என் மலர்tooltip icon

    உலகம்

    • பால்மிரோவில் இருந்து கிளம்பிய திருமண கொண்டாட்ட கப்பல் தெற்கு பிரான்ஸ் வரை சென்று திரும்பியது.
    • பணத்தால் அனைத்தையும் வாங்கி மற்றவர்களை வரவிடாமல் செய்வது நியாயமானது அல்ல எனச் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் வாசிகளும் அபிப்ராயப்படுகின்றனர்

    உலக பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் உள்ளிட்ட பெருநிறுவனங்களின் உரிமையாளருமான முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை விமரிசையாக நடத்தி வருகிறார். என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் சி.இ.ஓ விரென் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்செண்டுடன் ஆனந்த் அம்பானிக்குக் கடந்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

     

    அதன்பிறகு நடந்த ப்ரீ வெட்டிங் வைபவத்தில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன் ஆலியாபட் ஜான்விகபூர், கேத்ரீனா கைஃப் இயக்குனர் அட்லி உள்பட பல இந்தி திரையுலகத்தினர் கலந்துகொண்டனர்.

    பிரான்ஸ் தலைநகர் இத்தாலியில் சொகுசு கப்பலில் கடந்த மே 29-ந்தேதி முதல் 4 நாட்களுக்கு ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் 2 வது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் ஆடம்பரமாக நடைபெற்றது. இதில் பிரபல பாப் பாடகி கேட்டி பெர்ரி உட்பட பல சர்வதேச நட்சத்திரங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை அலங்கரித்தனர்.

    பால்மிரோவில் இருந்து கிளம்பிய திருமண கொண்டாட்ட கப்பல் தெற்கு பிரான்ஸ் வரை சென்று திரும்பியது. அதன்பிறகு இத்தாலி நகரத்துக்குள் தொடரும் இந்த நிகழ்ச்சிக்காகப் பல இடங்கள், சுற்றுலாப் பயணிகள் வரவும், உள்ளூர் மக்கள் நுழையவும் தடை செய்யப்பட்டது.

     

    கேரளாவைப் போல இத்தாலி நகரத்துக்கிடையில் நீர்நிலைப் போக்குவரத்து அதிகம். திருமண நிகழ்ச்சிக்காக சில நீர் வழிப் பாதைகளை அடைத்ததால் உள்ளூர் வியாபாரம் பாதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் ரெஸ்டாரன்டுகள் இந்த நிகழ்ச்சிக்காக மொத்தமாக வாடகைக்கு எடுக்கப்பட்டது முகம் சுளிக்க வைத்துள்ளது.

    பணத்தால் அனைத்தையும் வாங்கி மற்றவர்களை வரவிடாமல் செய்வது நியாயமானது அல்ல எனச் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் வாசிகளும் அபிப்ராயப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் இருந்து வரும் அதிக சத்தத்தாலும், நிகழ்ச்சிக்கு வருகை தருபவர்களின் மரியாதைக் குறைவான நடத்தையாலும் உள்ளூர் மக்களும், விடுதி ஊழியர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையிடம் அவர்கள் புகார்களும் அளித்து வருகின்றனர்.

     

    இதற்கிடையே ஆனந்த் அம்பானி மட்டும் ராதிகாவின் திருமணம் வரும் ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ரெயில் நாளை மெக்சிகோவில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது.
    • ஜூலை மாதம் கனடா திரும்பி, அத்துடன் அங்கு ஓய்வு பெறுகிறது.

    கனேடிய பசிபிக் கன்சாஸ் சிட்டியை (CPKC) உருவாக்கிய நட்புரீதியான இணைப்பைக் கொண்டாடும் விதமாக, 1930ல் உருவாக்கப்பட்டது ஒரு நீராவி இன்ஜின் ரெயில்.

    'பேரரசி' என்று அழைக்கப்படக்கூடிய இந்த பழங்கால ரெயில் கடந்த ஏப்ரல் மாதம் கால்கரியில் இருந்து புறப்பாட்டு கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிகோவைச் சென்றடையகிறது.

