search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமாட்சி"

    • ஏழு சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருமலை:

    திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் கோலாகலமாகத் தொடங்கி நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மின் விளக்குகள், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காமாட்சி, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர் எழுந்தருளி ஏழு சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    கபிலத்தீர்த்தம் புஷ்கரணியின் கரைகளில் அமர்ந்திருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் முப்பெரும் தேவியரை தரிசனம் செய்தனர்.

    தெப்போற்சவத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சுப்புராஜு, கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரவிக்குமார், பாலகிருஷ்ணா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் பக்தி பாடல்களை பாடினர்.

    அதைத்தொடர்ந்து தெப்போற்சவத்தின் 5-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) சண்டிகேஸ்வரர், சந்திரசேகரர் தெப்பத்தில் எழுந்தருளி 9 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    • தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கின்றன. எல்லா ஆலயங்களிலும் புனிதனும், சக்தியும் இருக்கத் தான் செய்கின்றன.
    • மேல்மருவத்தூர் ஆலயம் மற்ற ஆலயங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. அதை மருவத்தூர் மண்ணை மிதித்து, மருவத்தூர் அன்னையை தொழுவார்கள் மனப்பூர்வமாக உணர்ந்துகொள்கிறார்கள்.

    அம்மா, அம்மா என்று வினாடிக்கொரு முறை நினைத்து வழிபடுகிறோமே - அந்த அன்னை ஆதிபராசக்தி எங்கே இருக்கிறாள்? எந்தெந்த வடிவங்களில் இருக்கிறாள்? அந்த சக்தி தெய்வத்தின் நிதர்சனமான " திவ்ய " தரிசனம் எல்லோருக்கும் கிடைக்குமா? அந்தத் தரிசனம் எப்போது கிடைக்கும் ?- என்று மனிதமனம் சிந்தனை வலையைப் பின்னிய நேரத்தில் 10 பக்க கட்டுரை இயல்பாகக் கிடைத்தது.

    மச்ச புராணத்தில் 108 சக்தித்தலங்களில் 108 வித , விதமான பெயர்களோடு வித, விதமான வெவ்வெறு வடிவங்களில் துடிப்போடு ஆதிபராசக்தி துலங்கி அருள் பாலிக்கிறாள் என்று நூல்களில் படித்து அறிகிறோம். அதில் 72- வது தலமான "சித்தவனம் -" என்பது தான் "மேல்மருவத்தூர்" என்று ஆன்மிக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

    "அன்னை இல்லாத இடம் ஏது? அவள் தூணிலும் இருக்கிறாள் துரும்பிலும் இருக்கிறாள்!!" என்று படிக்காத பாமரன் பட்டென்று கூறிவிடுகிறான்.

    எதையுமே ஆராய்ச்சி செய்து பார்க்கும் படித்த மேதாவிகள் தான் புராணங்களிலும், தத்துவங்களிலும் அன்னையைத் தேடுகிறார்கள்!

    எது எப்படி இருப்பினும், பராசக்தியை தேடுகின்ற பக்தனின் முயற்சிகள் எல்லாமே பராசக்தியால் அங்கீகரிக்கப்பட்டவை தான்!

    சரி, அம்மா, எங்கே இருக்கிறாள்?

    மதுரையில் - மீனாட்சி

    காஞ்சியில் - காமாட்சி

    காசியில் - (விசாலாட்சி அன்னபூரணி)

    நெல்லையில் - காந்திமதி

    மீனாட்சிபுரத்தில் - ஸ்ரீசியாளா (நெல்லை தேவி)

