search icon
என் மலர்tooltip icon
    • பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப மறுத்து போரட்டம் நடத்தினர்.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள சுமார் 20 கிராமங்களில் 3 ஆயிரத்து 774 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியாள நாள் முதலே கிராமமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலத்தை கையகப்படுத்தும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப மறுத்து போரட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 3 துணை கலெக்டர்கள், பணியாற்ற உள்ளனர். மேலும் இந்த அதிகாரிகளின் கீழ் 24 தாசில்தார்கள், 24 துணை தாசில்தார்கள், சர்வேயர், வருவாய் ஆய்வாளர்கள், 326 வருவாய் துறை ஊழியர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நிலம் எடுப்புக்காக பணியாற்ற உள்ளனர். நில எடுப்புக்கு நியமிக்கப்பட உள்ள மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்களில் முதற்கட்டமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வரும் நாராயணன் என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    மேலும் நில எடுப்பு அலுவலகம் செயல்பட இடம் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானை சேர்ந்த வோல்கர் அப்ராகாசன் என்பவர் இந்தியாவை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.
    • பல வருடங்களாக விசா பெற முயற்சி செய்த பிறகு இந்தியாவுக்கு வருகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

    பாகிஸ்தானை சேர்ந்த வோல்கர் அப்ராகாசன் என்பவர் இந்தியாவை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். 30 நாட்களில் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சுற்றுப்பயணம் சென்றார்.

    அவர் டெல்லி, அரியானா, ராஜஸ்தான், மும்பை, கேரளா மற்றும் பல நகரங்களில் நடந்த பல்வேறு சந்திப்புகளின் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில், அவருக்கு பலரும் உணவு வழங்குவதையும் காண முடிகிறது.

    தொடர்ந்து கேரளா, ராஜஸ்தானில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ள அவரது வீடியோக்களை பார்த்த சமூக வலைதள பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோதிலும் தொடர்ந்து அனுமதியின்றி பாறைகள் உடைக்கப்பட்டே வருகிறது.
    • வெடிமருந்து குச்சிகள் மற்றும் பாறை துளை போடுவதற்கு பயன்படுத்துகின்ற எந்திரம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்

    அருமனை:

    குமரி மாவட்டம்-கேரள எல்லையில் உள்ள புலியூர் சாலை வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட நாகத்தான் குழி ஆயவிளை பகுதியில் நீண்ட நாட்களாக அனுமதி இன்றி பாறை உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தல் செய்யப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோதிலும் தொடர்ந்து அனுமதியின்றி பாறைகள் உடைக்கப்பட்டே வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். தொடர்ந்து அங்கு பாறை உடைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 15 வெடிமருந்து குச்சிகள் மற்றும் பாறை துளை போடுவதற்கு பயன்படுத்துகின்ற எந்திரம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அங்கிருந்த சுபின் குமார் (வயது 32) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் குமாரதாஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

    • திருமேற்றளியீசுவரர் கோவில் செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தின் பிள்ளையார் பாளையத்தில் அமைந்துள்ளது.
    • அப்பர்பெருமான் பதிகம் ஒன்றுமாக இரண்டு பதிகங்கள் உள்ளன.

    திருக்கச்சிமேற்றளி - திருமேற்றளியீசுவரர் கோவில் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தின் பிள்ளையார் பாளையத்தில் அமைந்துள்ளது.

    காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் ஐந்தில் (திருக்கச்சியேகம்பம், திருக்கச்சிமேற்றளி, திருவோணகாந்தன்தளி, கச்சி அனேகதங்காவதம், திருக்கச்சிநெறிக் காரைக்காடு) இதுவும் ஒன்றாகும்.

    இத்தலத்திற்குச் சம்பந்தர்பதிகம் ஒன்றும் அப்பர்பெருமான் பதிகம் ஒன்றுமாக இரண்டு பதிகங்கள் உள்ளன.

    • வாலிபரும், பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் அமர்ந்து குளிப்பதை காண முடிந்தது.
    • தானே நகர போலீசாரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீதும், அந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பதில் அளித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் உலாஸ் நகரில் நடைபெற்ற வினோதமான சம்பவத்தில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் குளித்து கொண்டு செல்வது போன்று ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ தானே நகரத்தில் உள்ள உல்காஸ் நகரின் 17-வது பிரிவு பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் வாலிபரும், பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் அமர்ந்து குளிப்பதை காண முடிந்தது.

    அந்த பெண் தன் முன்னால் ஒரு வாளியை வைத்திருந்தார். மற்ற பயணிகள் பார்த்து கொண்டிருக்கும் போது அந்த ஆண் மீதும், தன் மீதும் அந்த பெண் தண்ணீரை ஊற்றி குளிப்பது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் கண்டனம் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே வீடியோ வைரலானதால் தானே நகர போலீசாரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீதும், அந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பதில் அளித்துள்ளனர்.

    • குழந்தைகள் அவ்வாறு ஒரு நிமிடத்துக்கு 50 முறை கூட மூச்சு விடும்.
    • ஒரு நாளில் அரைமணி நேரமாவது மூச்சுப்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

    குழந்தை பிறந்த உடன் அழத் தொடங்கும். தாயின் கருவறையில் 10 மாதங்கள் சுகமாக இருந்த குழந்தை வெளி உலகுக்கு வந்தவுடன் மூச்சை உள்இழுக்கும். அது அழுகையாக மாறும்.

    அவ்வாறு குழந்தை அழவில்லை என்றால் மூச்சு விடவில்லை என்று அர்த்தம். உடனே பிரசவ பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவரோ, செவிலியர்களோ குழந்தையை தலைகீழாக பிடிப்பார்கள். அப்போது வயிற்றுக்குள் இருக்கும் கெட்ட நீர், உமிழ் நீர், பனிக்குட நீர் அனைத்தும் வெளியே வந்து விடும். உடனே மூச்சுக்குழாய் இயல்பாகும். பின்னர் குழந்தை மூச்சை உள் இழுக்கும். காற்று உள்ளே போனவுடன் மூடியிருந்த நுரையீரல் திறக்கும்.

    தாயின் வயிற்றில் இருந்து வெளியே வரும் குழந்தைக்கு தன்னை சுற்றி நடப்பது என்னவென்று புரியாது. கர்ப்பப்பையில் பாதுகாப்பாக இருந்த குழந்தை வெளியே வரும்போது உடல் மீது காற்றுப்படும். அழவைப்பதற்காக உடலை தட்டிப்பார்ப்பார்கள். முதுகில் தண்ணீர் தெளிப்பார்கள். அந்த சமயம் மூச்சு உள்ளே போய் வெளியே வரும்போது குழந்தை தானாக அழத் தொடங்கும். குழந்தை மூச்சை இழுத்து, இழுத்து அழும். உள்ளே போன காற்று வெளியே தொண்டை பகுதியில் வரும்போது அழுகையாக வரும்.

    எனவே மூச்சு என்பது பிறப்பில் தொடங்கி இறப்பு வரை நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கும். மூச்சு தான் ஒரு மனிதரின் வாழ்நாளை நிர்ணயிக்கக் கூடிய முக்கியமான அறிகுறி. யாரால் ஆழமான மூச்சு விட முடிகிறதோ அவர் அதிக நாட்கள் இருப்பார்கள். எவ்வளவு தூரம் நீங்கள் மூச்சை நன்றாக இழுத்து விடுகிறீர்களோ அவ்வளவு நாள் உயிரோடு இருப்பீர்கள். 100 வயது வரை வாழ்வீர்கள்.