    இந்த ரெயில் நாளை மெக்சிகோவில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது. பின்னர், ஜூலை மாதம் கனடா திரும்பி, அத்துடன் அங்கு ஓய்வு பெறுகிறது.

    இந்நிலையில், பேரரசி ரெயில் மெக்சிகோவில் நுழையும்போது ஹிடால்கோ பகுதி அருகே பலரும் புகைப்படம் எடுப்பதற்காக கூடினர்.

    அப்போது, தன் மகனுடன் வந்திருந்த இளம்பெண் ஒருவர் பேரரசி ரெயில் முன்பு செல்பி எடுக்க தனது செல்போனை எடுத்தார். ரெயில் அருகே வரும்போது, தண்டவாளம் அருகே சென்ற இளம்பெண் செல்போனுடன் முட்டிபோட்டு அமர்ந்தார்.

    அப்போது, ரெயிலின் எஞ்சின் இளம்பெண்ணின் தலையில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பெண் அடிபட்ட நொடியிலேயே உயிரிழந்தார்.

    ரெயிலில் அடிபட்டு பெண் உயிரிழக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • சோமாலியா 179 வாக்குகள் பெற்றது. டென்மார்க் 184 வாக்குகளும், கிரீஸ் 182 வாக்குகளும் பெற்றன.
    • பாகிஸ்தான் 182 வாக்குகள் பெற்றது. பாகிஸ்தான் 8-வது முறையாக உறுப்பினராக உள்ளது.

    பாகிஸ்தான், சோமாலியா, டென்மார்க், கிரீஸ் மற்றும் பனமா ஆகிய நாடுகள் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் இரண்டு வருட உறுப்பினர் பதவி காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதியில் இருந்து தொடங்கும்.

    ஐ.நா, பொது சபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் இந்த ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2025 ஜனவரி 1-ந்தேதியில் இருந்து 2026 டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த நாடுகளில் உறுப்பினர் பதவிக்காலமாகும்.

    ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய-பிசிபிக் ஆகிய இரண்டு கண்டங்களுக்கான இடத்தில் சோமாலியா 179 வாக்குகள் பெற்றது. பாகிஸ்தான் 182 வாக்குகள் பெற்றுள்ளது.

    லத்தீன் அமெரிக்கா, கரிபீயன் மாநிலங்களுக்கான இடத்தில் பனமா 183 வாக்குகளை பெற்றது. மேற்கு ஐரோப்பா மற்றும் மற்ற மாநிலங்களுக்கான இடங்களில் டென்மார்க் 184 வாக்குகளும், கிரீஸ் 182 வாக்குகளும் பெற்றன.

    பாகிஸ்தான் 182 வாக்குகள் பெற்று ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராவது பெருமைக்குரிய தருணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதச சமூகத்தின் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் 8-வது முறையான நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    • 2019-ம் ஆண்டில் இருந்து மலையை சுத்தம் செய்தல் பிரசாரத்தை நேபாளம் மேற்கொண்டு வருகிறது
    • ஏப்ரல் 11-ந்தேதியில் இருந்து மொத்தம் 55 நாட்களில் 11 டன் குப்பைகளை அகற்றியுள்ளது.

    இமயமலையில் அமைந்து உள்ளது உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட். இந்த எவரெஸ்ட் சிகரம் 8848.86 மீட்டர் உயரம் கொண்டதாகும். நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட சிகரத்தில் ஏற உலகின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேறும் வீரர்கள் வருகை தருவார்கள்.

    இவர்கள் மலையேற உதவி செய்யும் ஷெர்பாக்களின் உதவியுடன் மலையேறுவார்கள். பலர் எவரெஸ்டின் உச்சிக்கு செல்ல முயன்று குளிர் தாங்க முடியாமல் உயிரிழப்பது உண்டு. அடிக்கடி பனிச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்பதும் உண்டு. சில நேரங்களில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்க முடியாது நிலையும் ஏற்படும். இவ்வாறு மீட்க முடியாதவர்களின் உடல்கள் அப்படியே கிடக்கும்.

