என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தலைப்புச்செய்திகள்
- உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் விளம்பர பிரச்சாரங்களை மாநில அரசு தொடங்கி உள்ளது.
- வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில் பயனர்கள் பலரும் அரசின் முயற்சியை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
கடவுளின் தேசம் என பெயர் பெற்ற கேரளா இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் நிறைந்த இடமாகும். மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான இடங்கள், அழகிய கடற்கரைகள், சுவையான உணவுகளால் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ள நிலையில், இம்மாநில அரசு சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.
உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் விளம்பர பிரச்சாரங்களை மாநில அரசு தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக லண்டன் பஸ்களில் கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள், படகு ஆகியவற்றை காட்டும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் லண்டனில் இருந்து முத்திரை பதிக்கும் வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில் பயனர்கள் பலரும் அரசின் முயற்சியை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
- ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் கடந்த ஆண்டை விட தாங்க முடியாத அளவுக்கு வெப்பத்துடன் உள்ளது என்று பதிவிட்டிருந்தார்.
- பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் பல நகரங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் பெங்களூருவில் கடுமையான கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தனது படுக்கை அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி.யின் படத்தை பகிர்ந்து செய்துள்ள பதிவு எக்ஸ் தளத்தில் பரவி வருகிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக பெங்களூருவில் வசித்து வரும் பிரேரணா நிரீக்ஷா அமன்னா என்ற அந்த பெண்ணின் பதிவில், பெங்களூருவில் இருந்த 20 ஆண்டுகளில் எங்களுக்கு ஏ.சி. தேவை என்று நினைத்ததில்லை.
முன்னதாக இந்த நகரம் இதமான வானிலையுடன் இருந்தது. ஆனால் தற்போது ராஜஸ்தானில் தங்கி இருப்பது போல் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் கடந்த ஆண்டை விட தாங்க முடியாத அளவுக்கு வெப்பத்துடன் உள்ளது என்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒரு பயனர், நான் கடந்த 2016-ம் ஆண்டு ஏ.சி. வாங்கி பயன்படுத்தினேன். அதன் பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் மீண்டும் அதனை பயன்படுத்த தொடங்கி உள்ளேன் என்றார். அதே போல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Never in my 20 years in Bangalore, I ever thought we would need an AC.
— Prerana Nireeksha Amanna (@AmannaPrerana) May 1, 2024
Earlier say anything about this city and People would defend it with the pleasant weather.
Bangaloreans can no longer play the " weather" card.
What is this heat even?
It's as if I'm staying in… pic.twitter.com/MwTlOdqDY8
- ஆரம்ப கட்டத்தில் அவரது சாதனைகள், 17 வயதிலேயே தனது கவுண்டி கிளப்புடன் தனது முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
- சர்வதேச சுற்றுகளில் அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியிலும் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் 20 வயதில் மரணமடைந்ததாக வொர்செஸ்டர்ஷைர் கிரிக்கெட் கிளப் நேற்று அறிவித்துள்ளது. ஜோஷ் பேக்கர் இறப்புக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், கவுண்டியின் தலைமை நிர்வாகி ஆஷ்லே கில்ஸ், பேக்கர் காலமான செய்தி 'நம் அனைவரையும் பேரழிவிற்கு ஆளாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
பேக்கர் 2021-ம் ஆண்டு வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடத் தொடங்கியபோது தனது முதல் தர கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.
ஆரம்ப கட்டத்தில் அவரது சாதனைகள், 17 வயதிலேயே தனது கவுண்டி கிளப்புடன் தனது முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேலும் சர்வதேச சுற்றுகளில் அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியிலும் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்ற அவரது பேரன் பகவதியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
- பேரன் பகவதியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ந் தேதி எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.
தொடர்ந்து, 7 'சிக்கன் ரைஸ்' பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40), தாத்தா சண்முகம் (67) உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கொடுத்து உள்ளார். இதற்கிடையே 'சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு மட்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
முன்னதாக சிகிச்சைக்கு வந்த 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி வந்தனர். எனவே அவர்களுக்கு உணவு ஒவ்வாமையால் பிரச்சினை ஏற்பட்டு இருக்க வாய்ப்பு குறைவு எனவும், சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உமா, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் உமா போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர்களும் 'சிக்கன் ரைஸ்' உணவு மாதிரியை எடுத்து, சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர். மேலும் கல்லூரி மாணவர் பகவதி மற்றும் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகம் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அவர் சாப்பிட்ட உணவு மாதிரியை சேகரித்து போலீசார் சேலத்தில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி இருந்தனர். இதற்கிடையே நேற்று இரவு சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி (விஷம்) கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் தொழிலாளி சண்முகம் உணவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டதும் உறுதியானது.