    நாமெல்லாம் கேள்விப்பட்டு இருப்போம். சாமியார்கள் காட்டுக்குள் சென்று ஒற்றைக்காலில் நின்று நன்றாக மூச்சை உள் இழுத்து விடுவார்கள். உள்வாங்கும் மூச்சை நிறுத்தி நிதானமாக அவர்கள் வெளியே விடுவார்கள். நிமிடத்துக்கு அவர்கள் 5 முறை தான் மூச்சு விடுவார்கள். தியானத்தில் அமர்ந்து ஓம் என்ற சொல்லை நீண்ட நேரம் ஒலிக்க செய்வார்கள். அது கூட ஒரு மூச்சு பயிற்சி தான். மூச்சை உள்இழுத்து வெளியேற்றும் நேரம் அதிகரிக்க, அதிகரிக்க அவர்களின் வாழ்நாள் காலமும் அதிகரிக்கிறது. இதனால் 'அந்த சாமியார் 100 வயதுக்கு மேல் வாழ்ந்தார், இவர் 150 வயது வரை வாழ்ந்தார்' என்று முன்னோர்கள் சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம்.

    அதேபோல நாமும் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்றால் நாம் விடும் மூச்சும் சிறப்பானதாக இருக்க வேண்டும். சாப்பிடுவதை கூட 2 நாளைக்கு நிறுத்தி வைத்துக் கொள்ளலாம், தண்ணீர் குடிக்காமல் சில மணி நேரங்கள் இருக்கலாம். ஆனால் மூச்சு இல்லாமல் 3 நிமிடத்துக்கு மேல் இருக்க முடியாது. மூச்சு என்பது பிராணன். அதாவது நமது உடலுக்குள் செல்லும் பிராண வாயு. அது கண்ணுக்கு தெரியாத காற்று.

    காரில் உள்ள டயரில் காற்று பிடிக்கிறோம். உள்ளே போகும் காற்றால் டியூப் விரிந்து டயர் பெரிதாவது போல் நாம் சுவாசிக்கும் காற்று உள்ளே போய் நுரையீரல் விரிகிறது. நுரையீரலுக்குள் சின்ன, சின்ன திசுக்கள் இருக்கிறது. அதற்கு அல்வியோலி என்று பெயர். தேன்கூட்டை பார்த்தால் உங்களுக்கு தெரியும். அதில் சிறு, சிறு ஓட்டைகள் இருக்கும். அதுபோல் தான் நுரையீரலிலும் சிறு துவாரங்கள் இருக்கும். தேன் கூடு நுரையீரல் என்றால் அதற்குள் இருக்கும் சின்ன, சின்ன அறைகள் தான் அல்வியோலி. அதன் சுவர்கள் மிக மெல்லியதாக அதாவது 0.1 மைக்ரான் அளவே இருக்கும். அந்த அல்வியோலியில் ரத்தக்குழாய்களும் இருக்கும். மயிரிழையை விட 100-ல் ஒரு பங்கு கொண்ட அந்த மெல்லிய இழை (capillary) வழியாக ரத்தம் செல்லும். அது நுரையீரலுக்கு உள்ளே இருக்கிறது. காற்று உள்ளே போய் அந்த மெல்லிய இழைக்குள்ளும் செல்லும். ஆக்சிஜன் உள்ளே சென்றவுடன் கொஞ்சம் நீல நிறமாக இருக்கும் ரத்தம் சிவப்பாக மாறி விடும். ரத்த சிவப்பணுக்களால் ரத்தம் சிவப்பாக இருக்கிறது.

    நாம் உள்வாங்கும் மூச்சு பிராண வாயு எனப்படும் ஆக்சிஜன். சுவாசித்து வெளி விடும் மூச்சு கரியமில வாயு ஆகும். மூச்சு உள்ளே செல்வதும், வெளியே வருவதும் இயல்பாக நடக்கக் கூடியது. தூங்கும் போது தானாகவே மூச்சு விடுகிறோம். அது நமக்கு தெரிவதில்லை.செயற்கையான மூச்சு என்பது நாம் சில நிமிடங்கள் மூச்சைப்பிடித்துக் கொள்ளலாம். பின்னர் அதனை பெருமூச்சாக விடலாம். இவ்வாறு நாமே மூச்சை உள்வாங்கி விடுவது செயற்கை மூச்சு.

    குழந்தை தூங்கும் போது பார்த்தால் வயிறு மேலும், கீழும் ஏறி இறங்கும். குழந்தைகள் அவ்வாறு ஒரு நிமிடத்துக்கு 50 முறை கூட மூச்சு விடும். பெரியவர்கள் என்றால் நிமிடத்துக்கு 20 முறை மூச்சு விடுவார்கள்.

    மாரத்தான் ஓடும் வீரருக்கு அதிகம் மூச்சு வாங்கும். அதற்கு காரணம் அவர் ஓடிக்கொண்டே இருப்பதால் உடலுக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதை மூளை கண்டறிந்து மூச்சை அதிகமாக விட தூண்டுகிறது. வயிறு பசிக்கிறது என்றால் வயிற்றில் இருக்கிற ஆகாரம் காலியாகி விட்டது. வயிறு காலியானதும் உள்ளே இருக்கும் திசுக்கள் மூளைக்கு சொல்கிறது. மூளை நமக்கு வயிறு காலியாக உள்ள விவரத்தை பசி மூலம் அறிவுறுத்துகிறது. மூளைக்கும், வயிற்றுக்கும் சம்பந்தம் உண்டு. அதேபோல் மூளைக்கும் நுரையீரலுக்கும், இதயத்துக்கும் தொடர்பு உண்டு. ஒவ்வொரு உறுப்பும் ஒன்றோடு ஒன்று இணைந்து வேலை செய்யும். எந்த உறுப்புகளும் தனியாக வேலை செய்வது இல்லை.

    நாம் சாப்பிடுகிறோம். வயிறு ஜீரணம் செய்கிறது. ஜீரணம் செய்த ஆகாரத்தை சிறுகுடலுக்கு அனுப்புகிறது. அங்கிருந்து கல்லீரலுக்கு செல்லும் ஆகாரம் குளுக்கோசாக மாற்றப்பட்டு உடல் முழுக்க சென்று சேருகிறது. நாம் சாப்பிடும்போது அது இட்லி. உள்ளே சென்றவுடன் ரத்தத்துக்கு தேவையான குளுக்கோசாக மாற்றப்படுகிறது. குளுக்கோஸ் போனால் தான் மூளை வேலை செய்யும். மூளை வேலை செய்தால் மூச்சு வரும். மூச்சு வரும் போது இதயம் செயல்படும். இது ஒரு சுழற்சி. கடவுள் பெரிய மேஜிக் போன்று நம்மை உருவாக்கி இருக்கிறார். இதைவிட ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு உலகத்தில் எதுவும் கிடையாது.

    மூச்சு இருப்பவர் தான் உயிரோடு இருக்கிறார் என்று அர்த்தம். மூச்சு இல்லையென்றால் மனிதனின் ஆட்டம் நின்று போய் விடும். குறைவான, நிறைவான மூச்சு விடுபவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள். சாதாரணமாக விழித்து இருக்கும் போது ஒரு நிமிடத்துக்கு 18 முறை மூச்சு விடுகிறோம். தூங்கும் போது பார்த்தால் 16-ல் இருந்து 20 முறை மூச்சு விடுவார்கள்.

    மரத்துக்கு அடியில் இரவில் படுக்கக் கூடாது. ஏன் என்றால் பகலில் ஆக்சிஜனை வெளியிடும் மரம் இரவில் கரியமில வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயு நமக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்தும். மரத்துக்கும் உயிர் இருப்பதால் தான் அது வளர்கிறது. மரத்தின் வளர்ச்சிக்கு காரணம் தண்ணீர், அடுத்து ஆக்சிஜன். உதாரணத்துக்கு ஒரு பூந்தொட்டியின் மேல் பகுதியை முழுமையாக மூடி விடுவோம், கீழ் பகுதியில் மட்டும் தண்ணீர் விடுவோம். அப்படி செய்தால் சில நாட்களில் அந்த செடி அழுகிப்போய் விடும். அதேபோல தண்ணீர் ஊற்றவில்லை என்றாலும் செடி வாடிப்போய் விடும். மரத்துக்கு தண்ணீரும், ஆக்சிஜனும் முக்கியம்.