    மேலும், மலையேறும் நபர்களால் எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 2019-ம் ஆண்டு மலையை சுத்தம் செய்தல் பிரசாரத்தை (Mountain Cleaning Campaign) நேபாள அரசு மேற்கொண்டது.

    ஆண்டுதோறும் இந்த பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த வருடம் கடந்த ஏப்ரல் மாதம் நேபாள நாட்டின் ராணுவ வீரர்கள் இந்த திட்டத்தை தொடங்கினர். 12 பேர் கொண்ட ராணுவ வீரர்கள் 18 பேர் கொண்ட மலையேற உதவி புரியும் குழுவுடன் பயணத்தை மேற்கொண்டது.

    55 நாள் பயணத்தின் முடிவில் 11 டன் குப்பைகளை எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து அகற்றியுள்ளது. மேலும், ஐந்து மனித உடல்கள் மற்றும் ஒரு மண்டை ஓடு ஆகியவற்றையும் அகற்றியுள்ளது.

    • எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் சுமார் 400 அடி மெகா ராக்கெட்டை தயாரித்துள்ளது.
    • மூன்று முறை வானில் வெடித்து சோதனை தோல்வியில் முடிந்தது.

    ஸ்பேஸ் எக்ஸ் 400 அடி (121 மீட்டர்) நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் இதற்கு முன் மூன்று முறை வானில் செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மூன்று முறையில் ராக்கெட் செலுத்தப்பட்டதும் வெடித்து சிதறி சோதனை தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து ஏவிய நிலையில் வெற்றிகரமான வானில் சீறிப்பாய்ந்து மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.

    இன்று காலை மெக்சிகோ வளைகுடாவில் இருந்து இந்திய பெருங்கடல் நோக்கி ஏவப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் விண்கலத்தின் இருந்து முதல்-நிலை பூஸ்டர் தனியாக பிரிந்து திட்டமிட்டபடி வளைகுடாவில் விழுந்தது. ஸ்டார்ஷிப் விண்கலம் ஆறு ராப்டர் என்ஜின்களுடன் தொடர்ந்து அதன் பயணத்தை தொடர்ந்தது.

    எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் மற்றும் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

    • வேகமாக வளர்ந்து வரும் தைவான்- இந்தியா கூட்டாண்மை, நம்முடைய வர்த்தக ஒத்துழைப்பு மேம்படுவதை எதிர்பார்க்கிறோம்- தைவான் அதிபர்.
    • சீனாவுடன் ராஜாங்க ரீதியில் உறவு வைத்திருக்கும் நாடுககள் தைவான் அதிகாரிகளுடன் உரையாடுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது- சீனா

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

    3-வது முறையாக பதவி ஏற்க இருக்கும் பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தைவானில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் புதிய அதிபராக லாய் சின்-டே தேர்ந்தெடுங்கப்பட்டார்.

    அவர் பிரதமர் மோடிக்கு எக்ஸ் தளம் மூலம் வாழ்த்து தெரிவித்தார். லால் சின்-டே தனது எக்ஸ் பக்கத்தில் "தேர்தலில் வெற்றி பெற்ற உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வேகமாக வளர்ந்து வரும் தைவான்- இந்தியா கூட்டாண்மை, நம்முடைய வர்த்தக ஒத்துழைப்பு விரிவுப்படுத்துதல், இந்தோ-பசிபிக் அமைதி உள்ளிட்ட விவகாரத்தில் மேம்படுவதை எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு மோடி நன்றி தெரிவித்து பதில் அனுப்பியிருந்தார். அதில் "உங்களுடைய அன்பார்ந்த தகவலுக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை நோக்கி பணியாற்ற எதிர்பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறியதாவது:-