    கன்னியாகுமரியில் - கன்னியாகுமரி அம்மன்

    முப்பந்தலில் - இசக்கி அம்மன்

    மண்டைக்காட்டில்- பகவதி

    வண்ணாரப்பேட்டையில் (நெல்லை) - பேராச்சி அம்மன்

    தெய்வசெயல்புரத்தில் (தூத்துக்குடி) -ஸ்ரீராஜராஜேஸ்வரி

    நயினார்கோவிலில் - ஸ்ரீ சௌந்திர நாயகி

    ஆரல்வாய்மொழியில் - இசக்கி அம்மன்

    நயினார் குளத்தில் (நெல்லை) - பிட்டப்பரத்தி அம்மன்

    காயாமொழியில் - முப்புராதி அம்மன்

    நங்கைநல்லூரில்- ஸ்ரீ ராஜ ராஜேவரி

    திரு ஈங்கோய் மலையில்- ஸ்ரீ லலிதாம்பிகை

    ஏரலில்- குரங்கணி அம்மன்

    படைவீட்டில் - ரேணுகாம்பாள்

    தென்காசியில்- உலகம்மை

    ஸ்ரீவில்லிப்புத்தூரில்- ஆண்டாள்

    சிவகாசியில் - பத்ரகாளி அம்மன்

    கோவில்பட்டியில் - செண்பக வல்லி அம்மன்

    சாத்தூரில் - இருக்கன்குடி மாரியம்மன்

    விருதுநகரில் -(முத்துமாரி அம்மன், வெயிலுகந்த அம்ம)

    அருப்புக்கோட்டையில் - முத்துமாரி அம்மன்

    இராமநாதபுரத்தில்- பர்வதவர்த்தனி அம்மன்

    பரமக்குடியில்- முத்தால அம்மன்

    காரைகுடியில்- கொப்புடைய அம்மன்

    மடப்புரத்தில் - காளி

    சங்கரன்கோவிலில் - கோமதி அம்மன்

    தாயமங்கலத்தில் - முத்துமாரி அம்மன்

    வீரபாண்டியில் - கௌமாரி அம்மன்

    நந்தத்தில் -மாரியம்மன்

    சோழவந்தானில்- ஸ்ரீ ஜனக மாரியம்மன்

    திண்டுக்கல்லில்- கோட்டை மாரியம்மன்

    சேலத்தில்- அன்னதான மாரியம்மன்

    பெங்களூரில் - அன்னம்மா

    சாக் கோட்டையில் - அம்பாள்

    திருவாடானையில் - ஸ்ரீ சிநேகவல்லி அம்மன்

    புத்தூரில் -ஸ்ரீ திரௌபதி அம்மன்

    சிக்கலில் - ஸ்ரீ தேவசேனை

    சிதம்பரத்தில் - சிவகாமசுந்தரி

    திருக்கடவூரில் - அபிராமி

    திருச்சானூரில் - பத்மாவதி தாயார்

    அலர்மேலுமங்காபுரத்தில் -அலமேலுமங்கா

    திருப்பூரில் - (பட்டத்தளர்ச்சி அம்மன், ஓடைக்காடு பத்ரகாளி அம்மன்)

    பல்லடத்தில்- பொங்காளி அம்மன்

    அவினாசியில்- கருவலூர் மாரியம்மன்

    சத்திய மங்கலத்தில்- பண்ணாரி அம்மன்

    பொள்ளாச்சியில் - சூலக்கல் மாரியம்மன்

    ஈரோட்டில் - சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன்

    கோவையில் - கோணியம்மன் தண்டு மாரியம்மன், சௌடாம்பிகை அம்மன்

    பேரூரில் -பச்சைநாயகி அம்மன்

    மேட்டுப்பாளையத்தில்- வனபத்ர காளியம்மன்

    ஊட்டியில் -காளி - மாரி

    திருச்சியில்-சமயபுரம் மாரியம்மன்

    புதுக்கோட்டையில்-ஸ்ரீ மாதா புவனேஸ்வரி

    கன்னிவாட்யில் - ராஜ காளி அம்மன்

    தஞ்சையில் - முத்து மாரியம்மன், பங்காரு காமாட்சி அம்மன்.

    புன்னை நல்லூரில் - முத்துமாரி அம்மன்

    பெரியபாளையத்தில் - பெரியபாளையத் அம்மன்

    மேல்மலையனூரில் - அங்காளபரமேஸ்வரி

    ராசிபுரத்தில் சேலம் - சுமங்கலி அம்மன்

    திருவண்ணாமலையில் - உண்ணாமலை அம்மை

    திருவானைக்காவில் - அகிலாண்டேவரி

    வேளாங்கண்ணியில்- ஆரோக்கிய மாதா

    தொட்டியங்குளத்தில் - மாரியம்மன்

    செந்தூரில் -சந்தன மாரியம்மன்

    மணப்பாறையில் -முத்து மாரியம்மன்

    சிறுவாச்சூரில் - மதுர காளியம்மன்

    செங்கையில் - (மணபாத்தம்மன் நாகாத்தம்மன்)