இதற்கிடையே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பேரன் பகவதிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதை கண்டித்ததால் சண்முகம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்ற அவரது பேரன் பகவதியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தொழிலாளி சண்முகம் உயிரிழந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்ததை பேரன் பகவதி ஒப்புக்கொண்டார்.
காதல் விவகாரத்தை குடும்பத்தினர் கண்டித்ததால் சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லியை கலந்து கொடுத்தாக பகவதி ஒப்புக்கொண்டார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் நதியாவுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
- கோவில் திருவிழாவில் பங்கேற்க செல்வதெனவும், அங்கேயே நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர்.
விருத்தாசலம்:
சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்தனர். ஆனால் அந்த கர்ப்பிணி கிடைக்கவில்லை.
பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு, விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அதாவது இரவு 8.10 மணிக்கு வர வேண்டிய ரெயில், 20 நிமிடம் தாமதமாக இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தது.
ரெயிலில் இருந்து இறங்கிய கர்ப்பிணியின் உறவினர்கள் கதறி அழுதனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி கஸ்தூரி என்ற 7 மாத கர்ப்பிணி பெண் தவறி விழுந்து விட்டதாகவும், அவரை உடனடியாக மீட்டு தருமாறும் கூறினர்.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று கஸ்தூரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கஸ்தூரி இறந்து கிடந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் விவரம் வருமாறு:-
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீழிதநல்லூர் கிழக்குத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 25). இவர், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை பெரியார் நகர் திரிசூலத்தை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரியான கஸ்தூரி(22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இதனிடையே மேலநீழிதநல்லூரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்க செல்வதெனவும், அங்கேயே நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்தவும் உறவினர்கள் திட்டமிட்டனர்.
அதன்படி கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அந்த ரெயிலில் எஸ்-9 பெட்டியில் அனைவரும் பயணம் செய்தனர். இந்த ரெயில் இரவு 8 மணி அளவில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கஸ்தூரிக்கு வாந்திக்கான அறிகுறி ஏற்பட்டது. உடனே அவர், தனது உறவினர்கள் உதவியுடன் எஸ்-9 பெட்டியில் உள்ள கை கழுவும் இடத்திற்கு வந்தார். அந்த இடத்தில் வாந்தி எடுத்தபடி கஸ்தூரி நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து பலியானார்.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
- வாபஸ் அறிவிப்பு வெளியானபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
- கடந்த 30-ந்தேதி மாலை நிலவரப்படி, ரூ.7 ஆயிரத்து 961 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.
புதுடெல்லி:
புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக கடந்த ஆண்டு மே 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுமாறு கூறியது.
வாபஸ் அறிவிப்பு வெளியானபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில், கடந்த 30-ந்தேதி மாலை நிலவரப்படி, ரூ.7 ஆயிரத்து 961 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.
மீதி 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கைவசம் உள்ள நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
- உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
- ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை களம் இறக்க வேண்டும் என்று அந்த தொகுதி காங்கிரசாரும், நிர்வாகிகளும் விருப்பம் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் இருப்பதால் அந்த மாநிலத்தில் மட்டும் 7 கட்டங்களிலும் ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளது.
அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
வருகிற 7-ந்தேதி 3-ம் கட்ட தேர்தலில் 10 தொகுதிகளுக்கும், 13-ந்தேதி 4-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும், 20-ந்தேதி 5-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 15 தொகுதி வேட்பாளர்களை அறிவித்து விட்ட காங்கிரஸ் அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதி வேட்பாளர்களை மட்டும் அறிவிக்காமல் வைத்திருந்தது.
