என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தனது கட்சிக்காரரின் மின் இணைப்பை மீண்டும் வழங்கக் கோரி வழக்கறிஞர் மகேஷ் திவாரி வாதிட்டுக் கொண்டிருந்தார்.
- வழக்கறிஞரின் நடத்தை குறித்து கவனத்தில் கொள்ளுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.
ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியை வழக்கறிஞர் ஒருவர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அக்டோபர் 16 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, நீதிபதி ராஜேஷ் குமாருக்கும், வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிலுவையில் உள்ள கட்டணங்கள் காரணமாகத் துண்டிக்கப்பட்ட தனது கட்சிக்காரரின் மின் இணைப்பை மீண்டும் வழங்கக் கோரி வழக்கறிஞர் மகேஷ் திவாரி வாதிட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால், மொத்த நிலுவைத் தொகையில் 50 சதவிகிதம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற முந்தைய தீர்ப்பை நீதிபதி குமார் மேற்கோள் காட்டினார்.
இறுதியில், வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் அந்த தொகையை டெபாசிட் செய்ய ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது.
ஆனால் வழக்கறிஞர் மகேஷ் திவாரி தனது வாதங்களை முன்வைத்த விதம் குறித்து நீதிபதி குமார் ஆட்சேபம் தெரிவித்தார். நீதிமன்றத்தில் இருந்த ஜார்க்கண்ட் மாநில வழக்கறிஞர் கவுன்சிலின் தலைவரை அழைத்து, வழக்கறிஞரின் நடத்தை குறித்து கவனத்தில் கொள்ளுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார்.
அப்போது மகேஷ் திவாரி, நீதிபதி இருக்கையை நோக்கிச் சென்று, "நான் என் வழியில்தான் வாதிடுவேன்" என்றும் நீதிபதியைப் பார்த்து "வரம்பை மீறாதீர்கள்" என்றும் எச்சரித்தார். மேலும் "நாடு நீதித்துறையால் எரிந்துகொண்டிருக்கிறது" என்றும் அவர் கூறினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் வழக்கறிஞர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிந்துள்ளது.
- பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 10.10 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
- விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் பெயர் அந்த பாலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் தொடங்கப்பட்டுள்ள பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் அதனை சீரமைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கோவையில் பாலம் அமைந்துள்ள இடத்தில் நீண்ட நாட்களாக பாலம் திறக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 10.10 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது.
தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் உள்ள தொழில் அதிபர்களின் கோரிக்கையை தொடர்ந்து அந்த ஊரை சேர்ந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் பெயர் அந்த பாலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
அங்கு உப்பிலிபாளையம் பகுதியில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், அங்குள்ள ரவுண்டானா பகுதியில் சாலை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அங்கு விபத்துகள் ஏற்படாமல் இருக்க கோரிக்கை வருகிறது.
அதே போல பாலம் கட்டப்பட்ட பிறகு விமானநிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படலாம் என்று கூறியதால் அங்கு ரப்பர் வேக தடை அமைக்கப்பட உள்ளதோடு, சிக்னல் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இன்று அதிகமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக 2165 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
- குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தனிஅறை வைக்கப்பட்டு உள்ளது.
வண்டலூர்:
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு நேற்று முதல் சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று வழக்கமாக தினசரி இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 760 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று அதிகமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக 2165 சிறப்பு பஸ்களும், நாளை (18-ந்தேதி) 1935 சிறப்பு பஸ்கள், 19-ந்தேதி 1040 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் வரும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை விபரங்கள் போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விபரம் வருமாறு:-
1-வது நடைமேடை: நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை.
2-வது நடைமேடை: திருநெல்வேலி, பாபநாசம், நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், மதுரை(டி.என்.எஸ்.டி.சி), திருநெல்வேலி(டி.என்.எஸ்.டி.சி).
