search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanchipuram Thiruvalleswarar temple"

    • அன்னை காமாட்சி இத்திருக்கோவிலில் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள்.
    • காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.

    அன்னை காமாட்சி இத்திருக்கோவிலில் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள். ( பெரும்பாலான கோயில்களில் இவற்றில் ஒன்றிரண்டு வடிவில்தான் அன்னை காட்சியளிப்பாள். ) அந்த மூவகை வடிவங்களாவன:

    காமகோடி காமாட்சி- (ஸ்தூல வடிவம்)- (மூல விக்கிரக உருவில்)

    அஞ்சன காமாட்சி (அரூப லக்ஷ்மி)- (சூட்சும வடிவம்)

    காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம்- (காரண வடிவம்)

    காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.

    • திருமேற்றளியீசுவரர் கோவில் செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தின் பிள்ளையார் பாளையத்தில் அமைந்துள்ளது.
    • அப்பர்பெருமான் பதிகம் ஒன்றுமாக இரண்டு பதிகங்கள் உள்ளன.

    திருக்கச்சிமேற்றளி - திருமேற்றளியீசுவரர் கோவில் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தின் பிள்ளையார் பாளையத்தில் அமைந்துள்ளது.

    காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் ஐந்தில் (திருக்கச்சியேகம்பம், திருக்கச்சிமேற்றளி, திருவோணகாந்தன்தளி, கச்சி அனேகதங்காவதம், திருக்கச்சிநெறிக் காரைக்காடு) இதுவும் ஒன்றாகும்.

    இத்தலத்திற்குச் சம்பந்தர்பதிகம் ஒன்றும் அப்பர்பெருமான் பதிகம் ஒன்றுமாக இரண்டு பதிகங்கள் உள்ளன.

    ×