search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மூத்த வழக்குரைஞர் கபில் சிபலுக்கு வாழ்த்துகள்!
    • பாதுகாப்பான கரங்களில் இருப்பதை அவரது வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞர் கபில் சிபலுக்கு வாழ்த்துகள்! வழக்கறிஞர்கள் சங்கத்தின் சுதந்திரமும் நமது அரசியலமைப்பின் மாண்புகளும் பாதுகாப்பான கரங்களில் இருப்பதை அவரது வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.

    நீதியையும் இந்திய மக்கள் மிகவும் போற்றும் மக்களாட்சி விழுமியங்களையும் உயர்த்திப் பிடிக்கும் வகையில் கபில் சிபல் அவர்களது தலைமை அமையும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • மனிஷா சோலங்கி கடந்த 14-ம் தேதி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
    • விசாரணையில் மனிஷாவை தாக்கிய சோனு நாய்களைத் தாக்கியதும் தெரிந்தது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் ரகுபீர் நகரில் தெரு விலங்குகளை பராமரிக்கும் இளம்பெண் மனிஷா சோலங்கி கடந்த 14-ம் தேதி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

    மனிஷா கிட்டத்தட்ட 150 தெருநாய்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தபோது, அருகில் உள்ள கடையில் பணிபுரியும் ஒருவர் அவரை தாக்கினார். இச்சம்பவம் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

    மனிஷா இன்ஸ்டாகிராமில் நடந்த சம்பவத்தை விவரித்தார். அதில், பாதுகாப்பற்ற விலங்குகளுக்கு எதிரான கொடுமையை எடுத்துக் காட்டினார். நாய்களைப் பாதுகாக்க முயன்றபோது தன்னைத் தாக்கியதையும் வெளிப்படுத்தினார். நாங்கள் மோசமாக அடிக்கப் பட்டோம். யாரும் எங்களுக்கு உதவவில்லை, எங்களுக்கு ஆதரவாக யாரும் நிற்கவில்லை என தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக, மனிஷாவின் தாயார் சோனு மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் சோனு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மனிஷாவை தாக்கியது சோனு என்பதும், நாய்களை தாக்கியதும் தெரியவந்தது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.92.50-க்கும் பார் வெள்ளி ரூ.92,500-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    அட்சய திருதியை நாளான மே 10-ந்தேதிக்கு பிறகு தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது.

    கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,770-க்கும் சவரன் ரூ. 54,160-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.92.50-க்கும் பார் வெள்ளி ரூ.92,500-க்கும் விற்பனையாகிறது.

    • குட்டி யானையை மற்ற யானைகள் பாதுகாப்பது பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது.
    • வீடியோ மூலம் ஆறு அறிவு உள்ள மனிதர்களுக்கு இருக்கும் அதே பாச உணர்வை ஐந்தறிவு கொண்ட விலங்குகளிடம் காண முடிகிறது.

    இன்றைய உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் பதிவிடப்படுகின்றன.

    அந்த வகையில், தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகு பகிர்ந்த வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியில் அழகான 5 யானைகள் கொண்ட குடும்பம் ஒன்று ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. குட்டி யானையை மற்ற யானைகள் பாதுகாப்பது பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது.

    இந்த வீடியோ மூலம் ஆறு அறிவு உள்ள மனிதர்களுக்கு இருக்கும் அதே பாச உணர்வை ஐந்தறிவு கொண்ட விலங்குகளிடம் காண முடிகிறது.

    வீடியோ பகிர்ந்த சுப்ரியா சாகு கூறியுள்ளதாவது:- தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் ஆழமான காடுகளில் எங்கோ ஒரு அழகான யானைக் குடும்பம் ஆனந்தமாக உறங்குகிறது. குட்டி யானைக்கு குடும்பத்தால் இசட் வகுப்பு பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். மற்ற குடும்ப உறுப்பினர்களின் இருப்பை உறுதி செய்வதற்காக இளம் யானை எவ்வாறு சரிபார்க்கிறது. நமது சொந்தக் குடும்பங்களைப் போலவே இருக்கிறது அல்லவா என்று பதிவிட்டுள்ளார்.

    • வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை.
    • பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

    பாட்னா:

    பீகாரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. வெற்றி பெற்றால் சீதாமர் ஹியில் அன்னை சீதா தேவிக்கு பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்தார்.

    வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை. பிரதமர் மோடியால் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது சாத்தியமானது. அதேபோல் சீதா அன்னை பிறந்த இடமான சீதாமர்ஹியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டிய கடமை நமக்கு பாக்கி இருக்கிறது. இதனை நிறைவேற்ற பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும். நம்மை ஒதுக்கி வைத்தவர்கள் யாரும் இதனை செய்து முடிக்க முடியாது.

