search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thepposavam"

    • தினமும் மங்கள இசை, பக்தி இசை, வாகன பவனி நடைபெற்றது.
    • இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நிகழ்ச்சி.

    பூதப்பாண்டி:

    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி-சிவகாமி அம்மன் கோவிலில் தைத்திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மங்கள இசை, பக்தி இசை, வாகன பவனி நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடந்தது. கோவிலில் இருந்து விநாயகரையும், சுவாமியையும், அம்மனையும் தேரில் எழுந்தருள செய்தனர். பின்னர் தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    விழாவில் விஜய் வசந்த் எம்.பி, தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகி ருஷ்ணன், உறுப்பினர் ராஜேஷ், பூதப்பாண்டி பேரூ ராட்சி தலைவர் ஆலிவர் தாஸ், செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. துணைச் செயலாளர்கள் கரோலின் ஆலிவர் தாஸ், பூதலிங்கம், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்து க்குமார், தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவ தியப்பன், நாகராஜன், விஜய மணியன், ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இரவு 7 மணிக்கு பக்தி மெல்லிசையும், 9 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (25-ந்தேதி) காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மேல் ஆராட்டு வைபோக நிகழ்ச்சியும், 7 மணிக்கு பக்தி மெல்லிசையும், இரவு 9 மணிக்கு ஸ்ரீ கன்னி விநாயகர் தூத்துவாரி அம்மன் கோவிலில் இருந்து சுவாமியும் அம்மாளும் தெப்போற்சவம் புறப்படும் நிகழ்ச்சியும் இரவு 10 மணிக்கு தெப்போற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • ஏழு சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருமலை:

    திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் கோலாகலமாகத் தொடங்கி நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மின் விளக்குகள், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காமாட்சி, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர் எழுந்தருளி ஏழு சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    கபிலத்தீர்த்தம் புஷ்கரணியின் கரைகளில் அமர்ந்திருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் முப்பெரும் தேவியரை தரிசனம் செய்தனர்.

    தெப்போற்சவத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சுப்புராஜு, கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரவிக்குமார், பாலகிருஷ்ணா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் பக்தி பாடல்களை பாடினர்.

    அதைத்தொடர்ந்து தெப்போற்சவத்தின் 5-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) சண்டிகேஸ்வரர், சந்திரசேகரர் தெப்பத்தில் எழுந்தருளி 9 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    ×