    சீனாவுடன் ராஜாங்க ரீதியில் உறவு வைத்திருக்கும் நாடுககள் தைவான் அதிகாரிகளுடன் உரையாடுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. இந்த உலகத்தில் ஒரே சீனாதான். சீனாவில் ஒருங்கிணைந்த பகுதியாக தைவான் உள்ளது. ஒரே சீனாவின் கொள்கை என்பது சர்வதேச உறவுகளில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறை மற்றும் சர்வதேச சமூகத்தில் நிலவும் ஒருமித்த கருத்து. இந்தியா இதில் தீவிர அரசியல் ஈடுபாட்டை உருவாக்கியுள்ளது. இதற்கு சீனா இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு உத்தரவிட்டது.
    • இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரை இந்தியாவில் இருந்து வெளியேற்றியது.

    ஒட்டாவா:

    கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கடந்த ஆண்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்தார். இதையடுத்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேறுமாறு அந்த நாடு உத்தரவிட்டது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா தூதரை இந்தியாவில் இருந்து வெளியேறச் சொல்லியது. கனடாவை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுக்கும் நடைமுறையையும் நிறுத்தி வைத்தது.

    காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது குற்றம் சுமத்தியபோது ஆதாரமற்றவை என இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், கனடா நாட்டின் ஜனநாயகத்துக்கு இந்தியா இரண்டாவது பெரிய வெளிநாட்டு அச்சுறுத்தலாக உள்ளது. அச்சுறுத்தல் தருவதில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. அச்சுறுத்தல் தருவதில் 2-வது இடத்தில் இருந்த ரஷியா 3-வது இடத்திற்குச் சென்றுள்ளது. கனடாவின் அரசியல் கட்சி தலைவர்கள் வெளிநாட்டு சக்திகளால் செல்வாக்கு பெற்றிருக்கலாம். வெளிநாட்டு தூதர்களுடன் ரகசிய தகவல்களைப் பகிர்ந்திருக்கலாம் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    • காசா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மாதமாக போர் நடந்து வருகிறது. ரபாவிலும் இருதரப்புக்கும் இடையே மோதல் நடக்கிறது.

    ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய காசாவில் உள்ள நுசி ராட்டில் பள்ளிக்கூடத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தரப்பும் உறுதிசெய்துள்ளது.

    இதுதொடர்பாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டு அதை சமாளிக்கப் பொய்க் கதைகளை இஸ்ரேல் சொல்லி வருகிறது என தெரிவித்தார்.

    • சரக்கு ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டு கவிழ்ந்தது.
    • விபத்தில் சிக்கிய ரெயில் தனியார் நிறுவனத்தால் இயக்கப்பட்டதாகும்.

    பர்டுபிஸ்:

    செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிராக்கிலியில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் பர்டுபிஸ் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் ஒன்று திடீரென தடம் புரண்டு கவிழ்ந்தது.

    அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ரெயில் எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 4 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 26 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய ரெயில் தனியார் நிறுவனத்தால் இயக்கப்பட்டதாகும்.

    இந்த ரெயில் ஸ்லோவாக்கியாவின் எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு உக்ரைன் நகரான சோப் நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த ரெயிலில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர்.

    விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக செக்குடியரசு நாட்டின் பிரதமர் பீட்டர் பியாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் 2 ரெயில்கள் மோதிக்கொண்டது மிகவும் துரதிஷ்ட வசமானது. விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது.
    • சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    ஏமன்:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் இஸ்ரேல் படையினர் 7 மாதங்களுக்கு மேலாக கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் செங்கடல் பகுதியில் வரும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறி வைத்து அவர்கள் தாக்கி வருகிறார்கள். இதனால் செங்கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக நேற்று செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்கினார்கள்.