    லாலு பிரசாத் யாதவ் அதிகார அரசியலுக்காக தன் மகனை முதல்வராக்குவதற்காக பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார்.

    பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவோம் என்று காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அதை மோடி அரசு செய்து முடித்தது. பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    இந்து புராணங்களின்படி, ராஜா ஜனகன் சீதாமர்ஹிக்கு அருகில் வயலில் உழுது கொண்டிருந்த போது ஒரு மண்பானையில் இருந்து ராமனின் மனைவியான சீதை உயிர்பெற்றாக கூறப்பட்டுள்ளது.

    பீகாரில் உள்ள சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • வாக்கு வங்கியை திருப்திப்படுத்த எதிா்க்கட்சிகள் எல்லை மீறி செல்கின்றன.
    • மக்களுக்காக இரவு-பகல் பாராமல் தொடா்ந்து பணியாற்றுவேன்.

    உத்தரபிரதேசம்:

    உத்தரபிரதேச மாநிலத் தின் ஜான்பூா், பதோஹி, பிரதாப்கா் ஆகிய இடங்களில் நடைபெற்ற பாரதீய ஜனதா பிரசார பொதுக் கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:-

    பாராளுமன்ற தோ்தல் என்பது நாட்டின் பிரதமரை தோ்வு செய்யும் வாய்ப்பா கும். அந்தப் பிரதமா், உலக நாடுகளால் ஆதிக்கம் செலுத்த முடியாத அளவில் வலுவான அரசை நடத்துபவராக இருக்க வேண்டும். அப்போதுதான், இந்தியா வின் வலிமையை உலகுக்குப் பறைசாற்ற முடியும்.

    கடந்த 500 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு அயோத்தியில் ஸ்ரீராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. ஆனால், குடும்ப அரசியல்வாதிகளோ என் மீது அவதூறுகளை வாரி இறைக்கின்றனா்.

    சமாஜ்வாடியின் 'இளவரசா்' (அகிலேஷை குறிப்பிடு கிறாா்), ராமா் கோவிலால் பயனில்லை என்கிறாா். காசி குறித்தும் அவா் கேலி பேசுகிறாா். தங்களின் வாக்கு வங்கியைத் திருப்திப்படுத்த எதிா்க்கட்சிகள் எல்லை மீறி செல்கின்றன.

    மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அவா்கள் விரும்புகின்றனா். இதற்காக அரசமைப்புச் சட்டத்தை மாற்றவும், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமை களைப் பறிக்கவும் திட்ட மிட்டுள்ளனா். நான் உயி ரோடு இருக்கும் வரை, அவா்களின் திட்டம் நிறை வேற அனுமதிக்க மாட்டேன்.

    வலிமையான பா.ஜ.க. அரசுக்குப் பதிலாக, '5 ஆண்டுகளுக்கு 5 பிரதமா்கள்' என்ற திட்டத்துடன் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறது 'இந்தியா' கூட்டணி. ஆனால், ஜூன் 4-ந்தேதிக்குப் பிறகு பல விஷயங்கள் நிகழப் போகின்றன.

    'இந்தியா' கூட்டணி சித றுண்டு போவதுடன், தோ்தல் தோல்விக்கு பலிகடாவை தேடி அலை வா். எதிா்க்கட்சிகள் விலகி யோட, நாங்கள் மட்டுமே நிலைத்திருப்போம். கூடுதல் பலத்துடன் மீண்டும் எனது அரசு அமையும். மக்க ளுக்காக இரவு-பகல் பாராமல் தொடா்ந்து பணியாற்று வேன்.

    சமாஜ்வாடி, காங்கிரசின் 'இளவரசா்கள்' (அகிலேஷ், ராகுல் காந்தி) கோடை விடுமுறையைக் கழிக்க வெளிநாடு செல்வா். அமேதியில் இருந்து வெளியேறியவா் (ராகுல்), இம்முறை ரேபரேலியில் இருந்தும் வெளியேறுவாா்.

    மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால், எதிா்க்கட்சிகளின் கஜா னாக்களில் கருப்புப் பணம் காலியாகிவிட்டது. எனவே, நாட்டின் கருவூலத்தின் மீது அவா்கள் கண் வைத்து உள்ளனா். மக்களின் சொத்துகளைப் பறித்து, தங்களின் வாக்கு வங்கிக்கு வழங்குவதே அவா்களின் திட்டம்.

    குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்பு கின்றன. அந்த சட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறுகின்றனர். ஆனால் அந்தச் சட்டத்தை யாராலும் நீக்க முடியாது.

    பதோஹி மக்களவைத் தொகுதியில் எதிா்க்கட்சிகள் சாா்பில் திரிணாமுல் காங்கி ரஸ் வேட்பாளா் களம் இறக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பின்பற்றும் அர சியலை, உத்தரபிரதேசத்தில் முயற்சிக்க அக்கட்சிகள் விரும்புகின்றன.

    இந்துக்கள், தலித் சமூ கத்தினா் மற்றும் பெண் களைத் துன்புறுத்துவதும் ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துவதுமே திரிணாமுல் காங்கிரசின் அரசியலாகும்.

    ராமா் கோவிலை புனித மற்றது என்று அக்கட்சி குறிப்பிடுகிறது. இந்துக்களை கங்கையில் மூழ்கடிக்க வேண்டுமென அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசுகின்றனா்.

    தற்போதைய தேர்தலில் நீங்கள் 2 விதமான மாடல் களை பார்க்கிறீர்கள். ஒன்று மோடி மாடல், மற்றொன்று எதிர்க்கட்சிக ளின் ஆணவ மாடல். காங்கிரஸ், சமாஜ் வாடி இரண்டும் இங்கு கூட்டணி அமைத்து அந்த ஆணவத்தில் ஈடுபட்டு உள்ளன.

    அவர்களது கூட்டணியில் உள்ள தென்மாநில கட்சி ஒன்று சனாதன தர்மத்தை இழிப்படுத்தி பேசியது. அப்போது காங்கிரசும், சமாஜ்வாடி கட்சியினரும் மவுனமாக இருந்தது ஏன்?

    கூட்டணிக்காக அவர்கள் கொள்கைகளை தியாகம் செய்து விட்டனர். இத்தகைய அரசியலை விதைக்க முயற்சிக்க நினைக்கும் காங்கிரஸ்-சமாஜ்வாடிக்கு படுதோல்வியே மிஞ்சும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • கடந்த 4 மாதத்திற்கு பிறகு சென்னையில் தற்போது மழை தூறலும் ரம்மியமான சூழலும் நிலவி வருகிறது.
    • கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

    சென்னை:

    தமிழகத்தில் வெயில் இந்த ஆண்டு கடுமையாக தாக்கி வந்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மலைப் பகுதியையொட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்தது.

    சுட்டெரித்த வெயிலின் கொடுமையில் இருந்து மக்கள் தப்பித்து குளிர்ந்த காற்று, மழை சூழலை அனுபவித்து வருகின்றனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    கடும் வெப்பத்தை தாங்க முடியாத மக்கள் வீட்டின் மொட்டை மாடிகளிலும், தெரு வீதிகளிலும் காற்றுக்காக படுத்து தூங்கினார்கள். கடந்த 4 மாதத்திற்கு பிறகு சென்னையில் தற்போது மழை தூறலும் ரம்மியமான சூழலும் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் லேசாகவும், ஒரு சில மாவட்டங்களிலும் கன மழையும் பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இன்று (17-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 20-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் வருகிற 19-ந்தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும் இடி மின்னல் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை (18-ந்தேதி) 20 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். 20-ந்தேதி அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தென் மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்கள், மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • 5-ம் கட்டத் தேர்தல் வருகிற திங்கட்கிழமை.
    • பாஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தலில் இதுவரை 4 கட்டத் தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.

    5-ம் கட்டத் தேர்தல் வருகிற திங்கட்கிழமை 49 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இந்த 49 தொகுதிகளிலும் நாளை மாலை பிரசாரம் ஓய உள்ளது.

    இதையடுத்து, 6-வது கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. 6-வது கட்டத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    6-வது கட்டத் தேர்தலில் 57 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடத்தப்பட உள்ளது. இந்த 57 தொகுதிகளில் பீகாரில் 8, அரியானாவில் 10, ஜார்க்கண்டில் 4, ஒடிசாவில்-6, உத்த ரபிரதேசத்தில்-14, மேற்கு வங்காளத்தில்-8, டெல்லியில்-7 என்ற வகையில் தொகுதிகள் அடங்கி உள்ளன.