3-வது நடைமேடை: மதுரை, மதுரை கோட்டம், உசிலம்பட்டி, கீழக்கரை, திருமயம், காரைக்குடி, புதுக்கோட்டை, தேவகோட்டை, அறந்தாங்கி, ராமேஸ்வரம், ஏர்வாடி, கீரமங்கலம், தொண்டி, பொன் அமராவதி, வீரசோழன், சிவகங்கை, பரமக்குடி, ஒப்பிலான்.
4-வது நடைமேடை: திருச்சி, அன்னவாசல், ஊரணிபுரம், புள்ளம்பாடி, கரூர்,பொள்ளாச்சி, பள்ளப்பட்டி, திண்டுக்கல், தேனி, பழனி, கொடைக் கானல், போடி, மூணாறு, கம்பம், குமிழி, திண்டுக்கல்(டி.என்.எஸ்.டி.சி), தேனி(டி.என்.எஸ்.டி.சி), கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி.
5-வது நடைமேடை: திருச்சி, பெரம்பலூர், துறையூர், அரியலூர், புதுக்கோட்டை, காரைக்குடி.
6-வது நடைமேடை: சேலம், எர்ணாகுளம், குருவாயூர், ஊட்டி, ஓசூர், பெங்களூரு, கோயம்புத்தூர், நாமக்கல், மேட்டுப்பாளையம், திருப்பூர், பொள்ளாச்சி, சேலம்(டி.என்.எஸ்.டி.சி), ஈரோடு(டி.என்.எஸ்.டி.சி), கோயம்புத்தூர்(டி.என்.எஸ்.டி.சி).
7-வது நடைமேடை: கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம்.
8-வது நடைமேடை: திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ஜெயங்கொண்டம், அரியலூர்.
9-வது நடைமேடை: புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், வடலூர், விருத்தாச்சலம், திட்டக்குடி.
மேலும் பஸ் நிறுத்தம் பகுதியில் எல்லா இடங்களிலும் வழிகளை அறிந்து கொள்ள பெயர் பலகை, பாதுகாப்புக்காக சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தனிஅறை வைக்கப்பட்டு உள்ளது. பயணிகள் காத்திருப்பு அமருமிடம், உணவகங்கள், கடைகள், அவசர மருத்துவ பிரிவு, பிரீபெய்டு ஆட்டோ, கார் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே நேற்று இரவு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டு உள்ள வசதிகள் மற்றும் சிறப்பு பஸ்கள் குறித்து அமைச்சர் சிவசங்கரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பஸ் டிரைவர், கண்டக்டர்கள், பயணிகளிடம் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது கிளாம்பாக்கம் பஸ் நிலைய தலைமைச் செயலர் பிரின்ஸ்லி ராஜ்குமார், போக்குவரத்து தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- மூன்று சென்சார்களுக்குப் பதிலாக இரண்டு சென்சார்கள் வழங்கப்படுகின்றன.
- ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன்- ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதியை அறிவித்தது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத இறுதியில் சீன சந்தையில் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மற்றொரு டாப் என்ட் மாடலான ஒன்பிளஸ் ஏஸ் 6உடன் வரும் என்று தெரிகிறது.
ஒன்பிளஸ்15 வெளியீட்டு தேதி
சீனாவின் வெய்போ தள பதிவில், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு) அறிமுகம் செய்யப்படும் என்று கூறியது.
இது ஒன்பிளஸ் 15ஐ போன்ற கேமரா பம்ப் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இருப்பினும் மூன்று சென்சார்களுக்குப் பதிலாக இரண்டு சென்சார்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
ஒன்பிளஸ்15 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 இரண்டும் ஒப்போ இ-ஷாப், ஜெடி மால் மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் முன்பதிவிற்காக பட்டியலிடப்பட்டுள்ளன. அக்டோபர் 27 அறிமுகத்திற்குப் பிறகு அவை விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை, ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டுடன் வரும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்று ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 165Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 1.5K OLED ஸ்கிரீன் கொண்டிருக்கலாம். இத்துடன் 100W (வயர்டு) மற்றும் 50W (வயர்லெஸ்) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட், 1.5K BOE OLED ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இது அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 7,800mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹர்சரண்சிங் புல்லரை கையும் களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.
