 2  பேர் கைது
    X

    920 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது

    • ராஜபாளையம் அருகே 920 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கடத்துவது அடிக்கடி நடந்து வரு கிறது. குறிப்பாக மாவட்ட எல்லை அருகில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் முழுமையான பலன் இல்லை.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரம் பகுதியில் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி னர். அப்போது அங்குள்ள தனியார் நிலத்தில் 23 மூடைகளில் 920 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத் திருப்பது தெரியவந்தது.

    அதனை பறிமுதல் செய்த போலீசார் அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து (33), லோடுமேன் கல்யாணசுந்தரம் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ரேசன் அரிசியை ஆலைகளில் பாலீசு செய்து வெளிமார்க்கெட்டுகளில் அதிக விலையில் விற்க பதுக்கி வைத்திருந்தார்களா? அல்லது கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×