    மேலும் அரபிக்கடல் பகுதியிலும் அமெரிக்க நாட்டு கப்பல் மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தாக்குதலில் சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • ரஷியாவை எதிரி என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம்.
    • தலிபான் அரசுடன் நாங்கள் உறவுகளை உருவாக்க வேண்டும்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரில் பொதுமக்கள், வீரர்கள் பலர் கொல்லப்பட்டாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி,இங்கிலாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆயுத உதவியும் செய்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ரஷியா மீது உக்ரைன் திடீர் தாக்குதல் நடத்தியது.

    இதில் ஜெர்மனி நாட்டு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரஷியா மீது தாக்குதல் நடத்த ஜெர்மனியின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தி இருப்பது ஆபத்தான நடவடிக்கை ஆகும். மேற்கு நாடுகளை தாக்க நீண்ட தொலைவு சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களை வேறு சில நாடுகளுக்கு ரஷியா வழங்கும்.

    எங்களுடைய நாட்டின் இயைாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிய வந்தால் ரஷியா தன்னை தற்காத்துக்கொள்ள அனைத்து வழிகளையும் பின்பற்றும். அணு ஆயுதங்களை பயன் படுத்தவும் தயாராக இருக்கிறோம். ரஷியாவை எதிரி என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம்.

    எதார்த்தத்தை சமாளிக்க வேண்டும் என நாங்கள் எப்போதும் நம்புகிறோம். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் உள்ளனர். தலிபான் அரசுடன் நாங்கள் உறவுகளை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு புதின் கூறினார்.

    2003-ம் ஆண்டு தலிபான்களை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என ரஷியா அறிவித்தது. தற்போது ரஷியா இந்த நிலைமாற்றத்தில் மனம் மாறி உள்ளது.

    கடந்த வாரம் ரஷியா வெளியுறவு துறை மந்திரி செர்ஜிலால் ரோஸ் கூறும் போது தலிபான்களை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு மாஸ்கோ திட்டமிட்டுள்ளது என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு என சில விதிமுறைகளும், தனியுரிமை கொள்கைகளும் உண்டு.
    • உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.

    உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.இதற்குமுன் டுவிட்டர் என்றழைக்கப்பட்ட செயலி எலான் மஸ்க் வாங்கியதற்கு பிறகு அதில் பல மாற்றங்களை அமைத்து, புது லோகோ, புது பிராண்டிங் செய்து 2023 ஆம் ஆண்டு எக்ஸ் என்று பெயரையும் மாற்றினார்.

    பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு என சில விதிமுறைகளும், தனியுரிமை கொள்கைகளும் உண்டு. அதில் பல செயலிகள் அரை நிர்வாண புகைப்படங்களையும், நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்ய அனுமதிப்படு கிடையாது. அதை மீறி நாம் அதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டால் அந்த செயலியில் இருந்து நம்முடைய அக்கவுண்டை முடக்கிவிடுவர்.

    தற்பொழுது எக்ஸ் தளத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் நாம் இனிமேல் ஆபாச தரவுகளையும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்யலாம். 18 வயதிற்கு கீழ் செயலியை பயன்படுத்துவோர் இந்த ஆபாசங்களை பார்க்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

    ஒருவரை துன்புறுத்தும் காட்சிகளோ, மைனர் வயதுடையவரின் பாலியல் சீண்டுதல்களோ, அனுமதியின்றி வற்புறுத்தும் காட்சிகளோ இடம் பெறாது என தெரிவித்துள்ளனர். ஆபாசமான புகைப்படங்களை நீங்கள் ப்ரொஃபைல் பிக்-ஆக வைக்கமுடியாது எனவும் கூறியுள்ளனர்.

    இந்த அறிக்கை பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த அறிக்கை மற்ற சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக், டிக்டாக் போன்றவற்றில் இருந்து மாறுப்பட்டவையாக இருக்கிறது.

    எக்ஸ் தளத்தின் இந்த அறிக்கையினால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆபாச திரைப்படங்களை எளிதில் பார்க்க கூடியதாக அமையும் என நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    ×