    இதில் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    5-ம் கட்டத் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்று உள்ள நிலையில் 6-வது கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நாளை முதல் தீவிரமாக மாற இருக்கிறது. பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் 6-வது கட்டத் தேர்தல் நடக்கும் அரியானா, டெல்லி, பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்குவங்காளம் மாநிலங்களில் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த மாநிலங்களில் டெல்லி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாரதீய ஜனதா கைப்பற்றி இருந்தது. இந்த தடவையும் 7 தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள பாஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    டெல்லியில் சாந்தினி சவுக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புதுடெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி என்று 7 தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை பாரதீய ஜனதா களம் இறக்கி உள்ளது.

    டெல்லி யூனியன் பிரதேசத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஆம் ஆத்மியும், 3 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடு கின்றன.

    மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 7 தொகுதிகளி லும் போட்டியிடுகிறது என்றாலும் டெல்லியில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இருமுனை போட்டி நிலவுகிறது.

    டெல்லியில் பா.ஜ.க., இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் தவிர, 99 சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. 49 சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர். மொத்தத்தில் 162 வேட்பாளர்கள் போட்டி யிடுகிறார்கள்.

    அவர்கள் அனைவரும் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 6 நாட்களே அவகா சம் உள்ளது. இதனால் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் உச்சக்கட்ட பிரசாரம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், டெல்லி யில் நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடியும், காங்கி ரஸ் முன்னாள் தலைவர் ராகுலும் ஒரே நாளில் தேர்தல் பிரசாரம் செய்து பலப்பரீட்சை நடத்த உள்ளனர். பிரதமர் மோடி நாளை வடகிழக்கு டெல்லி தொகுதியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    அந்த தொகுதியில் உள்ள கோண்டா என்ற இடத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனப் பேரணி நடத்திவிட்டு அந்த கூட்டத்தில் மோடி பேச உள்ளார்.

    வடகிழக்கு டெல்லி தொகுதியில் டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்வதால் நாளை டெல்லியில் மோடி பிரசா ரத்தில் பல்லாயிரக்கணக் கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

    பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை 2 தொகுதிகளில் ஆதரவு திரட்ட உள்ளார். சாந்தினி சவுக் மற்றும் வடமேற்கு டெல்லி தொகுதி களில் அவர் வாகனப் பேரணி நடத்துகிறார்.

    அதன் பிறகு அவர் சாந்தினி சவுக் தொகுதியில் அசோக் விகார் என்ற பகுதியில் ஜே.பி.அகர்வா லையும், வடமேற்கு டெல்லி தொகுதியில் உதித் ராஜையும் ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கு பிறகும் 2 நாட்கள் டெல்லியில் பிரசாரம் செய்ய ராகுல் திட்டமிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி நாளை ஒரு கூட்டத்தில் பேசிய பிறகு மீண்டும் 22-ந் தேதி டெல்லியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அன்று வடமேற்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் வாகனப் பேரணி நடத்த உள்ளார். அந்த தொகுதியில் உள்ள துவாரகா என்ற இடத்திலும் பொதுக் கூட்டத்திலும் பேச இருக்கிறார்.

    இதற்கிடையே இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்காவும் டெல்லியில் 2 அல்லது 3 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இஸ்லா மியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு பிரியங்கா செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி, சாந்தினி சவுக் தொகுதியில் உள்ள 3 இடங்களில் பிரியங்கா பொதுக் கூட்டத்தில் பேச இருக்கிறார்.

    ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்-மந்திரியு மான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் 6 நாட்களும் முற்றுகையிட்டு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவருடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் சேர்ந்து ஆதரவு திரட்ட உள்ளார். கெஜ்ரிவால் மாடல் டவுன், ஜகான்கீர் பூத் பகுதிகளில் வாகனப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார்.

    ஆம் ஆத்மி வேட்பா ளர்கள் போட்டியிடும் தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, புதுடெல்லி ஆகிய 4 தொகுதிகளிலும் முக்கிய வீதிகளுக்கு சென்று ஆதரவு திரட்டவும் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். அவர் தவிர ஆம் ஆத்மி மூத்த தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் சென்று பேச ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவும் 7 தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

    வருகிற 20-ந் தேதி புதுடெல்லி தொகுதியிலும், 21-ந் தேதி சாந்தினி சவுக் தொகுதியிலும் நட்டா வாகனப் பேரணி நடத்த உள்ளார். தலை வர்களின் முற்றுகையால் டெல்லியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

    • பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் அவர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் கோவில் வளாகம், பூங்காக்கள், மரத்தடி உள்ளிட்ட இடங்களில் படுத்து உறங்குகின்றனர்.
    • திறந்த வெளியில் தங்குவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கோடை விடுமுறை மற்றும் ஆந்திரா, தெலுங்கானாவில் தேர்தல்கள் முடிந்ததால் 2 மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள அறைகள் மற்றும் நாராயணகிரி பூங்காவில் உள்ள அறைகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சீலா தோரணம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் அவர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் கோவில் வளாகம், பூங்காக்கள், மரத்தடி உள்ளிட்ட இடங்களில் படுத்து உறங்குகின்றனர்.