- மாநிலம் முழுவதும் போதை பொருள் வலை அமைப்புகளை அகற்றுவதற்காக பஞ்சாப் அரசின் போதைப்பொருள் எதிர்ப்பு பிரசாரத்தில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதேகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்பட்டா. பழைய இரும்பு பொருட்கள் வியாபாரம் செய்து வரும் இவர் ரோபர் ரேஞ்சில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் ஹர்சரண்சிங் புல்லர் ஐபிஎஸ் மீது சி.பி.ஐ. அதிகாரியிடம் லஞ்ச புகார் தெரிவித்தார்.
அதில், டி.ஜ.ஜி. ஹர்சரண்சிங் புல்லர் தன்னை ஒரு பொய் வழக்கில் சிக்க வைத்ததாகவும், அந்த வழக்கை முடித்து கொடுத்ததற்காக தன்னிடம் ரூ.8 லட்சம் கேட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இதைத்தொடர்ந்து ஹர்சரண்சிங் புல்லரை கையும் களவுமாக பிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.
அதன்படி, ஆகாஷ்பட்டாவிடம் ரூ.8 லட்சத்தை கொடுத்து அனுப்பினர். அவர் டி.ஐ.ஜி.யிடம் லஞ்ச பணத்தை கொடுத்தபோது சி.பி.ஐ. அதிகாரிகள் ஹர்சரண்சிங் புல்லரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவரை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைதை தொடர்ந்து ஹர்சரண்சிங் புல்லருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ஹர்சரண்சிங் புல்லர் வீட்டில் இருந்து கட்டு கட்டாக ரொக்கப்பணம், தங்க நகைகள், கார் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பைகளில் பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை எடுத்து எண்ணியபோது அதில் மொத்தம் ரூ.7.5 கோடிக்கு மேல் இருந்தது. அதேபோல நகைகளை ஆய்வு செய்ததில் மொத்தம் 2½ கிலோ தங்கம் மற்றும் நகைகள், 22 உயர் ரக கைக்கடிகாரங்கள், ஒரு மெர்ஷிடஸ் கார், ஆடி கார், லாக்கர் சாவிகள், 40 லிட்டர் வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கின.

மேலும் அவரது வீட்டில் இருந்து இரட்டை குழல் துப்பாக்கி, ஒரு கைத்துப் பாக்கி, ஒரு ரிவால்வர், ஒரு ஏர்கண் உள்ளிட்ட துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து கைதான ஹர்சரண்சிங் புல்லரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு இடைத்தரகராக கிருஷ்ணா என்பவர் செயல்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணாவையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட பொருட்களை வீடியோ ஆதாரங்களாக போலீசார் சேகரித்துள்ளனர்.
கைதான ஹர்சரண்சிங் புல்லர் 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் பாட்டியாலா ரேஞ்சின் டி.ஐ.ஜி., விஜிலென்ஸ் பிரிவின் இணை இயக்குனர் மற்றும் மொகாலி, சங்கரூர், தன்னா, ஹோஷியார்பூர், பதேஹ்கர் சாஹிப் மற்றும் குருதாஸ்பூர் ஆகிய இடங்களில் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு சிரோமணி அகாலிதளம் தலைவர் பிக்ரம்சிங் மஜிதியாவுக்கு எதிரான உயர்மட்ட போதைப பொருள் கடத்தல் வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவை ஹர்சரண்சிங் புல்லர் வழி நடத்தி வந்துள்ளார்.
மாநிலம் முழுவதும் போதை பொருள் வலை அமைப்புகளை அகற்றுவதற்காக பஞ்சாப் அரசின் போதைப்பொருள் எதிர்ப்பு பிரசாரத்தில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரோபர் ரேஞ்சின் டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற அவர் மொகாலி, ரூப் நகர் மற்றும் பதேகர்சாகித் ஆகிய மாவட்டங்களில் மேற்பார்வை செய்து வந்த நிலையில், தற்போது லஞ்ச வழக்கில் கைதாகி உள்ளார்.