    அதேபோல மனிதருக்கு குடிநீரும், ஆக்சிஜனும் முக்கியம். ஆக்சிஜன் என்பது நாம் சுவாசிக்கும் காற்று. அந்த காற்றை நன்றாக இழுத்து விட பழக வேண்டும். முதலில் மூச்சை நன்றாக உள் இழுத்துக் கொண்டு சற்று நிறுத்த வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியே விட வேண்டும். அதன்பின் மீண்டும் மூச்சை இழுத்து வைத்து வெளியே விட வேண்டும். ஒரு நிமிடத்துக்கு 5 தடவை என கணக்கில் வைத்து மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். மூச்சு உள்ளே போகும் போது வயிறு வெளியே வர வேண்டும், மூச்சை வெளியே விடும்போது வயிறு உள்ளே போக வேண்டும். இது தான் மூச்சு பயிற்சிக்கான சரியான முறை. ஒரு நாளில் அரைமணி நேரமாவது மூச்சுப்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

    மூச்சு பயிற்சி கட்டுப்பாட்டினால் நம் உடலுக்கு அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும். ரத்த அழுத்தம் குறையும், சர்க்கரை அளவு கட்டுப்படும். மன அழுத்தம் குறைந்து வாழ்நாள் அதிகரிக்கும். உடல் எடையும் குறையும். ஆஸ்துமா வராது. மூச்சு பயிற்சி செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும். அதற்கு சரியான நேரம் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை. இந்த நேரத்தை பிரம்ம முகூர்த்தம், அமிர்தவேளை என்றும் அழைப்பது உண்டு. அந்த அதிகாலை வேளையில் பிரபஞ்சத்தில் ஆக்சிஜன் நிறைந்து காணப்படும்.

    அந்த ஆக்சிஜனை உள் இழுக்கும் போது நமக்கு கூடுதல் பலன் கிடைக்கும். அன்றைய நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்கலாம். எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இதயம், நுரையீரல் பலம் பெறும். அந்த சமயம் புதிதாக நல்ல எண்ணங்கள் நம் மனதில் உதிக்கும். அதிகாலை வேளையில் எழுந்து மூச்சு பயிற்சி செய்வதை குழந்தைகளுக்கும் பழக்க வேண்டும்.

    அதேபோல நுரையீரலை தாக்கும் செயல்களையும் நாம் தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்து ஒருவர் சிகரெட் பிடிக்கிறார் என்றால் அந்த புகை அவரை மட்டும் தாக்குவது இல்லை, அவரது மனைவி, குழந்தைகளையும் பாதிக்கச் செய்கிறது.

    ரோட்டில் பறக்கும் தூசு, புழுதியில் இருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள். கொரோனா காலக்கட்டத்தில் நாம் முக கவசம் அணியக் கற்றுக் கொண்டு விட்டோம். அதேபோல ரோடுகளில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது குழந்தைகளும், நீங்களும் முக கவசம் அணிய பழகிக் கொள்ளுங்கள். அவ்வாறு நம்மை நாமே காத்துக் கொண்டால் ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்சினைகள் நெருங்காது. வந்தபின் ஆஸ்பத்திரிக்கு ஓடுவதை விட வராமல் நம்மை நாம் காத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.

    தொடர்புக்கு: info@kghospital.com, 98422 66630

    • கார் சர்வீஸ் சாலையின் தடுப்பு சுவரில் மோதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி. எந்திரத்தை இடித்துக்கொண்டு மீண்டும் தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
    • விபத்தில் நிவேதா சம்பவ இடத்திலேயே பலியானார். மனோஜ்குமார், சொர்ணரூபினி, அனுஷ் கண்ணன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    வடபழனியை சேர்ந்தவர் நிவேதா (வயது21). மறைமலை நகரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். இவர் இன்று அதிகாலை உடன் வேலைபார்த்து வரும் நண்பர்கள் மனோஜ்குமார், சொர்ணரூபினி ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு காரில் சென்றார். காரை அனுஷ் கண்ணன் என்பவர் ஓட்டினார். பொத்தேரியில் உள்ள கல்லூரி எதிரே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சர்வீஸ் சாலையின் தடுப்பு சுவரில் மோதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி. எந்திரத்தை இடித்துக்கொண்டு மீண்டும் தடுப்புச் சுவரில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் நிவேதா சம்பவ இடத்திலேயே பலியானார். மனோஜ்குமார், சொர்ணரூபினி, அனுஷ் கண்ணன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மற்றொரு சம்பவம் சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தநர் மாணிக்கம் (57). இவர் ஒரகடம் சாலை சந்திப்பு அருகே ஜி.எஸ்.டி.சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது செங்கல்பட்டு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாணிக்கம் பரிதாபமாக இறந்தார்.

    • போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மெக்சிகோ நாட்டில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    குவாத்தமாலா:

    வடமேற்கு நியூ மெக்சி கோவில் சம்பவத்தன்று 18 வயது மர்ம வாலிபர் ஒருவர் தேவாலயம் முன்பு நின்று கொண்டு கண்ணில் தென் பட்டவர்களை எல்லாம் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.

    இந்த துப்பாக்கி சூட்டில் பலர் குண்டுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். அந்த வழியாக சென்று கொண்டு இருந்த 97 வயதுடைய ஸ்கோபீல்ட் மற்றும் அவரது 73 வயது மகள் மெலடி ஆகியோர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஷெர்லி என்ற 79 வயது பெண்ணும் பலியானார். இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.இதில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற ஒருவரும் குண்டுகாயம் அடைந்தார்.

    சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம வாலிபர் எங்கும் தப்பி ஓடாமல் அங்கேயே நின்று கொண்டு இருந்தான். போலீசாரை பார்த்தும் அருகில் வந்து என்னை சுட்டுக்கொல்லுங்கள் என உரத்த குரல் எழுப்பினான். அவனை சரண் அடையுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் அவன் வெறித் தனத்துடன் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தான்.

    பின்னர் அவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். அவனை பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.இந்த துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்கோபீல்ட் என்ற பெண் பல ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றிவர். அவரது மகள் மெலடி பாலர் பள்ளி நடத்தி வந்தார். தாய்- மகள் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மெக்சிகோ நாட்டில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கின்றன. எல்லா ஆலயங்களிலும் புனிதனும், சக்தியும் இருக்கத் தான் செய்கின்றன.
    • மேல்மருவத்தூர் ஆலயம் மற்ற ஆலயங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. அதை மருவத்தூர் மண்ணை மிதித்து, மருவத்தூர் அன்னையை தொழுவார்கள் மனப்பூர்வமாக உணர்ந்துகொள்கிறார்கள்.

    அம்மா, அம்மா என்று வினாடிக்கொரு முறை நினைத்து வழிபடுகிறோமே - அந்த அன்னை ஆதிபராசக்தி எங்கே இருக்கிறாள்? எந்தெந்த வடிவங்களில் இருக்கிறாள்? அந்த சக்தி தெய்வத்தின் நிதர்சனமான " திவ்ய " தரிசனம் எல்லோருக்கும் கிடைக்குமா? அந்தத் தரிசனம் எப்போது கிடைக்கும் ?- என்று மனிதமனம் சிந்தனை வலையைப் பின்னிய நேரத்தில் 10 பக்க கட்டுரை இயல்பாகக் கிடைத்தது.

    மச்ச புராணத்தில் 108 சக்தித்தலங்களில் 108 வித , விதமான பெயர்களோடு வித, விதமான வெவ்வெறு வடிவங்களில் துடிப்போடு ஆதிபராசக்தி துலங்கி அருள் பாலிக்கிறாள் என்று நூல்களில் படித்து அறிகிறோம். அதில் 72- வது தலமான "சித்தவனம் -" என்பது தான் "மேல்மருவத்தூர்" என்று ஆன்மிக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

    "அன்னை இல்லாத இடம் ஏது? அவள் தூணிலும் இருக்கிறாள் துரும்பிலும் இருக்கிறாள்!!" என்று படிக்காத பாமரன் பட்டென்று கூறிவிடுகிறான்.

    எதையுமே ஆராய்ச்சி செய்து பார்க்கும் படித்த மேதாவிகள் தான் புராணங்களிலும், தத்துவங்களிலும் அன்னையைத் தேடுகிறார்கள்!