    பெருங்கரையில் -சதுரங்க நாயகி

    பட்டுக்கோட்டையில் - காளியம்மன்

    நாட்டரசன்கோட்டையில் - அம்மன்

    ஆத்தூரில் - சோமசுந்தரி அம்மன்

    வேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்) - தையல் நாயகி அம்மன்

    நாகப்பட்டினத்தில் -ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன்

    திருக்குற்றாலத்தில் - ஸ்ரீ குழல்வாய் மொழி அம்மன்

    திருச்சி, குளித்தலை மேட்டு மகாதான புரத்தில் - அம்மன்

    திருவிடைமருதூரில் - ஸ்ரீ மூகாம்பிகை

    கங்கை கொண்டானில் - ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்

    உறையூரில் -வெக்காளி அம்மன்

    மாயவரத்தில் - ஸ்ரீ அபயாம்பிகை அம்மன்

    பாபநாசத்தில் நெல்லை - உலகாம்பிகை

    திருவொற்றியூரில் -ஸ்ரீ வடிவுடையம்மன்

    கும்பகோணத்தில்- ஸ்ரீ மங்களாம்பிகை

    திருக்கருகாவூரில் (தஞ்சை ) -ஸ்ரீ கர்ப்பரட்சகாம்பிகை (கருகாத்த )அம்மன்

    திருவையாறு தலத்தில் - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி

    மயிலாடுதுறையில் -( ஸ்ரீ அஷ்டாத சபுஜ மகாலஷ்மி துர்க்கா தேவி)

    சென்னையில் -(மயிலை கற்ப காம்பாள், கோல விழி பத்ரகாளி அம்மன், முண்டக கண்ணியம்மன் முப்பத்தம்மன், ரேணுகா பரமேஸ்வரி அம்மன்)

    திருவேற்காட்டில்- கருமாரி அம்மன்

    மாங்காட்டில் - காமாட்சி அம்மன்

    மைசூரில் - சாமுண்டீஸ்வரி

    கொல்லூரில் - மூகாம்பிகை

    சோற்றானிக் கரையில் - பகவதி

    கொடுங்கல்லூரில் - பகவதி

    காம்புழாவில்- பகவதி

    காளஹஸ்தியில் - ஸ்ரீ ஞான பிரஸன்னாம்பிகை

    விஜயவாடாவில் - கனக துர்க்கா

    கல்கத்தாவில் - காளி

    சிருங்கேரியில் - சாரதாம்பாள்

    தங்க வயலில் - கங்கையம்மன்

    மங்களூரில்- மங்களாம்பிகை

    குஜராத்தில் - ஸ்ரீ சந்தோஷி மாதா

    மலேசியாவில் - மகாமாரியம்மன்

    சிங்கப்பூரில் - வீரிமா காளியம்மன்

    சபரிமலையில் - ஸ்ரீ மாளிகைபுரத்து மஞ்சள் மாதா

    - என்று உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அன்னை ஆதிபராசக்தி மேல்மருவத்தூரில் "சுயம்பு" உருவில் கொலுவிருந்து, அருள்திரு அடிகளார் தேகத்தில் தங்கி, அவருடைய ஆன்மாவில் ஜக்கியமாகி, "பேசும்" தெய்வமாகவும் "நடமாடும்" தெய்வமாகவும் இருந்து அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறாள்.

    தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கின்றன! எல்லா ஆலயங்களிலும் புனிதனும், சக்தியும் இருக்கத் தான் செய்கின்றன!

    ஆனால் மேல்மருவத்தூர் ஆலயம் மற்ற ஆலயங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது! அதை மருவத்தூர் மண்ணை மிதித்து, மருவத்தூர் அன்னையை தொழுவார்கள் மனப்பூர்வமாக உணர்ந்துகொள்கிறார்கள்.

    1. குருவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் சக்தி தலம் மேல்மருவத்தூர்!

    2. அன்னையின் உரு, அருள்திரு அடிகளார் அவர்களின் அருள் காட்டுதலில் – ஆன்மீகத் தொண்டுகள் செய்து வரும் இலட்சக்கணக்கான ஆடவர்- மகளிர் சக்தி தொண்டர்களை கொண்டது மேல்மருவத்தூர்!