    திறந்த வெளியில் தங்குவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 76 369 பேர் தரிசனம் செய்தனர். 41,927 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.63 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • கோடை விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    • 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று காலை 8 மணிக்கு கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கியது.

    மலர் கண்காட்சியில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை சுற்றுலா, பண்பாட்டு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசகன் தொடங்கி வைத்தார். வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அபூர்வா மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சுற்றுலா ஆணையர் சமயமூர்த்தி, தோட்டக்கலை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    மாவட்ட கலெக்டர் பூங்கொடி, போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், டி.ஐ.ஜி. அபினவ்குமார், கொடைக்கானல் நகர் மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக லட்சக்கணக்கான மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. அதில் பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் காண்போரை கவரும் வகையில் இடம் பெற்றிருந்தது. இது தவிர மலர்களால் ஆன மயில், கரடி, விலங்குகளின் உருவம் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக படகு அலங்கார போட்டி, சைக்கிள் போட்டி, குதிரை சவாரி, வாத்து பிடிக்கும் போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    இது தவிர இந்த ஆண்டு கோடை விழாவில் தினந்தோறும் கலையரங்கில் விதவிதமான கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகளை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்த நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


    தமிழர்களின் பாரம்பரிய கலை, பண்பாட்டு, வீரவிளையாட்டு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் தங்கள் திறமையை கொண்டு வர அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே சாரல் மழை பெய்து வரும் நிலையில் அதனையும் பொருட்படுத்தாது சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    சாரல் மழையில் நனைந்து கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் கொடைக்கானலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகளும், தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கொடைக்கானலுக்கு வருபவர்கள் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான சுற்றுலா பயணிகள் எவ்வித சிரமமுமின்றி இ-பாஸ் பெற்று வருகின்றனர். ஒருசிலர் இ-பாஸ் இல்லாமல் வந்தாலும் அவர்களுக்கு சோதனைச் சாவடிகளில் உடனுக்குடன் அவர்களது செல்போனிலேயே இ-பாஸ் பெறப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    கோடை விழாவை முன்னிட்டு கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • தனி நாடு என யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபணைக்கு உரியது.
    • தென் மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கப் போகிறது.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தனிநாடு என்று யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபணைக்கு உரியது. தற்போது இந்த நாட்டை பிரிக்கவே முடியாது.

    காங்கிரஸ் கட்சியின் உயரிய தலைவர் ஒருவர் வடஇந்தியா மற்றும் தென்னிந்தியாவை பிரிப்பது பற்றி பேசினார். காங்கிரஸ் கட்சி அதை மறுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டத்தை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.

    கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கப் போகிறது.

    பெரும்பான்மை பெற முடியாததற்கான சாத்தியக்கூறுகள் எதையும் காணவில்லை. பலம் வாய்ந்த 60 கோடி பயனாளிகள் பிரதமர் மோடியுடன் நிற்கின்றனர். அவர்களுக்கு ஜாதி, வயது, பிரிவு கிடையாது.. இந்தச் சலுகைகள் பெற்ற அனைவருக்கும் நரேந்திர மோடி தெரியும்

    பிளான் ஏ வெற்றி பெற 60 சதவீதத்துக்கும் குறைவான வாய்ப்பு இருக்கும்போது மட்டுமே திட்டம் பிளான் பி திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • நீர்வரத்தானது பெய்யும் மழையை பொறுத்தே அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு உள்ளது.
    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கோடை கால சீசனில் இந்த முறை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இந்த நீர்வரத்து ஒகேனக்கல், அஞ்செட்டி, நாட்றம்பாளையம், ஓசூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மலை குன்றுகளில் பெய்த மழையின் காரணமாகவும், காவிரி கரையோர எல்லைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாகும் அதிகரித்து உள்ளது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது.

    இந்த நிலையில் நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் கனமழை காரணமாக படிப்படியாக அதிகரித்து நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி 3 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது. காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நீர்வரத்தானது பெய்யும் மழையை பொறுத்தே அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு உள்ளது. எனவே, தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிக்குண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கோடை கால சீசனில் இந்த முறை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே, மீன் சமையல் தொழிலாளர்கள், வியாபாரிகள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளிகள் என அனைத்து தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×