    எது எப்படி இருப்பினும், பராசக்தியை தேடுகின்ற பக்தனின் முயற்சிகள் எல்லாமே பராசக்தியால் அங்கீகரிக்கப்பட்டவை தான்!

    சரி, அம்மா, எங்கே இருக்கிறாள்?

    மதுரையில் - மீனாட்சி

    காஞ்சியில் - காமாட்சி

    காசியில் - (விசாலாட்சி அன்னபூரணி)

    நெல்லையில் - காந்திமதி

    மீனாட்சிபுரத்தில் - ஸ்ரீசியாளா (நெல்லை தேவி)

    கன்னியாகுமரியில் - கன்னியாகுமரி அம்மன்

    முப்பந்தலில் - இசக்கி அம்மன்

    மண்டைக்காட்டில்- பகவதி

    வண்ணாரப்பேட்டையில் (நெல்லை) - பேராச்சி அம்மன்

    தெய்வசெயல்புரத்தில் (தூத்துக்குடி) -ஸ்ரீராஜராஜேஸ்வரி

    நயினார்கோவிலில் - ஸ்ரீ சௌந்திர நாயகி

    ஆரல்வாய்மொழியில் - இசக்கி அம்மன்

    நயினார் குளத்தில் (நெல்லை) - பிட்டப்பரத்தி அம்மன்

    காயாமொழியில் - முப்புராதி அம்மன்

    நங்கைநல்லூரில்- ஸ்ரீ ராஜ ராஜேவரி

    திரு ஈங்கோய் மலையில்- ஸ்ரீ லலிதாம்பிகை

    ஏரலில்- குரங்கணி அம்மன்

    படைவீட்டில் - ரேணுகாம்பாள்

    தென்காசியில்- உலகம்மை

    ஸ்ரீவில்லிப்புத்தூரில்- ஆண்டாள்

    சிவகாசியில் - பத்ரகாளி அம்மன்

    கோவில்பட்டியில் - செண்பக வல்லி அம்மன்

    சாத்தூரில் - இருக்கன்குடி மாரியம்மன்

    விருதுநகரில் -(முத்துமாரி அம்மன், வெயிலுகந்த அம்ம)

    அருப்புக்கோட்டையில் - முத்துமாரி அம்மன்

    இராமநாதபுரத்தில்- பர்வதவர்த்தனி அம்மன்

    பரமக்குடியில்- முத்தால அம்மன்

    காரைகுடியில்- கொப்புடைய அம்மன்

    மடப்புரத்தில் - காளி

    சங்கரன்கோவிலில் - கோமதி அம்மன்

    தாயமங்கலத்தில் - முத்துமாரி அம்மன்

    வீரபாண்டியில் - கௌமாரி அம்மன்

    நந்தத்தில் -மாரியம்மன்

    சோழவந்தானில்- ஸ்ரீ ஜனக மாரியம்மன்

    திண்டுக்கல்லில்- கோட்டை மாரியம்மன்

    சேலத்தில்- அன்னதான மாரியம்மன்

    பெங்களூரில் - அன்னம்மா

    சாக் கோட்டையில் - அம்பாள்

    திருவாடானையில் - ஸ்ரீ சிநேகவல்லி அம்மன்

    புத்தூரில் -ஸ்ரீ திரௌபதி அம்மன்

    சிக்கலில் - ஸ்ரீ தேவசேனை

    சிதம்பரத்தில் - சிவகாமசுந்தரி

    திருக்கடவூரில் - அபிராமி

    திருச்சானூரில் - பத்மாவதி தாயார்

    அலர்மேலுமங்காபுரத்தில் -அலமேலுமங்கா

    திருப்பூரில் - (பட்டத்தளர்ச்சி அம்மன், ஓடைக்காடு பத்ரகாளி அம்மன்)

    பல்லடத்தில்- பொங்காளி அம்மன்

    அவினாசியில்- கருவலூர் மாரியம்மன்

    சத்திய மங்கலத்தில்- பண்ணாரி அம்மன்

    பொள்ளாச்சியில் - சூலக்கல் மாரியம்மன்

    ஈரோட்டில் - சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன்

    கோவையில் - கோணியம்மன் தண்டு மாரியம்மன், சௌடாம்பிகை அம்மன்

    பேரூரில் -பச்சைநாயகி அம்மன்

    மேட்டுப்பாளையத்தில்- வனபத்ர காளியம்மன்

    ஊட்டியில் -காளி - மாரி

    திருச்சியில்-சமயபுரம் மாரியம்மன்

    புதுக்கோட்டையில்-ஸ்ரீ மாதா புவனேஸ்வரி

    கன்னிவாட்யில் - ராஜ காளி அம்மன்

    தஞ்சையில் - முத்து மாரியம்மன், பங்காரு காமாட்சி அம்மன்.

    புன்னை நல்லூரில் - முத்துமாரி அம்மன்

    பெரியபாளையத்தில் - பெரியபாளையத் அம்மன்

    மேல்மலையனூரில் - அங்காளபரமேஸ்வரி

    ராசிபுரத்தில் சேலம் - சுமங்கலி அம்மன்

    திருவண்ணாமலையில் - உண்ணாமலை அம்மை

    திருவானைக்காவில் - அகிலாண்டேவரி

    வேளாங்கண்ணியில்- ஆரோக்கிய மாதா

    தொட்டியங்குளத்தில் - மாரியம்மன்

    செந்தூரில் -சந்தன மாரியம்மன்

    மணப்பாறையில் -முத்து மாரியம்மன்

    சிறுவாச்சூரில் - மதுர காளியம்மன்

    செங்கையில் - (மணபாத்தம்மன் நாகாத்தம்மன்)

    பெருங்கரையில் -சதுரங்க நாயகி

    பட்டுக்கோட்டையில் - காளியம்மன்

    நாட்டரசன்கோட்டையில் - அம்மன்

    ஆத்தூரில் - சோமசுந்தரி அம்மன்

    வேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்) - தையல் நாயகி அம்மன்

    நாகப்பட்டினத்தில் -ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன்

    திருக்குற்றாலத்தில் - ஸ்ரீ குழல்வாய் மொழி அம்மன்

    திருச்சி, குளித்தலை மேட்டு மகாதான புரத்தில் - அம்மன்

    திருவிடைமருதூரில் - ஸ்ரீ மூகாம்பிகை

    கங்கை கொண்டானில் - ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்

    உறையூரில் -வெக்காளி அம்மன்

    மாயவரத்தில் - ஸ்ரீ அபயாம்பிகை அம்மன்

    பாபநாசத்தில் நெல்லை - உலகாம்பிகை

    திருவொற்றியூரில் -ஸ்ரீ வடிவுடையம்மன்

    கும்பகோணத்தில்- ஸ்ரீ மங்களாம்பிகை

    திருக்கருகாவூரில் (தஞ்சை ) -ஸ்ரீ கர்ப்பரட்சகாம்பிகை (கருகாத்த )அம்மன்

    திருவையாறு தலத்தில் - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி

    மயிலாடுதுறையில் -( ஸ்ரீ அஷ்டாத சபுஜ மகாலஷ்மி துர்க்கா தேவி)

    சென்னையில் -(மயிலை கற்ப காம்பாள், கோல விழி பத்ரகாளி அம்மன், முண்டக கண்ணியம்மன் முப்பத்தம்மன், ரேணுகா பரமேஸ்வரி அம்மன்)

    திருவேற்காட்டில்- கருமாரி அம்மன்

    மாங்காட்டில் - காமாட்சி அம்மன்

    மைசூரில் - சாமுண்டீஸ்வரி

    கொல்லூரில் - மூகாம்பிகை

    சோற்றானிக் கரையில் - பகவதி

    கொடுங்கல்லூரில் - பகவதி

    காம்புழாவில்- பகவதி

    காளஹஸ்தியில் - ஸ்ரீ ஞான பிரஸன்னாம்பிகை

    விஜயவாடாவில் - கனக துர்க்கா

    கல்கத்தாவில் - காளி

    சிருங்கேரியில் - சாரதாம்பாள்

    தங்க வயலில் - கங்கையம்மன்

    மங்களூரில்- மங்களாம்பிகை

    குஜராத்தில் - ஸ்ரீ சந்தோஷி மாதா

    மலேசியாவில் - மகாமாரியம்மன்

    சிங்கப்பூரில் - வீரிமா காளியம்மன்

    சபரிமலையில் - ஸ்ரீ மாளிகைபுரத்து மஞ்சள் மாதா

    - என்று உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அன்னை ஆதிபராசக்தி மேல்மருவத்தூரில் "சுயம்பு" உருவில் கொலுவிருந்து, அருள்திரு அடிகளார் தேகத்தில் தங்கி, அவருடைய ஆன்மாவில் ஜக்கியமாகி, "பேசும்" தெய்வமாகவும் "நடமாடும்" தெய்வமாகவும் இருந்து அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறாள்.

    தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கின்றன! எல்லா ஆலயங்களிலும் புனிதனும், சக்தியும் இருக்கத் தான் செய்கின்றன!

    ஆனால் மேல்மருவத்தூர் ஆலயம் மற்ற ஆலயங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது! அதை மருவத்தூர் மண்ணை மிதித்து, மருவத்தூர் அன்னையை தொழுவார்கள் மனப்பூர்வமாக உணர்ந்துகொள்கிறார்கள்.

    1. குருவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் சக்தி தலம் மேல்மருவத்தூர்!

    2. அன்னையின் உரு, அருள்திரு அடிகளார் அவர்களின் அருள் காட்டுதலில் – ஆன்மீகத் தொண்டுகள் செய்து வரும் இலட்சக்கணக்கான ஆடவர்- மகளிர் சக்தி தொண்டர்களை கொண்டது மேல்மருவத்தூர்!

    3. ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு "அன்னையின் அருள்வாக்கு விதிகளுக்கு மட்டும்" உட்பட்ட அருள் சித்தர் பீடம் மேல்மருவத்தூர்!

    4. ஆதிபராசக்திக்கு விரதமிருந்து, சக்திமாலை அணிந்து சக்தி இருமுடி செலுத்தும் சக்தி தலம் மேல்மருவத்தூர்!

    5. அன்னையின் அருள்வாக்குப் படி எல்லா காரியங்களும் நடைபெறுவதால் – "தெய்வீக நிர்வாகம்" நடக்கும் சக்தி தலம், மேல்மருவத்தூர்!

    6. சமுதாயத் தொண்டுகளுக்கும், கல்வி மருத்துவ பண்பாடு அறத் தொண்டுகளுக்கும் தமிழகத்தில் முதன்மையான ஆலயம், மேல் மருவத்தூர்!

    7. ஜாதி, மத, இன வேறுபாடில்லாமல், ஏழை- பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் "ஒரே தாய்!! ஒரே குலம் !!" என்ற ஒரே சிந்தனையுடன் "செந்நிற" ஆடை அணிந்து எல்லோரும் ஆன்மீகப் பணிகளைச் சமமாக செய்ய வாய்ப்புகள் தரும் சக்திதலம், மேல்மருவத்தூர்!

    8. 'சமுதாயத்திலும், ஆன்மிகத்திலும், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!" என்று வாயளவில் பேசாமல், செயல் அளவில் பெண்களுக்கு எல்லாவற்றிலும் (வழிபாட்டு பூசைகளில், கேள்வி பூசைகளில், அமைப்பு , நிர்வாகத்தில்) அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் சக்தி தலம் , மேல்மருவத்தூர்!

    9. வித்தியாசமான எளிய பூஜை, திருஷ்டி முறைகளும், வேள்வி முறைகளும் கொண்டு, "சப்தகன்னிமார்களுக்கு " சந்நிதியும், ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை முதலியவற்றைமாய்க்கும் அதர்வண பத்ரகாளி சந்நிதியும் அமைந்த சக்திதலம், மேல்மருவத்தூர்!

    10. 1800 -க்கு மேற்பட்ட ஓம் சக்தி மன்றங்களின் வாயிலாக வழிபாடும், சமுதாயத் தொண்டும் செய்து, அதை நிர்வகித்து வரும் தலைமை சித்தர்பீடம், மேல்மருவத்தூர்!

    11. "உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!" என்ற உயர்ந்த இலட்சியத்திற்கு - தனது வியர்வைத் துளிகளால் அபிடேகம் செய்து வரும் அருள்திரு. அடிகளார் அவர்களால் அகிலம் முழுமைக்கும் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டு வரும் அற்புத சக்தி தலம், மேல்மருவத்தூர்!

    இத்தனை சிறப்பு அம்சங்கள் மேல்மருவத்தூரில் இருப்பதால் தான் "தொண்டு" -என்பது இங்கே தவிர்க்க முடியாததாகிவிடுகிறது!

    • பஸ் நிறுத்தம் அருகே இருந்த ராட்சத பேனர் மின் கம்பிகள் மீது விழுந்தது.
    • மின்துறை ஊழியர்கள் மின் கம்பிகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பஸ் நிறுத்தம் பகுதியில் சுமார் 40 அடி உயரமுள்ள 20 அடி அகலமுள்ள ராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை படப்பை கரசங்கால் உள்ளிட்ட பகுதியில் காற்று வீசி மழை பெய்ய தொடங்கியது.

    பின்னர் திடீரென சூறாவளி காற்று வீசியது. இதில் பஸ் நிறுத்தம் அருகே இருந்த ராட்சத பேனர் மின் கம்பிகள் மீது விழுந்தது. இதில் மின்கம்பி அறுந்து விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் அங்கு சேதம் ஏற்படவில்லை.

    அங்கு 5 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மின்துறை ஊழியர்கள் மின் கம்பிகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    • பச்சை நிற வண்ணத்தில், நமது உடலின் ஆரோக்கியத்துக்கு பச்சை கொடி காட்டும் வண்ணமாக உள்ள மூலிகைக் கொடை சோம்பு.
    • சோம்பு நறுமணமூட்டியாக மட்டுமின்றி, சுவையூட்டும் மசாலாப் பொருளாகவும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்டது.

    "குழந்தை அழுகிறதா? கிரைப் வாட்டர் கொடுங்க, குழந்தை அழுகையை உடனே நிறுத்திடும்" என்று பல ஆண்டுகளாக நாம் பார்த்து பழகிப் போன விளம்பரத்துக்கு அடிப்படையான மூலிகைச் சரக்கு சோம்பு என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. குழந்தைகளின் 'கோலிக்' எனும் வயிற்று வலிக்கு, காலம் காலமாக பயன்படுத்தி வரும் சிறப்பு மிக்கது சோம்பு.

    சிற்றுண்டி கடை முதல் பெரிய உணவகம் வரையிலும், உண்ட உணவு எளிதில் சீரணமாக, வயிற்றின் நலம் நாடும் வகையில், உணவகங்கள் உடலுக்கு கொடையாக வழங்கும் அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கு 'சோம்பு' எனும் 'பெருஞ்சீரகம்'. பச்சை நிற வண்ணத்தில், நமது உடலின் ஆரோக்கியத்துக்கு பச்சை கொடி காட்டும் வண்ணமாக உள்ள மூலிகைக் கொடை சோம்பு.

    சோம்பு நறுமணமூட்டியாக மட்டுமின்றி, சுவையூட்டும் மசாலாப் பொருளாகவும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தப்பட்டது. பண்டைய கிரேக்கத்தில் சோம்பு 'வெற்றியின் அடையாளமாக' இருந்தது. பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமல்லாது, அந்நாடுகளின் வரலாற்று குறிப்புகளிலும் பரவலாகக் காணக்கூடிய மூலிகை சோம்பு தான்.

    சாக்சன் இன மக்களின் ஒன்பது புனித மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட மூலிகை சோம்பு. அதே போல் 12-15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மருத்துவம் பற்றி எழுதப்பட்ட, சிலந்தர் மருத்துவக் குறியீடு எனும் செர்பிய கையெழுத்துப் பிரதியில், பெருஞ்சீரகம் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்ட தாவரங்களில் ஒன்றாகும். அந்த அளவுக்கு வரலாற்று சிறப்பு மிக்கது சோம்பு.