உத்தரபிரதேசத்தில் தற்போது 5-ம் கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த 5-ம் கட்ட தேர்தலில்தான் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி செல்வாக்குமிக்க தொகுதிகளாக இருக்கும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த இரு தொகுதி வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் இருந்ததால் பாரதிய ஜனதாவும் வேட்பாளர்களை அறிவிக்காமல் தாமதப்படுத்தியது. அமேதியில் ராகுலும், ரேபரேலி தொகுதியில் பிரியங்காவும் களம் இறக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியானதால் இந்த இரு தொகுதி வேட்பாளர்கள் தொடர்பாக மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
வயநாடு தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் ராகுல் அமேதியில் போட்டியிட தயக்கம் தெரிவித்தார். மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி அங்கு ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த தொகுதிக்கு அவர் செய்துள்ள நலத்திட்டங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
இதனால் அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா? என்பதில் ராகுலுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அவர் அங்கு போட்டியிட தொடர்ந்து தயக்கம் தெரிவித்ததால் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏற்பட்டது.
இதற்கிடையே ரேபரேலி தொகுதியில் பிரியங்காவை களம் இறக்க வேண்டும் என்று அந்த தொகுதி காங்கிரசாரும், நிர்வாகிகளும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அங்கு பிரியங்காவை போட்டியிட வைக்க ராகுல் காந்திக்கு விருப்பம் இல்லை. ஒரே குடும்பத்தில் 3 பேர் (சோனியா, ராகுல், பிரியங்கா) எம்.பி.யாக இருந்தால் பாரதிய ஜனதா மிக மிக கடுமையாக விமர்சனம் செய்யும் என்று ராகுல் கருத்து தெரிவித்தார்.
இதன் காரணமாக ரேபரேலி தொகுதியில் போட்டியிடாமல் பிரியங்கா ஒதுங்கினார். இந்த நிலையில் அவரது கணவர் ராபர்ட் வதேரா தனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையையும் சோனியா, ராகுல் இருவரும் சேர்ந்து நிராகரித்தனர்.
இதனால் ரேபரேலி தொகுதியில் களம் இறங்கப் போவது யார்? என்பதில் இழுபறி ஏற்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று முன்தினம் இது தொடர்பாக சோனியாவுடன் பேசினார். ராகுல் வயநாட்டில் மட்டும் போட்டியிட்டால் வடமாநிலங்களை கைவிட்டது போல் ஆகி விடும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் இருந்து ராகுல் பயந்து செல்வதாக பாரதிய ஜனதா பிரசாரம் செய்யும் என்று கார்கே விளக்கம் அளித்தார்.
அதன் அடிப்படையில் சோனியா தொலைபேசி மூலம் ராகுலிடம் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பிறகுதான் ராகுல் மனதில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்கு பதில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதை காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த விவகாரத்தில் நேற்று நள்ளிரவு வரை இழுபறி நிலவியது. சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று காலை அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டார். ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதை அறிந்ததும் ரேபரேலி தொகுதி காங்கிரசார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
- ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது.
- முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் சிறந்த மதிப்புகளுக்கு நான் இயற்கையான வாரிசு.
புவனேசுவரம்:
ஒடிசா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றியவர் வி,கே.பாண்டியன். தமிழகத்தை சேர்ந்தவரான இவர், முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் அவரது அழைப்பின்பேரில், விருப்ப ஓய்வு பெற்று பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார். தற்போது நவீன்பட்நாயக்கின் அரசியல் ஆலோசகராக உள்ளார்.
தற்போது ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இதில் வி.கே.பாண்டியன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே நேற்று புவனேசுவரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-மந்திரி நவீன்பட்நாயக் எனது குரு. நான் அவருடை சீடன். கட்சியில் நான் எந்த பொறுப்பிலும் இல்லை. சாதாரண வீரன்தான். ஒடிசா மக்களுக்காக நவீன்பட்நாயக் சிறப்பான சேவையாற்றி வருகிறார். அவருக்கு கீழ் பணியாற்றுவதை நான் பெருமையாக கருதுகிறேன். முதல்-மந்திரி நவீன்பட்நாயக்கின் சிறந்த மதிப்புகளுக்கு நான் இயற்கையான வாரிசு. பா.ஜனதாவினர் அரசியல் காரணங்களுக்காக என்னை அந்நியன் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒடிசா மக்கள் என்னை அப்படி சொல்லவில்லை. நான் ஒடிசாவில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். ஒடிசா மக்கள் என்னையும் அவர்களில் ஒருவராகப் பார்க்கிறார்கள். மிகவும் நேசிக்கிறார்கள். என்னை பலவீனப்படுத்த பா.ஜனதாவினர் இதுபோன்று கூறுகிறார்கள்.