இவரது தந்தை எம்.எஸ்.புல்லர் பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ஆவார். கைதான டி.ஐ.ஜி. ஹர்சரண்சிங், கிருஷ்ணா ஆகிய இருவரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
- விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
- அவரது கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கரூரில் கடந்த மாதம் இறுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரசார கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததுதான் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளையில் போதுமான பாதுகாப்பு வழங்கப்படாதது, த.வெ.க. கேட்ட இடம் கொடுக்காததுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என த.வெ.க. மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் விமர்சனம் வைக்கப்படுகிறது.
கூட்ட நெரிசல் சம்பவம் இந்தியாவைவே உலுக்கியுள்ளது. இதனால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இதற்கிடையே, இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின்போது, தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது.
- அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் நாம் கூப்பிட்டது சபாநாயகருக்கு கேட்கவில்லை என்றனர்.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் நாம் கூப்பிட்டது சபாநாயகருக்கு கேட்கவில்லை என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது சபாநாயகர் அப்பாவு அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் இருக்கும் திசையை நோக்கி பார்த்தபடியே எனக்கு கேட்கவில்லை என்று நீங்கள் கூறியது எனக்கு கேட்டது. எனக்கு பாம்பு காது என்றார்.
இது அவையில் சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
- ஆணவப் படுகொலை நடைபெறும்போது, அது தொடர்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- அனைத்துவிதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
சென்னை:
"ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்கும்" என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது:-
கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கெல்லாம் மிகத்தெளிவாக, துல்லியாக பதிலளித்து நம்முடைய நிதி அமைச்சர் சிறப்பாக இங்கே பேசியிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், நேற்றைய விவாதத்தில் உறுப்பினர்கள் சிலர், ஆணவப் படுகொலை குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்கு நான் இப்பேரவைக்குத் தங்கள் வாயிலாக பதிலளிக்க விரும்புகிறேன்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-என்ற அறநெறியை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண், இந்தத் தமிழ் மண்!
'சாதி யிரண்டொழிய வேறில்லை, இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்' என்கிறார் அவ்வை மூதாட்டி.
இதுதான் தமிழர் தம் நெறியாகும். தமிழர் போற்றி வந்த பண்பாடு! இடைக்காலத்தில் புகுந்தவர்களால் தொழில் வேற்றுமையானது; சாதி வேற்றுமையாக மாற்றப்பட்டது; உயர்வு-தாழ்வு கற்பிக்கப்பட்டது; மேல்-கீழ் என்ற வேற்றுமை விதைக்கப்பட்டது. வேற்றுமை விதைக்கப்பட்ட உடனேயே ஒற்றுமைக்கான குரல்களும் தமிழ் மண்ணில் உரக்க ஒலித்ததைக் காண்கிறோம். பல சீர்திருத்தக் கருத்துகள் இயக்கமாகவே உருவெடுத்து உள்ளன. அயோத்திதாசப் பண்டிதர், தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோர் இந்தச் சீர்திருத்தச் சிந்தனைகளை தமிழ் மண்ணில் விதைத்தார்கள்.
கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் பொருந்திய பதவிகள், அனைவருக்கும் சமவாய்ப்பு, சம அதிகாரம் ஆகியவற்றை தருவதன் மூலமாக யாவரும் ஒருவரே என்பதை உருவாக்கவே இந்த இயக்கங்கள் போராடின; வாதாடின; மன மாற்றங்களை செய்தன. சாதிக்கு, மதத்துக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தை தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்துக்கு தரும் சிந்தனையை திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கங்கள் விதைத்தன. இனமும், மொழியும் நமது அடையாளங்களாக மாற்றியது இதன் சாதனைகள்.
சீர்திருத்தக் கருத்துகளை பரப்புரை செய்து வந்த அதே காலக்கட்டத்தில் அதற்கான சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு வந்து, சமூக சீர்திருத்த ஆட்சியை தமிழினத் தலைவர் கலைஞர் நடத்தினார்கள். அதன் வழித்தடத்தில் 'திராவிட மாடல்' ஆட்சியை நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி நடத்தி வருகிறோம்.
அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி இருக்கிறோம். பெரியார் பிறந்தநாளிலும், அம்பேத்கர் பிறந்தநாளிலும் இந்த நாடே உறுதிமொழி எடுக்கிறது. இவர்கள் பிறந்த நாளில் அனைவரும் சமூகநீதி, சமநீதி உறுதிமொழி எடுப்பது சாதாரணமான சாதனையல்ல. தமிழ்நாடு சட்டப் பேரவை, இதே அவையில் 29-4-2025 அன்று உரையாற்றியபோது, ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் வசைச் சொல்லாகவும் இருக்கும் "காலனி" என்ற சொல்லை நீக்குவோம் என்று அறிவித்தேன். பள்ளி, கல்லூரி விடுதிகளில் சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக, அவற்றை "சமூக நீதி" விடுதிகளாகப் பெயர் மாற்றியிருக்கிறோம்.
பிரதமர் சமீபத்தில் நேரில் சந்தித்து, முக்கியமான ஒரு கோரிக்கையை வைத்தேன். "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் உள்ள சாதிப் பெயரில், இறுதி எழுத்தில் முடிவடையும் 'இன்' என்பதற்குப் பதிலாக 'இர்' என விகுதி மாற்றம் செய்து, அந்தச் சமூக மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வழி செய்யும் வண்ணம் ஒன்றிய அரசு உரிய சட்டம் இயற்ற விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்பது தான் அந்தக் கோரிக்கை.
சமூகநீதி-சமத்துவம்-சகோதரத்துவம்-பொதுவுடமை-பொது உரிமை-கல்வி உரிமை-அதிகார உரிமை ஆகிய கொள்கைகள்தான் வேற்றுமையை, பகைமையை விரட்டும். அதனைத் தான் நாங்கள் செய்து வருகிறோம். இதன் மூலமாகத் தான் சமத்தும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும்.
ஆனால், இத்தகைய சூழலில் நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் நமது மனதை வேதனையடைய வைத்துள்ளன. இதற்காகவா நமது தலைவர்கள் போராடினார்கள், நாம் போராடி வருகிறோம் என்ற வேதனை ஏற்படுகிறது. உலகம் அறிவு மயமாகி வருகிறது. "ஆனால் அன்புமயம் ஆவதை எது தடுக்கிறது?" என்பதுதான் இன்று சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களை வாட்டி வருகிறது. உலகம் முழுக்க பரவி, அறிவினால் மதிக்கப்பட்டு வரும் நம் தமிழ்ச் சமுதாயம், உள்ளூரில் சண்டை போட்டுக்கொள்வது என்ன நியாயம்? என்பதுதான் நம்மை வருத்தும் கேள்வியாக அமைந்திருக்கிறது.
எதன் காரணமாகவும் ஒருவரை மற்றவர் கொல்வதை நாகரிக சமுதாயத்தால் ஏற்க இயலாது. கொல்வதை மட்டுமல்ல-பகைப்பதை, சண்டை போட்டுக்கொள்வதை, அவமானப்படுத்துவதை என எதையும் பண்பட்ட, வளர்ச்சியுற்ற ஒரு சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது.
அவ்வப்போது ஏதேனும் ஒரு பகுதியில் நடந்துவிடும் ஒரு துயரமான சம்பவம் நம் நெஞ்சை உலுக்கி விடுகிறது. நம் சமுதாயத்தையே தலைகுனியச் செய்து விடுகிறது. பெண்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை தாங்களே தீர்மானிக்கும் உரிமையைப் பறிக்கும் ஆணாதிக்கமும் இந்தக் குற்றச் செயல்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இந்த வேதனையைத்தான் நேற்றைய தினம் நமது உறுப்பி னர்கள் பலரும் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறீர்கள். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வேண்டும், எப்படியாவது தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்கள்.
சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தீர்மானமாக நிறைவேற்றி என்னிடத்தில் கொடுத்திருக்கிறார்கள். ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இந்த அநீதியைத் தடுக்க வேண்டும் என்பது நம் அனைவரது ஆதங்கமாக இருக்கிறது.
ஆணவப் படுகொலை நடைபெறும்போது, அது தொடர்பான வழக்குகள் அனைத்திலும் கடுமையான பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்படுகொலைகளுக்குச் சாதி மட்டுமே காரணமல்ல, இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன. எதன்பொருட்டு நடந்தாலும், கொலை-கொலை தான். அதற்கான தண்டனைகள் மிகமிகக் கடுமையாகவே தரப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
யாரும் எவரும்-எதன்பொருட்டும், செய்த குற்றத்தில் இருந்து தண்டனை இல்லாமல் தப்பிவிடக் கூடாது என்பதை காவல் துறைக்கு உத்தரவாகப் போட்டுள்ளோம். எனவே, சட்டம் அதன் கடமையைச் செய்கிறது.
அதே நேரத்தில், இக்கொடூரமான சிந்தனைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரையை சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமல்ல; அரசியல் இயக்கங்களும், பொதுநல அமைப்புகளும் செய்ய வேண்டும் என்பதை என்னு டைய வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.
நாகரிக சமுதாயத்தின் அடையாளம் என்பது பொருளாதார மேம்பாடு மட்டுமல்ல, சமூகச் சிந்தனையில் மேம்பாடு என்பதை உணர்த்துவதாக இப்பரப்புரைகள் இருக்க வேண்டும். சமுதாயத்தில் சாதி வேற்றுமைக்கு எதிராக, ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக அனைவரும் பேச வேண்டும். மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை; அனைவரும் சமம்; பாலின சமத்துவமும், வளர்ச்சி பெற்ற ஒரு சமுதாயத்திற்கு ஒரு அடையாளம் என்றார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
அனைத்துவிதமான ஆதிக்க மனப்பான்மைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆதிக்க எதிர்ப்பும்-சமத்துவ சிந்தனையும் கொண்ட சுயமரியாதையும்-அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பரப்புரையை ஓர் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை! சீர்திருத்தப் பரப்புரையும்-குற்றத்திற்கான தண்டனையும், வாளும் கேடயமுமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதுகுறித்து தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்பதை என்னுடைய முக்கியமான அறிவிப்பாக இம்மாமன்றத்தில் அறிவிக்கிறேன்.
இந்த ஆணையம் அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று, இப்பொருள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கும். அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்றத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- என்ஜினை பொருத்தவரை டாடாவின் 1.2 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
- 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டாடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட் நெக்சான் மாடல்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி டாடா நெக்சான் மாடலில் ADAS வசதி வழங்கப்பட்டுள்ளது. இது பெட்ரோல் ஃபியர்லெஸ்+ PS DCT/DCA வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ.13.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இது நெக்சான் EV உடன் வழங்கப்படும் அதே ADAS வசதிகளுடன் வருகிறது.
ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங் (FCW)
ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB)
லேன் டிபார்ச்சர் வார்னிங் (LDW)
லேன் சென்டரிங் சிஸ்டம் (LCS)
லேன் கீப் அசிஸ்ட் (LKA)
ஹை பீம் அசிஸ்ட் (HBA)
டிராஃபிக் சைன் அங்கீகாரம் (TSR)
புதிய டாடா நெக்சான் ADAS தொகுப்பில் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

ஃபியர்லெஸ்+ PS வேரியண்ட் இரட்டை டிஜிட்டல் ஸ்கிரீன், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், வென்டிலேட்டெட் முன்பக்க இருக்கைகள், ஓட்டுநர் இருக்கைக்கான உயரத்தை சரிசெய்யும் வசதி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் முழு LED லைட் பேக்கேஜ் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
என்ஜினை பொருத்தவரை டாடாவின் 1.2 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 86bhp பவர் மற்றும் 170Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இந்திய சந்தையில் கிடைக்கும் மஹிந்திரா XUV3XO, கியா சைரோஸ் மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் வென்யூ போன்ற கார்கள் அனைத்திலும் லெவல் 2 ADAS வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ADAS இப்போது இந்த பிரிவுகளுக்குள் ஊடுருவியுள்ளது.
- இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
- வேட்புமனு தாக்கலுக்கு அவர் தனது ஆதரவாளர்களுக்கு வீட்டில் வைத்து பிரமாண்டமான முறையில் பிரியாணி விருந்து அளித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.
ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி - காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது.
வேட்புமனு தாக்கல் தற்போது நடந்து வரும் சூழலில் பீகாரின் கிஷன்கஞ்ச் தொகுதியில் போட்டியிட உள்ள தவுசிப் ஆலம் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலுக்கு அவர் தனது வீட்டில் வைத்து ஆதரவாளர்களுக்கு பிரமாண்டமான முறையில் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
இந்த விருந்தில் 10,000 க்கும் மேற்பட்டோர் திரண்ட நிலையில் பிரியாணி பொட்டலங்களை அள்ளிச் செல்ல முந்திக்கொண்டு தள்ளுமுழுப்பட்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி விமரிசனத்துக்கு உள்ளாகி வருகிறது.
- விராட் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கிரேட்டஸ்ட் பிளேயர்.
- ரோகித் தொடக்கத்தில் வெளிப்படுத்தக்கூடிய ஆட்டத்தின் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. வருகிற 19-ம் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. சுப்மன் கில் தலைமையில் புதிய இந்திய அணி களமிறங்க உள்ளது.
ஒருநாள் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆட்டத்தைப் பார்ப்பதற்காக இருநாட்டு ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இருவரும் 2027 உலகக் கோப்பையில் விளையாடி ஓய்வு பெற வேண்டும் என்பதே அவர்களுடைய கனவாகவும் விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால் அதற்கு முன் அவர்களை கழற்றி விட இந்திய அணி நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடுவார்களா என டிராவிஸ் ஹெட்டிடம் செய்தியார்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு டிராவிஸ் ஹெட் அளித்த பதில்:-
அவர்கள் இந்தியாவுக்கான அற்புதமான வீரர்கள். அவர்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகவும் தரமான 2 வீரர்கள். விராட் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கிரேட்டஸ்ட் பிளேயர். ரோகித் சர்மா அந்தளவுக்கு கிடையாது.
இருப்பினும் ரோகித் சர்மா தொடக்கத்தில் வெளிப்படுத்தக்கூடிய ஆட்டத்தின் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. ஏதோ ஒரு கட்டத்தில் அவர்கள் மிஸ் செய்யப்படுவார்கள் என்று உறுதியாகச் சொல்வேன். ஆனால் அவர்கள் 2027 வரை விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு முயற்சி செய்வார்கள். அதுவரை அவர்கள் விளையாடினால் அது கிரிக்கெட்டுக்கு சிறப்பானது.
என்று ஹெட் கூறினார்.
- திமுக 2021 தேர்தலின்போது 525 வாக்குறுதிகளை வழங்கியது.
- அதில் 10 சதவீதம் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2021 தேர்தலின்போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இன்று சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் உள்பட அங்கிருந்தவர்களுக்கு திமுக-வின் உருட்டுக்கடை அல்வா என எழுதப்பட்டிருந்த பாக்கெட்டை வழங்கினார்.
மேலும், "திமுக 2021 தேர்தலின்போது 525 வாக்குறுதிகளை வழங்கியது. அதில் 10 சதவீதம் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. எல்லோருக்கும் அல்வா கொடுத்திட்டாங்க. இந்த அரசாங்கத்தில் இப்படிப்பட்ட அல்வாதான் கிடைக்கும். அத்துடன் ருசியாக இருக்கான்னு பார்த்து சொல்லுங்க" என்றார்.
இந்த அரசாங்கம் மக்களுக்கு அல்வா கொடுத்து எப்படி ஏமாற்றுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.