    'மருத்துவத்தின் தந்தை' எனக் கருதப்படும் புகழ்பெற்ற கிரேக்க மருத்துவர், ஹிப்போகிரட்டீஸ் பெருஞ்சீரகம் சிறுநீர்ப்பெருக்கி என்றும் மாதவிடாயை சீராக்கும் மூலிகை என்றும் கூறியுள்ளது கூடுதல் சிறப்பு. மேலும் அதன் சாறு கண்பார்வையை கூர்மைப்படுத்த உதவும் என்றும் கூறியுள்ளார்.

    மெக்சிகோவின் பாரம்பரிய மருத்துவத்தில், சோம்பினை சுவாச நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும், தாய்ப்பால் சுரப்பை அதிகமாக்கும் பொருட்டும் பயன்படுத்துகின்றனர். தெற்கு இத்தாலி மற்றும் போர்ச்சுகலில், சோம்பு நீரிழிவு சிகிச்சைக்கும், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நாள்பட்ட இருமலைப் போக்கவும், சிறுநீரகக் கற்களை கரைக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. சீன நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தில் குடல் சார்ந்த உபாதைகளைப் போக்கும் அருமருந்தாகவும், சீரணத்தைத் தூண்டவும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    இனிப்பு சுவையும், லேசான காரமும், தனக்கென சுண்டி இழுக்கும் மணமும் கொண்டது சோம்பு. தமிழர்களின் உணவு வகைகளில் அநேக உணவுகளில், முக்கியமாக சீரணத்திற்குத் தாமதமாகும் உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கு இது. தமிழர்களின் உணவுக்கலையே நமது ஆரோக்கியத்திற்கான வாழ்வியல் கலை என்பது சோம்பினை உணவில் சேர்க்கும் நோக்கத்திலே பளிச்சென்று தெரிய வருகிறது.

    இதில் கசப்பு மற்றும் இனிப்பு ஆகிய இருவகை சுவை காணப்படினும் நாம் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுவது இனிப்பு தான். சோம்பை வாயில் இட்ட உடனே வரக்கூடிய மணத்திற்கு அதில் உள்ள 'அனீதோல்' எனும் தாவர வேதிப்பொருட்கள் காரணமாகின்றன. கூடுதலாக, அஞ்சறைப்பெட்டி நறுமணமூட்டிகளில், அதிகப்படியான மணமூட்டும் நறுமண எண்ணெய் அளவைக் கொண்டுள்ளதும் சோம்பின் சிறப்பு.

    பெருஞ்சீரகத்தில் மருத்துவ குணமுள்ள தாவர வேதிப்பொருட்கள் மட்டுமல்லாது, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் ஆகிய கனிமச் சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-1, வைட்டமின் பி-2, நியாசின் மற்றும் வைட்டமின் சி ஆகிய வைட்டமின்களும் உள்ளன. சோம்பில் நறுமண எண்ணையும் அதிக அளவு உள்ளது. அதன் மருத்துவ தன்மைக்கு முக்கிய பங்களிப்பது அனீதோல் மற்றும் ஃபென்கோன் ஆகிய இரண்டு வேதிப்பொருட்கள் என்கிறது நவீன அறிவியல்.

    மருத்துவர் தில்லைவாணன்

    மருத்துவர் தில்லைவாணன்

    இனிப்புச் சுவையைக் கொண்ட சோம்பு உடலில் பித்தத்தையும், வாதத்தையும் குறைக்கும் தன்மை உடையது. நாட்பட்டு குடலில் சேரும் வாதமும், பித்தமும், குடல் சார்ந்த நோய்நிலைகளான வாந்தி, வயிற்றுவலி, அசீரணம், வாய்குமட்டல், வயிற்றுப்புண் ஆகிய பல்வேறு நோய்குறிகளுக்கு காரணம் என்கிறது சித்த மருத்துவம். மேற்கூறிய நோய்நிலைகளில் மூலிகை கடைச்சரக்கான 'சோம்பு' நன்மை பயக்கும் என்றும் சித்த மருத்துவம் கூறுகின்றது.

    சோம்பினை இளவறுப்பாக வறுத்துப் பொடித்து அரை கிராம் முதல் இரண்டு கிராம் வரை தனியாகவோ அல்லது சர்க்கரையுடன் சேர்த்தோ தினசரி இரண்டு வேளை எடுத்துக்கொள்ள, அசீரணம், வயிற்றுவலி, வயிறுப்பொருமல், மற்றும் வாதத்தை நீக்குவதோடு, கல்லீரல் சார்ந்த நோய்களுக்கும் நன்மை பயக்கும் என்கிறது சித்த மருத்துவம்.

    உண்ட உணவு செரிக்காமல் அசீரணத்துடன் பசியின்மை உள்ளவர்கள் சோம்புடன் சீரகம் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள செரியாமைத் தொந்தரவு நீங்கி பசி இயல்பாக எடுக்கும். சீரகம், ஓமம் ஆகிய அஞ்சறைப்பெட்டி மூலிகைச் சரக்குகளின் வரிசையில் வயிற்றுக்கு நன்மை மட்டுமே செய்யும் சித்த மருத்துவ மூலிகைகளுள் சோம்பும் ஒன்று. சோம்பினைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்த மருந்தான 'சோம்புத் தீநீர்' வயிறு சார்ந்த உபாதைகளை தீர்க்கும் வல்லமை உடையது. மேற்கூறிய நோய்நிலையில் இதனையும் பயன்படுத்தலாம்.

    மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலியை பித்தம் சார்ந்து உண்டாகும் நோய்நிலையாக சித்த மருத்துவம் கூறுகின்றது. அந்த ஒற்றைத்தலைவலிக்கு சோம்புடன் அதிமதுரம் சேர்ந்த கசாயம் நல்ல பலனைத் தரும். அல்லது அதிமதுரப் பொடியுடன் சோம்பு சேர்த்து பொடித்து சூரணமாக்கி அத்துடன் நாட்டுச்சர்க்கரை கலந்து எடுத்துக்கொள்வதும் நல்லது. ஒற்றைத் தலைவலியும் குறையும், அதனால் உண்டாகும் வாந்தியும், வாய்க்குமட்டலும் கூட குறையும்.

    சோம்பில் தாவர ஈஸ்ட்ரோஜென் சத்தும் அதிக அளவு உள்ளது. ஆகையால் மாதந்தோறும் நிகழும் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சீர்ப்படுத்தும் தன்மையும் உடையது. மேலும் மகப்பேறுக்கு பின்னர் பெண்களின் தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு. சோம்பினைப் பொடித்து அவ்வப்போது பாலில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். மேலும் பெண்களில் சாதாரணமாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் 'மாதவிடாய் வலி'க்கு சோம்பு சிறந்த நிவாரணம் தருவதாக நவீன ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    உடல் எடையைக் குறைப்பதிலும் சோம்பு-வின் பங்கு அளப்பரியது. கொரியா நாட்டில் நடைபெற்ற, அதிக உடல் எடையைக் கொண்ட பெண்களிடம் நடத்திய ஆய்வு ஒன்றில், மதிய விருந்துக்கு முன்னர் சோம்பு தேநீர் எடுத்துக்கொள்வது அவர்களின் பசித்தன்மை குறைவதாகவும், அதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைவதாகவும் உள்ளது தெரியவந்துள்ளது. இது அவர்களின் உடல் எடையைக் குறைக்க உதவுவதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதே போல் சோம்புடன், வெந்தயத்தை சேர்த்து எடுத்துக்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும் என்கின்றன நவீன ஆய்வுகள்.