இவ்வாறு வி.கே.பாண்டியன் கூறினார்.
- ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருவீதி உலா.
- ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, சித்திரை 20 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி இரவு 8.36 மணி வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: சதயம் இரவு 9.26 மணி வரை. பிறகு பூரட்டாதி.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
நாளை சுபமுகூர்த்த தினம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருவீதி உலா. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீசவுமாரியம்மன் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-லாபம்
மிதுனம்-ஆசை
கடகம்-நன்மை
சிம்மம்-நட்பு
கன்னி-ஆக்கம்
துலாம்- சுகம்
விருச்சிகம்-அமைதி
தனுசு- பொறுப்பு
மகரம்-பொறுமை
கும்பம்-இன்பம்
மீனம்-கவனம்
- ஜெய்ஸ்வால் 67 ரன்னிலும் பராக் 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
- ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் நடராஜன், பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் தடுமாறினாலும் கடைசியில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நிதிஷ் ரெட்டி 76 ரன்னிலும் கிளாசன் 42 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே சொதப்பாலாக அமைந்தது. ராஜஸ்தான் முதல் ஓவரில் 1 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பட்லர், சாம்சன் 0 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.
இதனையடுத்து ஜெய்ஸ்வால் - ரியான் பராக் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். ஜெய்ஸ்வால் 67 ரன்னிலும் பராக் 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து ஹெட்மயர் 13 ரன்னில் நட்ராஜன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
இதனால் ராஜஸ்தான் வெற்றி பெற 2 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை கம்மின்ஸ் வீசினார். முதல் பந்தில் ஜூரல் (1) விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த அஸ்வின் 1 ரன் எடுத்தார். அடுத்த 3 பந்துகளை ரோமன் பவல் டாட் பந்துகளாக மாற்றினார். கடைசி பந்தை பவல் சிக்சராக மாற்ற கடைசி ஓவரில் ராஜஸ்தானுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தை அஸ்வின் 1 ரன் எடுத்தார். 2-வது பந்தை பவல் 2 ரன்கள் எடுத்தார். 3-வது பந்தை பவுண்டரி விரட்டினார் பவல். இதனால் கடைசி 3 பந்தில் ராஜஸ்தானுக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைபட்டது. அடுத்த பந்தில் பீல்டிங்கின் தவறால் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. பரபரப்பான கட்டத்தில் 5-வது பந்தும் 2 ரன்கள் எடுக்கப்பட்டது.
இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனால் ஐதராபாத் அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் நடராஜன், பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- நடுவானில் பறந்த போது விமானத்தின் என்ஜின் செயல்படாமல் போனது.
- சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
அமெரிக்காவின் நியூ யார்க் பகுதியில் உள்ள செடார் கடற்கரையில் ஒற்றை என்ஜின் கொண்ட செஸ்னா 152 எனும் சிறிய விமானம் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமானம் கடற்கரையில் தரையிறங்கிய நிலையில், விமானி மற்றும் பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. கடற்கரையில் தரையிறங்கியதால் விமானத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டது. விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கியதாக விமானி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
"ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று செடார் கடற்கரையில் அவசரமாக தரையிறங்கியது. நடுவானில் பறந்த போது விமானத்தின் என்ஜின் செயல்படாமல் போனது. இதன் காரணமாக விமானத்தை இயக்கிய 60 வயது விமானி, கடற்கரையில் தரையிறக்கினார்," என்று அமெரிக்க வான்வழி கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
- சிக்கன் ரைஸில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்ததால் உயிரிழப்பு.
- உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினரிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை.
நாமக்கல் மாவட்டத்தின் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) இந்த ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.
தொடர்ந்து 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றார். அவற்றை தன்னுடைய தாய் நதியா (37), தம்பி கவுசிக் ஆதி (18), தாத்தா சண்முகம் (67), பாட்டி பார்வதி (63), சித்தி பிரேமா (35) மற்றும் இவரது இரு குழந்தைகளுக்கு வழங்கி உள்ளார்.
இதில் சிக்கன் ரைஸ் உணவை சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிக்கன் ரைஸில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்ததால் உயிரிழந்ததாக பரபரப்புத் தகவல் வெளியானது.
உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினரிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்