    3. ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு "அன்னையின் அருள்வாக்கு விதிகளுக்கு மட்டும்" உட்பட்ட அருள் சித்தர் பீடம் மேல்மருவத்தூர்!

    4. ஆதிபராசக்திக்கு விரதமிருந்து, சக்திமாலை அணிந்து சக்தி இருமுடி செலுத்தும் சக்தி தலம் மேல்மருவத்தூர்!

    5. அன்னையின் அருள்வாக்குப் படி எல்லா காரியங்களும் நடைபெறுவதால் – "தெய்வீக நிர்வாகம்" நடக்கும் சக்தி தலம், மேல்மருவத்தூர்!

    6. சமுதாயத் தொண்டுகளுக்கும், கல்வி மருத்துவ பண்பாடு அறத் தொண்டுகளுக்கும் தமிழகத்தில் முதன்மையான ஆலயம், மேல் மருவத்தூர்!

    7. ஜாதி, மத, இன வேறுபாடில்லாமல், ஏழை- பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் "ஒரே தாய்!! ஒரே குலம் !!" என்ற ஒரே சிந்தனையுடன் "செந்நிற" ஆடை அணிந்து எல்லோரும் ஆன்மீகப் பணிகளைச் சமமாக செய்ய வாய்ப்புகள் தரும் சக்திதலம், மேல்மருவத்தூர்!

    8. 'சமுதாயத்திலும், ஆன்மிகத்திலும், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!" என்று வாயளவில் பேசாமல், செயல் அளவில் பெண்களுக்கு எல்லாவற்றிலும் (வழிபாட்டு பூசைகளில், கேள்வி பூசைகளில், அமைப்பு , நிர்வாகத்தில்) அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் சக்தி தலம் , மேல்மருவத்தூர்!

    9. வித்தியாசமான எளிய பூஜை, திருஷ்டி முறைகளும், வேள்வி முறைகளும் கொண்டு, "சப்தகன்னிமார்களுக்கு " சந்நிதியும், ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை முதலியவற்றைமாய்க்கும் அதர்வண பத்ரகாளி சந்நிதியும் அமைந்த சக்திதலம், மேல்மருவத்தூர்!

    10. 1800 -க்கு மேற்பட்ட ஓம் சக்தி மன்றங்களின் வாயிலாக வழிபாடும், சமுதாயத் தொண்டும் செய்து, அதை நிர்வகித்து வரும் தலைமை சித்தர்பீடம், மேல்மருவத்தூர்!

    11. "உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!" என்ற உயர்ந்த இலட்சியத்திற்கு - தனது வியர்வைத் துளிகளால் அபிடேகம் செய்து வரும் அருள்திரு. அடிகளார் அவர்களால் அகிலம் முழுமைக்கும் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டு வரும் அற்புத சக்தி தலம், மேல்மருவத்தூர்!

    இத்தனை சிறப்பு அம்சங்கள் மேல்மருவத்தூரில் இருப்பதால் தான் "தொண்டு" -என்பது இங்கே தவிர்க்க முடியாததாகிவிடுகிறது!

    காமாட்சி அம்மனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    ஸ்யாமாகாசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்மநாமனனே
    ஸீமாஸுன்ய கவித்வ வர்ஷ ஜனனீயா காபி காதம்பினீ
    மாராராதி மனோவிமோஹனவிதௌ காசித்தம: கந்தலீ
    காமாக்ஷ்யா: கருணாகடாக்ஷ லஹரீ காமாய மே கல்பதாம் மூக பஞ்சசதீ

    பொதுப் பொருள்:

    காமாட்சி தேவியே, கருணை நிரம்பிய தங்கள் கண்களை நிகரற்ற கருப்பு நிறமுள்ள சந்திரனைப் போலவும், மூவுலகிலும் புண்ணியம் செய்தவர்களின் வாக்கில் அளவற்ற கவித்துவ சக்தியைப் பொழிவிக்கும் மேகக் கூட்டங்கள் போலவும், மன்மதனை எரித்த பரமேஸ்வரனின் மனதை மோகிக்கச் செய்வதில் நிகரற்ற இருள் குவியல் போலவும் காண்கிறேன். அந்த உன் கருணா கடாக்ஷ அலைகள் எனது அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டுகிறேன். அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய உன் திருவருள் பக்தர்களுக்காக எதைத்தான் செய்யாது? தங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன், தாயே!
    ×