    நாக்கிற்கு அடிமையாகி அறுசுவைக்கும் அதிகமான சுவைகளை பழகிவிட்ட இன்றைய நவீன உலகில் பலருக்கு பசியைக் கட்டுப்படுத்துவது என்பது கேள்விக்குறியாக ஆகிவிட்டது. அத்தகைய சவாலான நிலையில் சோம்புவுடன் வெந்தயம் கலந்த தேநீர் எடுத்துக்கொள்வது பசியைக் குறைப்பதோடு மட்டுமின்றி, உடல் எடையைக் குறைக்கவும் உதவும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் குறைப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொலஸ்ரால் மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவும் என்கின்றன ஆய்வு முடிவுகள். இன்று சந்தைகளில் விற்பனையாகும் உடல் எடையைக் குறைக்கும் பல்வேறு தேநீர்களில் சோம்பு பயன்படுத்தப்படுகிறது. சோம்புடன் லவங்கப்பட்டை மற்றும் சீரகம் சம அளவு சேர்த்து கொதிக்க வைத்து தினசரி குடித்து வருவது உடல் எடையைக் குறைக்க நல்லது.

    சோம்பு ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் செய்யும் என்கின்றன முதல்நிலை ஆய்வுத் தரவுகள். சோம்பு கசாயத்தைக் குடிப்பது சிறுநீர்ப் பெருக்கியாக செயல்பட்டு சிறுநீரில் சோடியம் மற்றும் நீரினை வெளியேற்றி ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

    மூட்டு வலியைப் போக்குவதிலும் சோம்பு நல்ல பலன் தருவதாக, எலிகளில் நடந்த சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. சோம்பு, மூட்டுகளில் வீக்கத்தை உண்டாக்கும் பல்வேறு நொதிகளை தடுத்து மூட்டு வலியை குறைப்பதாக உள்ளது. ஆக, மூட்டு வலியைக் குறைக்க சோம்பு கசாயத்துடன், மஞ்சள் பொடி சேர்த்து எடுத்துக்கொள்வது எல்லா மூட்டு வீக்க நோய்நிலையிலும் நல்ல பலன் தரும்.

    வயிறு சார்ந்த நோய்நிலைகளில் அதிக பாதிப்பை உண்டாக்குவது குடலில் ஏற்படும் அழற்சி நோய். அதிலும் 'கொலைட்டிஸ்' எனும் 'பெருங்குடல் அழற்சி' (புண்) நோய்நிலையானது அடிக்கடி மலம் கழித்தல், வயிற்றுவலி, உடல் சோர்வு போன்ற பல்வேறு நோய்க்குறிகளை உண்டாக்கி மனதளவிலும் பாதிப்பை ஏற்ப்படுத்தக்கூடியது. இத்தகைய நோய்நிலையில் சோம்புடன் பித்தத்தைக் குறைக்கும் பிற அஞ்சறைப்பெட்டி கடைசரக்குகளான ஏலக்காய், சீரகம், கொத்துமல்லி விதை (தனியா) சேர்த்து பாலில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்வது அழற்சியைப் போக்கி நலம் பயக்கும்.

    சோம்புவைக் கொண்டு தயாரிக்கப்படும் பச்சிளம் குழந்தைகளின் வயிற்றுவலிக்கான மருந்துகள், அத்தகைய குழந்தைகளின் அழுகை நேரத்தைக் குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது சிறப்பான ஒன்று. 2 வாரம் முதல் 12 வாரம் வரையிலான பச்சிளம் குழந்தைகளிடம் நடத்திய சோதனை முடிவுகள் மேற்கூறிய சோம்பின் பயனை உறுதி செய்துள்ளன.

    நம்ம ஊர் நாட்டு மருந்து கடைகளில், சோம்பு மாதிரி இன்னும் பல ஆயிரக்கணக்கான மூலிகைகள், நூற்றுக்கணக்கான மருத்துவக் குணங்களை சுமந்து கொண்டு, மூலையில் மூட்டையாக பயன்படாமல் கிடக்கின்றன. அவற்றை வெறும் ருசிக்காகவும், மணத்திற்காகவும் மட்டும் பயன்படுத்தும் நிலைமை மாறி, பாட்டி வைத்தியமாய் மீண்டும் பயன்படுத்தத் துவங்குவது நமது ஆரோக்கியத்திற்கு வலிமை சேர்க்கும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • கோகர்ணத்தில் ஆத்மலிங்கத்தை நிலைபெறச் செய்த மகா கணபதியை முதலில் தரிசிப்போம்.
    • சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பழமையான சிவத்தலம் திருக்கோரணம்.

    'கணேசா கடற்கரை' - கர்நாடகாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிக்கு இப்படியும் ஒரு பெயர் உண்டு. ஏன் தெரியுமா?

    காசர்கோடு, மங்களூரு, ஆனகுடே, குந்தபுரா, இடுகுஞ்சி, கோகர்ண் என்று புகழ்பெற்ற 6 கணபதி கோவில்கள் இப்பகுதியில் உள்ளன. கதிரவன் தோன்றி மறைவதற்குள் ஒரே நாளில், குடும்பத்துடன் சென்று வணங்கினால் ஆனைமுகத்தானின் அருள் பெற்று குறைவின்றி நல்வாழ்க்கை நடத்தலாம் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

    எங்களது ஆன்மீக உலாவும் கோகர்ணத்து மகாகணபதியை வணங்கித் தொடங்கியது. மங்களூருவுக்கு வடக்கே முர்டேஸ்வர். அதற்கும் வடக்கே கோகர்ணம். கடற்கரை நகரங்கள். மேற்கே கடல் என்றால், வழி முழுவதும் ஏற்ற இறக்கமாக மலைகள், நீண்டுயர்ந்த தென்னை, பாக்கு மற்றும் பலா மரங்கள், இடையிடையே ஆறுகள். மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கே தான் பெரிய ஆறுகள் என்று பார்த்தால், மேற்கிலும் பலபல சிறிய ஆறுகள் - தூய்மையான நீருடன் மரங்கள் சூழ உள்ளது அழகோ அழகு.

    கோகர்ணம் மங்களூருவில் இருந்து 238 கிமீ தொலைவில் வடக்கு கன்னரா மாவட்டத்தில், கங்காவல்லி, ஆகனாசினி என்ற இரு ஆறுகளுக்கிடையில் அழகிய கடற்கரைகள் அமைந்த சிற்றூர். இந்த ஆறுகள் கடலில் சங்கமிக்கும் இடம் பசுவின் காது போல் அமைந்திருப்பதால் கோகர்ணா. கோ - பசு, கர்ணா - காது. பூகோள அமைப்பின் படி இது தான் பெயர்க் காரணம்.

    கோகர்ணத்தில் ஆத்மலிங்கத்தை நிலைபெறச் செய்த மகா கணபதியை முதலில் தரிசிப்போம். ஊரின் நடுவில் ஒரு சிறிய தெருவுக்குள் தான் மகாகணபதி கோவில், மகாபலேஸ்வர் கோவில் உள்ளன.

    கோவிலின் முன்புறம் ஓடு வேய்ந்து கேரள பாணியில் இரண்டு அடுக்காக உள்ளது. கருவறைக்குள் சென்று நம் பிள்ளையாரைத் தொட்டு வணங்கலாம். வலம் வரலாம். 5 அடி உயரத்தில் இரண்டு கரங்கள், தூக்கிய துதிக்கை, பானைத் தொந்தி, குட்டைக் கால்கள், ஆனை போல் வளைந்த நெற்றியுடன் கற்பகக் களிறாகவே காட்சி அளிக்கிறார்.

    இரு கரங்களுடன் கணபதி வடிவத்தைப் பார்த்தால் பழமையான சிலையாகத் தோன்றியது. விநாயகர் வழிபாடு தோன்றிய காலத்தால், நான்கு கரங்கள், ஆசனத்தில் அமர்ந்த கோலம் எல்லாம் இல்லாமல், இயற்கையாக ஆனையாகவே பழங்குடி மக்கள் வழிபட்டிருக்கலாம்.

    அழகிய ஆனை முகத்தானை அன்புடன் வணங்கி, அவரால் கோகர்ணத்தில் நிலைபெறச் செய்த உலகின் ஒரே ஆத்ம லிங்கமான அருள்மிகு மகாபலேஸ்வரரைக் காணலாமா!

    சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பழமையான சிவத்தலம் திருக்கோரணம். கர்நாடகாவின் வடக்கு கன்னர மாவட்டத்தில் அரபிக்கடலோரம் அமைந்துள்ள அழகிய சிற்றூர். தேவாரப் பாடல் பெற்ற ஒரே ஒரு துளு நாட்டுத் தலம் கோகரணம். சம்பந்தரும் கோகரணத்து இறைவனை ஏத்தி ஒரு பதிகம் பாடியுள்ளார்.

    கருவறைக்குள் சென்று தொட்டு வழிபடலாம். வழக்கமாக நாம் காணும் லிங்கம் போல் அல்லாமல், குழிக்குள் சிறிய வடிவில் அமைந்துள்ளது.

    'தெற்கின் காசி' என்று போற்றப்படும் திருக்கோகர்ணத்தில் ஈசன் உலகின் ஒரே ஆத்ம லிங்கமாக, 'மிக வல்லமை யுடையவர்' என்று 'மகாபலேஸ்வர்' ஆக எழுந்தருளியுள்ளார்.

    கர்நாடகாவின் 7 முக்தித் தலங்களில் உடுப்பி, கொல்லூர், சுப்ரமணியா, கும்பசி, கோட்டீஸ்வரா, சங்கரநாராயணா ஆகிய இவற்றுடன் கோகர்ணமும் ஒன்று ஆகும். நீத்தார் கடன் இங்கு செய்யப்படுகின்றது.

    பொற்செல்வி ஜெயபிரகாஷ்

    பொற்செல்வி ஜெயபிரகாஷ்

    கயிலையில் இருந்து ராவணன் கொண்டு வந்த ஆத்மலிங்கம் இது என்று கூறப்படுகிறது. இலங்கை கொண்டு செல்லும் வழியில், சிறுவனாக நின்றிருந்த விநாயகரிடம் சற்று நேரம் வைத்திருக்குமாறு கூற, அவர் கீழே வைத்து விடுகிறார்.

    அப்புறம் நடந்தது என்ன? சீரங்கத்துக் கதை தான்! வீபிஷணன் இலங்கை கொண்டு சென்ற பள்ளி கொண்ட பெருமாள் திருவடிவத்தை, உச்சிப் பிள்ளையார் சீரங்கத்தில் தரையில் வைத்து, அங்கு நிலை பெறச் செய்தது போல், இங்கும் ஆத்மலிங்கத்தை கணபதி தரையில் வைத்து சிவனாரைக் கோகரணத்தில் இருக்கச் செய்து விடுகிறார். பிள்ளையாருக்கு இலங்கை மேல் என்ன கோபமோ!

    ராவணன் தன் பலமனைத்தும் கொண்டு லிங்கத்தைத் தூக்க முயல, முடியவில்லை. ஈசனும் 'மிக வலிமையுடையவராக' 'மகாபலேஸ்வர்' ஆனார். லிங்கமும் பசுவின் காது போல் குழைந்ததால் தலம் கோகரணம் ஆனது.

    ராவணன் கோபத்துடன் தூக்க முயன்ற போது லிங்கத்தின் சில பகுதிகள் தாராஸ்வர், குணவந்தேஸ்வர், முர்டேஸ்வர், ஷீஜேஸ்வர் போன்ற இடங்களில் விழ, அவையும் கோகரணத்துடன் சேர்ந்து சிவன் அருள் புரியும் பஞ்ச தலங்களாயின.

    இனி கோவிலுக்குள் செல்வோம். மகாகணபதி கோவிலுக்கு அருகில் இருக்கின்றது. திராவிடக் கட்டிடக் கலை மரபில் கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில். கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் சேர்ந்திருக்க, முன்னால் கொடிமரம். கருவறை விமானம் நம் கோவில்களில் இருந்து சற்றே மாறுபட்டு இருந்தது. வலம் வரும் பிரகாரம், அதை அடுத்து சுற்று மண்டபத்துடன் மதில் சுவர்.

    கொடி மரத்தின் அருகே மதிலை ஒட்டிய மண்டபத்தில், பெரிய மாடு இருந்தது. நிஜமான நந்தியை சுவாமியின் முன்னால் பார்த்தது இங்கு தான்.

    ஈசனின் வலப்புறத்தில் கேரள பாணியில் புதுப்பிக்கப்பட்ட சிறு கோவில் இருந்தது. அம்மன் கோவிலாயிருக்க வேண்டும். 51 சக்தி பீடங்களில் கர்ண (காது) சக்தி பீடம்.

    முன் மண்டபத்தில் சிந்தாமணி கணபதி, துர்க்கை சன்னதிகள் இருபுறங்களிலும் உள்ளன. பெரிய சதுரத்தூண்களில் வீரபத்திரர், காளி வேறு சில சிற்பங்கள் தெரிந்தன. எதையும் நின்று பார்க்க முடியவில்லை.

    கருவறைக்குள் சென்று சுவாமியைத் தொட்டு வணங்கலாம், எப்படி இருப்பார், நன்றாகப் பார்க்க முடியுமா என்றெல்லாம் ஆவலுடன் உள்ளே நுழைகிறோம்.

    தரையில் பித்தளைத் தொட்டி போன்ற அமைப்பு. அதனுள் கருங்கல்லால் ஆன ஆவுடையார் வடிவம். அதன் நடுவில்ஒரு சிறிய வட்டப் பள்ளம். அதன் ஓரத்தில் வெள்ளி பூச்சு இருந்த இடம் விஷ்ணு பாகமாம். பள்ளத்தில் உள்ள நீரைக் கண்ணில் ஒற்றித் தெளித்துக் கொள்ளலாம். பள்ளத்தின் நடுவே, கீழே கருப்பாகத் தெரிந்ததே லிங்கத்தின் மேற்பகுதி. அதையும் தொட்டு வணங்கலாம். மண்டியிட்டுக் குனிந்து தான் தொட முடிந்தது.

    ஆத்ம லிங்கத்தின் உச்சிப் பகுதியே நாம் காண்பது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தின் போது முழுமையாகக் காணலாம்.

    பார்த்தாலே வேண்டியது அளிக்கும் கோகர்ணத்து ஈசனைத் பார்த்து, தொட்டுத் வணங்கிய நிறைவுடன், இயற்கை அழகை ரசிக்க ஓம் கடற்கரை சென்றோம்.

    புகழ் பெற்ற அருள்மிகு மகாகணபதி, மகாபலேஸ்வர் கோவில்களுடன், கோகரணத்தின் கடற்கரைகளும் சிறப்பு வாய்ந்தவை. கோவிலின் முன்னால் சற்று தூரத்தில் கோகர்ணம் கடற்கரை உள்ளது.

    கோவிலின் அருகே உள்ள கடற்கரை தவிர, ஓம், ஹாப்மூன், பாரடைஸ், கடலெ மற்றும் பல கடற்கரைகளும் உள்ளன.

    'ஓம்' கடற்கரை அருகே வண்டிகள் செல்லப் பாதை உள்ளது. ஆனால் அங்கிருந்து சுமார் 125 பெரிய படிகள் இறங்கிச் செல்ல வேண்டும். கைப்பிடிகளும் இல்லை.

    கடற்கரை என்றாலே கால்கள் புதைய நடக்கும் வெண் மணற்பரப்பு, அலைகளின் ஓசை என்று நாம் பார்த்த வங்கக் கடல் போல் இல்லாமல், கடலின் அருகே மலைகள், பாறைகள், மரங்கள், கொஞ்சம் மணல் என்று இருந்தது.

    சமஸ்கிருத 'ஓம்' மாதிரி வடிவத்தில் மாசுபடாத, இயற்கை எழில் நடம் புரியும் அழகிய இடம்.

    இயற்கையை ரசித்து அனுபவிப்பவர்கள், மலையேற்றம், கடல் விளையாடல் விரும்புபவர்களுக்கு கோகரணத்து கடற்கரைகள் உகந்த இடமாகும்

    தொடர்புக்கு-anarchelvi@gmail.com

    ×